11TH ETHICS STUDY NOTES |தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்| TNPSC GROUP EXAMS

 


  1. “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த..” வரிகள் இடம் பெற்ற நூல் எது ?

தொல்காப்பியம்

  1. மனமொத்த இருவருக்கிடையே தோன்றும் காதல் நிலைபேறு உடையதாக அமையும் என குறிப்பிடுவது?

தொல்காப்பியம்

  1. ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் காதல் வயப்படும் போது செம்புலப் பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சங்கள் கலந்தவர்களாக இருந்துள்ளனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?

குறுந்தொகை

  1. “நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் என்றும் என்தோள் பிரிவு அறியலரே”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 நற்றினை

 

  1. “உயிர்ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

நற்றிணை

  1. “…யாக்கைக்கு உயிர் இயைந்து அன்ன நட்பின்..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

அகநானூறு

  1. “புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத் துரனுடை யாளர் கேண்மை யோடு இயைந்த வைகல் உளவா கியரோ..” எனக் கூறும் நூல் எது?

 புறநானூறு

  • “உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய்நட்பினையே” இவ்வரிள் இடம் பெற்ற நூல் எது?

மதுரைக்காஞ்சி

  1. “பெறற்கரிய பெரும் பேறு கிடைப்பதாக இருந்தாலும் பொய்மை கலந்த நட்புப் பழியோடு முடியும் எனவே வாய்மை நிறைந்த நட்பே தூய்மையானது, சிறந்தது ,தகுதியானது என கூறியவர் யார் ?

மாங்குடி மருதனார்

  • “பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன் ” எனக் குறிப்பிடும் நூல் எது ?

 கலித்தொகை

  1. “பிறர் துன்பத்தை தன் துன்பம் கருதி உதவுதல்” பற்றி கலித்தொகையில் குறிப்பிடுபவர் யார்?

நல்லந்துவனார்

  1. உண்மையான செல்வம் என்பது “பிறர் துன்பம் தீர்ப்பதுதான்” எனக் கூறுபவர் யார் ?

நல்வேட்டனார்

  • “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் என்பதுவே” எனக் குறிப்பிடும் நூல் எது?

 நற்றினை

  1. உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் எனக் கூறுபவர் யார்?

பெருங்கடுங்கோ

  1. “பொய்யா செந்நா” என குறிப்பிடும் நூல் எது?

 புறநானூறு

  1. “பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 பதிற்றுப்பத்து

  1. “பிழையா நன்மொழி” என்று வாய்மையையும் பொய்மையை “பொய் பொதி கடுஞ்சொல்” என்றும் குறிப்பிடும் நூல் எது ?

நற்றிணை

  1. “நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 பதிற்றுப்பத்து

  1. “நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே” எனக் குறிப்பிடும் நூல் எது?

நற்றிணை

  1. “அல்லல் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
SEE ALSO  9TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

நற்றிணை

  1. உணவிடுவதற்காக ஒருவன் தன் வீர வாளையும் ஈடுவைத்த செய்தி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

புறநானூறு

  1. விருந்தினரின் தொடர்ச்சியான வருகையாலும் அவர்களுக்கு விருந்தோம்புவதாலும் ஒரு தலைவிக்கு ஊடல் கொள்ள நேரமில்லாமல் போனதாக எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

நற்றிணை

  1. விருந்தோம்பல் கைகூடாத வாழ்க்கையை “விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை” என கூறும் நூல் எது?

புறநானூறு (பெருங்குன்றூர் கிழார்)

  1. “மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை தாம வாழும் நாளே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு, ஔவையார்

  1. எந்த பாடலின் வழியாக பசுக்களும் பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவர்கள் மக்கட்பேறு இல்லாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு போர் தொடங்குவதற்கு முன்னர் அறிவுறுத்தினர் என்ற செய்தி புலப்படுகிறது?

புறநானூறு

  1. பழந்தமிழ் வேந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரத்தை தன் வெற்றியை சிறப்பிக்கும் மரமாக போற்றி வந்துள்ளனர் இது எவ்வாறு அழைக்கப்படும் ?

 காவல் மரம் அல்லது கடிமரம்

  1. “வான்மீன் பல பூப்பினும் ஆனாது மன்னே” எனக் கூறுபவர் யார்?

முடமோசியார்

  1. அரசர்களின் வள்ளல் தன்மையை பாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நூல்கள் என்ன?

ஆற்றுப்படை நூல்கள்

  1. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என கூறுவது எது?

புறநானூறு

  1. “நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோர் இவண் தள்ளாதோரே…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 புறநானூறு

  1. ஏழைப் பெண்ணின் மானம் காக்க தன் கையையே வெட்டிக் கொண்டவன் யார் ?

பொற்கைப் பாண்டியன்

  1. அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன்னையே தராசுத் தட்டில் ஏற்றிய மன்னன் யார்?

 சிபி மன்னன்

  1. கன்றிழந்த ஆவின் கண்ணீருக்கு நீதி வழங்கி தன் மகனையே தேர்க்காலில் இட்ட அரசன் யார் ?

மனுநீதிச் சோழன்

  1. “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது? 

புறநானூறு

  1. “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

  1. “இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?

புறநானூறு

  1. தீயவழியில் செல்லாமல் மனத்தை நேர் வழிப்படுத்துவதே அறிவு எனக் கூறுபவர் யார்?

திருவள்ளுவர்

  1. “மன்னுயிரின் துன்பத்தை தன் தன்னுயிர்த் துன்பமாகக் கருதுவதே அறிவுடைமையாகும்” எனக் கூறுபவர் யார் ?
SEE ALSO  8TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

வள்ளுவர்

  1. நாலடியார் சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டு யாரால் தொகுக்கப்பட்டது?

பதுமனார்

  1. “கலர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்” என கூறும் நூல் எது?

 நாலடியார்

  1. ஆத்திசூடி ,கொன்றைவேந்தன், மூதுரை ,நல்வழி ஆகியவை யாருடைய நூல்கள்?

அவ்வையார்

  1. நன்னூல் எந்த இலக்கண நூலின் வழி நூலாகக் கருதப்படுகிறது ?

தொல்காப்பியம்

  • நன்னூல் யாரால் இயற்றப்பட்டது ?

பவணந்தி முனிவர்

  1. நன்னூலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

இரண்டு :எழுத்து, சொல்

  1. “யானோ அரசன் யானே கள்வன்” எனக் கூறி உயிரைவிட்ட மன்னன் யார் ?

 பாண்டிய நெடுஞ்செழியன்

  1. “நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பீங்கில்லை” எனக் கூறும் நூல் எது ?

சிலப்பதிகாரம்

  1. மணிமேகலையை பின்தொடர்ந்த உதயகுமாரன் யாரால் கொல்லப்படுகின்றார்?

காயசண்டிகையின் கணவன் காஞ்சனன்

  1. “மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” எனக் கூறும் நூல் எது?

மணிபல்லவமடைந்த காதை, மணிமேகலை

  1. தமிழில் விருத்தப்பாவில் தோன்றிய முதல் காப்பியம்?

சீவக சிந்தாமணி

  1. சீவக சிந்தாமணி எந்த சமய கருத்துக்களை தொகுத்து கூறுகிறது ?

சமண சமயம்

  1. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

திருத்தக்கதேவர்

  1. சோழப் பேரரசு எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றிய காப்பியம் எது?

 கம்பராமாயணம்

  1. நீதி வழங்குவதற்கான அறங்கூறு அவையம் இருந்ததைப் பற்றி கூறும் இலக்கியங்கள் எது?

 பத்துப்பாட்டு,மதுரைக் காஞ்சி

  1. “அறன்நிலை திரியா அன்பின் அவையம் ” எனக் கூறும் நூல் எது?

 புறநானூறு

  1. “மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியா தாங்கு” எனக் கூறும் நூல் எது?

நற்றிணை

  1. “அறங்கெழு நல்லவை” எனக் கூறும் நூல் எது?

அகநானூறு

  1. “முறையுடை அரசன் செங்கோல் அவையத்து ” எனக் கூறும் நூல் எது?

 குறுந்தொகை

  1. “அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையம் ” எனக் கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்


11TH ETHICS STUDY NOTES |தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  11TH ETHICS STUDY NOTES |தமிழர் கலைகள்| TNPSC GROUP EXAMS

 

 

Leave a Comment

error: