TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. எந்த ஆண்டு ஆங்கிலப்படைகள் மலேசியாவில் ஜப்பானிடம் சரண் அடைந்தனர்?

 1942, பிப்ரவரி 15

  1. சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்று படையை உருவாக்கினர்?

மோகன்சிங்

  1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்?

91 நாட்கள்

  1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை எப்போது ஏற்றார்?

ஜூலை 9 ,1943

  1. “டெல்லி சலோ” என முழங்கியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  1. “தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” எனக் கூறியவர்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  1. “நேதாஜி,தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” எனக் கூறியதாகக் கூறியவர்?

பசும்பொன் முத்துராமலிங்கனார்

  1. “இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என கூறியவர்?

 இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான் 

  1. இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக 45 வீரர்கள் எங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்?

 ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமி

  1. நேதாஜியால் தேர்வு செய்யப்பட்ட 45 பேர் கொண்ட பயிற்சி பிரிவின் பெயர் என்ன?

டோக்கியோ கேடட்ஸ்

  1. இந்திய தேசிய ராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?

ஜான்சிராணி

  1. இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர் யார்?

டாக்டர் லட்சுமி

  1. டோக்கியோ கேடட்ஸ் பிரிவில் பயிற்சி பெற்று,பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றியவர் யார்?

கேப்டன் தாசன்

  1. “மலேசியாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது ” எனக் கூறியவர் யார்?

சர்ச்சில்

  1. “தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” எனக் கூறியவர் யார்?

 நேதாஜி

  1. “அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம்தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்கு போராடுவதே மிகச்சிறந்த நோய் குணமாகும்” இக்கூற்றை கூறியவர்?

நேதாஜி

  1. “மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்டநேரங்களில் வாழ கற்றுக்கொள்” இவரிகளை கூறியவர்?

நேதாஜி

  1. “விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்” இக்கூற்றை கூறியவர்?

நேதாஜி

  1. இந்திய தேசிய ராணுவம் எப்போது ஆங்கிலேயரை வென்று மணிப்பூர் பகுதியில் “மொய்ராங்” என்ற இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது?

 மார்ச் 18,1944

  1. “நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப் படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” எனக் கூறியவர்?

 இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த இராமு

  1. ‘வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலையை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” எனக் கூறியவர்?

அப்துல்காதர்

  1. “இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு” எனும் நூலை எழுதியவர்?

பேராசிரியர் மா.சு .அண்ணாமலை

  1. “வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 சீவக சிந்தாமணி

  1. “அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்..”இவர்கள் இடம் பெற்ற நூல்?

சீவக சிந்தாமணி

  1. சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகம்  எத்தனை?

13

  1. சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் என்னன்ன?

நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம்,குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம்,விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம், மண்மகள் இலம்பகம் ,பூமகள் இலம்பகம் ,இலக்கணையார் இலம்பகம் ,முத்தி இலம்பகம்

  1. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

சீவகசிந்தாமணி

  1. சீவக சிந்தாமணிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

மணநூல்

  1. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

திருத்தக்க தேவர்

  1. சீவக சிந்தாமணியின் காலம் என்ன?

ஒன்பதாம் நூற்றாண்டு

  1. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக இயற்றப்பட்ட நூல் எது? 

நரிவிருத்தம்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page