9TH GEOGRAPHY STUDY NOTES |மனிதனும் சுற்றுச்சூழலும்| TNPSC GROUP EXAMS

 


  1. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது என்ன?

சுற்றுச்சூழல்

  1. மனிதன் தொன்று தொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 சூழல்

  1. சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

என்விரோன்(environ)  என்ற பிரெஞ்சு சொல்

  1. என்விரோன்(environ)  என்ற பிரெஞ்சு சொல்லின் பொருள் என்ன ?

சுற்றுப்புறம்

  1. எந்த மாநாட்டில் மனிதன் “சுற்று சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்” என அறிவிக்கப்பட்டது?

ஸ்டாக்ஹோம் மாநாடு

  1. ஸ்டாக்ஹோம் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

1972

  1. எந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது ?

 1992

  1. UNCEDன் விரிவாக்கம் என்ன?

 United Nations conference on environment and development

  1. சுற்றுச்சூழலின் வகைப்பாடு என்னென்ன?

 இயற்கை சுற்றுச்சூழல், மனித சுற்றுச்சூழல் ,மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்

  1. சுற்றுச்சூழலின் இயற்கை கூறுகளான நிலக்கோளம் நீர் கோளம் ,வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவற்றைப் பற்றி விளக்குவது?

 இயற்கை சுற்றுச்சூழல்

  1. ஒரு மனிதன் அவனது குடும்பம் ,தொழில் மற்றும் சமூகம், கல்வி ,மதம் பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றோடு கொண்டுள்ள தொடர்புகளை விளக்குவது ?

மனித சுற்றுச்சூழல்

  1. மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தன் வாழ்க்கையை ஏதுவானதாக எளிதானதாகவும் அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது?

மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்

  1. மக்கள் தொகை  (populous)என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

 இலத்தீன் (பொருள்- மக்கள்)

  1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 மக்கள் தொகை

  1. (Demography) மக்கள் தொகையியல் என்பது எந்த மொழிச்சொல்?

 கிரேக்கம் (Demos – மக்கள், Graphs- கணக்கிடுதல்)

  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

 மக்கள்தொகை வளர்ச்சி

  1. பிறப்பு விகிதத்திற்க்கும் இறப்பு விதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும் ?

மக்கள்தொகை வளர்ச்சி

  1. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது எங்கு நடந்தது ?

 பாபிலோன் கிமு 3800

  1. நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு எது ?

 டென்மார்க்

  1. இந்தியாவில் முதன்முதலில் எந்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?

 கிபி 1872

  1. இந்தியாவில் எந்த ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது ?

1881

  1. மக்கள் தொகை வளர்ச்சியை குறைக்கும் காரணிகள் என்னென்ன?

பஞ்சம் ,நிலச்சரிவு ,பூமியதிர்ச்சி, ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகளான போர் போன்றவைகள்

  1. மக்களின் எண்ணிக்கை ஓரிடத்தில் வளர்ச்சி அதிகரிப்பு அல்லது குறைவது என்பது என்ன?

 மக்கள் தொகையில் மாற்றம்

  1. எதன் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது ?

பிறப்பு மற்றும் குடியிறக்கம் (IMIGIRATION)

  1. எதன் காரணமாக மக்கள் தொகை குறைகிறது?

 இறப்பு மற்றும் குடியேற்றம் (emigration)

  1. புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவி காணப்படுகிறார்கள் என்பதை பற்றி குறிப்பிடுவது எது?

மக்கள்தொகை பரவல்

  1. மக்கள் தொகை பரவலை பாதிக்கும் காரணிகள் என்னென்ன?

 இயற்கை காரணிகள், வரலாற்று காரணிகள் ,பொருளாதார காரணிகள்

  1. மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் என்னென்ன ?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | சமூக நீதி | TNPSC GROUP EXAMS

 வெப்பநிலை ,மழை ,மண் ,நிலத்தோற்றம் ,நீர் ,இயற்கை தாவரங்கள் ,கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு

  1. மக்கள் தொகை பரவலை பாதிக்கும் வரலாற்று காரணிகள் என்ன?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரீகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள்

  1. பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிளேக் என்ற கொள்ளை நோயினால் எத்தனை சதவீத மக்கள் இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது ?

30 முதல் 60 சதவீத மக்கள்

  1. மக்கள்தொகை பரவலை பாதிக்கும் பொருளாதார காரணிகள் என்னென்ன?

கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தி தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள் ,வியாபாரம் ,வணிகம் மற்றும் பிற வசதிகள்

  1. உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜூலை 11

  1. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட அமைப்பு உலக மக்கள் தொகை தினத்தை எந்த ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது? 

1989

  1. ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மக்களடர்த்தி

  1. மிகப் பரந்த நிலப்பரப்பில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?

குறைந்த மக்கள் அடர்த்தி

  1. குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

 அதிக மக்கள் அடர்த்தி

  1. உலக மக்கள் அடர்த்தி எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?

 3 : அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் ,மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள், குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்

  1. ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் எவ்வளவு மக்கள் வாழ்வதை அதிக மக்கள் அடர்த்தி பகுதி என அழைக்கப்படுகிறது?

50க்கும் மேற்பட்ட மக்கள்

  1. அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் எவை?

கிழக்கு ஆசியா ,தெற்கு ஆசியா ,வட மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி

  1. ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் எவ்வளவு மக்கள் வாழ்வதை மிதமான மக்கள் அடர்த்தி பகுதி என அழைக்கப்படுகிறது?

 10ல் இருந்து 50  பேர்

  1. மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள் எவை?

 மிதவெப்ப மண்டல பகுதியில் உள்ள அங்கோலா, காங்கோ, நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியா

  1. ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் எவ்வளவு மக்கள் வாழ்வதை குறைந்த மக்கள் அடர்த்தி பகுதி என அழைக்கப்படுகிறது?

10க்கும் குறைவான மக்கள்

  1. குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள் எவை?

 மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா ,வடக்கு ரஷ்யா மற்றும் கனடா

  1. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் ஐந்து மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டங்கள் என்னென்ன ?

சென்னை ,காஞ்சிபுரம், வேலூர் ,திருவள்ளூர் ,சேலம்

  1. எந்த ஆண்டு இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது?

  1952

  1. மக்கள் தொகை கொள்கையை  முதன் முதலில் அறிவித்த நாடு எது?

இந்தியா

  1. மக்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ஓரிடத்தில் தங்கி வேலை செய்து ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு பெயர் என்ன?

குடியிருப்பு

  1. குடியிருப்புகள் அங்கு நடைபெறும் பணிகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

கிராமம் மற்றும் நகரம்

  1. முதன்மை தொழில்களான வேளாண்மை, வனத்தொழில் ,கனிம தொழில் மற்றும் மீன் பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

கிராம குடியிருப்புகள்

  1. உலகின் பெரும்பாலான குடியிருப்புகள் எந்த வகையைச் சார்ந்தது?
SEE ALSO  8TH POLITY STUDY NOTES |நீதித்துறை| TNPSC GROUP EXAMS

கிராம குடியிருப்புகள்

  1. கிராம குடியிருப்பு வகைகள் என்னென்ன?

 செவ்வக வடிவ குடியிருப்புகள் ,நேர்கோட்டு குடியிருப்புகள், வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள், நட்சத்திர வடிவ குடியிருப்புகள், முக்கோண வடிவ குடியிருப்புகள்,Tவடிவ , Y வடிவ ,சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவக் குடியிருப்புகள்,மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்

  1. சமவெளிப் பகுதிகளிலும் ,பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்பு வகை எது?

செவ்வக வடிவ குடியிருப்பு

  1. சாலை, தொடர்வண்டிப் பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படும் குடியிருப்பு வகை ?

நேர்கோட்டு குடியிருப்புகள்

  1. ஏரிகள் ,குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை சுற்றி வட்டமாக அல்லது அரைவட்டமாக காணப்படும் குடியிருப்பு வகை எது ?

வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரை வட்ட வடிவ குடியிருப்பு

  1. ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் ?

 முக்கோண வடிவ குடியிருப்புகள்

  1. மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள்?

Tவடிவ குடியிருப்புகள்

  1. இரண்டு சாலைகள் மூன்றாவது சாலையுடன் சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்பு?

 Y வடிவ குடியிருப்பு

  1. நகரமயமாதலின் முக்கிய காரணிகள் என்னென்ன?

வேலை வாய்ப்பு வசதிகள் ,வியாபாரம் செய்வதற்கான ஆரோக்கியமான சூழல் ,கல்வி வசதி மற்றும் போக்குவரத்து

  1. நகர்ப்பகுதிகள் அதன் பரப்பு கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

நகரம்,பெருநகரம், மாநகரம், மீப்பெருநகரம் ,நகரங்களின் தொகுதி

  1. ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்டிருக்கும் மற்றும் கிராமத்தை விட பெரியதாகவும், பெரு நகரத்தை விட சிறியதாக இருப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

நகரம்

  1. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருப்பது எவ்வாறு அழைக்கப்படும்? 

பெருநகரம்

  1. 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையை கொண்டிருப்பது எவ்வாறு் அழைக்கப்படும் ?

மாநகரம்

  1. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டிருப்பது எவ்வாறு அழைக்கப்படும் ? 

மீப்பெருநகரம்

  1. பல நகரங்களையும் ,பெரு நகரங்களையும், பிற நகர்ப்புறப் பகுதிகளையும் கொண்டிருப்பது எவ்வாறு அழைக்கப்படும் ?

நகரங்களின் பகுதி (Conurbation)

  1. உலகின் மிகப் பழமையான மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் நகரம் எது ?

 டமாஸ்கஸ்

  1. டமாஸ்கஸில் மக்கள் எப்போதிலிருந்து வாழ்ந்து வருகின்றனர்?

11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து

  1. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது ?

 டோக்கியோ

  1. டோக்கியோ நகரம் எவ்வளவு மக்கள் தொகை கொண்டது?

38 மில்லியன்

  1. புவியில் இருந்து மூலப் பொருட்களை பெறும் தொழில் எவ்வாறு அழைக்கப்படும்?

 முதல் நிலை தொழில்கள்

  1. முதல்நிலை தொழில்கள் என்னென்ன?

உணவு சேகரித்தல் ,வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ,கால்நடைகளை மேய்த்தல் ,கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவை

  1. மூலப் பொருட்களை முடிவுற்ற பொருளாக மாற்றும் தொழில் எது?

 இரண்டாம் நிலை தொழில்கள்

  1. இரண்டாம் நிலை தொழில்கள் என்னென்ன?

  இரும்பு ,எக்கு ,தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள்

  1. எந்த நிலை தொழில்கள் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை, மாறாக உற்பத்தி செயலுக்கு துணைபுரிகின்றன?

 மூன்றாம் நிலை தொழில்கள்

  1. மூன்றாம் நிலை தொழில்கள் என்னென்ன?

போக்குவரத்து ,தகவல் தொடர்பு, வங்கிகள் மற்றும் சேமிப்பு கிடங்கு வணிகம்

  1. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ,அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகள், என்ன நிலை தொழில்கள் என அழைக்கப்படுகிறது?

 நான்காம் நிலை தொழில்கள்

  1. நான்காம் நிலை தொழில்கள் என்னென்ன?
SEE ALSO  9TH GEOGRAPHY STUDY NOTES |உயிர்க்கோளம்| TNPSC GROUP EXAMS

ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சார்ந்த சேவைகள்

  1. உருவாக்குதல், மறுகட்டமைப்பு செய்தல் பயன்பாட்டில் உள்ள பழைய கருத்துக்கள் மற்றும் புதிய கருத்துக்கள் விவரணம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை உள்ளடக்கியது என்ன நிலை தொழில்கள்?

ஐந்தாம் நிலை தொழில்கள்

  1. ஐந்தாம் நிலை தொழில்கள் என்னென்ன ?

வணிக அமைப்புகளின் தலைமை அதிகாரிகள், அறிவியலறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளில் முடிவு எடுப்பவர்கள்

  1. உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு எந்த ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் கூட்டப்பட்டது?

 1992

  1. எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு பெயர் என்ன?

  வளம் குன்றா வளர்ச்சி

  1. எந்த ஆண்டு பிரண்டலேண்ட் குழு வளங்குன்றா வளர்ச்சி என்ற சொல்லுக்கான விளக்கத்தை அளித்தது?

 1987

  1. வளம் குன்றா வளர்ச்சி அடைவதற்கு என்ன மூன்று முக்கியமான அடிப்படை காரணிகளை ஒன்றிணைப்பது அவசியமாகும்?

பொருளாதார வளர்ச்சி, சமுதாயக் கூறுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு


9TH GEOGRAPHY STUDY NOTES |மனிதனும் சுற்றுச்சூழலும்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: