TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 02 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 02 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


இயல் 04

  1. “ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

பாரதிதாசன்

  1. “இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !”

இவ்வரிகளை இயற்றியவர் யார்?  பாரதிதாசன்

  1. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

பாண்டியன் பரிசு ,அழகின் சிரிப்பு ,இசையமுது ,இருண்ட வீடு, குடும்ப விளக்கு ,கண்ணகி புரட்சிக் காப்பியம் ,பிசிராந்தையார்

  1. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது?

பிசிராந்தையார்

  1. தமிழ்பேறு எனும் கவிதை பாரதிதாசனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?

பாரதிதாசன் கவிதைகள்

  1. “கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம் ” இவ்வரிகளை இயற்றியவர்?

குமரகுருபரர்

  1. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

பதினேழாம் நூற்றாண்டு

  1. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?

கந்தர் கலிவெண்பா ,கயிலைக் கலம்பகம் ,சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், நீதிநெறிவிளக்கம்

  1. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை செய்யுள்கள் உள்ளன?

102 செய்யுள்கள்

  1. “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என கூறியவர் யார்?

பாரதியார்

  1. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர் யார்?

திருக்குறளார். வீ .முனிசாமி

  1. திருக்குறளார். வீ .முனிசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன?

வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் ,சிந்தனை கலஞ்சியம்

  1. பள்ளி மறுதிறப்பு எனும் சிறுகதையை எழுதியவர் யார்?

சுப்ரபாரதிமணியன்

  1. சுப்ரபாரதிமணியன் என்ன இலக்கிய இதழை நடத்தி வருகிறார்?

கனவு

  1. சுப்ரபாரதிமணியன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

பின்னல் ,வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண் ,கதை சொல்லும் கலை

இயல் 05

  1. தேனரசன் எழுதிய கவிதை‌ நூல்கள் என்னென்ன?

மண்வாசல், வெள்ளைரோஜா ,பெய்து பழகிய மேகம்

  1. “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்” இவ்வரிகளை  இயற்றியவர் யார்?

காளமேகப்புலவர்

  1. காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ?

 வரதன்

  1. காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை ,பரப்பிரம்ம விளக்கம் ,சித்திர மடல் மற்றும் சில தனிப் பாடல்கள்

  1. ஓவியம் வரையப் பயன்படும் துணிக்கு பெயர் என்ன?

எழினி, திரைச்சீலை, கிழி,படாம்

  1. எந்த நூலில் குணமாலை எனும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது?

சீவகசிந்தாமணி

  1. துணியில் வரையப்படும் ஓவியங்கள் தற்காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

கலம்காரி ஓவியங்கள்

  1. “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” இவ்வரி இடம் பெற்ற நூல் எது?

நெடுநல்வாடை

  1. “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” இவ்வரி இடம்பெற்ற நூல் எது?

மணிமேகலை

  1. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி என்ன நூலில் இடம்பெற்றுள்ளது?

பரிபாடல்

  1. “இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

பரிபாடல்

  1. தந்த ஓவியங்களை எங்கு அதிகமாக காணமுடியும்?

கேரள மாநிலம்

  1. கேலிச் சித்திரங்களை பாரதியார் எந்த இதழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்?

 இந்தியா

  1. ஓவியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

ஓவு,ஓவியம், ஓவம், சித்திரம் ,படம்,படாம்,வட்டிகைச் செய்தி

  1. ஓவியம் வரைபவர்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

கண்ணுள் வினைஞர் ,ஓவியப் புலவர்,ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்

  1. ஓவியக் கூடத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

எழுதெழில் அம்பலம், எழுத்து நிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம் ,சித்திர மண்டபம் ,சித்திரசபை

  1. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?

 இராஜா இரவிவர்மா

  1. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்?

கொண்டைய ராஜு

  1. நாட்காட்டி ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

பசார் பெயிண்டிங்

  1. தஞ்சை சரசுவதிமகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?

கி.பி. 1122

  1. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

கிபி 1981

  1. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் எவ்வளவு நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது?

ஆயிரம் ஏக்கர்

  1. இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது? 

தஞ்சாவூர் ,தமிழ் பல்கலைக்கழகம்

  1. உ வே சா நூலகம் சென்னையில் எப்போது தொடங்கப்பட்டது?

 கிபி 1942

  1. உவேசா நூலகத்தில் எத்தனை ஓலைச் சுவடிகளும் தமிழ் நூல்களும் உள்ளன?

2128 ஓலைச்சுவடிகள், 2941 தமிழ் நூல்கள்

  1. கீழ்த்திசை நூலகம் சென்னையில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 1869

  1. சென்னை கன்னிமாரா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1896

  1. கன்னிமரா நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன?

6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள்

  1. எந்த நூலகத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது?

கன்னிமாரா நூலகம்

  1. சென்னை வள்ளுவர் கோட்டம் கோடம்பாக்கத்தில் எப்போது வடிவமைக்கப்பட்டது?

1973 இல் தொடங்கி 1976 இல் கட்டி முடிக்கப்பட்டது

  1. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேரின் மொத்த உயரம்?

 128 அடி

  1. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?

கரு நிறப் பளிங்குகல்

  1. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?

வெண்ணி நிறப் பளிங்குகல்

  1. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?

செந்நிறப் பளிங்குகல்

  1. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை எத்தனை அடி உயர பாறைமீது கட்டப்பட்டுள்ளது?

30 அடி

  1. திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணிகள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1990

  1. திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு எப்போது திறக்கப்பட்டது?

ஜனவரி 1 2000

  1. திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம் எவ்வளவு?

 95 அடி

  1. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?

3681 கருங்கற்கள் (ஏழாயிரம் டன்)

  1. மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது?

 மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில்

  1. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் யாருடைய வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன?

தொல்காப்பியர், அவ்வையார் ,கபிலர்

  1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய நகரம் எது?

 பூம்புகார்

  1. பூம்புகார் நகரம் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?

சிலப்பதிகாரம் பட்டினப்பாலை

  1. பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் எனும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகக் கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. பூம்புகார் கடற்கரையில் சிற்ப கலைக்கூடம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

 1973    

இயல் 06

  1. ” மாரியென்று இன்றிவறந்திருந்த காலத்தும் பாரி படமகள் பாண்மகற்கு” இவ்வரிகளை இயற்றியவர்?

முன்றுரை அரையனார்

  1. ” ஒன்றாகு முன்றிலோ இல்” இவ்வரிய குறிப்பிடப்பட்டுள்ள பழமொழி எது? 

ஒன்றுமில்லாத வீடு எதுவும் இல்லை

  1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?

முன்றுறையரையனார்

  1. முன்றுறையரையனாரின் காலம் என்ன?

கி.பி நான்காம் நூற்றாண்டு

  1. முன்றுறையரையனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?

சமணசமயம்

  1. பழமொழி நானூறு எத்தனைப் பாடல்களைக் கொண்டது?

400 பாடல்கள்

  1. நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளை பிரிப்பதற்காக மாடுகளை கொண்டு மிதிக்க செய்வதற்கு என்ன பெயர்?

போரடித்தல்

  1. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நாட்டுப்புறப் பாடல்

  1. நாட்டுப்புறப் பாடல் எந்த இலக்கிய வகையைச் சாரும்?

வாய்மொழி இலக்கியம்

  1. கி.வா ஜெகந்நாதன் தொகுத்த நாட்டுப்புற பாடல்களின் நூல் பெயர் என்ன?

மலையருவி

  1. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது எது?

திருநெல்வேலி

  1. “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” எனப் பாடியவர் யார்?

திருஞானசம்பந்தர்

  1. திருநெல்வேலியின் சிறப்பை தண்பொருநைப் புனல்நாடு எனக் கூறியவர் யார்?

சேக்கிழார்

  1. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு என்ன பெயர் இருந்துள்ளது?

வேணுவனம்

  1. வேணுவனம் என்பதன் பொருள் என்ன?

மூங்கில் காடு

  1. “பொதியி லாயினும் இமயமன மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

இளங்கோவடிகள்

  1. இலக்கியங்களில் திரிகூட மலை என வழங்கப்படும் மலை எது?

குற்றால மலை

  1. திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?

தாமிரபரணி

  1. தாமிரபரணி நதிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

தண்பொருநை

  1. தாமிரபரணியின் கிளை ஆறுகள் என்னென்ன?

பச்சையாறு ,மணிமுத்தாறு, சிற்றாறு ,காரையாறு ,சேர்வலாறு ,கடனாநதி

  1. இறந்தவர்களின் உடல்களை புதைக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

ஆதிச்சநல்லூர்

  1. ஆதிச்சநல்லூர் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?

தூத்துக்குடி

  1. நெல்லை மாவட்டம் தமிழகத்தில் எந்த உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?

நெல்லிக்காய்

  1. கொற்கை எனும் துறைமுகம் எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்தது?

தாமிரபரணி

  1. “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 நற்றிணை

  1. “கொற்கையில் பெருந்துறை முத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

அகநானூறு

  1. “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே ” இவ்வரிகளை இயற்றியவர்?

திருஞானசம்பந்தர்

  1. காவற்புரை என்பதன் பொருள் என்ன?

சிறைச்சாலை

  1. கூலம் என்பது எதைக் குறிக்கும்?

தானியம்

  1. அக்கசாலை என்பது எதனை உருவாக்கும் இடம்?

அணிகலன்களும், பொற்காசுகளும்

  1. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் உள்ள நகரம் எது?

திருநெல்வேலி

  1. தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள நகரம் எது ?

பாளையங்கோட்டை

  1. எந்த இரு நகரங்கள் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன?

திருநெல்வேலி பாளையங்கோட்டை

  1. வணிகம் நடைபெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

பேட்டை

  1. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் எது?

பாண்டியபுரம்

  1. பாண்டிய மன்னனின் தேவியாகிய மங்கையர்க்கரசி மகளிர் எதிர்கொண்டு வரவேற்று இடம் எவ்வாறு வழங்கப்படுகிறது? 

திருமங்கை நகர்

  1. திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர்கள் யார்?

மாறோக்கத்து நப்பசலையார் ,நம்மாழ்வார் ,பெரியாழ்வார் ,குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர் ,கவிராச பண்டிதர்

  1. வெங்கடேசுர எட்டப்ப ராஜாவை பற்றி பல பாடல்களைப் பாடியவர் யார்?

கடிகைமுத்துப் புலவர்

  1. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடத்திற்கு பெயர் என்ன?

சீவலப்பேரி என்கிற முக்கூடல்

  1. ஸ்ரீவைகுண்டத்து பெருமாளைப் பற்றிப் பாடியவர் யார்?

பிள்ளைப் பெருமாள்

  1. நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரிக்கு வழங்கப்படும் வேறு பெயர்?

திருக்குருகூர்

  1. சீதக்காதி என்ற வள்ளல் வாழ்ந்த இடம் எது?

காயல்பட்டினம் 

  1. “வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உன்னை கூடாதென்றும் தடுப்பார் கோமதி தாய் ஈஸ்வரியே!” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அழகிய சொக்கநாதர்

  1. “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என பாடியவர் யார்?

திருஞானசம்பந்தர்

  1. “உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன்” என பாடியவர்?

மாணிக்கவாசகர்

  1. திருநெல்வேலி சீமை என குறிப்பிடப்படுவது இன்றைய எந்த மாவட்டங்கள் இணைந்த பகுதி?

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

  1. டி.கே.சி என அழைக்கப்படுபவர் யார்?

டி.கே. சிதம்பரநாதர்

  1. டி.கே. சிதம்பரநாதர் என்ன பணி செய்தார்?

வழக்கறிஞர்

  1. டி.கே. சிதம்பரநாதர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?

இரசிகமணி,கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசை காவலர் ,வளர் தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர்

  1. டி.கே. சிதம்பரநாதர் என்ன பெயரில் தன்னுடைய வீட்டில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்?

வட்டத்தொட்டி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 02 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page