TNPSC ILAKKIYAM NOTES |மொழிகளின் அறிமுகம்

Telegram Logo GIF TNPSC ILAKKIYAM NOTES |மொழிகளின் அறிமுகம்

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF [TAMIL MEDIUM]


[For best experience, use Chrome, Firefox, or Edge. Some features may not work in other browsers]


  1. எங்கிருந்து வடமொழியும் தென்மொழியும் பிறந்ததாக ஐதீகம்?

சிவபெருமானின் உடுக்கையிலிருந்து

  1. வடமொழியை சிவபெருமான் யாருக்கு கொடுத்தார்?

பாணினி

  1. தென் மொழியை சிவபெருமான் யாருக்கு கொடுத்தார்?

அகத்தியர்

  1. இடைநிலை விகுதி இல்லாமல் பகுதியாகவே உள்ள சொற்களை கொண்ட மொழி எவ்வாறு அழைக்கபடும்?

தனிநிலை மொழி

  1. குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ் என்றும் கூறியவர் யார்?

தே பொ.மீனாட்சி சுந்தரம்

  1. உலக மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

எட்டு

  1. இந்தியாவில் வழங்கும் மொழிக்குடும்பங்கள் மொத்தம் எத்தனை?

நான்கு :திராவிட மொழி குடும்பம் ஆஷ்ட்ராக் மொழிக் குடும்பம் (முண்டா மொழிக்குடும்பம்) , சீனோ-திபெத்திய மொழிக் குடும்பம் ,இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம்

  1. “இந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றும் ,ஆரியத் திராவிட மொழிகள் என்றும், ஆரிய மொழிகள் என்றும் மூவகையாகப் பாகுபாடு செய்தலே இன்று மொழி ஆராய்ச்சிக்குப் பொருந்துவதாக உள்ளது”-எனக் கூறியவர்?

 மு வரதராசனார்

  1. இந்தியாவிலுள்ள மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மை வாய்ந்தது எது?

திராவிட மொழிக்குடும்பம்

  1. தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் சொன்னவர் யார்?

வில்லியம் கேரி

  1. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் ஒரு தனி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதன்முதலில் கூறியவர் யார்?

எல்லிஸ்

  1. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் யார்?

குமரிலபட்டர்

  1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை என அழைக்கப்படுபவர்?

 கால்டுவெல்

  1. கால்டுவெல் எழுதிய நூல்?

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்(ஆங்கிலம்)

  1. தமிழ் முதலான மொழிகளுக்கு திராவிட மொழிக் குடும்பம் என்று முதன்முதலில் பெயர் சூட்டியவர் யார்?

கால்டுவெல்

  1. திராவிடம் என்ற சொல்லில் இருந்துதான் தமிழ் என்ற சொல் தோன்றியது என்று கருத்துடையவர்?

கால்டுவெல்

  1. தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் திராவிடம் என்ற சொல் தோன்றியது என்ற கருத்துடையவர்கள்?

 சட்டர்ஜி,வி ஆர் ஆர் தீட்சிதர்

  1. திராவிட மொழிகளைத் திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் என இரண்டாக பிரித்தவர் யார்?

கால்டுவெல்

  1. திருந்திய திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

 ஆறு :தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு குடகு

  1. திராவிட மொழிகள் மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழியுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று காட்டியவர் யார்?

கால்டுவெல்

  1. எழுத்து வடிவமும் இலக்கிய வளமும் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் உள்ள திருந்திய திராவிட மொழிகள் எவை?

துளுவும் குடகும்

  1. “கால்டுவெல்லின் நூல் பெரும்பாலும் தென் திராவிட மொழிகளை பற்றியதாக இருப்பதால் அதனை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொது நிலையால் சுட்டுவதை விட தென்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்று அழைப்பதே பொருத்தம் எனக் கூறியவர்?

தெ.பொ. மீனாட்சிசுந்தரம்

  1. தற்பொழுது எத்தனை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது?

28

  1. திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?

இரண்டு: பெரு மொழிகள், சிறு மொழிகள்

  1. எத்தனை பெருமொழிகள் உள்ளன?அவை எவை?

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளும் பெருமொழிகள் மற்றவை சிறுமொழிகள்

  1. மொழியின் இலக்கண இலக்கிய சிறப்பை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?

இரண்டு:திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள்

  1. திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

செப்பமுள்ள திராவிட மொழிகள் ,செப்ப மற்ற திராவிட மொழிகள்

  1. மொழி வழங்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?

தென் திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள் என மூன்று வகை

  1. தென்திராவிட மொழிகள் எத்தனை?

9: தமிழ், மலையாளம், குடகு, கோடா[கோத்தா], தோடா, படகா, கன்னடம், துளு, இருளா

  1. நடுத்திராவிட மொழிகள் எத்தனை?

12:தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, பெங்கோ, கோண்டா, முண்டா, கோலமி, நாயக்கி, பர்ஜி, கடப்பா[கதபா]

  1. வடதிராவிட மொழிகள் எத்தனை?

3:குருக்,மால்தோ, பிராகூய்

  1. அண்மையில் கண்டுபிடிக்கபட்ட திராவிட மொழிகள் என்ன?

எருகா,தங்கா,குறும்பா,சோழிகா

  1. இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி எது?

பிராகுயி (பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாவட்டத்தில்)

  1. திராவிட மக்களில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?

தெலுங்கு

  1. இந்திய நாட்டில் இந்திக்கு அடுத்து அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?

தெலுங்கு

  1. திராவிட மொழிகளில் அதிக ஒலிகளைக் கொண்ட மொழி எது?

தோடா

  1. மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மொழி திராவிட மொழியே என்று கூறியவர் யார்?

ஹீராஸ் பாதிரியார்

  1. தமிழின் முதல் இலக்கியமாக கருதப்படுவது எது?

 சங்க இலக்கியம்

  1. மலையாளத்தின் முதல் இலக்கியம் எது?

ராம சரிதம்

  1. ராம‌ சரிதம் நூலை எழுதியவர் யார்?

ஸ்ரீ வீர ராமவர்மா

  1. கன்னடத்தின் முதல் நூல் எது?

கவிராஜ மார்க்கம்

  1. கவிராஜ மார்க்கம் நூலை இயற்றியவர் யார்?

நிர்பதுங்கர்

  1. தெலுங்கின் முதல் நூல் எது?

பாரதம்

  1. பாரதம் என்ற நூலை எழுதியவர் யார்?

நன்னயப்பட்டர்

  1. தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் யார்?

அகத்தியர் அல்லது தொல்காப்பியர் 

  1. தெலுங்கிற்கு இலக்கண நூல் எழுதியவர் யார்?

கேசவர்

  1. மலையாளத்திற்கு இலக்கணம் எழுதியவர் யார்?

எழுத்தச்சன்

  1. தமிழின் இலக்கண நூல் என்ன?

தொல்காப்பியம்

  1. தெலுங்கின் இலக்கண‌நூலான ஆந்திர சப்த சிந்தாமணி எந்த மொழியில் எழுதப்பட்டது?

 சமஸ்கிருதத்தில்

  1. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூல் எது?

ஆந்திர பாஷா பூஷணம்

  1. மலையாளத்தின் இலக்கண நூல் எது?

லீலா திலகம்

  1. மீட்டுருவாக்கம் மூலம் திராவிட மொழியின் ஒலியன் அமைப்பை ஆய்வு செய்தவர் யார்?

 டாக்டர் எமினோ

  1. திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதியை இயற்றியவர் யார்?

டாக்டர் பரோ மற்றும் எமினோ

  1. திருந்தாத திராவிட மொழிகளுக்கு முதன்மை கொடுத்து ஆய்வு செய்தவர் யார்?

தாமஸ் பரோ

  1. திராவிட மொழிகளை மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் எது?

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

  1. கன்னட மொழியின் முதல் இலக்கண நூல் எது?

பாஷா பூஷணம் [சமஸ்கிருதம்]

  1. கன்னட மொழியில் எழுதப்பட்ட கன்னட இலக்கண நூல் எது?

சப்தமணி தர்ப்பணா

  1. மூலத் திராவிட மொழியிலிருந்து முதலில் பிரிந்த மொழி எது?

துளு ,இறுதியாக பிரிந்தது மலையாளம்

  1. பழந்தமிழகம் பற்றி குறிப்பிடும் கிரேக்க நூலாசிரியர்கள் யார்?

தாலமி,பிளினி,மெகஸ்தனீஸ்

  1. இடைக்கால தமிழகம் பற்றி குறிப்பிடுபவர் யார்?

 சீன யாத்திரிகர் யுவான் சுவாங் 

  1. ஊர் என்று முடியும் 23 இடப் பெயர்களை குறித்த கிரேக்க நூலாசிரியர் யார்?

தாலமி

  1. திராவிட மொழியுடன் ஆரிய மொழி கலக்க எந்த மொழி தோன்றியது?

பிராகிருதம் பாலி மொழியும்

  1. இந்தியாவில் தோன்றிய மிகப் தொன்மையான மொழி எது?

தமிழ்

  1. வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழி என்று தமிழை முதன்முதலில் கூறியவர் யார்?

கால்டுவெல்

  1. திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரிவடிவ எழுத்து கொண்ட மொழி எது?

தமிழ்

  1. திராவிட மொழிகளிலேயே மிக தொன்மையான இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழி எது?

தமிழ்

  1. திராவிடர்களின் புனித மொழி தமிழ் என்று சொன்னவர் யார்?

சிஆர் ரெட்டி

  1. திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி எது?

தமிழ்

  1. மூல திராவிட மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி எது?

தமிழ்

  1. இன்று இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பிறமொழிக் கலப்பு குறைந்த மொழி எது?

தமிழ்

  1. யார் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்?

தெலுங்கர்களும், கன்னடர்களும்

  1. அரவாலு என்றால் என்ன பொருள்?

அறம் நிறைந்தவர்/ ஒலி அதிகமாக பேசுபவர்

  1. தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் யார்?

தேவநேயப் பாவாணர் (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கியவர்)

  1. தமிழ் எந்த நாடுகளில் பேசப்படுகிறது?

 இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிஜி தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது

MULTIPLEX
  1. இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே இந்திய மொழி எது?

தமிழ்

  1. முதலில் கணினியுள் சென்ற இந்திய மொழி எது?

 தமிழ்

  1. உலக அளவில் ஆங்கில மொழிக்கு அடுத்து அதிக அளவில் மென்பொருளை உடைய மொழி எது?

தமிழ்


TNPSC ILAKKIYAM NOTES |மொழிகளின் அறிமுகம்

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page