TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. மொழிநடையை உருவாக்கும் மென்பொருளுக்கு என்ன பெயர்?

வேர்டுஸ்மித்

  1. வாட்சன் என்பது எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி ?

 ஐ.பி.எம்

  1. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” எனக் கூறியவர் யார்?

பாரதியார்

  1. இலா எனும் உரையாடும் மென்பொருளை எந்த வங்கி உருவாகியுள்ளது?

இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி

  1. ELA என்பதன் விரிவாக்கம் என்ன?

 Electronic live assistant

  1. பெப்பர் என்பது எந்த வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்?

ஜப்பானின் சாப்ட்வங்கி

  1. சீனாவில் எந்த துறைமுக நகரத்தில் சிவன் கோவில் உள்ளது?

சூவன்சௌ

  1. சீனாவில் உள்ள சிவன் கோயில் எந்த மன்னரின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது?

குப்லாய்கான்

  1. சீனாவில் உள்ள சிவன் கோவிலில் எந்த கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது?

சோழர் கால சிற்பங்கள்

  1. “வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் …”இவ்வரிகள்  இடம் பெற்ற நூல் எது?

பெருமாள் திருமொழி

  1. பெருமாள் திருமொழி என்னும் நூலை எழுதியவர் யார்?

குலசேகர ஆழ்வார்

  1. வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது?

கேரள மாநிலம் ,பாலக்காடு மாவட்டம்

  1. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

ஐந்தாம் திருமொழி

  1. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

105

  1. குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன?

எட்டாம் நூற்றாண்டு

  1. “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, கருவளர் வானத்து இசையில் தோன்றி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 பரிபாடல்

  1. “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல, கருவளர் வானத்து இசையில் தோன்றி” இப்பரிபாடல் பாடலை இயற்றியவர் யார்?

கீரந்தையார்

  1. எந்த அமெரிக்க வானியல் வல்லுநர் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என நிரூபித்தார்?

எட்வின் ஹப்பிள்,1924

  1. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்…” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

திருவாசகம்

  1. திருவாசகத்தை இயற்றியவர்?

மாணிக்கவாசகர்

  1. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது? பரிபாடல்
  2. பரிபாடலில் எத்தனை பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது?

70 பாடல்கள்

  1. பரிபாடலில் கிடைக்கப் பெற்றுள்ள பாடல்கள்?

24 பாடல்கள்

  1. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

1988

  1. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எங்கு உள்ளது?

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம்

  1. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எப்போது தொடங்கப்பட்டது?

2009

  1. தற்காலத்தின் ஐன்ஸ்டீன் என புகழப்படுபவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

  1. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எந்த ஆண்டு பக்கவாதம்(amyotrophic lateral sclerosis) எனும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார்?

 1963 (21 வயது)

  1. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எந்த ஆண்டு மூச்சுக்குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார்?

1985

  1. “பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை” எனக் கூறியவர்?

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

  1. “சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் .புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனை எல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்து கொள்ள முயல்கிறது ” எனக் கூறியவர் யார்?

 ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

  1. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் யார்?

ஜான் வீலர்

  1. ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஹாக்கிங் கதிர்வீச்சு

  1. கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என நிறுவியவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

  1. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் என்ன மதிப்புமிக்க பதவியை வகித்திருக்கிறார்?

லூகாசியன் பேராசிரியர்

  1. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெற்ற விருதுகள் என்னென்ன? அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, உல்ஃப் விருது , காப்ளி பதக்கம், அடிப்படை இயற்பியல் பரிசு
  2. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் யாருடைய நினைவு நாளில் பிறந்தார்?

கலிலியோ (ஐன்ஸ்டைனின் பிறந்தநாளில் இறந்தார்)

  1. “தலைவிதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது . விதி தான் தீர்மானிக்கிறது என்றால் சாலையை கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து கிடக்கிறார்கள்” எனக்கூறியவர்?

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

  1. எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளின்” தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பெற்றார்?

2012

  1. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எந்த தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார்?

அடுத்த தலைமுறை ,பெருவெடிப்புக் கோட்பாடு

  1. ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எழுதிய நூல்களுள் எந்த நூல் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?

காலத்தின் சுருக்கமான வரலாறு

  1. காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது?

 1988

  1. ” கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா  வியல் நகர்க் கருவூர் முன்துறை” இவ்வரரிகள் இடம் பெற்ற நூல்?

அகநானூறு

  1. ” கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா  வியல் நகர்க் கருவூர் முன்துறை” இவ்வரரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது?

கரூர் மாவட்டத்தின் கருவூர்

  1. “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் .ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்துவிடுகிறது .கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து க்கொள்ளப்போவதையும் உள்ளடக்கியது” எனக் கூறியவர்?

ஐன்ஸ்டீன்

  1. “வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என ஆராய்ச்சியில் நான் வெல்வேன் அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” எனக் கூறியவர்?

ஸ்டீபன் ஹாக்கிங்

  1. “நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு கோல வெறிபடைத்தோம்”  இவ்வரிகளை இயற்றியவர் யார்?

பாரதியார்

  1. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலை எழுதியவர்?

நீலமணி

  1. அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலை எழுதியவர்?

ச. தமிழ்ச்செல்வன்

  1. காலம் எனும் நூலை எழுதியவர்?

ஸ்டீபன் ஹாக்கிங்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page