TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை யாருக்கு உரியது?
பாண்டியர்
- “சகரக் கிளவியும் அவற்றோ டற்றே
அஐஒன என்னும் மூன்றலங் கடையே“-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம்
- சங்கம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
- சங்கம் பற்றிய குறிப்பு முதல் முதலில் எந்த நூலில் வருகிறது.?
கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தேவாரம்
- முதல் தமிழ் சங்கம் நிறுவிய இடம் எது?
தென்மதுரை
- முதல் தமிழ் சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
பஃறுளி ஆற்றங்கரை
- இடைச்சங்கம் நிறுவிய இடம் எது?
கபாடபுரம்
- இடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
குமரியாற்றங்கரை
- கடைச்சங்கம் நிறுவிய இடம் எது?
இன்றைய மதுரை
- கடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
வையை ஆற்றங்கரை
- முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
4440 ஆண்டுகள்
- இடைசங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
3700 ஆண்டுகள்
- கடைச்சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
1850 ஆண்டுகள்
- முதல் சங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்.
- இடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்
- கடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர்
- முதல் சங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
7 பேர்
- இடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
5 பேர்
- கடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
3 பேர்
- முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
549 பேர்
- இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
59 பேர்
- கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
49 பேர்
- முதல் சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
4449 பேர்
- இடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
3700 பேர்
- கடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
449 பேர்
- முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த வேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன்
- இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோன், கீரந்தை
- கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
- முதல் சங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
பெரும் பரிபாடல், முதுநாரை, முது குருகு, களரியா விரை, அகத்தியம்
-
- இடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநூல் விளக்கம்
- கடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி, பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை
- முதல் சங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
அகத்தியம்
- இடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
அகத்தியம், தொல்காப்பியம்
- கடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
அகத்தியம், தொல்காப்பியம்
- திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், ஆலவாய் பெருமான் என அழைக்கப்படுபவர் யார் ?
சிவன்.
- குன்று எறிந்த வேள் என அழைக்கப்படுபவர் யார் ?
முருகன்.
- துவரைக் கோமான் என அழைக்கப்படுபவர் யார் ?
கண்ணன்.
- நிதியின் கிழவன் என அழைக்கப்படுபவர் யார் ?
குபேரன்.
- மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள் எண்ணிக்கை ?
197 பேர்
- மூன்று சங்கங்கள் இருந்த மொத்த காலம் எவ்வளவு?
9990 ஆண்டுகள்
- மூன்று சங்கங்களில் இருந்த மொத்த புலவர்கள் எவ்வளவு?
8598 பேர்
- இடை, கடைச் சங்கத்திற்கு உரிய மன்னன் யார் ?
முடத்திருமாறன்
- முச்சங்கத்திற்கும் உரிய நூல் எது?
அகத்தியம்
- முத்தமிழ் இலக்கண நூல் எது?
அகத்தியம்
- இயற்றமிழ் இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
- இசைத்தமிழ் இலக்கண நூல் எது?
முது நாரை
- நாடகத்தமிழ் இலக்கண நூல் எது?
இந்திரகாளியம், பஞ்சமரபு
- புலவர் தலைவர் யார் ?
அகத்தியர்
- அகத்தியர் மாணவர்கள் எத்தனை பேர்?
12 பேர்
- அகத்தியர் மாணவர்களுள் சிலரை குறிப்பிடுக ?
தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார், காக்கை பாடினியார், நத்தத்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
- அகத்திய மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் எது?
பன்னிரு படலம்
- பன்னிரு படலம் நூல் எந்தத் திணை சார்ந்த நூல் ?
புற நூல்
- அகத்தியம் என்ற நூலை இயற்றியவர் ?
அகத்தியர்
- அகத்தியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது?
12000
- அகத்தியம் 12000 நூற்பாக்களில் தற்போது எத்தனை நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன?
103 நூற்பாக்கள்
- அகத்தியம் எத்தனை பகுதிகளை உடையது?
12 பகுதிகளை உடையது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், ஜோதிடவியல், கந்தர்வம், கூத்து.
- “நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம்-பாயிரம்
- “தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
மதுரைக்காஞ்சி
- “தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுவின் மதுரை”– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிறுபாணாற்றுப்படை
- “இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநானூறு
- “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலை இய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநானூறு
- “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
- “புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
- “தென் தமிழ் நன் நாட்டுத் தீதுதீர் மதுரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
- “தென் தமிழ் மதுரை” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
மணிமேகலை
- “நில நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும்
பொழுதன்றோ” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை
- “செதுமொழி சீத்த செவி செறுவாக,
முதுமொழி நீராப், புலன் நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை”- – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை
- “ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்
பாடுதமிழ் வளர்த்த கூடல்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
புறத்திரட்டு – ஆசிரியமாலை
- “உறைவான் உயர்மதிற் கடலில் ஆய்ந்த ஒண் தமிழன்
துறைவாய் நுழைந்தனையோ”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருவாசகம்
- “புகலி ஞான சம்பந்தன் உரைசெய் சங்கமலி செந்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சம்பந்தர் தேவாரம்
- “சங்கமலித் தமிழ், சங்க முகத்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி
- “வீயாத் தமிழ் உடையான், பல்வேறு கடற்றானைப் பாண்டியன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
பெரிய புராணம்
- “தலைச்சங்கப் புலவனார்தம் முன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
பெரிய புராணம்
- “செந்தமிழ் நாட்டகன் பொதியிற்
திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பரேல்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
கம்பராமாயணம்
- ’சங்கத் தமிழ் மூன்றும் தா’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
ஔவையார் தனிப்பாடல்
- ’மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தோடு பட்ட சான்றோர்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம் பேராசிரியர் உரை
- ‘’சோமன் வழிவந்த பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரை மேற்கோள்
- சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டார் யார்?
தாலமி, பிளினி, பெரிப்ளுஸ்
- சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டு நூல்கள்?
மகாவம்சம், ராஜாவளி, ராஜரத்னாகிரி
- சங்கம் பற்றிக் கூறும் சாசனம் செப்பேடு/ பட்டயம் எது?
சின்னமனூர் செப்பேடு
- சின்னமனூர் செப்பேடு காலம் என்ன ?
10 நூற்றாண்டு
- ‘“மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம்
வைத்தும்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது எது?
சின்னமனூர் செப்பேடு
- மூன்று தமிழ் சங்கத்தையும் மறுத்தவர்கள் யார் ?
பி.டி. சீனிவாச ஐயங்கார்,கே.என்,சிவராஜ பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார்
- மூன்று தமிழ் சங்கத்தில் ஒரு சங்கத்தை மட்டும் ஏற்றவர்கள்?
டி.ஆர்.சேஷகிரி சாஸ்திரி,கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை,வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர்
- முச்சங்கங்களையும் ஏற்றவர்கள் யார்?
உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா. அப்பாதுரை, தேவநேயப்பாவாணர்
TNPSC UNIT 8 ONELINER NOTES -02| மூன்று தமிழ் சங்கம்
Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services