12TH ETHICS STUDY NOTES | வேதகாலப் பண்பாடு | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. வேதங்களின் அடிப்படையில் எந்த காலகட்டத்தில் ஆரியர்களால் வேதபண்பாடு பரவியது?

கி.மு. (பொ.ஆ.மு.) – 1500

  1. இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் உள்ள கைபர், போலன் கணவாய்கள் வழியாக ஆரியர்கள் முதன்முதலில் குடியேறிய பகுதி எது?

சப்தசிந்து.

  1. சப்தசிந்து என்ற சொல்லிற்கு என்ன பொருள்?

‘ஏழு நதிகள் பாயும் பகுதி‘

  1. எந்த ஏழு நதிகள் பாயும் பகுதியேசப்தசிந்து என்று அழைக்கப்படுகின்றது?

சிந்து, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி.

  1. ‘வித்‘ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து எந்த சொல் தோன்றியது?’வேதம்’ 6)வேதம் என்பதன் பொருள் என்ன?

‘அறிவுக்களஞ்சியம்’

  1. வேதங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் ?அவை யாவை?

நான்கு வகைப்படும். அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகும்.

  1. வேதங்களின் இரு பிரிவுகள் யாவை?

முற்கால வேதம் (ரிக்), பிற்கால வேதங்கள் (யஜுர், சாமம், அதர்வணம்)

  1. இந்தியாவின் பண்டையகால வரலாற்றை அறிய உதவும் முதன்மையான சான்று,எது?

‘ரிக்’ வேதம் 

  1. ரிக் வேதம் எத்தனை மண்டலங்களையும் எத்தனை பாடல்களையும் கொண்டது.?

10 &1028

  1. ‘ரிக்’ என்ற சொல்லிற்குத் என்ன பொருள்?

துதித்தல் அல்லது வழிபடல்.

  1. அக்னி, பிரஜாபதி, ருத்ரன், வருணன், மித்ரன், இந்திரன்தெய்வங்களை முன்வேதகால மக்கள் வழிபட்டதாக எந்த வேதம் கூறுகிறது?

ரிக் வேதம்

  1. ‘காயத்திரி மந்திரம்‘ எந்த வேதத்தில் இடம்பெற்றுள்ளது?

ரிக் வேதம்.

  1. ரிக் வேதம் சுமார் கி.மு 1200 – ஆம் ஆண்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறியவர் யார் ?

மாக்ஸ்முல்லர் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள்.

  1. எந்த சமஸ்கிருதச் சொல்லிருந்து யஜுர் என்ற சொல் தோன்றியது?

‘யாஜ்‘

  1. யாஜ் என்பதன் பொருள் என்ன?

யாகம்.

  1. சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று எந்த வேதம்அழைக்கப்படுகிறது?

யாஜுர் வேதம்(பிணவேத காலம்)

  1. மிகச் சிறப்பு வாய்ந்த ‘ருத்ரம்’ (செய்யுள்) எதில்இடம் பெற்றுள்ளது?

யாஜுர் வேதம்

  1. யாஜுர் வேதம் எத்தனை பிரிவிகளை கொண்டுள்ளது?

2–சுக்லயஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம்

  1. யஜூர் வேதம் எத்தனை அத்தியாயங்களை கொண்டுள்ளது?

நாற்பது அத்தியாயங்கள்.

  1. சமாவேதம் ,எந்த இன்னிசை அடிப்படையில் பாடப்பெற்றதால் இவ்வேதம், சாமவேதம் என்றழைக்கப்படுகிறது?

சாமம்

  1. இசை வடிவிலான வேதமந்திரங்களைக் கூறுவது எது?

சாமவேதம்.

  1. ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, எந்த வேதம் திகழ்கிறது?

சாமவேதம்.

  1. சமவேதத்தில் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன?

1549பாடல்கள்

  1. எந்த வேதத்தில் உச்சாடனம், மாந்திரீகம் போன்றவற்றால் தீய சக்திகளை வெல்லலாம் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது?

அதர்வண வேதம்

  1. வேதகால மருத்துவமுறைகள் பற்றிய கருத்துகள் எந்த வேதத்தில் உள்ளன?

அதர்வண வேதம்

  1. அதர்வண வேதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

‘பிரம்மவேதம்‘

  1. அதர்வண வேதம் எத்தனை பகுதிகளையும் பாடல்களையும் கொண்டுள்ளது?

20 பகுதிகளும் 731 பாடல்களும்

  1. உபவேதங்கள் எத்தனை வகைப்படும்?

நான்கு ஆயுர்வேதம் – இது மருந்து,மூலிகைகளை ப் பற்றி

குறிப்பிடுகிறது.

தனுர்வேதம் – இது போர்க் கலையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

காந்தர்வவேதம் – இசை, நடனம் ஆகிய நுண்கலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

சில்பவேதம் – இது கட்டடக் கலையைப் பற்றி விவரிக்கிறது.

  1. வேதங்களுக்கான விளக்க உரைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

பிராமணங்கள்.

  1. ‘ஆரண்யம்’ என்ற சொல்லிற்குக் என்ன பொருள்?

‘காடு‘

  1. .காடுகளில் இறையருள் தேடித் தவம் செய்த முனிவர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டன?

ஆரண்யகங்கள் .

  1. வேள்வியைவிட அமைதியான தியானமே, மிகவும் மேலானது என்று எவை வலியுறுத்துகின்றன?

ஆரண்யகங்கள்

  1. வேதங்களின் சாரம் என அழைக்கப்படுவது எது?

‘உபநிடதம்‘

  1. உபநிடதம் ( உபநிஷத்) என்ற சொல்லிற்குஎன்னபொருள்?
SEE ALSO  10TH PHYSICS STUDY NOTES |அணுக்கரு இயற்பியல்| TNPSC GROUP EXAMS

“அருகில் அமர்ந்து கேட்டல்”.

  1. முகலாய இளவரசர் தாராஷுகோ என்பவர் உபநிடதங்கள் சிலவற்றைப் எந்த மொழியில் மொழிபெயர்த்துள்ளார்?

பாரசீகமொழி

  1. இந்தியப்பண்பாட்டு வளர்ச்சியின் உச்சமே உபநிடதங்கள் என்று கூறியவர் யார்?

அமுர்-டி-ரின் கோர்ட்

  1. ஆதிசங்கரர், இராமானுஜர் ஆகியோரின் தத்துவங்களை இன்றளவும் லட்சக்கணக்கான மக்கள் போற்றுவதற்கு அவை உபநிடதக் கருத்துகளைக் கொண்டிருப்பதே காரணம் என்று புகழ்ந்தவர் யார்?

 வின்டர்நீட்ஸ்

  1. முன் வேத கால இனக்குழுக்களின் தலைவன் யார்?

அரசன்

  1. முன்வேத காலத்தில் கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டன?

குலங்கள் 

  1. குலங்களின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?

குலா, குலாபதி .

  1. முன் வேதகாலத்தில் சமூக நிலையைப் பொருத்தவரை,எதன் அடிப்படையில் சமுதாய பிரிவுகள் இருந்தன?

தொழிலின் அடிப்படையில்.

  1. முன் வேதகாலத்தில் சமூக நிலையைப் பொருத்தவரை,தொழில் அடிப்படையில் சமுதாய பிரிவுகள் இருந்தன எனரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்திலுள்ள எந்த பாடல் கூறுகிறது?

‘புருஷசூக்தம்’

  1. முன் வேதகாலத்தில் அரசனுக்கு, நிருவாகத்தில் உதவ, எந்தெந்த சபைகள் இருந்தன?

விதாதா, சபா, சமிதி

  1. முன் வேதகாலத்தில் எது சமூகத்தின் அடிப்படையாக இருந்தது?

 குடும்பம்

  1. குடும்பத்தின் தலைவனான தந்தை எவ்வாறு குறிப்பிடப்பட்டார்?

கிருகபதி

  1. முன் வேத காலத்தில்கல்வி, கேள்விகளில் சிறப்பான நிலையில் இருந்த பெண்கள் யாவர்?

அபலா, கோசா, விஸ்வவாரா, லோபமுத்ரா

  1. முன்வேத காலத்தில் இசை கருவிகளாக நிகழ்ந்தவை யாவை?

