TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. சென்னைக்கு அருகே உள்ள எந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித நாகரிகத்தின் பழமையை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிறுவுகிறது

குடியம் &அதிரம்பாக்கம்

  1. மூதாதையர் மனித இனத்தின் கல் கோடாரி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

பல்லாவரம்

  1. சென்னையின் எந்தப் பகுதிகளில் தொல்பழங்கால மானுட எச்சங்கள் கிடைக்கின்றன?

கூடுவாஞ்சேரி பல்லாவரம் புழல்

  1. மயிலாப்பூர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது?

மல்லியர்பா

  1. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது?

 முதலாம் மகேந்திரவர்மன்

  1. சென்னையில் எந்தப் பகுதியில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைத்துள்ளது?

 திருவல்லிக்கேணி

  1. யாருடைய நாட்குறிப்பில் கூவம் நதிக்கரையில் குளித்ததாக குறிப்பு உள்ளது?

வள்ளல் பச்சையப்பர்

  1. சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்சேரி நகர் வரை நீளும் “-இப்பாடலைப் பாடியவர் யார்?

பாரதிதாசன்

  1. பாரதிதாசன் பக்கிங்காம் கால்வாயில் யாருடன் படகுப் பயணம் செய்தார்?

மயிலை சீனி வேங்கடசாமி ,ப. ஜீவானந்தம்

  1. மாவலி புரச் செலவு எனும் தலைப்பில் கவிதை எழுதியவர் யார்?

பாரதிதாசன்

  1. எந்த ஆண்டு எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில்தொண்ட மண்டலத்து புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டு சென்னப்பட்டினம்என குறிப்பிடப்பட்டுள்ளது?

கி.பி1647

  1. கூவம் ஆற்றின் வேறு பெயர் என்ன?

திருவல்லிக்கேணி ஆறு

  1. எப்போது பிரான்சிஸ் டே சென்னப்பரின் இரு மகன்களிடம் இருந்து சென்னை நகரை வாங்கினார்

22-08-1639

  1. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

வெள்ளையர் நகரம்

  1. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே பணியாளர்கள் வணிகர்கள் போன்றவர்கள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

கருப்பர் நகரம்

  1. வெள்ளையர் நகரம் மற்றும் கருப்பர் நகரம் இரண்டும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது?

மதராசபட்டினம்

  1. வடசென்னை பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

மதராசப்பட்டினம்

  1. தென்சென்னை பகுதிகள் எவ்வாறு வழங்கப்பட்டன?

சென்னைப்பட்டினம்

  1. 1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னை நகரின் மக்கள் தொகை எவ்வளவு?

19000

  1. சென்னை நகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது?

1688

  1. சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?

எலி யேல்

  1. யாருடைய ஆட்சிக் காலத்தை சென்னையின் பொற்காலம் என அழைப்பர்?

தாமஸ் பிட்

  1. புனித மேரி தேவாலய தர்ம பள்ளி எப்போது உருவாக்கப்பட்டது?

1715

  1. ஆசியாவிலேயே உருவான முதல் ஐரோப்பிய கல்வி முறையிலான பள்ளி எது?

 புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி

  1. சென்னை கோட்டை கல்லூரி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1812

  1. சென்னை கிருத்துவக் கல்லூரி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1837

  1. பிரசிடென்சி பள்ளி எப்போது உருவாக்கப்பட்டது?

1840

  1. சென்னை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1857

  1. பெண்களுக்கென தொடங்கப்பட்ட ராணிமேரி கல்லூரி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

1914

  1. ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயர் என்ன?

பச்சையப்பன் கல்லூரி

  1. இந்தோ சராசனிக் கட்டடக்கலை எந்தெந்த கட்டடக் கலையை கலந்து உருவாக்கப்பட்டது?

 முகலாய கட்டிடக்கலை பிரித்தானிய கட்டடக்கலை இந்திய பாரம்பரியக் கட்டடக் கலை

  1. இந்தோ சராசனிக் கட்டடக் கலையின் பாணியில் முதல் கட்டிடம் எப்போது கட்டி முடிக்கப்பட்டது?

 1768

  1. இந்தோ சராசனிக் கட்டிடக்கலையின் பாணியில் முதலில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம்?

 சேப்பாக்கம் அரண்மனை

  1. இந்தியாவின் முதல் பொது நூலகத்தின் பெயர் என்ன?

கன்னிமரா நூலகம்

  1. தென்னிந்தியாவின் முதல் தொடர் வண்டி நிலையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

1856

  1. தென்னிந்தியாவின் முதல் தொடர் வண்டி இரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?

 இராயபுரம்

  1. சென்னை இலக்கிய சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது?

1812

  1. கன்னிமரா நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

1860

  1. யாருடைய தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869ல கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவாக்கப்பட்டது?

 காலின் மெக்கன்சி

  1. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?

அண்ணா நூற்றாண்டு நூலகம்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

2010

  1. தெய்வமணி மாலை நூலை இயற்றியவர் யார்?

இராமலிங்க அடிகள்

  1. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

தெய்வமணி மாலை

  1. தெய்வமணிமாலை திருவருட்பாவில் எத்தனாவது திருமுறையாக இடம்பெற்றுள்ளது?

 ஐந்தாம் திருமுறை

  1. தெய்வமணிமாலை எந்தக் கடவுளைப் பற்றி பாடப்பட்டுள்ளது?

கந்தகோட்டத்து முருகப்பெருமான்

  1. வள்ளலார் பிறந்த இடம்?

 சிதம்பரத்தை அடுத்த மருதூர்

  1. திருவருட்பா எத்தனை திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது?

ஆறு

  1. வள்ளலார் எழுதிய வேறு உரைநடை நூல்கள்?

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்

  1. திருமயிலை என்று அழைக்கப்படும் ஊர் எது?

மயிலாப்பூர்

  1. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் .இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

தேவாரம்

  1. கற்றோர்கள் ஏத்தும் கபாலீச்சரம்எனப்போற்றப்படும் ஊர் எது?

மயிலாப்பூர்

  1. இருளகற்றும் சோதித் தொன்மயிலைஎனச் சிறப்பிக்கப்படும் ஊர் எது?

மயிலாப்பூர்

  1. மடலாரந்த தெங்கின் மயிலை“,”கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்“,” கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்“,”மங்குல் மதிதவழ் மாடவீதி மயிலாப்பூர்“,” ஊர்திரை வேலை உலாவும் உயிர் மயிலைஇவ்வரிகளில் சிறப்பிக்கப்படும் ஊர்?

மயிலாப்பூர்

  1. மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள் நடைபெறும் மாதங்களை குறிப்பிடுக:
  2. ஓண விழா-1. ஐப்பசி

2.விளக்கு திருவிழா-2.கார்த்திகை 3.திருவாதிரை விழா-3.மார்கழி 4.தைப்பூச விழா-4.தை 5.கடலாட்டு விழா-5.மாசி

  1. பங்குனி உத்திர விழா-6.பங்குனி
  2. திருமயிலாப்பூர் பதிகம் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளது?

இரண்டாம் திருமுறை

  1. முதல் மூன்று திருமுறைகள் யாரால் பாடப்பட்டுள்ளது?

திருஞானசம்பந்தர்

  1. திருமுறைகளில் உள்ள யாருடைய பாடல்கள் இசை பாடல்களாகவே திகழ்கின்றன?

திருஞானசம்பந்தர்

  1. தேவாரம் யாரால் தொகுக்கப்பட்டுள்ளது?

நம்பியாண்டார் நம்பி

  1. சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள் தமிழுக்கு இருந்த உயர்நிலைத் தத்துவம் சமயக் கோட்பாடுகள் முதலிய தகவல்கள் யாருடைய பாடலில் விரவிக்கிடக்கின்றன?

 திருஞானசம்பந்தர்

  1. பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?

 அகநானூறு

  1. உப்பு விளையும் களத்திற்கு பெயர் என்ன?

அளம்

  1. கடலுக்கு அருகில் மணல் திட்டுக்களில் கடல் நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு பெயர் என்ன?

உப்பங்கழி

  1. பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் எது?

அகநானூறு

  1. அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது?

மூன்று

  1. அகநானூற்றின் பிரிவுகள் மற்றும் பாடல்கள் என்னென்ன?

களிற்றியானை நிறை 120 மணிமிடை பவளம் 180 நித்திலக்கோவை 100

  1. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் யார்?

அம்மூவனார்

  1. அம்மூவனார் எந்த திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்?

 நெய்தல் திணை

  1. அம்மூவனார் இயற்றிய பாடல்கள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?

எட்டு தொகை, நற்றிணை, குறுந்தொகை ,அகநானூறுஐங்குறுநூறு

  1. எழுத்தாளர்களின் வட்டார மொழிகளை குறிப்பிடுக :

 1.புதுமைப்பித்தன் –1. நல்லை தமிழ் 2.சண்முகசுந்தரம் –2.கோவை தமிழ் 3.ஜெயகாந்தன் –3.சென்னை வட்டார தமிழ் 4.தி ஜானகிராமன் –4.தஞ்சை தமிழ் 5.தோப்பில் முகமது மீரான் –5.குமரி தமிழ்

  1. கி. ராஜநாராயணன்-6.கோவில்பட்டி வட்டார தமிழ்
  2. தம்முடைய வட்டார எழுத்திற்கு கரிசல் இலக்கியம் என பெயரிட்டவர் யார்?

கி.ராஜநாரயணன்

  1. ஒரு குட்டித் தீவின் வரைபடம் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் யார்?

 தோப்பில் முகமது மீரான்

  1. தலைக்குளம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

தோப்பில் முகமது மீரான்

  1. தோப்பில் முகமது மீரான் எப்போது பிறந்தார்?

1944

  1. தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம்

  1. தோப்பில் முகமது மீரான் எழுதிய எந்த புதினம் சாகித்திய அகாடமி விருது பெற்றது சாய்வு?

 நாற்காலி

  1. தோப்பில் முஹம்மது மீரான் எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்?

1997

  1. தோப்பில் முகமது மீரான் எழுதிய எந்த நூல்கள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது?

 துறைமுகம் ,கூனன் தோப்பு


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 12TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page