TNPSC UNIT 8 ONELINER NOTES -13| எட்டுத்தொகை புலவர்கள்

 


  1. மொத்த சங்கப்பாடல்கள் (எட்டுத்தொகை)எண்ணிக்கை எவ்வளவு?

2381

  1. சங்க பாடல்களில் (எட்டுத்தொகை)ஆசிரியர் பெயர் தெரியாதவைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

102

  1. சங்க பாடல்களில்(எட்டுத்தொகை) அகப்பாடல்கள் எத்தனை?

1861

  1. சங்க இலக்கியத்துள்(எட்டுத்தொகையுள்) அகப்பாடல்களில் எந்த திணை பாடல்களே மிகுதியாக உள்ளது?

பாலைத்திணை

  1. சங்கப் பாடல்கள் (எட்டுத்தொகை) பாடிய மொத்த புலவர்கள்?

 473 பேர்

  1. சங்க பாடல்கள்(எட்டுத்தொகை) பாடிய புலவர்களில் பெண்பாற்புலவர்கள் எத்தனை பேர்?

30 பர்

(ஒளவையார், வெள்ளிவீதியார், காக்கைபாடினியார் நற்செள்ளையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், இளவெயினி, நாகையார் போன்றோர் சிலர்)

  1. சங்க பாடல்களில்(எட்டுத்தொகை) அரச குடும்பத்தினர் பாடியவை எத்தனை?

31 (கோப்பெருஞ்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், அறிவுடை நம்பி, கோப்பெரும்பெண்டு, கணைக்கால் இரும்பொறை அவருள் சிலர்)

  1. எட்டுத்தொகையுள் நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்கள் எத்தனை புலவர்கள்?

ஐந்து பேர்

 

  1. சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) கபிலர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?

235 பாடல்கள்

  1. சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) அம்மூவனார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?

127 பாடல்கள்

  1. சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) ஓரம்போகியார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?

110 பாடல்கள்

  1. சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) ஓதலாந்தையார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?

107 பாடல்கள்

  1. சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை) பேயனார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை?

105 பாடல்கள்

  1. கபிலர் எங்கு பிறந்தார்?

பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர்

  1. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?

திருவாதவூர்

  1. கபிலர் எந்த குலத்தைச் சேர்ந்தவர்?

அந்தணர்

  1. கபிலர் எதைப் பாடுவதில் சிளந்தவர்?

குறிஞ்சிபாடுவதில் வல்லவர்

  1. ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?

நப்பசலையார்

 

  1. “பொய்யா நாவிற் கபிலன்”- என்று கபிலரைப் பாடியவர் யார்?

நப்பசலையார்

  1. ‘நல்லிசை வாய்மொழிக் கபிலன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?

நக்கீரர்

  1. ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?

 இளங்கீரனார்

  1. ‘வயங்கு செந்நாவின்… கபிலன்’ என்று கபிலரைப் பாடியவர் யார்?

 பெருங்குன்றூர்கிழார்

  1. கபிலரின் நண்பர்கள்?

பரணர், இடைக்காடர், பாரிவள்ளல் .

  1. கபிலர் யாருடைய அவைக்களப் புலவராகவும் இருந்தவர்?

பாரி வள்ளல்

  1. கிளிக் கூட்டங்களைப் பழக்கி நெற்கதிர்களைக் கொண்டுவரச் செய்து பஞ்சம் தீர்த்தவர் யார்?

கபிலர்

  1. பாரிமகளிரை அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை மணந்து கொள்ள வேண்டியவர் யார்?

கபிலர்

  1. பாரியின் மகளிரைப் பார்ப்பாரிடம் அடைக்கலம் கொடுத்தவர் யார்?

கபிலர்

  1. கண்ணகியின் பொருட்டுப் பேகனைப் பாடியவர் யார்?

கபிலர்

  1. வடக்கிருந்து உயிர் விட்டவர் யார்?

கபிலர்

  1. கபிலர் பாடிய பாடல்கள் எதில் உள்ளன?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -26|சங்க மருவிய கால இலக்கியங்கள் அறிமுகம்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்ற மூன்றிலும் இவரது பாடல்கள் உள்ளன.

  1. இலக்கிய வரலாற்றில் எத்தனை கபிலர்கள் உள்ளனர்?

ஐந்து

  1. பாரியைப் பாடிய சங்ககால கபிலர்.
  2. பதினெண்கீழ்க் கணக்கில் இன்னாநாற்பது என்ற நூலைப்பாடிய கபிலர்.
  3. பதினோராம் திரு முறையில் இரட்டைமணி மாலை, திருவந்தாதி பாடிய பக்தி இயக்கக் காலக் கபிலர்.
  4. பன்னிருபாட்டியல் என்ற பாட்டியல் நூலில் சில நூற்பாக்களை இயற்றிய பிற்காலக் கபிலர்.
  5. கபிலர் அகவல் என்ற தத்துவ நூலின் ஆசிரியரான கபிலர்.
  6. ஊர்ப்பெயரும் மரபுப்பெயரும் சேர்ந்து பெயர் பெற்றவர் யார்?

கோவூர் கிழார்

  1. உறையூர்ச் சோழருக்கும் (நெடுங்கிள்ளி) புகார்ச் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத் தூது சென்றவர்?

கோவூர் கிழார்

  1. நெடுங்கிள்ளியின் தம்பி யார்?

