TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்தியவர் யார்?

இளங்கோவடிகள்

  1. உலக சுற்றுச்சூழல் நாள் எது?

ஜூன் 5

  1. “நீரின்று அமையாது உலகு” என கூறியவர் யார்?

திருவள்ளுவர்

  1. “மழை உழவுக்கு உதவுகிறது,விதைத்த விதை ஆயிரமாக பெருகுகிறது.நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளருகின்றன” இவ்வாறு கூறியவர் யார்?

மாங்குடி மருதனார்

  1. பாண்டிய மண்டலத்து நிலப்பகுதிகளில் ஏரியை எவ்வாறு அழைப்பர்?

கண்மாய்

  1. மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு என்ன பெயர்?

உறைகிணறு

  1. மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு என்ன பெயர்?

ஊருணி

  1. கல்லணை யாரால் கட்டப்பட்டது?

 கரிகாலச்சோழன்

  1. கல்லணையின் நீளம் அகலம் உயரம் எவ்வளவு?

நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி உயரம் 15 முதல் 18 அடி

  1. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருபவர் யார்?

திருவள்ளுவர்

  1. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

 சர் ஆர்தர் காட்டன்

  1. சர் ஆர்தர் காட்டன் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?

1829

  1. சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு என்ன பெயரை சூட்டினார்?

கிராண்ட் அணைக்கட்

  1. சர் ஆர்தர் காட்டன் எந்த ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்?

கோதாவரி

  1. சர் ஆர்தர் காட்டன் எந்த ஆண்டு தௌலீஸ்வரம் அணையை கட்டினார்?

 1873

  1. “தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப் பட்டவையாக விளங்குகின்றன “எனக் கூறியவர் யார்?

தொ.பரமசிவன்

  1. குளித்தல் என்பதற்கு பொருள் என்ன?

 வெப்பமடைந்த உடலை குளிர வைத்தல் அல்லது குளிர்த்தல்

  1. “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” எனக் கூறியவர் யார்?

ஆண்டாள்

  1. தெய்வச் சிலைகளை குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?

திருமஞ்சனம் ஆடல்

  1. எந்த சிற்றிலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு?

பிள்ளைத்தமிழ்

  1. இறப்புச் சடங்கில் உடலை நீராட்டுவதற்கு என்ன பெயர்?

நீர்மாலை எடுத்து வருதல்

  1. சனி நீராடு என்பது யாருடைய வாக்கு?

ஔவையார்

  1. கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் எவ்வாறு அழைக்கப்படும்?

அகழி

  1. மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டு குதிப்பதற்கு என்ன பெயர்?

 அருவி

  1. கடல் அருகே தோண்டி கட்டிய கிணறு என்ன? பெயர்

ஆழிக்கிணறு

  1. பெருகி ஓடும் நதிக்கு என்ன பெயர்?

ஆறு

  1. பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்

இலஞ்சி

  1. அடியில் இருந்து நீர் வருவதற்கு என்ன பெயர்

ஊற்று

  1. வேளாண்மை பாசன நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்

ஏரி

  1. சரளை நிலத்தில் தோண்டி கல் செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?

கட்டுக்கிணறு

  1. சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலைக்கு என்ன பெயர்?

குண்டம்

  1. குளிப்பதற்கு ஏற்ற சிறு குளத்திற்கு என்ன பெயர்?

குண்டு

  1. அடிநிலத்து நீர் நில மட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்றுக்கு என்ன பெயர்?

குமிழிஊற்று

  1. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு என்ன பெயர்?

கூவல்

  1. அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?

கேணி

  1. தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை எவ்வாறு அழைக்கப்படும்?

சிறை

  1. நீர்வரத்து மடையின்றி மழை நீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலைக்கு என்ன பெயர்?

புணற்குளம்

  1. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?

பூட்டைக் கிணறு

  1. முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?

ஜான் பென்னிகுயிக்

  1. ” பாடும் பறவைகள் கூடி உனக்கு ஒரு பாடல் புனைந்ததுவும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

தமிழ்ஒளியின் கவிதைகள்

  1. கவிஞர் தமிழ்ஒளியின் காலம் என்ன? 

1924 -1965

  1. கவிஞர் தமிழ்ஒளி எங்கு பிறந்தார்?

புதுவை

  1. கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவராக விளங்கியவர்?

பாரதிதாசன்

  1. “பூவிரித்த புதுமதுப் பொங்கிட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பெரிய புராணம்

  1. “… காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பெரிய புராணம்

  1. “நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பெரிய புராணம்

  1. அடியவர் பெருமையை ஓரடியில் கூறும் நூல் எது

திருத்தொண்டத்தொகை

  • திருத்தொண்டத்தொகை நூலை எழுதியவர் யார்

சுந்தரர்

  1. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்

நம்பியாண்டார் நம்பி

  1. பெரிய புராணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

சேக்கிழார்

  1. சேக்கிழார் எந்த இரண்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றினார்?

திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி

  1. பெரியபுராணத்தில் எத்தனை சிவனடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டுள்ளது?

63 சிவனடியார்கள்

  1. பெரியபுராணம் என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன?

இதன் பெருமை காரணமாக

  1. சேக்கிழாரின் காலம் என்ன

கிபி 12ஆம் நூற்றாண்டு

  1. சேக்கிழார் யாருடைய அவையில் முதலமைச்சராக இருந்தார்

இரண்டாம் குலோத்துங்க சோழன்

  1. “பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை பாடியவர் யார்?

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

  1. “வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ” இவ்வரிகளை எழுதியவர் யார்?

பாரதியார்

  1. முன்னோர்கள் “நீர்நிலைகளை உருவாக்குபவர்களை” எவ்வாறு போற்றினர்?

உயிரை உருவாக்குபவர்கள்

  1. “மல்லல் மூதூர் வய வேந்தே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. “நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” இவரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “உண்டி முதற்றே உணவின் பிண்டம்”இவரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”இவரிகள் எழுதியவர் யார்?

குடபுலவியனார்

  1. “மல்லல் மூதூர் வய வேந்தே”இப் புறநானூற்றுப் பாடலில் குடபுலவியனார் யாரைப் பற்றிப் பாடினால்?

பாண்டியன் நெடுஞ்செழியன்

  1. எந்த நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது?

 புறநானூறு

  1. “குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உடன்தொட்டு உழுவயல் ஆக்கி”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

சிறுபஞ்சமூலம்

  1. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே ” வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 புறநானூறு

  1. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே “இவ்வரிகள் எழுதியவர் யார்?

 நக்கீரர்

  1. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”இவ்வரிகளை எழுதியவர் யார்?

கனியன் பூங்குன்றனார்

  1. “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” இவ்வரிகள் இயற்றியவர் யார்?

பொன்முடியார்

  1. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. தண்ணீர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

கந்தர்வன்

  1. கந்தர்வனின் இயற்பெயர் என்ன?

நாகலிங்கம்

  1. கந்தர்வன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்

இராமநாதபுரம்

  1. கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?

சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்

  1. குமுளி எனும் கவிதையை எழுதியவர் யார்?

யூமா வாசுகி

  1. “கல்லும் மலையும் குதித்து வந்தேன் – பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்” இவ்வரிகளை எழுதியவர் யார்?

கவிமணி

  1. அழகின் சிரிப்பு -ஆசிரியர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

  1. தண்ணீர் தண்ணீர் -ஆசிரியர் யார்?

கோமல் சுவாமிநாதன்

  1. தண்ணீர் தேசம் -ஆசிரியர் யார்

வைரமுத்து

  1. வாய்க்கால் மீன்கள் -ஆசிரியர்?

வெ.இறையன்பு

  1. மழைக்காலமும் குயிலோசையும்- ஆசிரியர் யார்?

மா.கிருஷ்ணன்

  1. ஒரு கிலோ ஆப்பிள் உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?

 822 லிட்டர்

  1. ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது

 1780 லிட்டர்

  1. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது

 2500 லிட்டர்

  1. ஒரு கிலோ காபி கொட்டையை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?

18,900 மீட்டர்

  1. “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” ஆசிரியர் யார்

 மா.அமரேசன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page