TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என கூறியவர்?

தொல்காப்பியம்

  1. தம் எந்த நூலில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என திருமூலர் கூறியுள்ளார்?

திருமந்திரம்

  1. “வாயு வழக்கம் அறிந்து  செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

ஔவைக் குறள்

  1. அவ்வையார் எந்த அதிகாரத்தில் வாயு வழக்கம் அறிந்து  செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் கூறியுள்ளார்?

வாயுதாரணை

  1. கிழக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

குணக்கு

  1. கிழக்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொண்டல்

  1. கடல் பகுதியிலிருந்து மேல் உள்ள மழை மேகங்களை சுமந்து வருவதால் மழை காற்று என அழைக்கப்படும் காற்று எந்த திசையில் இருந்து வீசும்?

 கிழக்கு

  1. மேற்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

 குடக்கு

  1. மேற்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கோடை

  1. எந்த திசையில் இருந்து வீசும் காற்று வெப்ப காற்றாகிறது? மேற்கு
  2. வடக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர்?

வாடை

  1. வடக்கில் இருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வாடைக்காற்று

  1. வாடைக்காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

குளிர்ச்சியான ஊதைக்காற்று

  1. தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர்?

தென்றல்

  1. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

சிலப்பதிகாரம்

  1. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது

  1. பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது நூலை எழுதியவர் யார்?

பலபட்டடை சொக்கநாதப் புலவர்

  1. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. ஹிப்பாலஸ்  எப்போது  பருவக் காற்றின் உதவியினால் முசிறி துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்?

கி.பி. முதல் நூற்றாண்டு

  1. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

 வெண்ணிக் குயத்தியார் 

  1. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளில் யாரை பாடியுள்ளார்?

கரிகால் பெருவளத்தான்

  1. இந்தியாவிற்கு தேவையான 70 விழுக்காடு மழை அளவினை எந்த பருவக்காற்று தருகிறது?

தென்மேற்கு பருவக்காற்று

  1. “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகளை இயற்றியவர்?

ஐயூர் முடவனார்

  1. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுவது யார்?

மதுரை இளநாகனார்

  1. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடம் பெற்றுள்ளது?

 ஐந்தாமிடம்

  1. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

தமிழகம்

  1. உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

இரண்டாவது இடம்

  1. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எது தெரிவித்துள்ளது?

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

  1. UNICEFன் விரிவாக்கம் என்ன?

 United Nations Children’s Fund

  1. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எவ்வளவு ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து விடுகிறது?

ஒரு லட்சம்

  1. உலக காற்று நாளாக கொண்டாடப்படுவது எப்போது?

 ஜூன் 15

  1. எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்?

தாய்லாந்து

  1. ஒன்றே உலகம் எனும் நூலின் ஆசிரியர் யார்?

 தனிநாயகம் அடிகள்

  1. “மகரந்தத் தூளை சுமந்துகொண்டு,மனத்தை மயலுறுத்தகின்ற இனிய வாசனையுடன் வா” எனக் காற்றை அழைத்தவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டுப் பெற்றவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. சிந்துக்கு தந்தை எனப் பாராட்டப் பெற்றவர் யார்?

மகாகவி பாரதியார்

  1. மகாகவி பாரதியார் எழுதிய நூல்கள் என்னென்ன?

 குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ,கண்ணன் பாட்டு ,பாப்பா பாட்டு ,புதிய ஆத்திசூடி

  1. பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?

 இந்தியா, சுதேசமித்திரன்

  1. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?

பாரதியார்

  1. வசனக்கவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

மகாகவி பாரதியார்

  1. “பேய் கொண்டு தக்கை யடிக்குது காற்று- தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

 பாரதியார்

  1. முல்லைப்பாட்டு நூலை எழுதியவர் யார்?

 நப்பூதனார்

  1. “நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

முல்லைப்பாட்டு

  1. “சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

முல்லைப்பாட்டு

  1. ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியை கூறின் தீதாய் முடியும் “என்றும் கொள்வதற்கு என்ன பெயர்?

விரிச்சி கேட்டல்

  1. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?

103 அடிகள்

  1. முல்லைப்பாட்டு என்ன பாவகையில் இயற்றப்பட்டுள்ளது?

 ஆசிரியப்பா

  1. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

முல்லைப்பாட்டு

  1. நப்பூதனார் யாருடைய மகன்? காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார்
  2. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?

2000

  1. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எப்போதிலிருந்து புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ளது?

2004 செப்டம்பர் [தற்போது 13 நாடுகள் 169 பெயர்கள் ]

  1. புவி தனது அச்சில் எந்த திசையில் சுழல்கிறது? 

மேற்கிலிருந்து கிழக்காக

  1. புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?

வலப்புறம்

  1. புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?

இடப்புறம்

  1. வங்கக் கடலில் வீசும் புயல்கள் எவ்வாறு் அழைக்கப்படும்?

இடம்புரி புயல்கள்

  1. வேறு எந்தெந்த நாட்டில் இடம்புரி புயல்கள் உருவாகின்றன?

அமெரிக்கா, ஜப்பான், சீனா

  1. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவை தாக்கிய புயல்கள் என்ன பெயர்கள்?

வலம்புரி புயல்கள்

  1. கொரியாலிஸ் விளைவு எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

1835

  1. கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?

 பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கணக்கு வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்

  1. பிலவான் எந்த நாட்டில் உள்ள இடம்?

இந்தோனேஷியா

  1. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?

புயலிலே ஒரு தோணி

  1. புயலிலே ஒரு தோணியின் நூலாசிரியர் யார்?

ப. சிங்காரம்

  1. ப சிங்காரம் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம்

  1. ப. சிங்காரம் எந்த தினசரி நாளிதழில் பணியாற்றியுள்ளார்?

தினத்தந்தி

  1. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

அகநானூறு

  1. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் இடம் எது?

கொல்லிமலை

  1. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

நாமக்கல்

  1. “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே “இவ்வரிகளை எழுதியவர்?

கண்ணதாசன்

  1. பூ உண்டு ஆனால் கண்ணிற்கு காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?

ஆல மலர்;பலா மலர்

  1. மலர் உண்டு; பெயரும் உண்டு ; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் என்னென்ன?

சுள்ளி மலர், பாங்கர் மலர்

  1. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சி படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் என்னென்ன?

 அத்தி,ஆலம் ,கொழிஞ்சி,பலா

  1. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை ,பொதுவில் ஒதுக்கப்பட்ட மை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவை என்னென்ன?

நெருஞ்சி, எருக்கு ,பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை

  1. இலுப்பை பூக்கள் என்ன சுவையுடையவை?

இனிப்பு

  1. கரடிகள் பறித்து உண்ணும் மற்றும் குடிநீருக்கு தன் மனத்தை ஏற்றும் பூ எது?

பாதிரிப்பூ

  1. அதோ அந்த பறவை போல எனும் நூலை எழுதியவர்?

ச. முகமது அலி

  1. உலகின் மிகச்சிறிய தவளை எனும் நூலை எழுதியவர்?

எஸ் ராமகிருஷ்ணன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 10TH TAMIL இயல் 02 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page