நலங்கிள்ளி

  1. அரசுரிமைப் போரில் தோற்றுக் கதவடைத்தவன் யார்?

நெடுங்கிள்ளி

  1. முற்றுகையிட்டிருந்தவன் யார்?

நலங்கிள்ளி

  1. ‘அறமாயின் திறக்க, மறமாயின் அமர்புரிக, இருவரும் வேறல் இயற்கையும் அன்று, தோற்பது நும் குடி’ நெடுங்கிள்ளியிடம் கூறிப் போரை நிறுத்தியவர் யார்?

கோவூர் கிழார்

  1. நெடுங்கிள்ளி எந்தப் புலவரை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முனைய அப்புலவரைக் கோவூர் கிழார் காப்பாற்றினார்?

இளந்தத்தனார்

  1. மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளைக் கிள்ளி வளவன் யானைக்காலில் இட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தியவர் யார்?

கோவூர் கிழார்

  1. சோறும் நீரும் இரு மருந்து என்று பாடியவர் யார்?

கோவூர் கிழார்

  1. வண்டினை அறுகாற்பறவை என்று பாடியவர் யார்?

கோவூர் கிழார்

  1. ‘ஈன்று புரந்தருதல் என்தலைக் கடனே’ என்று கடமைகளைப்ப பாடியவர் யார்?

பொன்முடியார்

  1. வரலாற்றுச் செய்திகளை மிகுதியாகப் பாடியவர் யார்?

பரணர்

  1. கொல்லிப்பாவை, அழிசியின் வரலாறு, பெண்கொலை புரிந்த நன்னன், அதியமான் கோவலூரை வென்றது போன்ற செய்திகளைப் பாடியவர்‌ யார்?

பரணர்

  1. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தில் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடி உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர் யார்?

பரணர்

  1. ஒளவை என்பதற்குத் என்ன பொருள்?

தாய் 

  1. ஔவையார் எந்த குடியில் பிறந்தவர்?

பாண்குடி

  1. ஔவையார் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?

59

  1. அதியமானின் அவைக்களப் புலவர் / நண்பராக இருந்தவர் யார்?

ஔவையார்

  1. அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர்?

ஔவையார்

  1. “இவ்வே பீலி அணிந்து” என்ற பாடலை பாடியவர் யார்?

ஔவையார்

  1. “சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே பெரியகட் பெறினே

யாம்பாடத் தாம் மகிழந்து உண்ணும் மன்னே” என்ற பாடலை அதியமான் இறந்தபோது பாடியவர்‌ யார்?

ஔவையார்

  1. அதியமானின் மகன் யார்?
SEE ALSO  10TH ECONOMICS STUDY NOTES |அரசாங்கமும் வரிகளும்| TNPSC GROUP EXAMS

பொகுட்டெழினி

  1. பொகுட்டெழினியைப்பாடியவர் யார்?

ஔவையார்

  1. சோழன் பெருநற்கிள்ளி, சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் சேர்ந்திருந்த காட்சியைப் பாடியவர் யார்?

ஔவையார்

 

  1. ‘நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும’

என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை வாழ்த்தியவர்?

ஔவையார்

  1. “அணுவைத் துளைத்து எழுகடலை உட்புகுத்திக்

குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் ?

பிற்கால ஒளவையார்.

  1. பாரியின் மக்களான அங்கவை, சங்கவை என்ற இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தவர்?

ஔவையார்

  1. இலக்கிய வரலாற்றில் எத்தனை ஔவையார்கள் உள்ளனர்?

ஐந்து

  1. சுட்டகனி வேண்டுமா, சுடாத கனி வேண்டுமா, என்று முருகன் கேட்ட புராண ஒளவையார்
  2. அதியமானைப் பாடிய புறநானூற்று ஒளவையார்
  3. ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சிறுவர் நீதி நூல்களைப் பாடிய சோழர்கால ஔவையார்
  4. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடல்களைப் பாடிய இடைக்கால ஔவையார்.
  5. விநாயகர் அகவல், ஞானக்குறள் பாடிய பிற்கால ஔவையார்
  6. தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம் என்று பாடியவர் ?

தனிப்பாடல் திரட்டு ஒளவையார்.

  1. மலைநாடு வேழம் உடைத்து

சோழ வளநாடு சோறுடைத்து

பாண்டி நாடு முத்துடைத்து

தொண்டைநாடு சான்றோர் உடைத்து”-என்பது? ஔவை வாக்கு

  1. பிசிராந்தையார் எந்த நாட்டுப் புலவர்?

பாண்டி

  1. பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சிறுகச்சிறுக வரி வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் யார்?

பிசிராந்தையார்

  1. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் நிலவரியை நீக்கப் பாடியவர் யார்?

 வெள்ளைக்குடி நாகனார்

  1. தலைமுடி நரைக்காமலிக்கக் காரணம் சொன்னவர் யார்?

கோப்பெருஞ் சோழனின் நண்பர்

  1. காணாமலே நட்புக் கொண்டவர்கள் யார்?

கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருந்து உயிர்விட்டவர்.


TNPSC UNIT 8 ONELINER NOTES -13| எட்டுத்தொகை புலவர்கள்

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  9TH ECONOMICS STUDY NOTES |இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு| TNPSC GROUP EXAMS

 

 

 

Leave a Comment

error: