TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. கற்பவர் மனதில் ஆழப் புதைந்துள்ள திறன்களை தோண்டி வெளிக் கொண்டு வருவதால் எந்த பொருளின் அடிப்படையில் கல்வி என வழங்கலாயிற்று?
  • கல்லுதல்
  1. கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு அழைப்பர்?
  • ஓதற்பிரிவு
  1. ஓதற்பிரிவு பற்றி குறிப்பிடும் நூல் எது?
  • தொல்காப்பியம், அகத்திணை
  1. எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறுவதும் நூல் எது?
  • தொல்காப்பியம்
  1. எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு என்ன தோன்றுவதாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?
  • பெருமிதம்
  1. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • புறநானூறு
  1. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  1. “துணையாய் வருவது தூயநற் கல்வி”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
  • திருமந்திரம்
  1. “கல்வி அழகே அழகு” என கூறும் நூல்?
  • நாலடியார்
  1. “இளமையில் கல்” எனக் கூறியவர்?
  • ஔவையார்
  1. “சங்ககாலத் தமிழகம்  எங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் மற்றும் சமயம் வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது எனக் கருத்து யாருடையது?
  • மா. இராசமாணிக்கனார்
  1. பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பின் பெயர் என்ன?
  • சங்கம்
  1. சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழகத்தில் கற்பித்தல் பணியை செய்த அமைப்புகள் என்னென்ன?
  • அறங்கூர் அவையம் ,சமணப்பள்ளி ,பௌத்தப் பள்ளி
  1. கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை வகை பிரிவினராக பிரிக்கப்பட்டிருந்தனர்?
  • 3
  1. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • கணக்காயர்
  1. பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • ஆசிரியர்
  1. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • குரவர்
  1. கலைகள் கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை?
  • பள்ளிகள்
  1. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக திகழ்ந்தது?
  • மன்றம்
  1. செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது?
  • சான்றோர் அவை
  1. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என குறித்துள்ள நூல் எது?
  • பெரிய திருமொழி
  1. கல்வி கற்பிக்கும் இடங்களை ஓதும் பள்ளி என கூறும் நூல் எது?
  • திவாகர நிகண்டு
  1. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை கல்லூரி எனக் கூறும் நூல் எது?
  • சீவகசிந்தாமணி
  1. கற்றலுக்கு உதவும் ஏட்டு கற்றைகளை எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர்?
  • ஏடு ,சுவடி ,பொத்தகம் ,பனுவல் ,நூல்
  1. எந்த 4 கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்?
  • கல்வி, மருந்து, உணவு ,அடைக்கலம்
  1. சமண சமயத்தைச் சேர்ந்த எந்த பிரிவு துறவிகள் மலை குகையில் தங்கினார்?
  • திகம்பர துறவிகள்
  1. பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
  • படுக்கை
  1. பள்ளி எனும் சொல் எந்த சமயங்களின் கொடையாகும்?
  • சமணம் மற்றும் பௌத்தம்
  1. சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் எங்கு உள்ளன?
  • திருச்சி மலைக்கோட்டை மற்றும் கழுகுமலை
  1. எந்த ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்?
  • வந்தவாசி அருகில் உள்ள வேடல்
  1. விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளி ஒன்றை நிறுவிய சமணப் பெண் ஆசிரியர் யார்?
  • பட்டினி குரத்தி
  1. பட்டிமண்டபம் என்ற கலை வடிவம் எந்தத் துறையில் இருந்து தோன்றியது?
  • சமயத்துறை
  1. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று எந்த நூலில் சுட்டப்படுகின்றது?
  • மணிமேகலை
  1. “ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • மணிமேகலை
  1. தமிழகத்துக்கு வந்து காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியவர் யார்?
  • சீனப் பயணி யுவான் சுவாங்
  1. எந்த பாதிரியார் தமிழகத்தின் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையை கண்டு வியந்தார்?
  • ரெவரெண்ட் பெல்
  1. ரெவரெண்ட் பெல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
  • ஸ்காட்லாந்து
  1. ரெவரண்ட் பெல் ஸ்காட்லாந்தில் என்ன பெயரில் தமிழகத்தின் திண்ணை பள்ளிக்கல்வி முறையை நிறுவினார்?
  • மெட்ராஸ் காலேஜ்
  1. ஸ்காட்லாந்தில் தமிழகத்தின் திண்ணை பள்ளிக் கல்வி முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
  • மெட்ராஸ் சிஸ்டம் .பெல் சிஸ்டம் மற்றும் மானிடரி சிஸ்டம்
  1. மாணவர்கள் ஆசிரியர்களை அனுகி,அவருடன் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு தேவைப்படும் பணிகளை செய்து கல்வி கற்கும் முறை?
