12TH POLITY STUDY NOTES | இந்திய அரசமைப்பு | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. ஒரு அரசமைப்பின் மிக முக்கிய செயல்பாடு என்பது எது?

அந்த அரசின் குடிமக்கள் அனைவருக்குள்ளும் அதிகபட்சமான ஒருங்கிணைப்பை அனுமதிக்கக் கூடிய அடிப்படை விதிகளை வழங்குவது

  1. அரசு அமைக்கப்பட்டு அது ஆட்சி செய்வதற்கான தேவையான விதிகளைக் கொண்ட அமைப்பிற்கு பெயரென்ன ?

அரசமைப்பு

  1. இந்திய அரசமைப்பின் எத்தனையாவது பாகம் இந்திய சமூகத்தில் பரவலாக நிலவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சட்டங்களை அரசு உருவாக்கும் வகையில் விதிகளை கொண்டுள்ளது ?

நான்காவது பாகம்

  1. மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு எவ்வாறு அழைக்கப்படும்?

மதச்சார்பு அரசு

  1. ஓர் அரசமைப்பு எவ்வாறு நடைமுறைக்கு வந்தது அது யார் உருவாக்கியது அதன் அதிகார அமைப்புகள் என்ன என்பன போன்ற தகவல்கள் என்ன பெயரால் குறிக்கப்படுகிறது?

அரசமைப்பு உருவாக்கம்

  1. இந்திய அரசமைப்பின் 42 ஆவது திருத்தச் சட்டம் அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள “இறையாண்மை கொண்ட குடியரசு” என்பதை என்னவாக விரிவுபடுத்தியது ?

இறையாண்மை, சமதர்ம, மதச் சார்பற்ற ,மக்களாட்சிக் குடியரசு 

  1. எத்தனையாவது இந்திய அரசமைப்பின் சட்டத்திருத்தம் “நாட்டின் ஒற்றுமை” என்ற சொற்றொடரை “நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு” என்று விரிவுபடுத்தியது?

42-வது சட்டத்திருத்தம்

  1. எப்போது 42-வது சட்டத்திருத்தம் & யாரால் கொண்டுவரப்பட்டது?

1976 இந்திரா காந்தி

  1. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது கூடியது?

9 டிசம்பர் 1946

  1. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணய சபை எப்போது மீண்டும் கூடியது?

14 ஆகஸ்ட் 1947

  1. அன்றைய மாகாணங்கள் சுதேச அரசுகளில் இருந்த அதன் மக்கள் தொகைக்கு ஏற்றபடி என்ன விகிதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன?

10 லட்சத்துக்கு ஒருவர்

  1. மாகாணங்களில் இருந்தும் சுதேச அரசுகளிடமிருந்தும் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ?

292 மாகாண உறுப்பினர்கள் 93 சுதேச அரசு உறுப்பினர்கள்

  1. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் எப்போது கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்?

26.11.1949

  1. அரசியல் நிர்ணய சபையின் எத்தனை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்? 

284

  1. அரசமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் எப்போது எங்கு கூடியது ?

11:00 மணி,டிசம்பர் 9 1946, புதுடில்லி, அரசமைப்பு அரங்கில்

  1. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடரின் கூட்டப் பொருள் என்ன?

தற்காலிக தலைவரை தேர்வு செய்வதாகும்

  1. டாக்டர் சச்சிதானந்த சின்காவை தற்காலிக தலைவராக பதவி ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டவர் யார் ?

ஜேபி கிருபாளினி

  1. அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் இறுதி நிகழ்வான அரசமைப்புக்கு ஒப்புதல் தருவதற்காக அரசியல் நிர்ணய சபை கூடியது

24 01 1950

  1. 9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி 1950 வரை அரசமைப்பு நிர்ணய சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு எத்தனை தொகுதிகளைக் கொண்டது?

12 தொகுதிகள்

  1. கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி,நீதித்துறை, பொதுத்தேர்வு ஆணையங்கள், நெருக்கடி கால விதிகள் , நிர்வாக விவரங்கள் ஆகியன எதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன?

இந்திய அரசாங்க சட்டம்  1935

  1. நாடாளுமன்ற அரசு,ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி ,நாடாளுமன்ற செயல்முறைகள், இடைக்காலத் தடையாணைகள் ஆகியன எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

பிரிட்டன்

  1. அடிப்படை உரிமைகள் ,நீதி சீராய்வு, குடியரசுத் தலைவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத் தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை ஆகியவை எங்கிருந்து பெறப்பட்டது?

அமெரிக்கா 

  1. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டன?

அயர்லாந்து

  1. ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி, மத்திய அரசிடம் இதர அதிகாரங்கள் ,பொதுப்பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம் , உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு முதலியன எங்கிருந்து பெறப்பட்டது?

கனடா

  1. வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் முதலியவை எங்கிருந்து பெறப்பட்டது?
SEE ALSO  6TH STD HISTORY STUDY NOTES |பண்டைய நாகரிகங்கள்

ஆஸ்திரேலியா

  1. நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு இது எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

ஜெர்மனி வெய்மர் அரசமைப்பு

  1. அடிப்படை கடமைகள் முகப்புரையில் (சமூக ,பொருளாதார ,அரசியல் ) நீதியின் மாண்புகள் அடிப்படை கடமைகள் முதலியன எங்கிருந்து பெறப்பட்டது ?

சோவியத் யூனியன்

  1. குடியரசு ,முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம் ,சகோதரத்துவம் முதலியன எங்கிருந்து பெறப்பட்டது?

பிரான்ஸ்

  1. அரசமைப்புத் திருத்தச் சட்டம் செயல் முறை, மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு முதலியன எங்கிருந்து பெறப்பட்டன?

தென் ஆப்பிரிக்கா

  1. உலகின் நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு எது?

இந்திய அரசமைப்பு

  1. இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் எத்தனையாவது சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது?

42-வது சட்டத்திருத்தம்

  1. அமைச்சரவை குழு செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதற்கு என்ன பெயர் ?

நாடாளுமன்ற ஆட்சி முறை

  1. இந்திய அரசமைப்பின் எத்தனையாவது சட்டத்திருத்தம் 6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்தது?

82வது திருத்தம்

  1. 82வது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

2002[school book- 82..correct- 86th]

  1. சிறார் இலவச கட்டாய கல்வி சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

2009

  1. எத்தனையாவது திருத்தத்தின் வாயிலாக அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன?

42வது திருத்தம்

  1. ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கு என்ன பெயர்?

குடியுரிமை

  1. ஒரு நபர் எத்தனை மாதங்கள் அரசு பணியில் இருந்தால் அந்த நபர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்?

12 மாதங்கள்

  1. எந்த ஆண்டு சொத்து உரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு உறுப்பு 300 (அ) சட்ட உரிமையாக சேர்க்கப்பட்டது? 

1978

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தை நாடும் உரிமையை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? 

உறுப்பு 32

  1. “பாரம்பரிய வழக்கமான முறைப்படி கிராம தலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு கிராமங்கள் தமக்குத் தாமே ஆட்சி செய்து கொள்ளவேண்டும்” என கூறியவர் யார்?

மகாத்மா காந்தி

  1. “கிராமம் என்பது வகுப்புவாதம் சாதியமைப்பு போன்ற கொடுமையான எதார்த்தத்தை கொண்டுள்ளன இதனால் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும்” என கூறியவர் யார்?

அம்பேத்கர்

  1. “இந்தியாவில் வாழும் கடைக்கோடி ஏழைக் கூட இது தனது நாடு என்று உணரும் நிலையை உருவாக்கி அதில் அவரது குரல் வலுவாக உயரும் வகையில் வலிமையான இந்தியாவை உருவாக்க நான் பாடுபடுவேன்” என கூறியவர் யார் ?

மகாத்மா காந்தி

  1. “மக்களிடம் எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இது மக்களுக்கு சிறந்த பயனளிக்கும் “எனக் பஞ்சாயத்ராஜ் பற்றி கூறியவர் யார்?

காந்தி

  1. “கிராம சுயராஜ்ஜியம் என்று எனது கருத்து அருகாமையில் வாழ்வோரின் முக்கிய விருப்பங்களுக்கான சுதந்திரம் , மற்றும் இதர சார்பு தேவைப்படுவதால் சார்புத் தன்மையும் கொண்ட முழுமையான குடியரசு கொண்டதாகும்” என கூறியவர் யார் ? 

மகாத்மா காந்தி

  1. “கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்பு வாதத்தின் இருப்பிடம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை” என கூறியவர்?

அம்பேத்கர்

  1. எந்த அரசியலமைப்பு உறுப்பு கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது?

உறுப்பு 40

  1. எந்த உறுப்பின் படி இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரும் ஈரவைகளும் கொண்டது ஆகும் எனக் கூறுகிறது?

உறுப்பு 79

  1. மாநிலங்களவை எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது ?

250

  1. மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?

12 உறுப்பினர்கள்

  1. மாநிலங்களவைக்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்கள் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?

238 

  1. மக்களவை மொத்தம் எத்தனை உறுப்பினர்களை கொண்ட தாகும் ?

545

  1. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர்களாக கருதப்படுபவர்கள் யார்?

நாடாளுமன்றத்தின் ஈரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில /ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதி சட்ட மன்றங்களின் உறுப்பினர்கள்

  1. மாநிலங்களவை உறுப்பினர்களின் காலம் எவ்வளவு?
SEE ALSO  12TH POLITY STUDY NOTES | திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் | TNPSC GROUP EXAMS

ஆறு ஆண்டுகள்

  1. மாநிலங்களவை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கிறது?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

  1. மாநிலங்களவை மேலவை என்று எந்த ஆண்டு முதல் அழைக்கப்படுகிறது?

23 ஆகஸ்ட் 1954

  1. மாநிலங்கள் குழு எந்த அரசாங்க சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது ?

இந்திய அரசாங்க சட்டம் 1919

  1. மாநிலங்களவை தலைவராகத் செயல்படுபவர் யார் ?

குடியரசுத் துணைத் தலைவர்

  1. மாநிலங்களவையின் முதல் கூட்டம் எப்போது தொடங்கியது ?

1952 மே 13

  1. எந்த அசமைப்பு உறுப்பு ஒன்றிய அரசின் அலுவல்மொழி 1963 க்குப்பின் இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் எனக் கூறுகிறது?

உறுப்பு 343

  1. “ஒரு பன்மைத்துவ சமுதாயத்தில் ஒரு கூட்டு அரசமைப்பில் ஒற்றை பொதுமொழி கோரி வாதிடுவது அநீதியை உருவாக்கும். சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இடையே அறியாமையை உருவாக்கும் என்றே நினைக்கிறேன்” என கூறியவர் யார்?

அண்ணா

  1. “இந்தியா பல்வேறு மொழி குடும்பங்களை கொண்டுள்ளது எனவே இந்தியா ஒரு துணைக் கண்டம் என்று அழைப்பதே சரியாகும்” எனக் கூறியவர் யார் ?

அறிஞர் அண்ணா

  1. மாநிலங்களவை ஆண்டுக்கு எத்தனை கூட்டத்தொடரை கூட்டுகிறது?

மூன்று

  1. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் என அழைக்கப்படுவது?

முதல் கூட்டத்தொடர்

  1. முதல் கூட்டத்தொடர் எந்த மாதங்களில் நடைபெறும்

பிப்ரவரி முதல் மே மாதம் வரை

  1. மழைக்கால கூட்டத்தொடர் எந்த மாதங்களில் நடைபெறும்?

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை

  1. குளிர்கால கூட்டத்தொடர் எந்த மாதம் நடைபெறும்?

நவம்பர் முதல் டிசம்பர் இறுதி வரை

  1. எப்போது முதல் தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழ் பயன்படுத்தப்படுகிறது?

ஆகஸ்ட் 1 2014

  1. முதல் மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் காலம் என்ன?

1952-1957

  1. யாருடைய ஆட்சியின் போது நிலமற்ற விவசாய தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டம் கொண்டுவரப்பட்டது?

ராஜாஜி

  1. “இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறும் இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு எது ?

உறுப்பு 1(1)

  1. சென்னை மாகாணத் தலைவர் ராஜாஜி தனது முதல் நிதிநிலை அறிக்கை எப்போது மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்?  

1937

  1. யாருடைய ஆட்சியில் வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான கர்ணம் பதவிக்கு முடிவு கட்டப்பட்டது?

எம்,ஜி,ஆர் 

  1. எந்த ஆண்டு மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது?

1992 நவம்பர்

  1. தமிழ்நாடு மாநில சட்டமன்றம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது ?

234

  1. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பொதுத் தொகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

189 உறுப்பினர்கள்

  1. தமிழ்நாட்டில் எத்தனை தனித் தொகுதியில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

45

  1. தமிழக சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் எப்போது தொடங்கியது

03.05.1952

  1. தமிழக சட்டமன்றத்தில் எந்த உறுப்பின் கீழ் ஆங்கிலோ இந்தியப் பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் ?

உறுப்பு 333

  1. எந்த அவையின் உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பொதுக்கணக்கு குழு தலைவராக மக்களவை தலைவரால் நியமிக்கப்படுகிறார் ?

மக்களவை

  1. எந்த உறுப்பின் கீழ் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புக்கு அதிகாரங்களை பயன்படுத்தி அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள எந்த ஒரு சட்டத்தையும் சேர்த்தல் நீக்கம் மாறுதல் கொண்டுவர அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது?

இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 368

  1. அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

அரசமைப்புத் திருத்தச் சட்ட முன்வரைவு

  1. அரசியலமைப்பின் திருத்த சட்ட முன்வரைவை சட்டமன்றத்தின் எந்த அவைகளில் கொண்டு வரலாம்?

இரு அவைகளிலும்

  1. அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் உறுப்பினராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படும் திருத்தத்திற்கு என்ன பெயர்? 

தனிநபர் சட்ட முன்வரைவு

  1. தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் எப்போது நடைபெறும்?

வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

  1. தனிநபர் சட்ட முன்வரைவு கொண்டுவர எத்தனை நாட்களுக்கு முன்பாக முன்னறிவிப்பு தரவேண்டும்?
SEE ALSO  12TH GEOGRAPHY STUDY NOTES | கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்| TNPSC GROUP EXAMS

ஒரு மாதம்

  1. இதுவரை நாடாளுமன்றத்தில் எத்தனை தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளன?

14

  1. இறுதியாக தனிநபர் சட்ட முன் வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

1970

  1. 45 ஆண்டுகளுக்குப்பின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு என்ன? 

மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு

  1. மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு யாரால் கொண்டுவரப்பட்டது?

திருச்சி சிவா

  1. ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு எந்த அரசமைப்பு சட்ட உறுப்பு சிறப்புத் தகுதி வழங்கியிருந்தது?

370

  1. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என தனிக்கொடி அமைத்துக்கொள்ளவும் இரண்டு கொடிகளுக்கும் சம தகுதி வழங்கவும் எந்த ஆண்டு டெல்லி உடன்படிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது? 

1952

  1. எந்த அரசமைப்பு பகுதியின் கீழ் தற்காலிக மற்றும் இடை மாற்றம் வழங்குதல் என்னும் தலைப்பின்கீழ் அரசமைப்பு திருத்தப்பட்டு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் பொறுப்பு சேர்க்கப்பட்டது? 

பகுதி XXI

  1. இந்திய அரசமைப்பின் முதன்மை வரைவாளர் யார் உறுப்பு 370 இன் வரவை எழுத மறுத்தார்?

டாக்டர் பி ஆர் அம்பேத்கார்

  1. உறுப்பு 370ன் வரவை எழுதியவர் யார்?

கோபால சுவாமி

  1. சங்கரலிங்கனார் எங்கு, எப்போது பிறந்தார்?

1895, விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு

  1. சங்கரலிங்கனாரின் பெற்றோர் யார்?

கருப்பசாமி வள்ளியம்மாள்

  1. சங்கரலிங்கனார் எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்?

1917

  1. தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் யார்?

ஸ்ரீராமுலு

  1. எந்த ஆண்டு மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார்?

1956, ஜுலை 27


12TH POLITY STUDY NOTES | இந்திய அரசமைப்பு | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: