TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 03 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 03 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. தமிழர் குடும்ப முறை என்ற உரைநடையை எழுதியவர் யார் ?

பக்தவச்சல பாரதி

  1. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் எந்த நூலில் பயின்று வருகிறது?

திருக்குறள் 1029

  1. சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் எவை?

 குடம்பை,குடும்பு,கடும்பு

  1. சங்க இலக்கியத்தில் குடம்பை எனும் சொல் எத்தனை இடங்களில் பயின்று வந்துள்ளது?

20 இடங்கள்

  1. குடும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?

கூடி வாழ்தல்

  1. “இரவுக் குறியே இல்லகத்துள்ளும்” எனும் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும் இரண்டு வாழிடங்கள் என்னென்ன?

இல், மனை

  1. சங்க இலக்கியத்தில் வாழிடம் பற்றிய சொற்கள் என்னென்ன?

 இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர்,மாடம்

  1. மகளிர் தம்மனை,நும்மனை  என மனைவியின் இல்லத்தையும்

கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கு எந்த பாடலில் காணப்படுகிறது? மருதத் திணைப் பாடல் அகநானூறு

  1. புறநானூற்றுப் பாடலில் தற்காலிக தங்கும் இடத்தின் பெயர் என்னவாக குறிப்பிடப்பட்டுள்ளது?

புக்கில்

  1. திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் எவ்வாறு வழங்கப் பெற்றுள்ளது?

தன்மனை

  1. மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட கூடிய தொடக்க காலகட்டத்தில் பெயர் என்ன?

மணந்தகம்

  1. இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குறியது எனக் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. சங்க காலத்தில் கண சமூகத்துக்கு யார் தலைமை ஏற்றிருந்தார்?

தாய்

  1. சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல் எது?

பதிற்றுப்பத்து

  1. “சிறுவர்தாயே பேரிற் பெண்டே”- வரிகள் இடம் பெற்ற நூல்

புறநானூறு

  1. “செம்முது பெண்டின் காதலனஞ்சிறா அன்” -வரிகள் இடம் பெற்ற நூல்

 புறநானூறு

  1. “வானரை கூந்தல் முதியோள் சிறுவன்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

புறநானூறு

  1. ” முளரி மருங்கின் முதியோள் சிறுவன்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

புறநானூறு

  1. ” என் மகள் ஒருத்தியும் பிறர் மகன் ஒருவனும்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

கலித்தொகை

  1. திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்துக்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்தது எனக் கூறும் நூல் எது?

அகநானூறு

  1. தாய்வழி சொத்துக்கள் பெண்டிருக்கு போய் சேர்ந்தன என்பதை கூறும் நூல் எது?

மருதத் திணைப் பாடல் குறுந்தொகை

  1. “நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கலிக” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

ஐங்குறுநூறு

  1. “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” வரிகள் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை

  1. எந்த நூலில் இடம்பெற்றிருந்த பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது?

குறுந்தொகை

  1. “மறியிடைப்படுத்த மாண்பினை போல” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

ஐங்குறுநூறு

  1. கணவன் மனைவி மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை பற்றி எந்த நூலிலுள்ள பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்தப் பாடலின் ஆசிரியர் யார்?

புறநானூறு ஒக்கூர் மாசாத்தியார்

  1. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது

 பனுவல் 2010

  1. பக்தவச்சல பாரதி எழுதிய நூல்கள் என்னென்ன?

இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழக பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு

  1. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்?

கோல்மன் பார்க்ஸ்

  1. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்தவர்?

என் சத்தியமூர்த்தி

  1. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் தமிழில் என்ன தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது?

தாகங்கொண்ட மீனொன்று

  1. ஜலாலுதீன் ரூமி எந்த ஆண்டு பிறந்தார்

கி பி 1207

  1. ரூமியின் சூஃபி தத்துவ படைப்பின் பெயரென்ன?

மஸ்ணவி

  1. மஸ்னவி எத்தனை பாடல்களைக் கொண்டதாக கூறப்படுகிறது

25,600

  1. ரூமியின் மற்றொரு நூலின் பெயர் என்ன?

திவான் ஈ ஷம்ஸ் ஈ தப்ரீஸி

  1. “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா, சிறியோரை இகழ்தல் இலமே பெரியோரை வியத்தல் இலமே” கூற்றுகளை கூறியவர் யார்?

கணியன் பூங்குன்றனார்

  1. “காக்கை குருவி எங்கள் ஜாதி” எனக் கூறியவர்?

 பாரதியார்

  1. “அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான”-இவ்வரிகளில் அமலன்  என்பது யாரை குறிப்பிடுகிறது?

இராமன்

  1. “என் உயிர் அனையாய் நீ ” என ராமன் யாரை குறிப்பிடுகின்றான்

குகன்

  1. “நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்” இவ்வரிகள் யாருடைய கூற்று?

இராமன்

  1. “அன்பு உள,இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்”- இக்கூற்றை ராமன் யாரிடம் கூறினான்?

குகன்

  1. சவரி பிறப்பு நீங்கு படலம் எந்த காண்டத்தில் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது?

ஆரண்ய காண்டம்

  1. “….உடுபதி, இரவி ஒத்தார்”-இவ்வரிகளில் உடுபதி ,இரவி என்பதன் பொருள் என்ன?

சந்திரன் சூரியன்

  1. கம்பராமாயணத்தை இயற்றியவர் ?

 கம்பர்

  1. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்?

இராமாவதாரம்

  1. கம்பரின் காலம்?

 12ஆம் நூற்றாண்டு

  1. கம்பர் இயற்றிய வேறு நூல்கள்?

சடகோபர் அந்தாதி, சிலையெழுபது, ஏரெழுபது,திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி

  1. கம்பர் பிறந்த ஊர்?

சோழநாட்டுத் திருவழுந்தூர்

  1. உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர்?

 பூமணி

  1. “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” இவ்வரிகளை பாடியவர்?

 ஔவையார்

  1. பேச்சு வழக்கு சொற்களின் அர்த்தங்களை குறிப்பிடுக?

1.கெராமுனுசு- கிராம நிர்வாக அலுவலர் 2.பிஞ்சை- புன்செய் 3.வாந்தக்கமாக-இணக்கமாக 4.வெள்ளங்காட்டி-விடியற்காலை

  1. கடகம்- ஓலைப்பட்டி
  2. உரிமைத்தாகம் எனும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

பூமணி சிறுகதைகள்

  1. பூமணியின் இயற்பெயர்

பூ மாணிக்கவாசகர்

  1. பூமணியின் சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?

அறுப்பு,வயிறுகள்,ரீதி, நொறுங்கல்கலள்

  1. பூமணி எழுதிய புதினங்கள் என்னென்ன?

வெக்கை, பிறகு ,அஞ்ஞாடி,கொம்மை

  1. பூமணி இயக்கிய திரைப்படத்தின் பெயர் என்ன? 

கருவேலம்பூக்கள்

  1. பூமணியின் எந்த நூல் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளது?

அஞ்ஞாடி 2014


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 03 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page