முரசு, தாரை, மத்தளம், யாழ், புல்லாங்குழல் .

  1. முன் வேதகாலத்தில் ஆடைகளை எவ்ரெல்லாம் அழைத்தனர்?

வாசஸ், பரிதானா, வஸ்திரம் (மேலாடை ‘அதிவாசஸ்’ எனவும், கீழாடை ‘நிவி’ )

  1. முன் வேதகால மக்கள் அணிந்த காதணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கர்ணசோபனா.

  1. முன்வேத காலத்தில்எவற்றை வைத்து அவர்களின்பொருளாதார மதிப்பு நிருணயிக்கப்பட்டது?

கால்நடைகளின் எண்ணிக்கை.

  1. காவிஸ்தி என்ற சொல் எதனை குறிக்கிறது?

பசுக்களைத் தேடி அலைபவர்களை

  1. பசுக்களின் உரிமையாளர்எவ்வாறு குறிப்பிடப்பட்டார்?

கோமத்

  1. முன் வேதகாலத்தில் வேளாண்மை செய்யக்கூடிய நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

ஷேத்ரா

  1. க்ருஷி (Krishi)என்ற சொல் எதனை குறிக்கிறது?

உழவு.

  1. விவசாயி எவ்வாறு குறிப்பிடப்பட்டார்?

சார்கனி

  1. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் அயஸ் என்ற சொல்,எது போன்ற உலோகங்களைக் குறிப்பிடுகிறது?

செம்பு

  1. எந்த சொல் உலோக வேலைப்பாட்டுத் தொழில்களைச் செய்வோரைக் குறிப்பிடுகிறது?

கர்மரா

  1. மாட்டுவண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று வாணிகம் செய்யும் வணிகர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?

பாணி

  1. எந்த இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில்  முன் வேத காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன?

குஜராத் அருகில் பகவான்புரா.

  1. முன் வேதகால மக்கள் எத்தனை வகைகளாக கடவுளை வகைப்படுத்தினர்?

மூன்று:விண்ணுலகத் தெய்வங்கள்,வாயுமண்டலத் தெய்வங்கள், மண்ணுலகத் தெய்வங்கள்

  1. முன்வேதகால மக்கள் யார்யாரை அண்டவெளிக் கடவுளராக வணங்கினர்?

இந்திரன், வாயு, மாருதி, பர்ஜனியன்.

  1. எந்தெந்த கடவுளை வாயுவெளிக் கடவுளராக வணங்கினர்?

வருணன், அஸ்வினி, சூரியன், சாவித்ரி, மித்ரன், பூஷன்

  1. எந்தெந்த கடவுளை மண்ணுலகக் கடவுளராக முன்வேதகால மக்கள்வழிபட்டனர்?

பிருத்வி, சோமன், அக்னி

  1. இந்திரனைப் பற்றி ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

250

  1. இந்திரனுக்கு அடுத்த நிலையில் முன்வேத கால மக்கள்யாரை வழிபட்டனர்?

அக்னி

  1. ரிக் வேதத்தில் அக்னி பற்றி எத்தனைபாடல்கள்உள்ளன?

200   

  1. தேவர்களையும் மக்களையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக எந்த கடவுளை மக்கள் வழிபட்டனர்?

அக்னி

  1. இந்திரனுக்கும், அக்னிக்கும் அடுத்த நிலையில் முன் வேதகால மக்கள் எந்த கடவுளை வழிபட்டனர்?

வருணனை

  1. அதிதி, உஷஸ் (விடியலின் கடவுள்) போன்ற பெண் கடவுளர்களும் முன்வேதகால மக்கள் வழிபட்டனர் என்று எந்த வேதம் கூறுகிறது?
SEE ALSO  9TH ZOOLOGY STUDY NOTES |சுத்தம் சுகாதாரம்| TNPSC GROUP EXAMS

ரிக்வேதம்

  1. வலிமையின் கடவுளாக யாரை வழிபடப்பட்டனர்?

மாருதி.

  1. நம்பிக்கை மற்றும்கோபப்பண்பிற்கு முறையே யாரை வழிப்பட்டனர்?

சாரதா மற்றும் மன்யூ

  1. எவ்வாறான உருவகப்படுத்தும் வழிபாட்டு முறையும் முன்வேதகால மக்களால் பின்பற்றப்பட்டது?

இந்திரனைக் காளையாகவும், சூரியனைக் குதிரையாகவும் .

  1. ரிக்வேதத்தில் கூறப்பட்ட இரட்டையர் துதிப்பாடல்கள் எந்தெந்த கடவுளர்கள் பற்றிக் கூறுகின்றன?

தயா, பிருத்வி, வித்ரா, வருணன், அஸ்வினி, தேவதைகள்.

  1. வேத அங்கங்களான இலக்கியங்கள் எத்தனை?

சிட்சை – எனப்படும் ஒலியியல்

கல்பம்-எனப்படும் சடங்கியல், சமய ஒழுக்கம்

வியாகரண ம் -எனப்படும் இலக்கணம்

நிருக்தம்-எனப்படும் சொல்லாக்க விளக்கம்

ஜோதிடம்-எனப்படும் வானநூல்

சந்தம்-எனப்படும் சீர்

  1. பின்வேதகால ஆட்சிமுறை காலத்தில் இந்திய நிலப்பரப்பு,எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?

மூன்று:ஆரியவர்த்தம் (கங்கைச் சமவெளிப் பகுதி மற்றும் வட இந்தியா) மத்ய தேசம் (மத்திய இந்தியா) தட்சிணபதம் (தென்னிந்தியா)

  1. உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள்“ எவை?

ஸ்மிருதிகள்.

  1. பிரதேசத்தைக் குறிக்கும் ‘இராஷ்டிரம்’ என்ற பகுதியைப் பின் வேதகாலத்தில் மிகச் சிறந்த மன்னர்களான யார்யார் ஆட்சிசெய்தனர்?

பரிஷத், ஜனமேஜயன்

  1. பாஞ்சாலப் பகுதியை ஆட்சி செய்த யார்ப்பிபின் வேதகாலத்தின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்தார்?

பிரவாஹன ஜெய்வலி,

  1. ‘அசுவம்’ என்ற வடமொழிச் சொல் எதை குறிக்கும்?

குதிரை

  1. வாஜபேயம் என்பது, எதனை குறிக்கும்?

தேர்ப்பந்தயம்

  1. பின் வேதகாலச் சமூகம், எந்த முறைச் சமூகமாகக் காணப்பட்டது?

வர்ணாசிரம

  1. வர்ணாசிரம முறையின்படி மக்களிடையே பிரிந்திருந்த சமூக குழுக்கள் யாவை?

பிராமணர்,சத்திரர்,வைசியர் ,சூத்திரர் .

  1. மனிதனின் நிறை வாழ்வு என்பது எத்தனை ஆண்டுகளாகக் கருதப்பட்டது?

100

  1. பின் வேதகாலத்தில் முக்கியத் தொழிலாக இருந்தது எது?

வேளாண்மை

  1. பின்வேத காலத்தில் நெல் என்ன பெயரால் குறிக்கப்பட்டது?

விரிஹி

  1. பின்வேத காலத்தில் பார்லி என்ன பெயரால் குறிக்கப்பட்டது?

யவா .

  1. எது கர்பசா என்ற சொல்லால் அழைக்கப்பட்டது ?

பருத்தி

  1. ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

வர்னா

  1. யானைகள், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி எந்த வேதம்பகுறிப்பிடுகிறது?

அதர்வண வேதம்.

  1. எந்த இடத்திலிருந்த சுரங்கத்திலிருந்து பின் வேதகால மக்கள் தாமிரத்தைப்பெற்றனர்?

ராஜஸ்தானில் கேத்ரி .

  1. பின் வேதகாலத்தில் எந்த முறையிலான வாணிபம் நடைபெற்றது?

பண்டமாற்று முறை

  1. பண்டமாற்று முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?

பிரபனா

  1. மக்களின் வரி மூலமே அரசு நடைபெற்றதாக எந்த வேதம் கூறுகிறது?

அதர்வணவேதம்

  1. பின் வேதகால மக்கள், எந்தெந்த கடவுளை வணங்கினர்?

“பிரம்மா“ “விஷ்ணு“ “சிவன்“.

  1. ‘ஆன்மாவின் முக்கியகுறிக்கோள்எது?

அழிவற்ற பரப்பிரம்மத்தைஅடைவது‘.

  1. ராமாயணமும் மகாபாரதமும் கி.மு.500 -க்கும் கி.மு.200-க்கும் இடையில்தோன்றியிருக்கக்கூடும் என எந்த அறிஞர் கூறுகிறார்?

மெக்டொனால்டு என்ற ஐரோப்பிய அறிஞர்

  1. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவு கொள்ளுதல் அவசியம். அதுவே, மேன்மையைத் தரும் என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியை எதுஉணர்த்துகிறது?

இராமாயணம்

  1. தந்தையின் வாக்கிற்கு ஒரு மகன் எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும்? எவ்வாறு மகன் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றவாழ்வியல் பண்பாட்டு நெறியைப் எது போதிக்கிறது?

இராமாயணம்

  1. பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கௌரவர்கள் நூறு பேருக்குமிடையேயான போராட்டத்தை விளக்கும் நூல் எது?

மகாபாரதம்

  1. எந்த ஐவர் பஞ்ச பாண்டவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்?

தருமன், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்

  1. 18 பருவங்கள் ஒரு லட்சம் செய்யுள்கள் கொண்ட மிகப்பெரிய நூல் எது?

மஹாபாரதம்.

  1. சமஸ்கிருதமொழியில் எழுதப்பட்ட மஹாபாரத நூலைத் தழுவி வில்லிப்புத்தூரார் என்ன பெயரில் தமிழில் எழுதினார்?

வில்லிபாரதம்.

  1. ‘பாஞ்சாலி சபதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

  1. மூதறிஞர் ராஜாஜி இந்தப் நூலை மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதினார்?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாடும்  சமயங்களும் | TNPSC GROUP EXAMS

‘வியாசர் விருந்து’

  1. வீரம், விவேகம், குரு பக்தி, இறை பக்தியுடையோருக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் என்ற வாழ்வியல் நெறியை அர்ஜுனன் வாழ்க்கை மூலமாக எந்த நூல் உணர்த்துகிறது?

மகாபாரதம்

  1. புராணம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்?

சமஸ்கிருத

  1. புராணம் என்பதன் பொருள் என்ன ?

பழைமை .

  1. புராணக் காலம் கி.பி.300லிருந்து கி.பி.1000த்திற்கு உட்பட்டது என்று குறிப்பிடுபவர் யார்?

ஆர்.எஸ். சர்மா

  1. வாயு புராணம் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது?

கிபி நான்காம்.

  1. புராணங்கள் மொத்தம் எத்தனை?

பதினெட்டு

  1. சிவபெருமானின் பெருமைகளைக் கூறும் சிவ புராணங்கள் எத்தனை?

10

  1. பிரம்மாவின் பெருமையை கூறும் பிரம்ம புராணங்கள்எத்தனை?

இரண்டு புராணங்கள்

  1. அக்னியின் பெருமையைக் கூறும் ஆக்னேயம் எனப்படும் புராணம் எது?

அக்னி புராணம்

  1. சூரியனின் பெருமையைக் கூறும் பிரமை வர்த்தம் எனப்படும் புராணம் எது?

பிரமை வர்த்த புராணம்.

  1. பதினெண் புராணங்களை எவ்வாறு அழைப்பர்?

மகாபுராணங்கள்

  1. 1எந்த புராணத்தில் “பரமாத்மாவிற்கு மேலானது எதுவுமில்லை” என்ற உயரிய கருத்துகள் உள்ளது?

அநுபூதிநெறி விஷ்ணு புராணம்

  1. நாயன்மார்களுள் ஒருவரான திண்ணனார் எவ்வாறு அறியப்பட்டார்?

கண்ணானர்.

  1. ஆன்மிகத்தையும் மருத்துவத்தையும் இணைக்கிறது?

ஆயுர்வேத மருத்துவம்


12TH ETHICS STUDY NOTES | வேதகாலப் பண்பாடு | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: