TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிவைத்த ஆண்டு?

 1906

  1. வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை எந்த ஆண்டு தொடங்கினார்?

1906

  1. மா பொ சிவஞானம் எப்போது பிறந்தார்?

ஜூன் 26, 1906

  1. மா பொ சிவஞானம் எங்கு பிறந்தார்? 

சென்னை ஆயிரம் விளக்கு வட்டம் ,சால்வன்குப்பம்

  1. மா.பொ. சிவஞானத்தின் பெற்றோர் யார்?

பொன்னுசாமி -சிவகாமி

  1. மா.பொ. சிவஞானத்தின்  இயற்பெயர் என்ன?

ஞானப்பிரகாசம்

  1. சரபையர் என்ற முதியவர் மா.பொ. சிவஞானத்தின் பெயரை எவ்வாறு அழைத்தார்?

சிவஞானி

  1. மா.பொ. சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாரைச் சேரும்?

திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

  1. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?

1931

  1. எந்த ஆண்டு “தமிழா! துள்ளி எழு” தலைப்புடைய துண்டறிக்கையை மா.பொ.சி வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்?

30.09.1932

  1. வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளசெய்தழன் யார்?

 தமிழாசான் மங்கலங்கிழார்

  1. “தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு ஒன்று இல்லை” எனக் கூறியவர் யார்?

மா. பொ சிவஞானம்

  1. தமிழ்நாட்டில் சிலப்பதிகார மாநாடு நடத்தியவர் யார்?

மா.பொ.சிவஞானம்

  1. சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

மா.பொ. சிவஞானம்

  1. யார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன?

 படாஸ்கர் ஆணையம்

  1. சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு நபர் ஆணையத்தின் தலைமை யார்?

நீதிபதி வாஞ்சு

  1. மா.பொ. சிவஞானத்தின் தெற்கெல்லை கிளர்ச்சி பற்றிய முதல் பேச்சு எங்கு எப்போது நடந்தது?

அக்டோபர் 25, 1946 ,நாகர்கோவில் நகரின் வடிவீஸ்வரம் , வடிவை வாலிபர் சங்கத்தின் ஆண்டு விழாவில்

  1. தெற்கெல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக உயிர் நீத்தவர்கள் யார்?

தேவசகாயம் ,செல்லையா

  1. மார்ஷல் ஏ. நேசமணி என்ன பணிகளை வகித்துள்ளார்?

வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் ,சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்

  1. குமரிமாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?

 மார்ஷல் ஏ. நேசமணி

  1. எப்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது?

நவம்பர் 1, 1956

  1. மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு எங்கு மணிமண்டபம் அமைத்துள்ளது?

 நாகர்கோவில்

  1. எந்த நூல்களில் தமிழகத்தின் வடக்கு எல்லை வேங்கடமலையாகவும், தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்படுகிறது?

 புறநானூறு ,சிலப்பதிகாரம்

  1. ஆஸ்டிரியா நாட்டு தலைநகரம் எது?

வியன்னா

  1. முசிறி -அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது?

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி

  1. மாப்பு சிவஞானத்தின் தன் வரலாற்று நூல் எது?

 எனது போராட்டம்

  1. மா.பொ. சிவஞானத்தின் காலம் என்ன?

1906 – 1995

  1. மா.பொ.சிவஞானம் எந்த ஆண்டு சட்டமன்ற மேலவைத் தலைவராக பதவி வகித்துள்ளார்?

1972 முதல் 1978 வரை

  1. மா பொ சிவஞானம் என்ன கழகத்தைத் தொடங்கினார்?

தமிழரசு கழகம்

  1. மா.பொ. சிவஞானத்தின் எந்த நூல் 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றது?

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

  1. மா பொ சிவஞானத்திற்கு தமிழரசு எங்கு சிலை அமைந்துள்ளது?

 திருத்தணியிலும், சென்னை தியாகராய நகரிலும்

  1. ஏர் புதிதா? எனும் கவிதையை இயற்றியவர்?

 கு.ப. ராஜகோபாலன்

  1. பொன்னேர் பூட்டுதல் எந்த திங்களில் நடத்தப்படும்?

 சித்திரைத் திங்கள்

  1. “ஏர் புதிதா?” எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

கு.ப.ரா.படைப்புகள்

  1. கு ப ராஜகோபாலன் எங்கு எப்போது பிறந்தார்?

 கும்பகோணம் 1902

  1. கு ப ராஜகோபாலன்  எந்த இதழ்களின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்?

தமிழ்நாடு ,பாரதமணி ,பாரததேவி, கிராம ஊழியன்

  1. கு ப ராஜகோபாலனின் படைப்புகள் என்ன நூலாக தொகுக்கப்பட்டுள்ளன?

அகலிகை, ஆத்ம சிந்தனை

  1. “இந்தி ரன்முதற் திசபாலர் எண் மரும்ஒரு வடிவாகி வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய” இம்மெய்க்கீர்த்தி யாரைப் பற்றியது?

இரண்டாம் ராஜராஜ சோழன்

  1. இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

கோப்பரகேசரி ,திருபுவனச் சக்கரவர்த்தி

  1. இரண்டாம் ராஜராஜ சோழனுடைய மெய்க்கீர்த்திகள் எத்தனை?

இரண்டு

  1. “சிறுகுறங் கைவினைப் பிறர்வினை யாளரோடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

இந்திரவிழா ஊரெடுத்த காதை , சிலப்பதிகாரம்

  1. “சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலையும் புனைந்தான் …” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

திருத்தணிகையுலா

  1. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடைக்கு என்ன பெயர்?

உரைப்பாட்டு மடை

  1. இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரத்தில் எந்த கண்டத்தில் உள்ளது?

 புகார்க்காண்டம்

  1. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம்

  1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் என்னென்ன?

3 , புகார் காண்டம், மதுரைக் காண்டம் ,வஞ்சிக் காண்டம்

  1. சிலப்பதிகாரம் எத்தனை காதைகள் உடையது?

30 காதைகள்

  1. இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள்?

சிலப்பதிகாரம் ,மணிமேகலை

  1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

 இளங்கோவடிகள்

  1. இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர்?

சேர மரபு

  1. மணிமேகலை ஆசிரியர் யார்?

சீத்தலைச் சாத்தனார்

  1. கோவலன் கண்ணகி கதையை கூறி அடிகள் நீரே அருளுக என கூறியவர் யார்?

சீத்தலைச்சாத்தனார்

  1. “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” எனக் கூறியவர் யார்?

இளங்கோவடிகள்

  1. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்?

ஐந்தாம் வகுப்பு

  1. எம் எஸ் சுப்புலட்சுமியின் நடித்த திரைப்படம் எது?

மீரா

  1. 1947 இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று எம்எஸ் சுப்புலட்சுமியிடம் காந்தி பாடும்படி கேட்டுக் கொண்ட பாடல் எது?

ஹரி தும்  ஹரோ எனும் மீரா பஜன்

  1. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையணி விருது பெற்றார்?

1954

  1. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த ஆண்டு இங்கிலாந்தில் பாடினார்?

 1963

  1. எம்.எஸ்.சுப்புலட்சுமி எந்த ஆண்டு ஐ.நா அவையில் பாடினார்?

1966

  1. எந்த ஆண்டில் எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது கிடைத்தது? 

1974

  1. மகசேசே விருது பெற்ற முதல் இசை கலைஞர் யார்?

 எம் எஸ் சுப்புலட்சுமி

  1. ராஜம் கிருஷ்ணனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?

வேருக்கு நீர்

  1. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

ராஜம்கிருஷ்ணன்

  1. ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன், அலைவாய்க் கரையில், சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், மண்ணகத்து பூந்துளிகள்

  1. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள் என்னென்ன?

தாமரைத்திரு விருது ,ஸ்வீடன் அரசின் வாழ்வுரிமை விருது ,சுவிட்சலாந்து அரசின் காந்தி அமைதி விருது

  1. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என்ன இயக்கத்தைத் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்துள்ளார்?

உழுபவருக்கு நில உரிமை இயக்கம் (land for the tiller’ freedom – LAFTI)

  1. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி பரஸ்கார்)வாங்கியவர் யார்? 

சின்னப்பிள்ளை

  1. சின்ன பிள்ளை பெற்ற விருதுகள் என்னென்ன?

தமிழக அரசின் ஔவை விருது ,தூர்தர்ஷனின் பொதிகை விருது ,தாமரைத்திரு விருது

  1. “ஏர் பிடிக்கும் கைகளுக்கு வாழ்த்து கூறுவோம்” இவ்வரிகளை எழுதியவர் யார்?

 கவி.கா.மு.ஷெரீப்

  1. “கற்ற பெண்களை இந்த நாடு தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு” இவரிகளை இயற்றியவர் யார்?

 பாரதிதாசன்

  1. என் கதை எனும் நூலின் ஆசிரியர்?

 நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்

  1. நாற்காலிக்காரர் எனும் நூலின் ஆசிரியர்?

ந முத்துசாமி


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page