TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 03 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 03 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


இயல் 07

  1. “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ என வினவுதி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. சோழ மன்னன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?

காவற்பெண்டு

  1. காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

புறநானூறு

  1. தேசிங்கு யாருடைய மகன்?

செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சொரூப சிங்

  1. டில்லி பாதுஷாவுக்கு சொந்தமான யாராலும் அடக்க முடியாத எந்த குதிரையை தேசிங்கு அடக்கினார்?

நீலவேணி

  1. தேசிங்கு ராஜாவை கப்பம் கட்டுமாறு ஆற்காடு நவாப் யாரை தூது அனுப்பினார்?

தோன்றமல்லன்

  1. “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேக பேச்சால் எத்தனையோ அறாவாளிகளையும் உண்டாக்கியவர்.உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி” என முத்துராமலிங்கத்தை பாராட்டியவர் யார்?

பெரியார்

  1. காமராஜர் விருதுநகரில் நடைபெற்ற தேர்தலில் எந்த ஆண்டு போட்டியிட்டார் ?

 1936

  1. முத்துராமலிங்க தனது முதல் உரையை எங்கு ஆற்றினார்?

விவேகானந்தர் வாசகசாலை ,சாயல்குடி (விவேகானந்தரின் பெருமை என்ற தலைப்பில் மூன்று மணி நேரம்)

  1. “இதுபோன்ற ஒரு பேச்சு இதுவரை நான் கேட்டதில்லை முத்துராமலிங்கரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என பாராட்டியவர் யார்?

காமராஜர்

  1. பசும்பொன் முத்துராமலிங்கர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்?

1937, 1946

  1. பசும்பொன் முத்துராமலிங்கர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்?

1952,1957

  1. எந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில் வெற்றி பெற்றார் ?

 1962

  1. முத்துராமலிங்கர் எந்த பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் உரையாற்றினார் ?

 காசி ,இந்துப் பல்கலைக்கழகம்

  1. முத்துராமலிங்கர் இன் ஆங்கில உரையை கேட்டு யார் “ஆங்கிலம் உலகை ஆள்கிறது, நம் முத்துராமலிங்கர் 3 மணிநேரம் ஆங்கிலத்தை அடக்கி ஆண்டார் “என பாராட்டினார்?

சர் சிபி இராமசாமி

  1. ஆங்கில ஆட்சியில் மக்களை அடிமைப்படுத்த  குற்றப்பரம்பரைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

1914

  1. என்ன ஆண்டு குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது?

1948

  1. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்ட நபர்கள் யார்?

பாலகங்காதர திலகர் மற்றும் முத்துராமலிங்கர்

  1. “இன்று அடிமை இந்தியனாக கொடி ஏற்றுகிறேன். நாளை தாயின்மணிக்கொடியைச் சுதந்திர இந்தியாவில் ஏற்றும் காலம் எதுவோ என எண்ணிக் கண்ணீர் விட்டேன்” எனக் கூறியவர் யார்?

முத்துராமலிங்கர்

  1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்கு தடை இருந்தது அந்தத் தடையை எதிர்த்து கோவில் நுழைவு போராட்டம் நடத்தியவர் யார்?

மதுரை வைத்தியநாதர் (முத்துராமலிங்கர் அவருக்குத் துணையாக நின்றார்)

  1. முத்துராமலிங்கர் தொடங்கி இதழ் என்ன?

 நேதாஜி

  1. நேதாஜி இதழின் தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் எப்போது நடைபெற்றது?

ஜனவரி 23,1949

  1. முத்துராமலிங்கரின் சிறப்பு பெயர்கள் என்ன?

 தேசியம் காத்த செம்மல், வேதாந்த பாஸ்கர்,பிரணவ கேசரி,சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை

  1. ”  தென்னாட்டு சிங்கம் என்று முத்துராமலிங்கரை சொல்கிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தை பார்த்தவுடனேயே நினைத்தேன் அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது” என பாராட்டியவர் யார்?

அறிஞர் அண்ணா

  1. “முத்துராமலிங்கர் பேச்சு உள்ளத்திலிருந்து வெளிவருகிறது உதடுகளிலிருந்து அல்ல; உள்ளதால் எதிலும் பற்றற்று உண்மையென பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவது அவர் வழக்கம்” என பாராட்டியவர் யார்?

மூதறிஞர் ராஜாஜி

  1. பசும்பொன் முத்துராமலிங்கர் இம் மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் எவ்வளவு?

20,075

  1. முத்துராமலிங்கர் சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள் எவ்வளவு?

4000

  1. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவராக விளங்கியவர் யார்?

பாண்டித்துரை

  1. சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளராக பணிபுரிந்தவர் யார்?

வ.உ. சிதம்பரனார்

  1. “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர் யார்?

பாலகங்காதர திலகர்

  1. “வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என பாடியவர் யார்?

பாரதியார்

  1. “சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும் புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” எனக் கூறியவர் யார்?

சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே

  1. “தொல்காப்பியத்தை படித்து படித்து என் தொல்லை எல்லாம் மறந்தேன் இன்னிலையை கற்று என் இன்னல்கள் எல்லாம் வென்றேன் ” எனக் கூறியவர் யார்?

வ.உ. சிதம்பரனார்

  1. வ உ சிதம்பரனார்  ஆங்கில மொழியில் ஆலன் இயற்றிய நூலை தமிழில் என்ன பெயரில் மொழிபெயர்த்தார்?

மனம் போல் வாழ்வு

  1. வ உ சிதம்பரனார் இயற்றிய நூல்கள் என்னென்ன?

மெய்யறிவு, மெய்யறம்

  1. சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?

ரா.பி .சேதுபிள்ளை

  1. செய்யுளுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றை உரைநடைக்கு கொண்டு வந்தவர் யார்?

ரா பி சேதுப்பிள்ளை

  1. ரா பி சேதுப்பிள்ளை இயற்றிய எந்த நூல்  இந்திய அரசின் சாகித்திய அகடமி விருது பெற்ற முதல் நூலாகும்? 

தமிழ் இன்பம்

  1. ரா.பி சேதுப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?

ஆற்றங்கரையினிலே ,கடற்கரையிலே ,தமிழ் விருந்து ,தமிழகம் ஊரும் பேரும் ,மேடைப்பேச்சு

இயல் 08

     

  1. “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

பொய்கை ஆழ்வார்

  1. பொய்கையாழ்வார் எங்கு பிறந்தார்?

 காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா

  1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கை ஆழ்வார் பாடியது?

 முதல் திருவந்தாதி

  1. “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா” இவ்வரிகளை இயற்றியவர்?

 பூதத்தாழ்வார்

  1. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம்

  1. பூதத்தாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எதை இயற்றியுள்ளார்?

இரண்டாம் திருவந்தாதி

  1. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ  சொல்லோ அடுத்துவரும் பாடலுக்கு முதலாக அமைவதற்கு என்ன பெயர்?

அந்தாதி

  1. திருமாலைப் போற்றி பாடியவர்கள் யார்?

பன்னிரு ஆழ்வார்கள்

  1. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

  1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

நாதமுனி

  1. பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுபவர்கள் யார்?

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

  1. ” இன்செல் விளைநிலனா ஈதலே வித்தாக” இவ்வரிகளை இயற்றியவர் ?

 முனைப்பாடியார்

  1. “பைங்கூழ் சிறுகாலை செய்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

அறநெறிச்சாரம்

  1. அறநெறிச்சாரம் எனும் நூலை இயற்றியவர் யார்?

முனைப்பாடியார்

  1. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

திருமுனைப்பாடி

  1. முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?

சமணம்

  1. முனைப்பாடியாரின் காலம் என்ன?

பதின்மூன்றாம் நூற்றாண்டு

  1. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

225 பாடல்கள்

  1. “செல்வத்தை தனியே அனுபவித்தல் இழத்தலுக்கு சமம் “எனக் கூறும் நூல்?

புறநானூறு

  1. தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?

நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம் ,ஆலயங்கள் சமுதாய மையங்கள்

  1. தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னென்ன இதழ்களை நடத்தியுள்ளார்?

அருளோசை அறிக அறிவியல்

  1. ஜென் என்ற ஜப்பானிய மொழி சொல்லுக்கு என்ன பொருள்?

தியானம் செய்      

இயல் 09

 

  1. “இமைக்கும் நொடியில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு-தினம் இவை இல்லாது அமைதிகள் செய்தால் இதயம் மலையளவு” இவ்வரிகளை எழுதியவர்?

கண்ணதாசன்

  1. கண்ணதாசனின் இயற்பெயர்?

முத்தையா

  1. கண்ணதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?

கவியரசு

  1. சே.பிருந்தா இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன? 

மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்கு சொன்ன கதை

  1. “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ள மாட்டேன்” என கூறியவர் யார்?

காயிதே மில்லத்

  1. கண்ணியமிகு காயிதே மில்லத் இயற்பெயர் என்ன?

முகமது இஸ்மாயில்

  1. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்த ஆண்டு போர் மூண்டது?

1962

  1. காயிதேமில்லத் என்பது என்ன மொழிச் சொல்?

அரபு சொல்

  1. காயிதேமில்லத் என்னும் அரபிச் சொல்லுக்கு பொருள் என்ன?

சமுதாய வழிகாட்டி

  1. “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” எனக் கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

  1. “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்” என காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயிலை பாராட்டியவர் யார்?

தந்தை பெரியார்

  1. காயிதே மில்லத் எந்த ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்?

1946 முதல் 1952 வரை

  1. காயிதேமில்லத் எந்த கல்லூரி தொடங்க காரணமாக இருந்துள்ளார்?

திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி ,கேரளாவில் ஃபரூக் கல்லூரி

  1. பாவண்ணன் இயற்றிய நூல்கள் என்னென்ன?

வேர்கள் தொலைவில் இருக்கின்றன ,நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்

  1. பாவண்ணன் எந்த மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்?

கன்னடம்

  1. பயணம் என்னும் சிறுகதை எந்த நூலில் உள்ளது?

பிரயாணம்   NEW EDITION UPDATES

  1. “வான்புகழ் கொண்ட குறளோடு அகம்புறமும் செம்பொருள் கண்ட தமிழ்ச் சங்க இலக்கிய பெருஞ்செல்வம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

உடுமலை நாராயணகவி

  1. பகுத்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?

 உடுமலை நாராயணகவி

  1. ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் என்ன?

கொல்லிப் பாவை

  1. ராஜமார்த்தாண்டன் எந்த நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்?

ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

  1. சிறந்த தமிழ் கவிதைகள் தொகுத்து என்ன தலைப்பில் ராஜமார்த்தாண்டன் நூலாக்கியுள்ளார்?

கொங்குதேர் வாழ்க்கை

  1. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

ராஜமார்த்தாண்டன்

  1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலை தொகுத்தவர் யார்?

 நா .வானமாமலை


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 7TH TAMIL TERM 03 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page