  • குருகுலக் கல்வி முறை
  1. திண்ணைப் பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
  • தெற்றிப் பள்ளிகள்
  1. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • கணக்காயர்கள்
  1. திண்ணைப் பள்ளிகள் பாடசாலைகள் மக்தாபுகள் மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?
  • நாட்டுக் கல்வி
  1. எந்த சென்னை ஆளுநர் ஆணையின்படி பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது?
  • சர் தாமஸ் மன்றோ
  1. பொதுக்கல்வி வாரியம் எப்போது தொடங்கப்பட்டது?
  • 1826
  1. எப்போது சென்னை மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது?
  • 1835
  1. எந்த ஆண்டு பொதுக் கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குனர் நியமிக்கப்பட்டார்?
  • 1854
  1. எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
  • 1857
  1. எந்த ஆண்டு ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது?
  • 1794
  1. ஸ்கூல் ஆப் சர்வே என்ற நிறுவனம் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்து எப்போது?
  • 1859
  1. 1910-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி சம்பந்தமான வாரியம் எது?
  • தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம்
  1. எந்த ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு மாநில அளவிலான பொதுத்தேர்வு நடைமுறைக்கு வந்தது?
  • 1911
  1. சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்ததாக தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது?
  • 12,498
  1. தனி நிலையில் புலவர்களிடத்து‌ கற்கும் கல்வி முறை என்ன?
  • உயர்நிலைக் கல்வி முறை
  1. தமிழ் தாத்தா யாரிடம் கல்வி கற்றார்?
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  1. “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைகளனும்…” எனத் தொடங்கும் வரிகளை கொண்ட நூல் எது?
  • திரிகடுகம்
  1. 1453 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?
  • ஜான் கூட்டன்பர்க்
  1. ஜான் கூட்டன்பர்க் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
  • ஜெர்மனி
  1. எந்த ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதன்முதலாக கல்விப் பணியில் ஈடுபட்டது?
  • 1706
  1. முதன் முதலில் எங்கு அச்சுக்கூடம் ஏற்படுத்தப்பட்டது?
  • தரங்கம்பாடி
  1. இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி எது?
  • தமிழ்
  1. எந்த நாட்டவர்கள் அறப் பள்ளிகளை நிறுவயதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் அமைத்தனர்?
  • டச்சுக்காரர்கள்
  1. எந்த ஆண்டு சாசன சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கியது?
  • 1813ஆம் ஆண்டு சாசன சட்டம்
  1. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழை தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • கீழைத்தேயவாதிகள்
  1. மேற்கத்திய பாணி கல்வி முறையிலான ஆங்கில வழிக் கல்வி முறையை ஆதரித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • மேற்கத்தியவாதிகள்
  1. எந்த ஆண்டு மெக்காலே கல்வி குழு உருவாக்கப்பட்டது?
  • 1835
  1. யார் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தற்கால கல்வியும் தேர்வு முறையும் உருவானது?
  • சார்லஸ் வுட்
  1. எந்த ஆண்டு சார்லஸ் வுட்டின் அறிக்கை உருவாக்கப்பட்டது?
  • 1854
  1. யாருடைய அறிக்கை இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படுகிறது?
  • சார்லஸ் உட் அறிக்கை
  1. எந்த கல்விக் குழு சீருடை முறை தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?
  • ஹண்டர் கல்வி குழு
  1. எந்த ஆண்டு ஹண்டர் கல்வி குழு உருவாக்கப்பட்டது?
  • 1882
  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை?
  • 15 விழுக்காடு
  1. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது?
  • இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 45
  1. “தாய்மொழியிலேயே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன் நான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • இரா.மீனாட்சி
  1. இரா.மீனாட்சி மீனாட்சி இயற்றிய கவிதை தொகுப்புகள் என்னென்ன?
  • நெருஞ்சி, சுடு பூக்கள், தீபாவளிபகல், மறு பயணம்,வாசனைப்புல், உதய நகரிலிருந்து, கொடி விளக்கு
  1. பிள்ளைக்கூடம் எனும் கவிதை எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
  • கொடி விளக்கு
  1. ” பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • நற்றினை
  1. “…கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • போதனார்
  1. ” பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்…”இவ்வரிகளை உடைய பாடல் இயற்றப்பட்ட  திணை மற்றும் துறை எது?
  • பாலைத்திணை ,துறை: மகள் நிலை உரைத்தல் துறை
  1. தலைவனோடு உடன் போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது எந்தத் துறை?
  • மனை மருட்சி
  1. மனை மருட்சியின் வேறு பெயர் என்ன?
  • மகள் நிலை உரைத்தல்
  1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல் எது?
  • நற்றினை
  1. நற்றினை எந்த அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது?
  • நல்ல திணை
  1. நற்றினை பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • 400
  1. நற்றிணையின் அடிவரையறை என்ன?
  • 9 அடி சிற்றெல்லை 12 அடி பேரெல்லை
  1. நற்றிணையைத் தொகுப்பித்தவன் யார்?
  • பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  1. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  1. போதனார் நற்றிணையில் எந்தப் பாடலை மட்டும் பாடியுள்ளார்?
  • 110வது பாடல்
  1. நற்றிணையின் பெரெல்லை 12 அடியாக இருப்பினும் விதிவிலக்காக போதனார் பாடிய பாடல் மட்டும் எத்தனை அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது?
  • 13 அடிகள்
  1. “முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் “இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
  • தொல்காப்பியம்
  1. எத்தனை முறை கேட்கும் மாணவர்கள் நூலை பிழையின்றி கற்கும் திறன் பெறுவர் என தொல்காப்பியம் கூறுகிறது?
  • இரண்டு முறை
  1. தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு எப்போது வெளியிடப்பட்டது?
  • 1847
  1. கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது?
  • தொல்காப்பியம்
  1. தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார்?
  • தொல்காப்பியனார்
  1. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
  • மூன்று
  1. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் என்னென்ன?
  • எழுத்து சொல் பொருள்
  1. தொல்காப்பிய நூலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
  • 27 இயல்கள்
  1. தொல்காப்பிய நூலில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
  • 9
  1. தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்கள் யார்?
  • இளம்பூரணர் ,நச்சினார்க்கினியர் ,கல்லாடனார், சேனாவரையர் ,தெய்வச்சிலையார் ,பேராசிரியர்
  1. பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பின் எந்த இதழில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார்?
  • சுதேசமித்திரன்
  1. பாரதியார் பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
  • சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி அல்லது யங் இந்தியா, விஜயா ,சூரியோதயம், கர்மயோகி
  1. பாரதியின் புனை பெயர்கள் என்னென்ன?
  • இளசை சுப்பிரமணியன்,சாவித்திரி சி.சு பாரதி, வேதாந்தி, நித்திய தீரர், உத்தமதேசாபிமானி ,செல்லிதாசன், காளிதாசன், சக்தி தாசன், ரிஷி குமாரன், காசி, சரஸ்வதி, பிஞ்சு காளிதாசன்,செல்லம்மா,கிருஷ்ணன்
  1. தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாக கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
  • பாரதியார்
  1. என்ன பெயரில் பாரதியார் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்?
  • சித்திராவளி
  1. பாரதியார் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பியதற்கு தூண்டுகோலாக இருந்த இதழ்கள் என்னென்ன?
  • லண்டன் பஞ்ச், ஹிந்தி பஞ்ச்
  1. எந்த இரு இதழ்களிலும் கருத்து படங்களை பாரதியார் வெளியிட்டுள்ளார்?
  • இந்தியா ,விஜயா
  1. பாரதியிடம் துணை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் யார்?
  • பி.பி சுப்பையா,ஹரிஹரர்,என் நாகசாமி,வ. ராமசாமி. பரலி சு நெல்லையப்பர், கனகலிங்கம்
  1. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர்?
  • பாரதி
  1. பெண்களுக்காக தனது எந்த இதழில் குறள்வெண்பா பாரதியார் எழுதியுள்ளார்?
  • சக்கரவர்த்தினி
  1. “பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு”.. இக்குறளை எழுதியவர்?
  • பாரதி
  1. “கூடியவரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம்” எனக் கூறியவர்?
  • பாரதியார்
  1. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்?
  • இந்தியா
  1. சிவப்பு வண்ணம் எதனைக் குறிக்கும்?
  • புரட்சியையும் விடுதலையும்
  1. பாரதியைப் பற்றி நண்பர்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
  • ரா.அ.பத்மநாபன்
  1. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை என்ன  புனைபெயர்களில் குறிப்பிட்டிருந்தார்?
  • கண்ணம்மா வள்ளி
  1. தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடி யார்?
  • பாரதியார்
  1. தலைப்பிடலை பாரதியார் எவ்வாறு அழைக்கிறார்?
  • மகுடமிடல்
  1. ஜி யு போப்ன் காலம் என்ன?
  • 24-04-1820–11.02.1909
  1. ஜி யு போப் எந்த ஆண்டில் தென் இந்தியாவுக்கு வருகை தந்தார்?
  • 1839
  1. முதன்முதலாக தமிழ் உரையை படித்து ஜி யு போப் எங்கு சொற்பொழிவாற்றினார்?
  • சென்னை சாந்தோம்
  1. “தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானது என்றும் அத்தகைய கல்வியே பயனளிக்கும்” என்றும் கருதியவர் யார்?
  • ஜி.யு.போப்
  1. சீனர்கள் உடைய பிரதான சிகிச்சை முறை என்ன?
  • தீய்த்தல்
  1. “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் “இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • பாரதியார்

TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 11TH TAMIL இயல் 05 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page