TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. தந்தை பெரியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், வைக்கம் வீரர், ஈரோட்டு சிங்கம், புத்துலக தொலைநோக்காளர், பெண்ணின போர் முரசு,சுயமரியாதை சுடர் ,பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தர்

  1. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு?எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதற்கு பெயர் என்ன?

பகுத்தறிவு

  1. “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது.மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களில் இழிவுபடுத்துகிறது.அந்த சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என கூறியவர் யார்?

தந்தை பெரியார்

  1. “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற தொழில் செய்யவும் அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என கூறியவர்?

தந்தை பெரியார்

  1. “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது .தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” எனக் கூறியவர்?

பெரியார்

  1. “ஒரு மொழியின் தேவை என்பது ,அதன் பயன்பாட்டு முறையை கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும்.இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்” என கூறியவர் யார்?

தந்தை பெரியார்

  1. “மொழி என்பது உலகின் போட்டி ,போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும் எனக் கூறியவர் யார்?

தந்தை பெரியார்

  1. உயிரெழுத்துக்களில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனையும் ‘அவ்’ எனவும் சீரமைத்தவர் யார்?

 தந்தை பெரியார்

  1. “மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்களை குறைப்பதன் வாயிலாக தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும்,அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும்” என கூறியவர் யார்?

தந்தை பெரியார்

  1. பெரியாரின் எழுத்துச் சீரமைப்பு கருத்தின் சில கூறுகளை எந்த ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது?

1978

  1. “பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தை கடைபிடிப்பது கட்டாயம்” எனக் கூறியவர்?

பெரியார்

  1. எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா. வுக்கு பெரியார் எனும் பட்டம் வழங்கப்பட்டது?

சென்னை

  1. எப்போது ஈ.வெ.ரா.வுக்கு “பெரியார்” என பட்டம் வழங்கப்பட்டது?

நவம்பர் 13,1938

  1. எப்போது யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாரை ‘தெற்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ எனப் பாராட்டியது?

 27.06.1970

  1. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

 1925

  1. பெரியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?

குடியரசு ,விடுதலை ,உண்மை ,ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

  1. “தொண்டு செய்து பழுத்த பழம் ” என பெரியாரை பாடியவர்?

புரட்சிக்கவி பாரதிதாசன்

  1. “முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” எனக் கூறியவர் யார்?

ந.பிச்சமூர்த்தி

  1. “இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்காண மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என கூறியவர் யார்?

வல்லிக்கண்ணன்

  1. “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலை எழுதியவர் யார்?

வல்லிக்கண்ணன்

  1. பாரதியாரின் வசன கவிதையை தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் யார்?

ந.பிச்சமூர்த்தி

  1. புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

ந.பிச்சமூர்த்தி

  1. புதுக்கவிதையை வேறு என்னென்ன பெயர்களில் குறிப்பிடுகின்றனர்?

இலகு கவிதை, கட்டற்ற கவிதை ,விலங்குகள் இலாக் கவிதை ,கட்டுக்குள் அடங்காக் கவிதை

  1. ந.பிச்சமூர்த்தி தொடக்க காலங்களில் என்னவாக பணியாற்றினார்?

வழக்குரைஞர் மற்றும் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை அலுவலர்

  1. ந.பிச்சமூர்த்தி என்ன இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினார்?

ஹனுமான், நவ இந்தியா

  1. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது?

யன்ஸூக்கு பலி

  1. ந.பிச்சமூர்த்தி எந்த ஆண்டு கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்?

1932

  1. ந.பிச்சமூர்த்தி என்னென்ன புனைபெயர்களில் படைப்புகளை எழுதியுள்ளார்?

பிஷு, ரேவதி

  1. லாவோட்சு சீனாவில் எந்த நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவர்?

கி.மு இரண்டாம் நூற்றாண்டு

  1. லாவோட்சுவின் சம காலத்தவர் யார்?

கன்ஃபூசியஸ்

  1. யாருடைய காலம் சீன சிந்தனையின் பொற்காலமாக திகழ்ந்தது?

லாவோட்சு

  1. ஒழுக்கத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் யார்?

கன்பூசியஸ்

  1. தாவோ தே ஜிங் எனும் லா வோட்சு கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர்?

சி.மணி

  1. “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக” எனக் கூறும் நூல் எது?

யசோதர காவியம்

  1. யசோதர காவியம் எந்த மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது?

வடமொழி

  1. யசோதரக் காவியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?

அவந்தி நாட்டு மன்னன் ,யசோதரன்

  1. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?

 5 சருக்கங்கள்

  1. யசோதர காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

320 அல்லது 330 பாடல்கள்

  1. “தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்” என கூறியவர்?

திருவள்ளுவர்

  1. கடித வடிவில் இலக்கியங்களைப் படைத்துள்ளவர்கள் யார்?

தாகூர் ,நேரு,டி.கே.சி,வல்லிக்கண்ணன்,பேரறிஞர் அண்ணா , மு.வரதராசனார்,கு. அழகிரிசாமி ,கி.இராஜநாராயணன்

  1. பெரியாரின் சிந்தனைகள் என்னும் நூலின் ஆசிரியர்?

வே .ஆனைமுத்து

  1. அஞ்சல் தலைகளின் கதை எனும் நூலினை எழுதிய ஆசிரியர் யார்?

எஸ்.பி. சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு.சாம்பசிவன்)

  1. தம்பிக்கு என கடிதம் எழுதுபவர்?

அறிஞர் அண்ணா

  1. தங்கைக்கு என கடிதம் எழுதுபவர்?

 மு.வரதராசன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 08 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page