TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. கரகம் எனும் பித்தளை செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது எவ்வாறு அழைக்கப்படும்?

கரகாட்டம்

  1. கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

கரகம், கும்பாட்டம்

  1. “நீரற வறியாக் கரகத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

புறநானூறு

  1. 11 வகை ஆடல்கள் பற்றி குறிப்பிடும் நூல்?

சிலப்பதிகாரம்

  1. மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் எந்த ஆடல் கரகாட்டத்திற்கு அடிப்படை என்று கருதப்படுகிறது?

குடக்கூத்து

  1. மயில் வடிவ கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கேற்ப  ஆடும் ஆட்டத்திற்கு பெயரென்ன?

மயிலாட்டம்

  1. கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படுவது எது?

மயிலாட்டம்

  1. கா என்பதற்கு என்ன பொருள்?

பாரம் தாங்கும் கோல்

  1. ஒரே நிறத் துணியை முண்டாசு போல கட்டியும் காலில் சலங்கை அணிந்து கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடும் ஆட்டத்திற்கு பெயர் என்ன?

ஒயிலாட்டம்

  1. ஒயிலாட்டத்தை பெரும்பாலும் யார் ஆடுவார்கள்?

ஆண்கள்

  1. வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என பொருள் கொள்ளப்படுவது?

தேவராட்டம்

  1. ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் எது?

தேவராட்டம்

  1. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி எது?

உறுமி

  1. உறுமி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

தேவதுந்துபி

  1. தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபாக உள்ளது?

8 முதல் 13 கலைஞர்கள்

  1. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை எது?

 சேவையாட்டம்

  1. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

 புரவியாட்டம் ,புரவி நாட்டியம்

  1. பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது?

மராட்டியர் காலம்

  1. எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை?

பொய்க்கால் குதிரை ஆட்டம்

  1. பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கச்சிக்கொடி

  1. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குதிரைக்களி

  1. தப்பு என்றதோர் கருவியை இசைத்துக் கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடப்படும் நிகழ்கலைக்கு பெயர் என்ன?

தப்பாட்டம்

  1. “தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்& ஆசிரியர் யார்? திருப்புகழ் ,அருணகிரிநாதர்
  2. ஒன்றை சொல்வதென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி எது?

 பறை

  1. எந்த நூலில் கருப்பொருள்களில் ஒன்றாக பறை இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்

  1. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலைக்கு என்ன பெயர்?

தெருக்கூத்து

  1. எந்தக் கலையில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல் மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்?

தெருக்கூத்து

  1. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக எந்த கலை இருக்கிறது?

தெருக்கூத்து

  1. “நாடகக் கலையை மீட்டெடுப்பது தமது குறிக்கோள்” என கூறியவர் யார்?

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி என்ற கலை ஞாயிறு

  1. ந.முத்துசாமி பெற்ற விருதுகள் என்னென்ன?

இந்திய அரசின் தாமரைத்திரு விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது

  1. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது எது?

தெருக்கூத்து

  1. தோலாலான பாவையை கொண்டு நிகழ்த்தும் கலைக்கு என்ன பெயர்?

தோற்பாவைக் கூத்து

  1. மரப்பாவையை பற்றி குறிப்பிடும் நூல் எது?

திருக்குறள்

  1. எந்த நூலில் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளை காண முடிகிறது?

திருவாசகம் ,பட்டினத்தார் பாடல்

  1. எந்த நாட்டில் இராச சோழன் தெரு என்பது இன்றும் உள்ளது?

மலேசிய தலைநகர் கோலாலம்பூர்

  1. “சாந்தமானதொரு பிரபஞ்சத்தை சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்” இவ்வரிகளை இயற்றியவர்?

உமா மகேஸ்வரி

  1. கவிஞர் உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?

மதுரை மாவட்டம்

  1. கவிஞர் உமா மகேஸ்வரி படைத்த கவிதைத் தொகுதிகள் என்னென்ன?

நட்சத்திரங்களின் நடுவே ,வெறும் பொழுது ,கற்பாவை

  1. “செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

  1. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

குமரகுருபரர்

  1. செங்கீரைச்செடி  காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை எந்த மாதங்களில் மென்மையாக அசையும்?

ஐந்து முதல் ஆறாம் மாதங்களில்

  1. சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?

 96

  1. இறைவனையோ,தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரை குழந்தையாகக் கருதி பாடப்படும் இலக்கியம் எது?

பிள்ளைத்தமிழ்

  1. பிள்ளைத்தமிழில் எத்தனை பருவங்கள் இடம்பெறும்?

10

  1. பிள்ளைத்தமிழில் பருவங்களுக்கு எத்தனை பாடல்கள் இடம்பெறும்?

பத்து பாடல்

  1. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும்  மொத்த பாடல்கள் எண்ணிக்கை?

நூறு பாடல்கள்

  1. குமரகுருபரரின் காலம் எது?

பதினேழாம் நூற்றாண்டு

  1. குமரகுருபரர் எந்தெந்த மொழிகளில் புலமை பெற்றவர்?

தமிழ் வடமொழி இந்துஸ்தானி

  1. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?

கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் ,சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் ,திருவாரூர் மும்மணிக்கோவை

  1. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் என்னென்ன?

காப்பு ,செங்கீரை, தால், சப்பாணி ,முத்தம், வருகை, அம்புலி

  1. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்க்குரிய கடைசி மூன்று பருவங்கள் என்னென்ன?

 சிற்றில், சிறுபறை ,சிறுதேர்

  1. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கு உரிய கடைசி மூன்று பருவங்கள் என்னென்ன?

கழங்கு, அம்மானை ,ஊசல்

  1. “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” எனப் பெருமை படுபவர் யார்?

பாரதியார்

  1. “தாதுகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்…” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?

பால காண்டம் -ஆற்றுப்படலம், கம்பராமாயணம்

  1. “தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க..” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?

பால காண்டம் -நாட்டுப்படலம், கம்பராமாயணம்

  1. “வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?

பால காண்டம் -நாட்டுப்படலம், கம்பராமாயணம்

  1. “வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறைய” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?

அயோத்தியா காண்டம் -கங்கைப்படலம், கம்பராமாயணம்

  1. “ஆளு நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?

அயோத்தியா காண்டம் கங்கைகாண் படலம், கம்பராமாயணம்

  1. “”உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றது…” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?

யுத்த காண்டம் -கும்பகருணன் வதைப் படலம், கம்பராமாயணம்

  1. கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் வழங்கி தன் நூலுக்கு என்ன பெயரிட்டார்?

இராம அவதாரம்

  1. கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்கள் கொண்டது?

ஆறு காண்டங்கள்

  1. கம்பரை பாராட்டி வழங்கப்படும் முதுமொழிகள் என்னென்ன?

கல்வியில் பெரியவர் கம்பர் ,கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒன்பாவிற்கு உயர் கம்பன்

  1. கம்பர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

சோழநாட்டு திருவழுந்தூர்

  1. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?

திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்

  1. கம்பர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?

சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது ,சிலையெழுபது

  1. பாய்ச்சல் எனும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது? 

தக்கையின் மீது நான்கு கண்கள்

  1. தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் நூலை இயற்றியவர் யார்?

 சா கந்தசாமி

  1. சா.கந்தசாமி எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

மயிலாடுதுறை ,நாகப்பட்டினம்

  1. சா.கந்தசாமி தனது எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?

சாயாவனம்

  1. சா.கந்தசாமியின் எந்த புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது  கிடைத்தது?

விசாரணை கமிஷன்

  1. சா கந்தசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?

தொலைந்து போனவர்கள், சூரியவம்சம் ,சாந்தகுமாரி  மற்றும் 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 11 க்கும் மேற்பட்ட புதினங்கள்

  1. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

சிலப்பதிகாரம் ஊர்காண் காதை

  1. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது?

ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி

  1. தேன்மழை நூலின் ஆசிரியர்?

சுரதா

  1. திருக்குறள் நீதி இலக்கியம் நூலின் ஆசிரியர்?

க.த.திருநாவுக்கரசு

  1. நாட்டார் கலைகள் நூலின் ஆசிரியர்?

கா.பெருமாள்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 06 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page