TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 6TH TAMIL GRAMMAR QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 6TH TAMIL GRAMMAR QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


தமிழ் எழுத்துக்களின் வகை தொகை

  1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

5

  1. தமிழ்மொழியின் இலக்கண வகைகள் என்னென்ன?

எழுத்து‌ இலக்கணம், சொல் இலக்கணம் ,பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்

  1. ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?

எழுத்து

  1. இயல்பாகக் காற்று வெளிப்படும் போது என்ன எழுத்துகள் பிறக்கின்றன?

உயிர் எழுத்துக்கள்

  1. உயிர் எழுத்துக்கள் எத்தனை?

பன்னிரண்டு

  1. உயிரெழுத்துகளில் குறில் எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?

ஐந்து : அ,இ,உ,எ,ஒ

  1. உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?

ஏழு : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ

  1. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மாத்திரை

  1. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு?

ஒரு மாத்திரை

  1. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு?
  • மாத்திரை
  1. மெய் என்பதன் பொருள் என்ன?

உடம்பு

  1. இந்த எழுத்துக்களை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது?

மெய்யெழுத்துக்கள்

  1. மெய் எழுத்துக்கள் எத்தனை?

18

  1. மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

மூன்று

  1. மெய் எழுத்துக்களின் வகைகள் என்னென்ன? 

வல்லினம் ,மெல்லினம், இடையினம்

  1. வல்லின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

வலி, வன்மை, வன்கணம்

  1. வல்லின எழுத்துக்கள் என்னென்ன?

க்,ச்,ட்,த்,ப்,ற்

  1. வல்லினம் பெயர் காரணம் என்ன?

வலிய ஓசை உடையவையாதலும்,வல்லென்று இசைப்பதாலும், வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது

  1. மெல்லின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

மெலி, மென்மை, மென்கணம்

  1. மெல்லின எழுத்துக்கள் என்னென்ன?

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

  1. மெல்லினம் பெயர் காரணம் என்ன?

மெலிய ஓசை உடையவையாதலும்,மெல்லென்று இசைப்பதாலும் மெல் என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப்பட்டது

  1. இடையின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

இடை, இடைமை, இடைக்கணம்

  1. மெல்லின எழுத்துக்கள் என்னென்ன?

ய், ர், ல், வ், ழ், ள்

  1. மெல்லினம் பெயர் காரணம் என்ன?

வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் இருந்து பிறப்பதாலும்,இடைநிகரவாகி ஒலித்தலாலும், இடை நிகர்த்தாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது

  1. மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு என்ன?

அரை மாத்திரை

  1. வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?

க்,ச்,ட்,த்,ப்,ற்

  1. மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

  1. வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்டு ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?

ய், ர், ல், வ், ழ், ள்

  1. எந்த இரண்டு எழுத்துக்கள் சேர்வதால் உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன?

மெய் எழுத்துக்கள் மற்றும் உயிர் எழுத்துக்கள்

  1. மெய்யுடன் உயிர்க்குறில் சேர்வதால் தோன்றும் எழுத்து?

உயிர்மெய் குறில்

  1. மெய்யுடன் உயிர்நெடில் சேர்வதால் தோன்றும் எழுத்து?

உயிர்மெய் நெடில்

  1. உயிர்மெய் எழுத்துக்களை எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?

இரண்டு :உயிர்மெய் குறில், உயிர்மெய் நெடில்

  1. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?

அரை மாத்திரை

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

  1. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?இரண்டு வகை: முதலெழுத்து ,சார்பெழுத்து
  2. முதலெழுத்துக்கள் எனப்படுபவை யாது?

உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள்

  1. முதல் எழுத்துக்கள் எத்தனை எழுத்துக்கள் உண்டு?

30 எழுத்துக்கள்

  1. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

பத்து வகை

  1. சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன?

உயிர்மெய் ,ஆய்தம் ,உயிரளபெடை, ஒற்றளபெடை ,குற்றியலிகரம் ,குற்றியலுகரம் ,ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ,ஆய்தக்குறுக்கம்

  1. மெய் எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உருவாகும் எழுத்துக்கள்?

உயிர்மெய் எழுத்துக்கள்

  1. உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் எவ்வாறு இருக்கும்?

மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்

  1. உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதை ஒத்திருக்கும்?

மெய் எழுத்து

  1. உயிர்மெய் எழுத்தின் கால அளவு எந்த எழுத்தை ஒத்திருக்கும்?

உயிரெழுத்து

  1. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது எந்த எழுத்து?

ஆய்தம்

  1. ஆய்த எழுத்திற்கு வழங்கும் வேறு பெயர்?

முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை

  1. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய சார்பு எழுத்து எது?

ஆய்தம்

  1. ஆய்தம் சொல்லின் எங்கு மட்டுமே இடம்பெறும்?

சொல்லின் இடையில் மட்டும்

  1. ஆய்த எழுத்திற்கு முன்னும் பின்னும் வரும் எழுத்துக்கள் எது?

தனக்கு முன் ஒரு குறில் எழுத்து ,தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்து

மயங்கொலிகள்                              

  1. சில எழுத்துக்களைக் இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

இன எழுத்துக்கள்

  1. மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய எந்த எழுத்து வரும்?

வல்லின எழுத்து

  1. வல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துக்கள் எவை?

மெல்லின எழுத்துக்கள்

  1. உயிர் எழுத்துக்களில் குறிலுக்கும் நெடிலுக்கும் இன எழுத்துக்கள் எவை?

குறிலுக்கு நெடிலும்,நெடிலுக்கு குறிலும்

  1. ஐ என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?

  1. ஔ என்னும் எழுத்துக்கு என்ன எழுத்து இன எழுத்து?

  1. சொல்லில் எந்த எழுத்துக்கள் சேர்ந்து வருவது இல்லை?

உயிர் எழுத்துக்கள்

  1. எதில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்?

அளபெடை இன எழுத்துக்கள்                                          

  1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை எவ்வாறு அழைக்கின்றோம்?

மயங்கொலிகள்

  1. மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை உண்டு?

8

  1. மயங்கொலி எழுத்துக்கள் என்னென்ன?

ண,ன,ந,ல,ள,ழ,ர,ற

  1. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?

  1. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?

  1. நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?

  1. ண’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?

டண்ணகரம்

  1. ந’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?

தந்நகரம்

  1. ன’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?

றன்னகரம்

  1. நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் பற்களின் அடியைப் தொடுவதால் உருவாகும் எழுத்து?

லகரம்

  1. நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் உருவாகும் எழுத்து?

ளகரம்

  1. ளகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

பொது ளகரம்

  1. நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் எந்த எழுத்து தோன்றும்?

ழ’கரம்

  1. ழ’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?

சிறப்பு ழகரம் சுட்டெழுத்துக்கள்                              

  1. ஒன்றை சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

சுட்டெழுத்துக்கள்

  1. சுட்டெழுத்துக்கள் என்னென்ன?

அ,இ,உ

  1. சுட்டெழுத்துக்களில் இன்று வழக்கில் இல்லாத எழுத்து எது?

  1. சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தருவதில்லை இது எவ்வாறு அழைக்கப்படும்?

அகச்சுட்டு

  1. சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும் இது எவ்வாறு அழைக்கப்படும்?

புறச்சுட்டு

  1. நம் அருகில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துக்கள்?

அண்மைச்சுட்டு

  1. அண்மைச்சுட்டு எழுத்து என்ன?

  1. தொலைவில் உள்ளவற்றை சுட்டும் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?

சேய்மைச் சுட்டு

  1. சேய்மைசுட்டு எழுத்து என்ன?

  1. அருகிலுள்ளவற்றிற்கும் தொலைவிலுள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதை சுட்டிக்காட்ட என்ன சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது?

  1. அ,இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

சுட்டுத் திரிபு

வினா எழுத்துக்கள்

  1. வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்? வினா எழுத்துக்கள்
  2. வினா எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?

ஐந்து : எ,யா,ஆ,ஓ,ஏ

  1. மொழியின் முதலில் வரும் வினா எழுத்து எவை?

எ,யா

  1. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து எவை?

ஆ,ஓ

  1. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

  1. வினா எழுத்துக்கள் சொல்லி அகத்தை இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

அகவினா

  1. சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்களுக்கு பொருள் இல்லை. இது எந்த வகை வினா?

அகவினா

  1. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தை வந்து வினாப் பொருளைத் தருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

புறவினா

  1. சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இது எந்த வகை வினா?

புறவினா

நால்வகைச் சொற்கள்

  1. ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள்தருவது எவ்வாறு அழைக்கப்படும்?

சொல்

  1. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

4

  1. இலக்கண அடிப்படையில் வகைப்படுத்தப்படும் சொற்கள் என்னென்ன?

பெயர்ச்சொல், வினைச்சொல் ,இடைச்சொல் ,உரிச்சொல்

  1. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

பெயர்ச்சொல்

  1. வினை எனும் சொல்லுக்கு என்ன பொருள்?

செயல்

  1. ஒரு செயலைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

வினைச்சொல்

  1. பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

இடைச்சொல்

  1. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது எது?

உரிச்சொல்     இடுகுறிப்பெயர்,காரணப்பெயர்

  1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

ஆறு வகைப்படும்

  1. பெயர்ச்சொல் வகைகள் என்னென்ன?

பொருட்பெயர் ,இடப்பெயர், காலப்பெயர் ,சினைப்பெயர் ,பண்புப்பெயர், தொழிற்பெயர்

  1. பொருளைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

பொருட்பெயர்

  1. ஓர் இடத்தின் பெயரை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

இடப்பெயர்

  1. காலத்தைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

காலப்பெயர்

  1. பொருளின் உறுப்பை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

சினைப்பெயர்

  1. பொருளின் பண்பை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

பண்புப்பெயர்

  1. தொழிலைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

தொழிற்பெயர்           பெயர்ச்சொல்

  1. யர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?

அவை என்னென்ன? இரண்டு வகை : இடுகுறிப்பெயர் ,காரணப்பெயர்

  1. சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் சில பெயர்களை இட்டு வழங்கினர் அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

இடுகுறிப்பெயர்

  1. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?

இரண்டு வகை : இடுகுறிப் பொதுப்பெயர் ,இடுகுறி சிறப்பு பெயர்

  1. நம் முன்னோர்கள் காரணம் ஏதுமின்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

இடுகுறிப் பொதுப்பெயர்

  1. நம் முன்னோர் காரணம் ஏதுமின்றி சிறப்புத்தன்மை கருதி ஒன்றனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இட்டு வழங்கிய பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

இடுகுறி சிறப்பு பெயர்

  1. காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

காரணப்பெயர்

  1. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?

இரண்டு : காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப் பெயர்

  1. குறிப்பிட்ட காரணம் உடைய எல்லா வகை பொருட்களையும் பொதுவாக குறித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

காரணப் பொதுப்பெயர்

  1. குறிப்பிட்ட காரணம் உடைய எல்லா வகை பொருள்களில் ஒன்றை மட்டும் சிறப்பாக குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

காரணச் சிறப்புப் பெயர்

  1. அணி என்பதற்கு என்ன பொருள்?

அழகு

  1. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எந்த அணி?

இயல்பு நவிற்சி அணி

  1. இயல்பு நவிற்சி அணி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

தன்மை நவிற்சி அணி

  1. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது எது?

உயர்வு நவிற்சி அணி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 6TH TAMIL GRAMMAR QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page