- சங்கம் எனும் சொல் எதனைக் குறிக்கிறது?
மதுரை பாண்டிய அரசர்களின் காலத்தில் தமிழ் புலவர்களின் குழுமம்
- பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களை பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு பதிப்பித்து வெளியிட்டவர்கள் யார்?
ஆறுமுக நாவலர்(யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை(யாழ்ப்பாணம்), உ வே சாமிநாத ஐயர் போன்றவர்கள்
- ஹத்திக்கும்பா கல்வெட்டு யாருடையது ?
கலிங்க நாட்டு அரசன் காரவேலன்
- சங்க காலம் என அழைக்கப்படும் கால அளவு என்ன?
கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
- சங்ககாலம் எந்த காலகட்டத்தை சார்ந்தது?
இரும்புக் காலம்
- சங்க காலம் என்பது எந்த பண்பாட்டு காலத்தைச் சார்ந்தது?
பெருங்கற்காலப் பண்பாடு
- தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனும் கருத்தை கொண்டுள்ளவர் யார்?
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
- எந்த சேர அரசன் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார்?
சேரன் செங்குட்டுவன்
- எந்த அரசர் பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தார்?
சேரன் செங்குட்டுவன்
- சேர பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்த சோழ மன்னர் யார் ?
கரிகால சோழன்
- கரிகால சோழனால் காவிரியின் குறுக்கே கற்களால் கட்டப்பட்ட அணை எது?
கல்லணை
- எந்த பாண்டிய அரசர் தலையாலங்கானம் எனுமிடத்தில் சேரர், சோழர் 5 வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தார் ?
நெடுஞ்செழியன்
- எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றது?
பதிற்றுப்பத்து
- எந்தப் பதினெண்கீழ்க்கணக்கு நூல் கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றி விரிவான செய்திகளை வழங்குகின்றது ?
பட்டினப்பாலை
- கொற்கையின் தலைவன் என போற்றப்படுபவர் யார் ?
நெடுஞ்செழியன்
- பாண்டிய அரசர்களின் நாணயங்களில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?
ஒருபுறம் யானையின் வடிவம் மற்றொருபுறம் மீனின் உருவம்
- எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார் ?
முதுகுடுமிப் பெருவழுதி
- சேர அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன?
ஆதவன் ,குட்டுவன் ,வானவன் இரும்பொறை
- சோழ அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன?
சென்னி ,செம்பியன் ,கிள்ளி, வளவன்
- பாண்டிய அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன?
மாறன்,வழுதி ,செழியன், தென்னர்
- அரசு அதிகாரத்தின் சின்னங்களாக கருதப்பட்டவை எவை?
செங்கோல் ,முரசு ,வெண்கொற்றக்குடை ஆகியவை
- சேரர்கள் என்ன மாலையை அணிந்தனர்?
பனம்பூமாலை
- சேரர்களின் துறைமுகம் எது ?
முசிறி அல்லது தொண்டி
- சேரர்களின் தலைநகரம் எது ?
கரூர்/வஞ்சி
- சேரர்களின் சின்னம்?
வில் அம்பு
- சோழர்கள் என்ன மாலையை அணிந்தனர் ?
அத்திப் பூ மாலை
- சோழர்களின் துறைமுக நகரம் ?
புகார்
- சோழர்களின் தலைநகர் ?
உறையூர் அல்லது புகார்
- சோழர்களின் சின்னம்?
புலி
- பாண்டியர்கள் என்ன மாலையை அணிந்தனர் ?
வேப்பம்பூ மாலை
- பாண்டியர்களின் துறைமுக நகரம்?
கொற்கை
- பாண்டியர்களின் தலைநகரம் ?
மதுரை
- பாண்டியர்களின் சின்னம் ?
இரண்டு மீன்கள்
- ஆய் என்னும் பெயர் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?
பழந்தமிழ் சொல்லான ஆயர் (பொருள்- ஆநிரை மேய்ப்போர்)
- சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள் என்னென்ன?
அந்திரன், திதியன் ,நன்னன்
- கடை ஏழு வள்ளல்கள் என அழைக்கப்படுபவர்கள் யார் ?
பாரி, காரி, ஓரி, பேகன், ஆய் ,அதியமான், நள்ளி
- கிழார் என்பவர் யார்?
கிராமத்தலைவர்
- அரசர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
‘கோன்’ எனும் சொல்லின் சுருக்கமான கோ,வேந்தன்,மன்னன், கொற்றவன், இறைவன்
- அரசருக்கு பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது ?
முடிசூட்டுவிழா அல்லது அரசு கட்டிலேறுதல்
- இளவரசர் எவ்வாறு அழைக்கப்படுவார் ?
கோமகன்
- இளவரசருக்கு இளையோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
இளங்கோ ,இளஞ்செழியன் ,இளஞ்சேரல்
- நிலவரி மூலம் பெறப்பட்ட வரிகள் /வருமானம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
இறை
- அரசருடைய சபை எவ்வாறு அழைக்கப்பட்டது?
அரசவை
- அரசர்களின் ஐந்து வித கடமைகளை என்னென்ன?
கல்வி கற்பதை ஊக்குவிப்பது ,சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களை பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது
- அரசர்களுக்கு உதவிசெய்யும் குழுக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன?
ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்
- அரசருடைய படை எத்தனை பிரிவுகளைக் கொண்டிருந்தது ?
காலாட்படை ,குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை
- படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
தானைத் தலைவன்
- சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவதற்கு பெயரென்ன?
தோமாரம்(எறியீட்டி)
- ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
படைக் கொட்டில்
- தலைநகரில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அவை
- கிராமங்களில் தீர்ப்பு வழங்கப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
மன்றங்கள்
- ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
மண்டலம்
- நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
மண்டலம் ,நாடு, கூற்றம், ஊர்,பேரூர்,சிற்றூர்,மூதூர்
- கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர்?
பட்டினம்
- துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல் எது?
புகார்
- சங்க காலத்தில் நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தது?
ஐந்து திணைகள்
- மருத நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மென்புலம் (நன்செய்)
- நெய்தல்திணை தவிர மற்றவை எவ்வாறு அழைக்கப்பட்டன ?
வன்புலம் (புன்செய்)
- மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
குறிஞ்சித்திணை
- குறிஞ்சி திணையின் தொழிலென்ன?
வேட்டையாடுதல் /சேகரித்தல்
- குறிஞ்சித் திணையின் மக்கள் யார் ?
குறவர் குறத்தியர்
- குறிஞ்சித் திணையின் கடவுள் யார்?
முருகன்
- காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
முல்லை திணை
- முல்லைத் திணையின் தொழில் என்ன?
ஆநிரை மேய்த்தல்
- முல்லைத் திணையின் மக்கள் யார்?
ஆயர் ஆய்ச்சியர்
- முல்லைத்திணையின் கடவுள் யார் ?
மாயோன்
- வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
மருதத்திணை
- மருதத் திணையின் தொழில் என்ன ?
வேளாண்மை
- மருதத் திணையின் மக்கள் யார் ?
உழவன் உழத்தியர்
- மருதத் திணையின் கடவுள் யார் ?
இந்திரன்
- கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?
நெய்தல் திணை
- நெய்தல் திணையின் தொழில் என்ன?
மீன்பிடித்தல் /உப்பு உற்பத்தி
- நெய்தல் திணையின் மக்கள் யார் ?
பரதவர்
- நெய்தல் திணையின் கடவுள் யார்?
வருணன்
- வறண்ட நிலம் எவ்வாறு அழைக்கப்படும்?
பாலை திணை
- பாலைத் திணையின் தொழில் என்ன?
வீரச்செயல்கள்
- பாலைத் திணையின் மக்கள் யார்?
மறவர் மறத்தியர்
- பாலைத் திணையின் கடவுள் யார் ?
கொற்றவை
- சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் வாழ்ந்து அரிய நூல்களைக் கொடுத்து சென்றுள்ளனர்?
40 பெண்புலவர்கள்
- சங்ககால பெண்பாற் புலவர்கள் யார்?
அவ்வையார் ,வெள்ளிவீதியார் ,காக்கைபாடினியார் ,ஆதிமந்தியார் ,பொன்முடியார்
- சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார்?
சேயோன் அல்லது முருகன்
- சங்ககாலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர்கள் யார்?
சிவன் ,மாயோன்(விஷ்ணு), இந்திரன், வருணன் ,கொற்றவை
- போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
வீரக்கல் அல்லது நடுகல்
- சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான துணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கலிங்கம்
- எந்த அரசன் இசையின் ஏழு சுரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்தான் (ஏழிசை வல்லான்) என அறியப்படுகிறார்?
கரிகாலன்
- பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
பாணர் ,விறலியர்
- சங்ககாலத்தில் முக்கியமான நகரங்களில் எத்தனை வகையான சந்தைகள் இருந்தன?
இரண்டு: காலை நேர சந்தையான நாளங்காடி, மாலை நேர சந்தையான அல்லங்காடி
- எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியின் உள்ளும் அடிவயிற்றிலும் எது அடைக்கப்பட்டிருந்தை கண்டனர்?
கருமிளகுக்கதிர்
- எந்த ரோமப் பேரரசர் இந்திய வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட பட்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தார்?
ஆரிலியன்
- மூத்த பிளினி எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
ரோம்நாடு
- முசிறியை ” இந்தியாவின் முதல் பேரங்காடி” என குறிப்பிட்டுள்ளவர் யார்?
இயற்கை வரலாறு எனும் நூலில் மூத்த பிளினி
- ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் எந்த கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது?
அகஸ்டஸ்
- பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தமானது அலெக்சாண்ட்ரியாவினைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு முசிறியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது இது எந்த காலத்தைச் சார்ந்தது ?
கிமு இரண்டாம் நூற்றாண்டு
6TH STD HISTORY STUDY NOTES | பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் :சங்க காலம்
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services