12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாடும்  சுற்றுச்சூழலும் | TNPSC GROUP EXAMS

 


  1. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐவகை இயற்கைப் பொருள்களைக் கொண்டு இவ்வுலகம் தோன்றியது என்ற கருத்தைத் வெளிப்படுத்தியுள்ளவர் யார்?

தொல்காப்பியர்

  1. “நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம்“என்ற வரிகளை இயற்றியவர் யார்?

தொல்காப்பியர்.

  1. ஆய்காஸ்‘ என்ற கிரேக்கச் சொல்லிற்கு என்ன பொருள்?

‘வீடு‘ .

  1. லோகாஸ்‘ என்ற கிரேக்கச் சொல்,என்ன பொருள் படும்?

‘கற்றல்‘

  1. உயிருள்ளவையும், (Biotic) உயிரற்றவையும் (Abiotic) அடங்கிய இயற்கையின் தொகுப்பிற்கு என்ன பெயர்?

சூழ்மண்டலம் அல்லது சூழ்நிலைத் தொகுப்பு(Ecosystems).

  1. சுற்றுச்சூழல் கல்வி என்பது எதன் அறிவியல் பிரிவாகும்?

“சூழ்நிலையியல்” (Ecology)

  1. நமது நாட்டின் இயற்கை பிரிவுகளாக உள்ள மூன்று பிரிவுகள் யாவை?

சிந்துகங்கைச் சமவெளி, தக்காணப் பீடபூமி, கடற்கரைச் சமவெளிகள்

  1. பழைமையான வட இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்வன யாவை?

சிந்துகங்கைச் சமவெளிகள்,

  1. சிந்துவெளி நாகரிகம், எந்தெந்த நதிப்பகுதிகளில் தோன்றிப்

பரவியது?

சிந்து மற்றும் அதன் துணைநதிகளான ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி .

  • மௌரியர்கள் காலத்தில் கௌடில்யர் எழுதிய எந்த நூல் வனவளம், வனவளத்தின் தேவை, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது?

‘அர்த்தசாஸ்திரம்‘

  1. பொ.ஆ 5-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டஎந்த நூலின் மரங்களைவெட்டுதல், தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது?

‘யக்ஞவால்கியஸ்மிருதி‘

  1. எந்த நதி இமயமலையிலுள்ள கங்கோத்திரியில் பனியாறாக உருவாகிறது?

கங்கைநதி

  1. கங்கைநதி வங்கதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பத்மாநதி.

  1. வேதகாலப் பண்பாட்டின் மையமாக விளங்கும் நதி எது?

கங்கை நதி.

  1. கங்கை நதி சிவபெருமானின்  சடாமுடியிலிருந்து தோன்றியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளதால், சிவனைக் எவ்வாறு அழைக்கின்றனர்?

கங்காதரர்

  1. மலையும் மலைசார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்பட்டது?

குறிஞ்சி

  1. காடும், காடுசார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

முல்லை

  1. வயலும்வயல் சார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

மருதம்

  1. கடலும் கடல்சார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

நெய்தல்

  1. மணலும் மணல்சார்ந்த இடம் எவ்வாறு  அழைக்கப்பட்டன?

பாலை

  1. குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த மக்கள்,எந்த கடவுளைவழிபட்டனர்?

முருகப்பெருமான்.

  1. மலைகள்மீது அமைந்துள்ள கோடை வாழிடங்கள் யாவை?

குலு, டார்ஜிலிங், நைனிடால், முசௌரி, கொடைக்கானல், உதகமண்டலம், ஏற்காடு

  1. எந்த கோயில் காஷ்மீரிலுள்ள வைஷ்ணவதேவி மலையில் அமைந்துள்ளது. வைஷ்ணவி தேவி கோவில்
  2. காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் இறைவி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

மாதாராணி வைஷ்ணவி

  1. இந்தியப்பண்பாட்டில் நதிகள் அனைத்தும் எவ்வாறு போற்றுகிறோம்?

இறைவனாகவும், தாயாகவும் .

  1. ஆசியாவின் பெரியநதிகளில் ஒன்று?

பிரம்மபுத்திரா நதி

  1. பிரம்மபுத்திரா நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் எந்த பெயரில் தோன்றுகிறது?

ஸாங் – போ

  1. பிரம்மபுத்திரா நதி அருணாச்சல பிரதேசத்தில் இந்தப் பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| தமிழ்க்கும்மி

சியாங்

  1. கங்கையும், யமுனையும் இணையும் பகுதி எது?

அலகாபாத்.

  1. துங்கபத்ரா நதிக்கரையில் ஏற்படுத்தப்பட்ட எந்த பேரரசு தென்னிந்தியப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தது?

விஜயநகரப் பேரரசு

  1. எந்த நதி தமிழகத்தின்புனிதமான நதியாகும்?

காவிரிநதி

  • கும்பமேளா (கிண்ணத்திருவிழா) இந்து சமயத்தினரால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது?

பன்னிரண்டு

  1. எந்த மாவட்டத்தில் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்குவதும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன?

மதுரை

  • கிருஷ்ணாநதி புஷ்கர விழா எத்தனை ஆண்டுகளுக்கொருமுறை 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது?

 12

  1. கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி கொண்டாடப்படும்  விழா எது?

கிருஷ்ணாநதி புஷ்கர விழா

  1. இந்தியா என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகிறது?

தருமபூமி, புண்ணியபூமி,ஆன்மிகபூமி

  1. மனித இனத்திருக்கு வேதங்கள் வழங்கியுள்ள நான்குவகை ஆசிரம தர்மங்கள் யாவை?

பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்னியாசம்.

  1. காடுகளில் தவவாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்கிற இறைநிலை எது?

வனபிரஸ்த நிலை

  1. இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் மரம் எது?.

அரசமரம்

  • சிந்துவெளி நாகரிக மக்கள் எந்த மரத்தை கடவுளாக வழிபட்டனர்?

அரசமரம்

  1. புத்தர் எந்த மரத்தின் அடியில் ஞானோதயம் பெற்றார்?

அரசமரம்(போதிமரம்)

  1. பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை, வெளியிடுவதால், அரசமரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

‘மரங்களின் அரசன்‘

  1. யாருடைய குறிப்புகளில் விந்திய சாத்பூராக் காடுகளில் வாழ்ந்த “சபார்கள்” என்ற மலைவாழ்மக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்என்ற குறிப்பு உள்ளது?

சீனப்பயணி யுவான் சுவாங்

  1. பூமிக்குக் கிடைத்த வரங்கள் எனப்படுபவை எவை?

மரங்கள்

  1. இந்தியாவில், காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பிய பெண்மணி யார்?

அம்ரிதாதேவி

  1. 1972-இல் யாரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிப்கோ இயக்கம்

தொடங்கப்பட்டது?

பகுகுணா

  1. சிப்கோ என்னும் இந்தி சொல்லுக்குக் என்ன பொருள்?

‘கட்டியணைத்தல்‘ .

  1. சசிப்கோ இயக்கம் எந்தெந்த  மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது?

கர்நாடகம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம்

  1. காடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எந்த ஆண்டு இந்திய வனக்கொள்கையை மத்திய அரசு வெளியிடப்பட்டது?

1988

  • இந்தியாவிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் உள்ள ஒவ்வொரு மரமும் எவ்வாறு போற்றப்படுகிறது?

ஸ்தலவிருச்சமாகப் (கோயில் மரம்)

  1. சங்க இலக்கியங்கள் சிவபெருமானை எவ்வாறு குறிப்பிடுகின்றன?

‘ஆல் அமர் செல்வன்‘

  1. பாண்டிய மன்னர்களின் சின்னம் -மீன்,வேப்பம் பூ
  2. சோழ மன்னர்களின் சின்னம்-புலி ,ஆத்திப் பூ
  3. சேர மன்னர்களின் சின்னம். -வில் ,பனம் பூ
  4. தொண்டை மண்டல மன்னர்களின் சின்னம்-அரசமரம்
  5. ‘நாளை உலகம் அழிவதாக இருந்தாலும், இன்றைக்கு மரம் நடுவதைவிட்டுவிடாதே‘ என்று மரத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளவர் யார்?

முகமது நபி

  1. “காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்“ என்றவர் யார்?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | வேற்றுமையில் ஒற்றுமை | TNPSC GROUP EXAMS

பாரதி.

  1. “சின்னஞ்சிறு குருவிபோலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா“ – என்று கூறியவர் யார்?

பாரதி

  1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த பிரிவு படி “காடு, ஏரி, ஆறு போன்ற இயற்கைச் சூழல்களைமேம்படுத்துவதும் பாதுகாப்பதும், பறவை, விலங்கு போன்றவற்றிடம் அன்பு பாராட்டுவதும் அவற்றால் ஏற்படும் நன்மைகளை உணர்வதும் கருணை காட்டுவதும், ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்?

பிரிவு 51-A

  1. நெய்தல் நில மக்கள் எந்த வழிபட்டனர்?

வருணனை

  1. நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும் எந்த நூல்கள் கூறுகின்றன?

சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

  1. கடலுக்கடியிலுள்ள எவை முக்கியமான இயற்கை வளங்களாகும்?

பவளப்பாறைகள்

  1. கடலானத்து எந்த பெயரில் கடல் வணங்கப்படுகிறது?

சமுத்திரராஜன்

  1. பஞ்ச பூதங்கள் என்பவை யாவை?

ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் .

  1. ஆகாயத்திற்கான கோவில் எது?

சிதம்பரம் நடராஜர் கோயில்

  1. நெருப்பிற்கான கோவில் எது?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.

  1. நீருக்கான கோவில் எது?

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

  1. காற்றுகனா கோவில் எது?

ஸ்ரீகாளஹஸ்தியிலுள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில்

  1. நிலத்திற்கனா கோவில் எது?

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்.

  • “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,”என்று மனம் வருந்தி கூறியவர் யார்?

வள்ளலார்.

  1. ஐ.நா. சபை எந்த ஆண்டு சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது?

1992

  1. சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு  எவ்வாறான பொதுப் பெயரிடப்பட்டது?

அஜண்டா-21“(Ajantha)

  1. சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களைச் சுற்றுப்புறத்தில்  வெளியிடுவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

மாசு

  1. எந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘காடுகள்பாதுகாப்புச்சட்டம்‘, வனங்களிலுள்ள மரங்கள் வெட்டப்படு வதைத் தடைச்செய்கிறது?

1980

  1. கேரளாவில் எந்த மருத்துவத் தாவரத்தின் பயனையறிந்து, வெப்பமண்டலத் தாவரவியல் பூங்காஆராய்ச்சி நிறுவனம், இயற்கை வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள்எடுத்து வருகின்றது?

‘ஆரோக்ய பச்சை‘

  1. எந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உலகில் பல நாடுகள் தாமாக முன்வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக்கொண்டன?

ஸ்டாக்ஹோம்

  1. இ ந் தி ய அரசியலமைப்புச் சட்டம் 1976–ஆம் ஆண்டு எத்தனையாவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின்  கடமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது?

42-ஆவது

  1. எந்த சட்டத்தின் படி, ரியோ–டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையொப்பமிட்டுள்ளது?

(உயிரியல் பல்வகை பாதுகாப்புகாக) உயிரியல் பல்வகை சட்டம் 2002


12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாடும்  சுற்றுச்சூழலும் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 36

 

 

Leave a Comment

error: