TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 01 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 01 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “இன்பம் பொலிகின்ற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

  1. நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?

காந்தியக் கவிஞர்

  1. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ?

 நாமக்கல் கவிஞர்

  1. நாமக்கல் கவிஞர் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?

மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி

  1. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

 நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

  1. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம்

  1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?

 தொல்காப்பியர்

  1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?

தொல்காப்பியம்

  1. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

மூன்று : எழுத்திலக்கணம் ,சொல்லிலக்கணம் ,பொருளிலக்கணம்

  1. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

ஒன்பது இயல்கள்

  1. வாயினால் பேசுவதும் கேட்பதும் மொழியின் எந்த நிலை?

முதல் நிலை

  1. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் எத்தனையாவது நிலை?

இரண்டாம் நிலை

  1. எந்த  மொழியானது உடனடி பயன்பாட்டுக்கு உரியது?

ஒலிவடிவையுடைய பேச்சுமொழி

  1. எந்த  மொழியானது நீண்டகால பயன்பாட்டிற்கு உரியது?

வரிவடிவமுடைய எழுத்து மொழி

  1. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?

பேச்சு மொழி

  1. “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் பறிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும் இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது ,இணைக்கப்படுவது கனவு காணப்படுவது ஆகியனவும் மொழியே ஆகும் எனக் கூறியவர்?

மு. வரதராசனார்

  1. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும்  தத்தமில் சிறிது உள வாகும்” எனக் கூறும் நூல் எது?

நன்னூல்

  1. மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

வட்டாரமொழி

  1. மூலமொழியில் இருந்து பிரிந்து உருவாகும் புதிய மொழி எவ்வாறு அழைக்கப்படும் ?

 கிளைமொழி

  1. பேச்சு மொழியை என்ன வழக்கு என்று அழைப்பர்?

உலக வழக்கு

  1. எழுத்து மொழியை என்ன வழக்கு என்று கூறுவர்?

 இலக்கிய வழக்கு

  1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

இரட்டை வழக்கு மொழி

  1. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொல்காப்பியர் எவ்வாறு அழைத்துள்ளார்?

உலக வழக்கு மற்றும் செய்யுள் வழக்கு

  1. தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உள்ளதால் தமிழ் எவ்வாறு அழைக்கப்படும்?

இரட்டை வழக்கு மொழி

  1. “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” எனக்கூறியவர்?

பாவேந்தர் பாரதிதாசன்

  1. “செந்தமிழை செழுந்தமிழாக செய்வதுவும் வேண்டும்” எனக் கூறியவர்?

பாவேந்தர் பாரதிதாசன்  

இயல் 02

   

  1. “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

வாணிதாசன்

  1. ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

தொடுவானம்

  1. தமிழகத்தின் வோர்ட்ஸ்மித் புகழப்படுபவர் யார்?

கவிஞர் வாணிதாசன்

  1. கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?

அரங்கசாமி என்ற எத்திராசலு

  1. கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?

பாரதிதாசன்

  1. கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?

தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு

  1. கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?

கவிஞரேறு ,பாவலர்மணி

  1. கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கி கௌரவப்படுத்தியது?

செவாலியர் விருது

  1. வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

தமிழச்சி ,கொடிமுல்லை, தொடுவானம் ,எழிலோவியம், குழந்தை இலக்கியம்

  1. “கார்த்திகை தீபமென காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ- கிளியே பார்வை குளிருமடீ” இவ்வரிகளை எழுதியவர் யார்?

சுரதா

  1. சுரதாவின் இயற்பெயர் என்ன?

  இராசகோபாலன்

  1. சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை என்னவாக மாற்றிக் கொண்டார்?

சுப்புரத்தினதாசன்

  1. சுரதாவுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

உவமைக்கவிஞர்

  1. சுரதா இயற்றிய நூல்கள் என்னென்ன?

அமுதும் தேனும் ,தேன்மழை ,துறைமுகம், சுரதா கவிதைகள்

  1. இயற்கை எழில் எனும் கவிதை எந்த நூலில் உள்ளது?

தேன்மழை

  1. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசை பாடல் வகையின் பெயர் என்ன?

கிளிக்கண்ணி

  1. காட்டை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?

கா, கால் ,கான், கானகம், அடவி,அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு,பழவம்,முளரி,வல்லை,விடர், வியல்,வனம்,முதை,மிளை, இறும்பு,சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல்,பதுக்கை, கணையம்

  1. “வாய்ச்சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ!- கிளியே” இவ்வரிகளை எழுதியவர்?

பாரதியார்

  1. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?

முண்டந்துறை புலிகள் காப்பகம்

  1. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

இரண்டு:ஆசிய யானை ,ஆப்பிரிக்க யானை

  1. ஆசிய யானைகளில் எந்த யானைக்கு மட்டும் தந்தம் உண்டு?

ஆண் யானை

  1. யானை நாள் ஒன்றுக்கு எத்தனை கிலோ மற்றும் தண்ணீரை உணவாக எடுத்துக் கொள்ளும் ?

 250 கிலோ உணவு 65 லிட்டர் தண்ணீர்

  1. கரடி என்ன உணவு வகை விலங்கு?

அனைத்துண்ணி

  1. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்

  1. நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை இருக்கும்?

160 கிலோ

  1. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டிகளை ஈனும்?

90 நாட்கள்

  1. உலகில் எத்தனை வகை சிங்கங்கள் உண்டு?

ஆசிய சிங்கம் ,ஆபிரிக்க சிங்கம்

  1. ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் எங்கு மட்டும் காணப்படுகிறது ?

குஜராத் மாநிலத்தில் ,கிர் சரணாலயம்

  1. இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ் பயேங்

  1. ஜாதவ் பயேங் எந்த இடத்தைச் சார்ந்தவர்?

அசாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டம்

  1. ஜாதவ் பயேங் எந்த ஆற்றின் நடுவே 30 ஆண்டுகளில் ஒரு காட்டை உருவாக்கினார்?

பிரமபுத்திரா

  1. மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் மண்ணின் தன்மை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும் அதற்கு மண்புழுக்கள் மட்டுமின்றி சிவப்பு கட்ட எறும்புகளும் உதவும் என ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறியவர் யார்?

ஜாதுநாத்

  1. எந்தப் பல்கலைக்கழகம் இந்திய வனமகன் எனும் பட்டத்தை ஜாதவ் பயேங் வழங்கியது?

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், 2012

  1. எந்த ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது?

 2015

  1. எந்த பல்கலைக்கழகம் ஜாதவ் பயேங்கிற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது?

 கவுகாத்தி பல்கலைக்கழகம்

  1. ஜாதவ் பயேங்கைப் பற்றி எந்த இதழில் செய்துவந்தது?

டைம்ஸ் ஆப் இந்தியா

   

இயல் 03

  1. “வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

  1. உருத்திரங்கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தவர்?

கடியலூர்

  1. உருத்திரங்கண்ணனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?

பெரும்பாணாற்றுப்படை ,பட்டினப்பாலை

  1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

தொண்டைமான் இளந்திரையன்

  1. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது என்ன இலக்கிய வகை?

ஆற்றுப்படை இலக்கியம்

  1. பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன?

திருமுருகாற்றுப்படை ,மதுரைக் காஞ்சி ,பொருநராற்றுப்படை ,நெடுநல்வாடை ,பெரும்பாணாற்றுப்படை ,குறிஞ்சிப்பாட்டு ,சிறுபாணாற்றுப்படை பட்டினப்பாலை , முல்லைப்பாட்டு,மலைபடுகடாம்

  1. ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

மருதனிளநாகனார்

  1. கலித்தொகையின் மருதத் திணையில் உள்ள எத்தனை பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார்?

35 பாடல்கள்

  1. அகநானுறு எத்தனை பாடல்களைக் கொண்டது?

400

  1. அகநானூற்றின் வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

நெடுந்தொகை

  1. எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன?

நற்றிணை ,குறுந்தொகை, பரிபாடல் ,கலித்தொகை, ஐங்குறுநூறு ,அகநானூறு, பதிற்றுப்பத்து ,புறநானூறு

  1. முந்நீர் வழக்கம் என்னும் கடற் பயணத்தை பற்றி குறிப்பிடும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?

பட்டினப்பாலை

  1. ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

அகநானூறு

  1. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருவணிகம் வங்கம் “இவ்வரிகழ் இடம்பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து

  1. எந்த நிகண்டு நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

சேந்தன் திவாகரம்

  1. எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்துவிட்டு மிதக் பயன்படுத்தப்பட்டது எவ்வாறு அழைக்தப்பட்டது?

தோணிகள்

  1. பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?

நியூசிலாந்து , வெலிங்டன் அருங்காட்சியகம்

  1. கப்பல் கட்டும் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

கம்மியர்

  1. “கலஞ்செய் கம்மியர் வருக என கூஇய்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 மணிமேகலை

  1. கப்பல்களின் நீர்மட்ட வைப்பிற்கு என்ன மரங்களை பயன்படுத்தினர்?

வேம்பு ,இலுப்பை, புன்னை, நாவல்

  1. கப்பல்களின் பக்கங்களுக்கு என்ன மரங்களை பயன்படுத்தினார்?

தேக்கு ,வெண்தேக்கு

  1. மரத்தின் வெட்டப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வெட்டுவாய்

  1. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

 கண்ணடை

  1. கப்பல்களை என்ன நீட்டலவையில் கணக்கிட்டனர்?

 தச்சுமுழம்

  1. கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைக்க கப்பலின் அடிப்பகுதியில் எவற்றை அரைத்து பூசினர்?

 சுண்ணாம்பும் சணலையும் அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்

  1. சுண்ணாம்பும் சணலையும் அரைத்து பூசும் செயல்முறையை இத்தாலி நாட்டின் எந்தப் கடற் பயணி வியந்து பாராட்டியுள்ளார்?

மார்க்கோபோலோ

  1. இரும்பு அணிகளுக்கு பதிலாக மரத்திலான ஆணிகள் பயன்படுத்தப்பட்டன இந்த ஆணிகளுக்கு பெயர் என்ன?

தொகுதி

  1. “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறிய ஆங்கிலேயர் யார்?

வாக்கர்

  1. பாய்மரக் கப்பலின் பாய் கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?

பரிபாடல்

  1. கப்பலின் உறுப்புகள் என்னென்ன?

எரா,பருமல்,வங்கு, கூம்பு ,பாய்மரம் ,சுக்கான் ,நங்கூரம்

  1. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

எரா

  1. கப்பலின் குறுக்கு மரத்தை எவ்வாறு அழைப்பர்?

 பருமல்

  1. கப்பலை செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி என்ன பெயர்?

 சுக்கான்

  1. கப்பலை நிலையாக ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பின் பெயர் என்ன?

நங்கூரம்

  1. சமுக்கு எனும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?

கப்பல் சாஸ்திரம்

  1. கப்பல் செலுத்துபவரை எவ்வாறு அழைப்பர்?

மாலுமி, மீகாமன் ,நீகான், கப்பலோட்டி

  1. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” இவ்வரிகளை இயற்றியவர் &நூல் எது?

வெண்ணிக்குயத்தியார் ,புறநானூறு

  1. கலங்கரை விளக்கம் என்றால் பொருள் என்ன?

கப்பலை அழைக்கும் விளக்கு

  1. “பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது எனவே கப்பலில் வரும் பொருட்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்” எனும் செய்தியை கூறும் நூல் எது?

புறநானூறு

  1. “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரைசேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர் யார்?

ஜுல்ஸ் வெர்ன்

  1. ஜுல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

பிரான்ஸ் நாடு

  1. ஜுல்ஸ் வெர்னின் வேறு புதினங்கள் என்னென்ன ?

என்பது நாளில் உலகத்தை சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் ,ஆழ்கடலின் அடியில்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 01 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page