12TH ETHICS STUDY NOTES | பக்தி இயக்கம் | TNPSC GROUP EXAMS

 


  1. நல்வழி அடைய இந்து சமயம் குறிப்பிடும் நெறிகள் யாவை?

1) பக்திநெறி    2) கருமநெறி 

3) ஞானநெறி 4) யோக நெறி 

  1. இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ‘ஆழ்ந்த அன்பே‘ எவ்வாறுகுறிப்பிடப்படுகிறது?

பக்தி

  1. பக்தி என்ற சொல் எந்த சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது?

‘பஜ்’

  1. பக்தி என்பதன் பொருள் என?

‘வழிபாடு‘ 

  1. உள்ளார்ந்த அன்போடு இறைவனை வழிபடுதல் என்ற பொருளைத்தரும்சொல் எது?

பக்தி

  1. பக்தியின் இருவகை யாவை?
    1. அபரபக்தி 2) பரபக்தி
  2. பக்தன் தெளிவில்லாமல் குறுகிய சிந்தனையுடன் குறிப்பிட்ட ஒரு கடவுளை மட்டுமே வழிபாடு செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அபரபக்தி

  1. எந்த நிலையில் பக்தன்அனைத்துத் தெய்வங்களையும்  வழிபடுவதுடன் பக்தியின் உயர்ந்தநிலையில் செயல்படுகிறான்? 

பரபக்தி

  1. உலகம் தழுவிய அன்பு நெறி எது?

 பரபக்தி.

  1. பல்வேறு வடிவங்களில் கடவுளை வணங்கினாலும் அவை அனைத்தும் ‘கடவுள் ஒருவரே‘ என்று எந்த இயக்கம் வெளிக்காட்டியது?

பக்தி இயக்கம் 

  1. 63 சிவனடியார்கள், எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

‘நாயன்மார்கள்‘ 

  1. எந்த நால்வர் சமயாச்சாரியார்கள்என்றும் சைவ சமயக் குரவர்கள் என்றும்அழைக்கப்பட்டனர்?

திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர். சுந்தரர், மாணிக்கவாசகர் 

  1. 63 நாயன்மார்களின் வாழ்க்கைவரலாற்றைத் தொகுத்து அருளியவர் யார்?

சேக்கிழார்.

  1. சேக்கிழார் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர்புராணம்  என்றழைக்கப்படுகிறது. 

  1. பன்னிரு திருமுறையில்1, 2,3 திருமுறைகளை பாடியவர் யார்?

திருஞான சம்பந்தர்

  1. பன்னிரு திருமுறையில்4,5,6 திருமுறைகளை பாடியவர் யார்?

திருநாவுக்கரசர்

  1. பன்னிரு திருமுறையில் 7-ஆம் திருமுறையை பாடியவர் யார்?

சுந்தரர்

  1. பன்னிரு திருமுறையில் -8-திருமுறை திருவாசகத்தை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

  1. திருமாளிகைத்தேவர், சேந்தனார் மற்றும்அருளாளர்கள் பாடல்கள்எத்தனையாவது திருமுறையாகும்?

 – 9-ஆம் திருமுறை – திருவிசைப்பா, திருப்பல்லாண்டு

  1. 10-ஆம் திருமுறை – (திருமந்திரம்)யை இயற்றியவர் யார்?

திருமூலர்.திருவாலவாயுடையார், பட்டினத்தடிகள்,காரைக்காலம்மையார், நம்பியாண்டார்

  1. நம்பிபாடல்கள் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?

11-ஆம் திருமுறை (தோத்திரப்பாடல்கள்)

  1. சேக்கிழாரின் பெரிய புராணம் எத்தனையாவது திருமுறை?

12-ஆம் திருமுறை 

  1. சீர்காழியில் சிவபாத இருதயர் என்பாரின் மகனாகத் பிறந்தவர் யார்?

திருஞானசம்பந்தர்

  1. திருஞானசம்பந்தர் எத்தனையாவதுவயதில், இறைவி உமாதேவியாரால்ஞானப்பால் ஊட்டப்பெற்றார்?

மூன்றாவது

  1. சமணர்களை வென்று சைவசமயத்தை நிலைநாட்டியவர் யார்?

திருஞானசம்பந்தர்.

  1. மயிலாப்பூரில் இறந்த பெண்ணின் எலும்பை எடுத்து பெண்ணுருவாக்குதல்.-என்ற அற்புதத்தை நிகழ்த்தியவர் யார்?

திருஞானசம்பந்தர்

  1. மாறவர்மன் அரிகேசரியைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியதுடன் சமணர்களைஅனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றில் வெற்றி பெற செய்தவர் யார்?

திருஞானசம்பந்தர்

  1. திருஞான சம்பந்தர் ,தம் பக்திமார்க்கத்தைக் கையாண்ட நிகழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

‘ஞானமார்க்கம்‘

  1. திருநாவுக்கரசரின்இயற்பெயர் என்ன?

மருள்நீக்கியார்

  1. திருநாவுக்கரசர் சமண சமயத்தைத் தழுவிய பிறகு எவ்வாறு அழைக்கப்பட்டார்?

தருமசேனர்

  1. சம்பந்தரால் திருநாவுக்கரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

அப்பர்

  1. திருத்தூங்கானை மாடத்தில் திருநாவுக்கரசர் தமதுதோளில் என்னென்ன முத்திரைகளைப் பொறித்தார்?

ரிஷப, சூல

  1. திருநாவுகரசரின் பக்தி நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

‘தொண்டுநெறி‘ 

  1. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற கருத்தைத் தெரிவித்ததன் மூலம் சைவ சமயத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர் யார்?

திருநாவுக்கரசர்.

  1. திருநாவுக்கரசர் எங்கு ஒரு சைவ மடத்தை நிறுவினார்?

திருப்பூந்துருத்தி

  1. வடம் என்ற சொல்லிற்குஎன்ன பொருள்?

ஆலமரத்தடி

  1. கோயிலின் ஆலமரத்தடியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் நடைபெறும் பூசையே வடதளிபூசை என கூறியவர் யார்?

உ.வே. சாமிநாதர்.

  1. தாண்டகம் என்ற இலக்கிய வகையைக் கையாண்டதால் ‘தாண்டகவேந்தர்‘ என்றுஅழைக்கப்பட்டவர் யார்?

திருநாவுக்கரசர்.

  1. தம் பதிகங்களில், பத்து வகைப் பண்களைப் பயன்படுத்தியுள்ளாவர் யார்?

திருநாவுக்கரசர்

  1. யார் எழுதிய ‘நாமார்க்கும் குடியல்லோம்‘ என்று தொடங்கும் பாடல் பிற்காலத்தில் மகாகவி பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற பாடல்எழுதக் காரணமாக அமைந்தது?

திருநாவுக்கரசர்

  1. ஈசன் எந்தை இணையடி நீழலே-என்ற வரிகளை இயற்றியவர் யார்?

திருநாவுக்கரசர்

  1. பக்தி மார்க்கத்தில் ‘சகமார்க்கம்‘ என்ற நட்பு மார்க்கத்தைப்பின்பற்றியவர் யார்?

சுந்தரர். 

  1. இறைவனையே தம்தோழராகக் கருதியதால் ‘தம்பிரான் தோழர் என்றழைக்கப்பட்டவர் யார்?

சுந்தரர்.

  1. திருத்தொண்டத் தொகையை அருளியவர் யார்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -23|பட்டினப்பாலை 

 60 தனியடியார்களையும், 

  1. 9 தொகையடியார்களையும் பற்றிக் குறிப்பிடுவது எது?

திருத்தொண்ட தொகை.

  1. பித்தாபிறை சூடிபெருமானே அருளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்- என்ற வரிகளை இயற்றியவர் யார்?

சுந்தரர்.

  1. மாணிக்கவாசகர் எந்த ஊரில் பிறந்தார்?

திருவாதவூர்

  1. மாணிக்கவாசகர் எந்த பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்?

வரகுணப் பாண்டியன்

  1. திருபெருந்துறையில் குருவருள் பெற்ற மாணிக்கவாசகர் எந்தெந்த நூல்களை இயற்றியுள்ளார்?

திருவாசகம் , திருக்கோவையார் 

  1. ‘வெல்லும மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்‘ என்று மெய்ப்பொருள் நாயனாரை கூறும் நூல் எது?

திருத்தொண்டத்தொகை .

  1. அதிபத்தர் என்ற சொல்லிற்குச்என்ன  பொருள்?

சிறந்த பக்தர்

  1. கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?

திண்ணன்

  1. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன?

புனிதவதி

  1. தமிழுக்கு ‘அந்தாதி’ என்ற இலக்கியமுறையை அறிமுகம் செய்தவர் யார்?

காரைக்கால் அம்மையார்.

  1. காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்கள் யாவை?

அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை

  1. சந்தனாச்சாரியார்கள்என்றழைக்கப்படும் நால்வர் யார்யார்?

மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம்.

  1. ‘சந்தானம்’ என்றசொல்லிற்கு என்ன பொருள்?வம்சாவழி, பரம்பரை.
  2. சந்தானத்தின் இரு வகை எவை?

அகச்சந்தானம், புறச்சந்தானம்

  1. நாயன்மார்களின் சிவ வழிபாட்டைப் பின்பற்றி கர்நாடகாவில் எந்த சமயப் பிரிவைத் தோற்றுவிக்கப்பட்டது?

பசவர் லிங்காயத் 

  1. இறைவனின் அருள் வெள்ளத்தில்ஆழ்ந்து கிடப்பவர்கள், இறைவனின் அன்பிலும் இன்பத்திலும் மூழ்கி இருப்பவர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?

ஆழ்வார்கள்

  1. திருமாலின் புகழையும், தத்துவத்தையும் வாழ்வியலோடு பொருத்தி, நாடு முழுவதும் பரப்பியவர்கள்யாவர்?

ஆழ்வார்கள்

  1. திராவிட வேதமென போற்றப்பட்ட நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தை அருளியதால் ஆழ்வார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

திராவிடாச்சாரியார்கள் 

  1. ஆழ்வார்கள் மொத்தம் எத்தனைபேர்?

(12)பன்னிருவராவர்

  1. முற்கால ஆழ்வார்கள் யாவர்?

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்

  1. இடைக்கால ஆழ்வார்கள் யாவர்?

நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார்,பெரியாழ்வார், ஆண்டாள்

  1. பிற்கால ஆழ்வார்கள் யாவர்?

தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார் 

  1. காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்ற ஊரில்யதோத்தகாரி என்ற திருமால் கோயிலின்பொற்றாமரைக் குளத்தில் தோன்றியவர் யார்?

பொய்கையாழ்வார்

  1. பொற்றாமரை குளத்தில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

பொய்கையார்

  1. திருமாலின் கையிலுள்ள பஞ்சசன்யம் என்ற திருச்சங்கின் அவதாரமாக அவதரித்தவர் யார்?

பொய்கையாழ்வார்

  1. பொய்கையாழ்வார், திருமாலின் எத்தனை அவதாரங்களைப் பற்றியபாசுரங்களை இயற்றினார்?

10

  1. பொய்கையாழ்வாரின் பாசுரங்கள் எத்தனையாவது திருவந்தாதி?

முதல் திருவந்தாதி

  1. மாமல்லபுரத்தில் குருக்கத்தி மலரில் தோன்றியவர் யார்? பூதத்தாழ்வார்
  2. தமிழை ஞானத்தமிழ் என்று புகழ்ந்து பாடியவர் யார்? 

பூதத்தாழ்வார்.

  1. பூதத்தாழ்வார் ,பாடிய நூறு பாசுரங்கள் நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தில்எத்தனையாவது திருவந்தாதியாக உள்ளது?

இரண்டாவது திருவந்தாதி.

  1. திருமாலின் கையிலுள்ள கௌமோதகி என்ற கதையின்(ஆயுதம்) அம்சமாகக் கருதப்படுகிறவர் யார்?

பூதத்தாழ்வார்.

  1. “அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக-என்று திருமாலை பாடியவர் யார்?

பூதத்தாழ்வார்.

  1. தொண்டை நாட்டில் திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர் யார்?

திருமழிசையாழ்வார்

  1. திருமாலின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறவர் யார்?

திருமழிசையாழ்வார்

  1. திருமிசையாழ்வாரின் வேறு பெயர் என்ன ?

பக்திசாரர், திருமழிசைபிரான், குடமுக்கிற்புலவர்

  1. திருமிசையாழ்வார் அருளிய நூல்கள்

1) நான்முகன் திருவந்தாதி 2) திருச்சந்த விருத்தம் .

  1. பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் பிறந்தவர் யார்?

நம்மாழ்வார்

  1. நம்மாழ்வார் நான்கு வேதங்களைத் தமிழில் பாடியதால் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

தமிழ் செய்த மாறன்.

  1. நம்மாழ்வார் இயற்றிய நூல்கள் யாவை??

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

  1. நம்மாழ்வாரின் இயற்பெயர் என்ன?

சடகோபன், குடிபெயர்மாறன் 

  1. நம்மாழ்வார்ரின் சிறப்புப்பெயர்கள் என்ன?

குருகூர்நம்பி, வகுளாபரணன், பராங்குசன், காரிமாறன், வழுதிவளநாடன்.

  1. பாண்டிய நாட்டின் திருக்கோளூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?

மதுரகவியாழ்வார்

  1. இளம் வயதிலேயே கவிதைபாடும் திறமை பெற்றவராதலால் மதுரகவி எனப் புகழப் பெற்றவர் யார்?

மதுரகவியாழ்வார்

  1. யோக நிலையில் இருந்த நம்மாழ்வாரைக் கண்ட மதுரகவி “இவர் எல்லாமறிந்த ஞானி” என்பதை உணர்ந்தவர் யார்?

மதுரகவியாழ்வார்

  1. இறைவனைப் பாடாமல் தம் குருவாகிய நம்மாழ்வாரையே இறைவனாகக் கொண்டு மதுரகவியாழ்வார் எந்த பாசுரத்தைப் பாடியுள்ளார்?

‘கண்ணிநுண் சிறுதாம்பு’ 

  1. சேரநாட்டில் ‘திருவஞ்சைக்களம்’ என்னும் இடத்தில் அரச குலத்தில் பிறந்தவர் யார்?

குலசேகர ஆழ்வார்

  1. இறைத்தொண்டுமே சிறந்தன என்னும் நோக்கில் வைணவ அடியார் ஆனவர் யார்?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES |உலகிற்கு இந்தியப்  பண்பாட்டின் கொடை | TNPSC GROUP EXAMS

குலசேகர ஆழ்வார்

  1. குலசேகர ஆழ்வார் இயற்றிய பாசுரங்கள்எது?

பெருமாள் திருமொழி .

  1. திருவில்லிபுத்தூரில் பிறந்தவர் யார்?

பெரியாழ்வார்

  1. பெரியாழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? விஷ்ணுசித்தன்,பட்டர்பிரான்
  2. பெரியாழ்வார் இயற்றிய பாசுரங்கள் யாவை?

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.

  1. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனன்அழைக்கப்பட்டவர் யார்?

ஆண்டாள்.

  1. ஆண்டாள் இயற்றிய பாசுரங்கள் யாவை?

திருப்பாவை, நாச்சியார் திருமொழி 

  • கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் யார்?

தொண்டரடிப் பொடியாழ்வார்

  1. ‘விப்ரநாராயணர்’ என்பதுஇவருடைய இயற்பெயர் கொண்டவர் யார்?

தொண்டரடிப் பொடியாழ்வார்

  • தொண்டரடிப் பொடியாழ்வார் இயற்றிய பாசுரங்கள் யாவை?

திருமாலை, திருப்பள்ளியெழுச்சி

  1. ‘திருச்சியை அடுத்துள்ள உறையூரில் பிறந்தவர் யார்?

திருப்பாணாழ்வார்

  1. திருப்பாணாழ்வார் இயற்றியது பாசுரம் எது?

அமலனாதிபிரான் பாசுரங்கள் 

  • சோழ நாட்டில் திருவாலிதிருநகரியில் பிறந்தவர் யார்?

திருமங்கையாழ்வார்.

  1. திருமங்கையாழ்வாரின்என்ன சிறப்புப் பெயர் பெற்றார்?

எமன்

  1. திருமங்கையாழ்வார் இயற்றியவை எவை?

பெரிய திருமொழி,  திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல்,பெரிய திருமடல் .

  1. ஆலயப்பணியே சமூகப்பணிக்குஅடிப்படை என்ற உயரிய தத்துவத்தை ஏற்படுத்தியவர்கள்கள் யார்?

ஆழ்வார்களே திருமங்கையாழ்வார்.

  1. கடவுள்மீது கொண்ட அன்பின் உணர்வுகளைஅறவழியில் விளக்கியவர்கள் யவர்?

வைணவ ஆச்சாரியர்கள்

  1. வெண்ணிற முத்துமணியையும், சிவந்த பவளமணியையும் சேர்த்து கோர்த்தார் போல் அமைந்தது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

மணிப்பிரவாளம்

  1. தமிழ்ச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்து எழுதப்பட்ட உரைநடைஎவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

மணிப்பிரவாளம்நடை .

  1. வைணவம் தழைக்கப் பாடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?

நாதமுனிகள், ஆளவந்தார், வேதாந்த தேசிகர், பிள்ளை லோகாச்சாரியார், இராமானுஜர்

  1. ஆழ்வார்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்தபெருமை யாரை சாரும்?

ஆச்சாரியர்களை.

  1. காட்டுமன்னார்கோயிலில் பிறந்தவர் யார்?

நாதமுனிகள்

  1. ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கு இசை அமைத்து அளித்தவர் யார்?

நாதமுனிகள்.

  1. நாலாயிரதிவ்யப்பிரபந்த பாசுரங்களைத் தொகுத்தவர் யார்?

நாதமுனிகள்

  1. நாதமுனிகள் இயற்றிய நூல்கள் யாவை?

நியாயத்தத்துவம், யோக இரகசியம் 

  1. திருப்பெரும்புதூரில் பிறந்தவர் யார்?

இரமானுஜர்

  1. பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் யார்?

இரமானுஜர்

  1. விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைதோற்றுவித்தவர் யார்?

ராமானுஜர்

  1. ராமானுஜர் எழுதிய நூல்கள்யாவை?

வேதாந்தசாரம், வேதாந்ததீபம், வேதாந்த சங்கிரகம், ஸ்ரீபாடியம் (ஸ்ரீபாஷ்யம்), கீதாபாடியம் (கீதாபாஷ்யம்), கத்யதிரயம் சரணாகதி கத்தியம், திருவரங்க கத்தியம், வைகுண்ட கத்தியம்

  1. ‘ஆன்மாவேபரம்பொருளின் சாரம்‘ என்றுகூறியவர் யார்?

இராமானுஜர்,

  1. கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் கல்யாண்பூர் என்ற இடத்தில் பிறந்தவர் யார்?

மத்துவர்

  1. மத்துவரால் எழுதப்பட்ட துவைத வேதாந்தநூல்கள்எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டன?

“சர்வமூலம்

  1. ஹரி என்ற கடவுளின் உண்மைத்தன்மையை அறிய முயற்சிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றவர் யார்?

மத்துவார்

  1. தன் பக்திக் கோட்பாடுகளை மையமாக வைத்து மத்துவர்எத்தனை நூல்களை எழுதியுள்ளார்?

37

  1. ஜெயதீர்த்தரின் நியாயசுதா என்றநூலிற்கு விளக்கவுரை எழுதியவர் யார்?

இராகவேந்திரர்

  1. தென்னிந்தியாவையும்வடஇந்தியாவையும் தமது பக்திநெறியின் மூலம் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்யார்?

இராமானந்தர்

  1. வித்யாபதி ,புருஷபக்சா என்ற நீதிபோதனைக் கதைகளை எழுதியவர் யார்?

இராமானந்தர்

  1. மைதிலி மொழியில் கோரக்ச விஜயா என்ற நாடக நூலையும் எழுதியவர் யார்?

இராமானந்தர்

  1. மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர் யார்?

ஞானேஷ்வர்

  1. யாருடைய பிபக்திக் கோட்பாடுகள்‘மகாராஷ்டிர தர்மம்‘ எனப்பட்டது?

ஞானேஷ்வர்

  1. பகவத் கீதையின் விளக்கவுரையாக ஞானேஷ்வர் எந்த  நூலை எழுதினார்?

ஞானேஷ்வரி

  1. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் ‘அம்ருதானுபவ‘ என்ற நூலை எழுதியவர் யார்?

ஞானேஷ்வர்

  1. தொடக்கம் முதலே இந்து முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தவர் யார்?

கபீர்

  • இராமனும் இரஹீமும் ஒன்றே, கிருஷ்ணரும் கரீமும் ஒன்றே‘, அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்றேஎன்று மக்களுக்குப் போதித்தவர் யார்?

கபீர்.

  1. இந்துவும் முஸ்லீமும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட இருவேறு பானைகள் போன்றவர்கள்என்றவர் யார்?

கபீர்.

  1. கபீருடைய பாடல் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தோஹாக்கள்.

  1. கபீரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்ட யார் கடவுள் ஒருவரே என்று கூறினார்?

குருநானக்.

  1. லங்கர் என்ற உணவுக் கூடத்தைநிறுவி, சமபந்தி உணவருந்தும் முறையைத்தொடங்கி வைத்தவர் யார்?

குருநானக்.

  1. சீக்கிய சமயத்தின் முதல் குருவான குருநானகை பின்பற்றி, எத்தனை சீக்கிய சமயகுருமார்கள் இவரது போதனைகளைஉலகறியச் செய்தனர்?

ஒன்பது.

  1. வல்லபாச்சாரியார் எந்தஆன்மிகக் கோட்பாட்டை உருவாக்கினார்?

‘புஷ்டிமார்க்கம்‘

  1. வல்லபச்சையாரின் பக்தி மார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசாங்கத்தின் வகைப்பாடுகள்| TNPSC GROUP EXAMS

சுத்த அத்வைதம்

  1. வல்லபச்சையார் எந்தெந்த மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார்?

வடமொழியிலும், ப்ரிஜ் (Parji) மொழியிலும்.

  1. வல்லபச்சையார் எழுதிய நூல்கள் யாவை?

சுபோதினி, சித்தாந்த ரகசியா .

  1. ராதை வழிபாட்டில் ஈடுபட்டுப் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர் யார்?

சூர்தாசர்கிருஷ்ணர்.

  1. “ஆக்ராவின் பார்வையற்றகவிஞர்” எனப்பட்டவர் யார்?

சூர்தாசர்கிருஷ்ணர்

  1. சூர்தாசர்கிருஷ்ணர் எந்தெந்த நூல்களை இயற்றினார்?

சூர் சாகர், சாகித்யரத்னா 

  1. கிருஷ்ணர் மீதான ராதையின்காதலை விளக்கிக் கூறும் எந்த பக்திப் பிரிவைத் தோற்றுவித்தார்?

ராதா வல்லபி

  1. குரு ராம்தாசர் ,சாதாரண மக்களும் வாழ்க்கைத் தத்துவத்தை அறியும் வகையில் எந்த நூலை எழுதினார்?

‘தசபோதா‘

  1. துக்காராம் விஷ்ணுவை எந்த பெயரில்வழிபட்டுத் தம் கொள்கைகளை வடிவமைத்தார்?

விட்டலா

  1. அன்பு, ஆழ்ந்தஅறிவு, அறநெறி வழிபாட்டை மட்டுமே கொண்டஇஸ்லாமின் பக்திப் பிரிவு எது ?

சூபியிசம்.

  1. இறைவனை மனக் கண்ணால் அழகு ஆராதனை வடிவமாகக் காண்பதே சூபியிசம்” என்று கூறியவர் யார்?

கே.டி. பார்கவா.

  1. சூஃபி என்ற சொல் எந்தசொல்லிலிருந்து வந்தது?

சஃபா( “தூய” என்பது பொருளாகும்).

  1. சூபியிசத்தில் பக்தியின்அடிப்படையில் உள்ள ஐந்து பிரிவுகள் யாவை?

 1) சிஸ்தி 2) சுகவார்தி 3) குவாதிரி 4) நக்சாபந்தி5) ஷாதாரி

  • இந்துஸ்தானத்தின் பறவை எனப்பட்டவர் யார்?

அமீர்குஸ்ரு 

  1. அமீறகுஸ்ரு எந்தெந்த மொழிகளில் இசைப்புலமை பெற்றவர்?

பாரசீக, பிரஜ்(Parji)

  1. அமீர் குஸ்ரு எந்த இசை முறையைஉருவாக்கிப் பயன்படுத்தினார்?

குவாலிஸ்

  1. சிதார் என்ற இசைச் கருவியை உருவாக்கியவர் யார்?

அமீர் குஸ்ரு.

  1. இறைவனை வழிபடும்போது, குரல்நாண்களின் மூலம் மந்திரங்களை ஒலியாக எழுப்பி ஆன்மா, உடல், மனம் ஆகிய மூன்றையும் ஒன்றாகஇணைக்கின்ற செயல் எவ்வாறு அழைக்கப்படும்?

நாத யோகா


12TH ETHICS STUDY NOTES | பக்தி இயக்கம் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

 

 

Leave a Comment

error: