TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. ஒரு சமூகத்தின் நாகரீகம் மற்றும் பண்பாட்டு மேன்மையை பிரதிபலிப்பது எது?
  • கலை
  1. பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது?
  • கேரளாந்தகன் கோபுரம்
  1. ராஜராஜன் எந்த நாட்டை வெற்றி கொண்டதை போற்றும் வகையில் கேரளாந்தகன் வாயில் கோபுரம் என பெயரிடப்பட்டுள்ளது?
  • சேரநாடு
  1. ராஜராஜன் எந்த ஆண்டு சேர நாட்டை வெற்றி கொண்டார்?
  • 988
  1. கோயிலின் வாயில்களின் மேலே அமைக்கப்படுவது?
  • கோபுரம்
  1. கோயிலின் அகநாழிகையின்மேல் அமைக்கப்படுவது?
  • விமானம்
  1. அகநாழிகை என அழைக்கப்படுவது எது?
  • கருவறை
  1. நம் நாட்டிலுள்ள கற்றளி கோயில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?
  • தஞ்சை பெரிய கோவில்
  1. இராசராச சோழனால் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் முயன்று தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது?
  • ஆறு ஆண்டுகள்
  1. இராசராச சோழனால் தஞ்சாவூர் பெரிய கோவில் எவ்வாறு பெருமையுடன் அழைக்கப்பட்டது?
  • தட்சிணமேரு
  1. தஞ்சை பெரிய கோயிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது?
  • 216
  1. தஞ்சை பெரிய கோவில்  கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?
  • 13 தளங்கள்
  1. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல் கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு என்ன பெயர்?
  • கற்றளி
  1. கற்றளி வடிவம் எந்த நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
  • ஏழாம் நூற்றாண்டு
  1. கற்றளி வடிவத்தை உருவாக்கிய பல்லவ மன்னன் யார்?
  • இரண்டாம் நரசிம்மவர்மன்
  1. கற்றளி கோவில் வடிவத்தில் தமிழகத்திலுள்ள கோவில்கள் என்னென்ன?
  • மகாபலிபுரம் கடற்கரை கோவில் ,காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனமலை கோவில்
  1. முதலாம் ராசராச சோழன் தஞ்சை பெரிய கோவிலை எந்த ஆண்டு கட்டத் தொடங்கினார்?
  • 1003
  1. தஞ்சை பெரிய கோவில் எந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது?
  • 1010
  1. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு  எந்த ஆண்டுடன் நிறைவடைந்தது?
  • 2010
  1. எந்த ஆண்டு தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது?
  • 1987
  1. மண்ணால் கட்டி மேலே மரத்தால் சட்டகமிட்ட கோவில் எவை?
  • தில்லை, கோவில் குற்றாலநாதர் கோவில்
  1. சோழன் செங்கணான் எத்தனை கோவில்கள் கட்டி இருப்பதாகக் திருநாவுக்கரசர் கூறுகிறார்?
  • 78
  1. செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலேயே பிரம்ம ஈசுவர விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோயில்கள் அமைத்தவர் யார்?
  • விசித்திர சித்தன்
  1. விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்ட அரசன் யார்?
  • முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
  1. செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலேயே பிரம்ம ஈசுவர விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோயில்கள் அமைத்ததாக கூறும் கல்வெட்டு எது?
  • மண்டகப்பட்டு
  1. ராஜராஜனுக்கு பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிய கோவில் எது?
  • காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
  • இராசசிம்மன்
  1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
  • இராசசிம்மேச்சுரம்
  1. ” கட்டடக் கலை என்பது உறைந்து போன இசை “என்று கூறியவர் யார்?
  • பிரடிரிகா வொன்ஸ்லீங்
  1. இந்திய கட்டடக் கலைப் பாணியை எத்தனை வகையாகப் பிரித்துக் கூறுவர்?
  • 3 நாகரம் வேசரம் திராவிடம்
  1. இந்திய கட்டடக் கலை பாணியில் தஞ்சை கோவில் என்ன கலைப்பாணி ஆகும்?
  • என்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிட கலைப்பாணி
  1. தஞ்சை பெரிய கோவிலில் ராசராச சோழன் தான் கட்டினார் என்று கல்வெட்டுகளை ஆராய்ந்து கூறியவர் யார்?
  • ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
  1. எந்த ஆண்டு ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டை ஆய்வுசெய்து இராஜராஜ சோழன் கட்டினார் என்று கூறினார்?
  • 1886
  1. கருவறையின் இரு தளங்களிலும் சுற்றுகூடம் ,சாந்தார நாழிகை பகுதி சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
  • எஸ் கே கோவிந்தசாமி(1930)
  1. எஸ் கே கோவிந்தசாமி எந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்?
  • சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
  1. சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்து இருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்திற்கு தெரிய படுத்தியவர் யார்?
  • எஸ் கே கோவிந்தசாமி
  1. சுண்ணாம்புக் காரைப்பூச்சின் மீது அந்த ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பத்தின் பெயர்?

 என்ன?

  • ஃபிரெஸ்கோ
  1. ஃபிரெஸ்கோ என்பது எந்த மொழி சொல்?
  • இத்தாலி
  1. ஃபிரெஸ்கோ என்ற இத்தாலி மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
  • புதுமை
  1. ஃபிரெஸ்கோ இவ்வகை ஓவியங்களை எந்தெந்த இடங்களில் காணலாம்?
  • அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்
  1. தஞ்சை கோவிலில் உள்ள பெரிய நந்தியும், மண்டபமும் யாருடைய காலத்தில் கட்டப்பட்டுள்ளது?
  • நாயக்கர் காலம்
  1. தஞ்சை பெரிய கோவிலின் சோழர் காலத்து நந்தி தற்போது எங்கு உள்ளது?
  • பெரிய கோவிலின் தென்புற திருச்சுற்றில்
  1. பெரிய கோவிலின் விமானத்தின் மேல் உள்ள கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • பிரமந்திர கல்
  1. வெளி கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்கள் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் யார்?
  • ராஜராஜன்
  1. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெரும் மரபு யாருடைய காலத்தில் இருந்து தொடங்கியது?
  • இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
  1. புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிக உயர்ந்த கோபுரத்தை எழுப்பிய அரசு எது?
  • விஜயநகர அரசு
  1. ராஜராஜனின் பட்டத்து அரசி யார்?
  • ஒலோகமாதேவி
  1. ஒலோகமாதேவி கட்டிய கோவில் எவ்வாறு வழங்கப்படும்?
  • ஒலோகமாதேவீச்சுரம்
  1. ஒலோகமாதேவீச்சுரம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
  • திருவையாறு
  1. ஒலோகமாதேவீச்சுரம் கல்வெட்டில் எந்த பெண் அதிகாரியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
  • எருதந் குஞ்சர மல்லி
  1. முதலாம் ராசாதிராசன்  காலத்தில் பணியாற்றிய பெண் அதிகாரியின் பெயர் என்ன?
  • அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி
  1. கல்வெட்டில் பெண்டு எனும் சொல்லால்  குறிப்பிடப்பட்டுள்ளது?
  • அரசருடைய மனைவியர் கொடுத்த கொடை
  1. கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்தக் குரலில் பேசிய கவிஞர்?
  • ஆத்மாநாம்
  1. ஆத்மாநாமின் இயற்பெயர் என்ன?
  • மதுசூதனன்
  1. ஆத்மாநாமின் முக்கியமான கவிதை தொகுப்பின் பெயர் என்ன?
  • காகிதத்தில் ஒரு கோடு
  1. மதுசூதனன் நடத்திய சிற்றிதழ் எது?
  • ” ழ சிற்றிதழ் “
  1. குறவஞ்சி என்பது எந்த வகை இலக்கிய வடிவமாகும்?
  • நாடக இலக்கிய வகை (opera)
  1. குறவஞ்சி எவ்வாறு வழங்கப்படுகிறது?
  • குறத்திப்பாட்டு
  1. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளை குறிப்பிடுக

:சிலம்பு- சேலம்

  1. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளை குறிப்பிடுக

:பாடகம்-பாண்டிய நாடு

  1. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளை குறிப்பிடுக

:காலாழி பீலி- கண்டியதேசம்

  1. குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றியவர் யார்?
  • திரிகூடராசப்பக் கவிராயர்
  1. குற்றால குறவஞ்சி யாருடைய கவிதை கீரிடம் எனப் போற்றப்பட்டது?
  • திரிகூடராசப்பக் கவிராயர்
  1. குற்றால குறவஞ்சி யாருடைய விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது?
  • மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார்
  1. திரிகூடராசப்பக் கவிராயர் எங்கு பிறந்தார்?
  • திருநெல்வேலி
  1. திரிகூடராசப்பக் கவிராயர் வழங்கும் வேறு பெயர் என்ன?
  • திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்
  1. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
  • குற்றாலத்தின் மீது தலபுராணம் ,மாலை , சிலேடை,பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி
  1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமையைப் பற்றிப்பேசும் செய்யுள் வகை எது?
  • திருச்சாழல்
  1. திருச்சாழல் வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையை தெரிவிக்கும் வகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
  • 20 பாடல்கள்
  1. “கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
  • திருச்சாழல்
  1. சாழல் என்பது யார் விளையாடும் ஒரு விளையாட்டு?
  • பெண்கள்
  1. ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும் விளையாட்டு எது?
  • சாழல்
  1. திருமங்கை ஆழ்வார் தனது எந்த நூலில் திருச்சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்?
  • பெரியதிருமொழி
  1. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
  • மாணிக்கவாசகர்
  1. திருவாசகம் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
  • எட்டாம் திருமுறை
  1. திருவாசகத்தில் எத்தனை திருப் பதிகங்கள் உள்ளன?
  • 51 திருப்பதிகங்கள்
  1. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அடங்கியுள்ளன?
  • 658 பாடல்கள்
  1. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன?
  • 38
  1. திருச்சாழல் எந்த கோவிலில் பாடப்பெற்றது?
  • தில்லை கோவில்
  1. திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
  • ஜி.யூ.போப்
  1. மாணிக்கவாசகர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
  • திருவாதவூர்
  1. மாணிக்கவாசகர் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்?
  • அரிமர்த்தன பாண்டியன்
  1. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
  • திருவாசகம் திருக்கோவையார்
  1. இளையராஜா சிம்பொனி இசை கோலத்தை எந்த இசை குழுவுக்கு அமைத்துக் காட்டினார்?
  • ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு
  1. இளையராஜா எங்கு பிறந்தார்?
  • தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரம்
  1. இளையராஜாவின் பெற்றோர் யார்?
  • ராமசாமி சின்னத்தாயம்மாள்
  1. இளையராஜாவின் இயற்பெயர் என்ன?
  • ராசையா
  1. இளையராஜா எந்த படத்தின் மூலமாக அறிமுகமானார்?
  • அன்னக்கிளி
  1. பஹாடி எந்த இன மக்களின் இசை?
  • ஜம்மு-காஷ்மீரின் பஹார் இனமக்கள்
  1. இளையராஜா எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்?
  • 2018
  1. இளையராஜா சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எத்தனை முறை வென்றுள்ளார்?
  • நான்கு முறை
  1. இளையராஜா எந்தெந்த ஆண்டுகளில் தேசிய விருது வென்றுள்ளார்?
  • 1985,1987,1989,2009
  1. இளையராஜா 2016 ஆம் ஆண்டில் என்ன விருது பெற்றார்?
  • சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
  1. இளையராஜா எந்த ஆண்டு தமிழகத்தின் கலைமாமணி விருது பெற்றார்?
  • 1980-81
  1. இளையராஜா மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது எந்த ஆண்டு பெற்றார்?
  • 1988
  1. இளையராஜா கேரளம் நிஷாகந்தி சங்கீத விருது எந்த ஆண்டு பெற்றார்?
  • 1995
  1. “எப்படி பெயரிடுவேன்?”(How to name it) என்பது யாருடைய இசைத்தொகுப்பு?
  • இளையராஜா
  1. இளையராஜா எந்த புல்லாங்குழல் இசைக் கலைஞருடன் இணைந்து “காற்றைத் தவிர ஏதுமில்லை” என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார்?
  • ஹரிபிரசாத் சௌராசியா
  1. “இந்தியா 24 மணிநேரம்” எனும் ஆவணப் படத்தின் பின்னணி இசையை உருவாக்கியவர் யார்?
  • இளையராஜா
  1. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு எந்த இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார்?
  • ஆரட்டோரியா
  1. மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்தி பாடலை எழுதியவர் யார்?
  • ஆதிசங்கரர்
  1. மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பை இளையராஜா எந்த மொழியில் வெளியிட்டுள்ளார்?
  • கன்னடம்
  1. இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?
  • பஞ்சமுகி
  1. இளையராஜா அரை நாளில் எந்த திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார்?
  • நூறாவது நாள்
  1. இளையராஜா எழுதிய நூல்கள் எவை?
  • பால் நிலாப்பாதை ,வெட்டிவெளிதனில் கொட்டிக்கிடக்குது
  1. எந்த நூலில் நோதிறம்,பாலையாழ்,காந்தாரம் முதலிய பண்புகள் காணப்படுகின்றன?
  • பரிபாடல்
  1. காரைக்கால் அம்மையார் சைவத் திருமுறைகளில் எந்தப் பண்னில் பாடியுள்ளார்?
  • நட்டபாடை,இந்தளம்
  1. தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் உள்ளன?
  • 23 பண்கள்
  1. தேவாரத்தில் இல்லாது திவ்யபிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் என்னென்ன?
  • நைவளம்,அந்தாளி,தோடி,கல்வாணம்,பியந்தை,குறண்டி,முதிர்ந்த இந்தளம்
  1. சாளரப்பாணி என்ற பண் எந்த  திருமுறையில் காணப்படுகிறது?
  • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா
  1. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் எது?
  • நம்ரதா கே சாகர்
  1. மஹாத்மா காந்தி எழுதிய பாடலுக்கு இளையராஜா யாரைப் பாடவைத்து இசையை வெளியிட்டார் ?
  • இந்துஸ்தானி இசைப் பாடகர் அஜொய் சக்கரபர்த்தி
  1. ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி எனும் மேற்கத்திய செவ்வியல் வடிவம் இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?
  • இளையராஜா (1993)
  1. இளையராஜா சிம்பொனி இசைக் கோவையை எத்தனை நாட்களில் நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார்?
  • 13 நாட்கள்
  1. ஏ ஆர் ரஹ்மானுக்கு எந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது?
  • 2009
  1. ஏ ஆர் ரஹ்மானின் தந்தை பெயர் என்ன?
  • ஆர் கே சேகர்
  1. ஏ ஆர் ரஹ்மான் எந்த ஆண்டு தனது முதல் திரைப்படத்திற்கு இசை அமைத்தார்?
  • 1992
  1. ஏ ஆர் ரஹ்மான்எந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்?
  • ரோஜா
  1. பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகின்றன?
  • 103
  1. முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற சிறப்பினை பெற்றவர் யார்?
  • ஏ ஆர் ரஹ்மான்
  1. தமிழ் யாப்பிலக்கணத்தில் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை எது?
  • துள்ளலோசை
  1. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?
  • ஏ ஆர் ரஹ்மான்
  1. ஏ ஆர் ரஹ்மான் என்ன படத்திற்காக கோல்டன் க்ளோப் விருது பெற்றார்?
  • ஸ்லம்டாக் மில்லியனர்
  1. சங்கரதாஸ் சுவாமிகளின் காலம் என்ன?
  • 1867-1922
  1. சங்கரதாஸ் சுவாமிகள் யாரிடம் தமிழ் அறிவைப் பெற்றார்?
  • புலவரேறு பழனி தண்டபாணி
  1. சங்கரதாஸ் சுவாமிகள் தனது எத்தனையாவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா கலித்துறை இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்?
  • 16வயது
  1. சங்கரதாஸ் சுவாமிகள் என்ன நாடக குழுவை உருவாக்கினார்?
  • சமரச சன்மார்க்க சபை
  1. எந்த ஆண்டில் சங்கரதாஸ் சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை எனும் நாடக அமைப்பை உருவாக்கினார்?
  • 1918
  1. சங்கரதாஸ் சுவாமிகளின் சிறப்புப் பெயர் என்ன?
  • தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
  1. “தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • கம்பர்
  1. “தெண் திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ “இயற்றியவர்?
  • கம்பர்

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page