11TH POLITY STUDY NOTES | மக்களாட்சி | TNPSC GROUP EXAMS

 


  1. மக்களாட்சி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

டெமோஸ் மற்றும் கிரேட்டோஸ் என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து

  1. கிரேக்க மொழியில் டெமோஸ் என்பதன் பொருள் என்ன?

 மக்கள்

  1. கிரேக்க மொழியில் கிரேட்டோஸ் என்பதன் பொருள் என்ன ?

ஆட்சி

  1. மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?

 மக்களால் ஆளப்படுகின்ற ஆட்சி

  1. மக்களாட்சியின் தொடக்கம் எங்கு காணப்படுகிறது?

பண்டைய கிரேக்கம்

  1. தற்போதைய நவீன கால மக்கள் ஆட்சி முறையானது எங்கிருந்து தொடங்கி வந்துள்ளது?

பிரிட்டன்

  1. மக்களாட்சி என்பது ஒரு மகிழ்ச்சியான அரசாங்க வகையாகும் இவ்வகை அரசில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் அதன் மூலம் சமத்துவ சமுதாயத்தை வழி உள்ளது” எனக் கூறியவர்?

சாக்ரடீஸ்

  1. “ஓர் அரசின் மகிமையே அதன் மக்கள் ஆட்சியில் உள்ள சுதந்திரம்தான் எனவே மக்களாட்சியானது இயற்கையாகவே அரசில் சுதந்திரம் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது ” என கூறியவர் யார் ?

பிளாட்டோ

  1. ஓர் மக்களாட்சி அரசமைப்பின் அடித்தளமே சுதந்திரம்தான். மக்கள் இதை விரும்ப காரணமே இந்த அரசமைப்பில் தான் அனைவருக்கும் சமமான அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும்” எனக் கூறியவர் யார் ?

 அரிஸ்டாட்டில்

  1. மக்களாட்சியின் வகைகள் என்னென்ன ?

அரசியல் மக்களாட்சி, சமூக மக்களாட்சி ,தொழில்சார் மக்களாட்சி ,பொருளாதார மக்களாட்சி ,முற்றதிகார மக்களாட்சி ,தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி ,பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி

  1. எந்த மக்களாட்சியில் அரசாங்கத்தில் குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பர் ?

அரசியல் மக்களாட்சி

  1. மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களின் மூலமோ மக்களாட்சி செயல்படுகிறது. இது எவ்வாறு அறியப்படுகிறது?

மக்களின் துவக்க முறை

  1. ஒரு சட்ட முன்வரைவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உருவாக்கும் போது அதற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலமாக ஒப்புதல் அளிக்கின்றனர் இது எவ்வாறு அறியப்படுகிறது?

பொதுமக்கள் வாக்கெடுப்பு

  1. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குறிப்பிட்ட சில காலத்திற்கு தேர்ந்தெடுத்து அந்த பிரதிநிதிகள் மக்களின் சார்பாக கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். இந்த முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை

  1. நேரடி மக்களாட்சி முறை உலகில் எந்த நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது?

 சுவிட்சர்லாந்து

  1. எந்த மக்களாட்சி முறையானது பொருளாதாரத்தையும் மக்களின் பங்களிப்பையும் வெளிப்படுத்தி சமூக நீதியையும் சமூக சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது ?

 சமூக மக்களாட்சி

  1. அமெரிக்காவின் அரசியல் முறையை சிறந்த மக்களாட்சி முறையில் ஒன்று என புகழ்ந்தவர் யார் ?

புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளர் அலெக்ஸ் டி டக்வில்லி

  1. சமத்துவ வளர்ச்சியே சுதந்திரத்திற்கும் ,சுதந்திரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் சிறந்த மக்களாட்சிக்கும் அடிப்படை எனக் வலியுறுத்தும் மக்களாட்சி எது?

 சமூக மக்களாட்சி

  1. தொழிற்சாலைகளில் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் மேம்படுத்தி அவர்களை பொறுப்புடன் செயலாற்ற வைக்கும் மக்களாட்சி முறை எது?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள் 2| TNPSC GROUP EXAMS

தொழில்சார் மக்களாட்சி

  1. எந்த மக்களாட்சி முறையை புகழ்பெற்ற இந்திய அரசியல் சிந்தனையாளர் எம்.என். ராய் அவர்கள் சிறந்த மக்களாட்சி முறை என பரிந்துரைத்தார்?

தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி

  1. “மக்களாட்சி என்பது சமூக பொருளாதார மற்றும் அரசியல் தளத்தில் வாழும் ஓர் நிதர்சனம்/ மெய்மையாகும்” எனக் கூறியவர் யார்?

ஜி‌.டி.கோவார்டு கோல்

  1. “மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஆகும்” எனக் கூறியவர் யார்?

 தாமஸ் ஜெஃபர்சன்

  1. மக்களாட்சியின் தொன்மை கோட்பாடானது எங்கு தோன்றியது?

பண்டைய கிரேக்கம்

  1. அமெரிக்கப் புரட்சியின் காலம் என்ன?

 1775- 1783

  1. பிரெஞ்சு புரட்சியின் காலம் என்ன?

 1789- 1799

  1. தொன்மை மக்களாட்சி முறையானது முதன் முதலில் எங்கு உருவானது?

ஏதென்ஸ்

  1. தொன்மையான மக்களாட்சி முறை எந்த காலகட்டத்தில் உருவானது ?

கிமு 800 மற்றும் கிமு 500 இடையே

  1. மக்களாட்சி வெற்றிகரமாக இயங்க உதவும் இரண்டு நிபந்தனைகள் என்னென்ன?

1.குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் வேண்டும் அப்போதுதான் அவர்கள் விவாதங்களில் பங்கு பெறவும் முக்கிய பிரச்சனைகளில் வாக்களிக்கவும் இயலும்

  1. அனைத்து குடிமக்களையும் அரசியலில் ஈடுபட வைக்கும் அளவிற்கு தொன்மை மக்களாட்சியின் பொருளாதாரம் இருத்தல் வேண்டும்
  2. “இயற்கை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை எந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறதோ அந்த அளவிற்குத்தான் அவர்களின் சுதந்திரமும் வாக்குரிமையும் இருக்கும்” என கூறியவர் யார்?

 லாக்

  1. “மக்களாட்சியே சமதர்மத்திற்கான பாதை ஆகும் ” எனக் கூறியவர் ?

 கார்ல் மார்க்ஸ்

  1. “மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களாலான அரசாங்க முறையாகும்” என கூறியவர் யார்?

ஆபிரகாம் லிங்கன்

  1. எளியோருக்கும் வலியோருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் கருத்து.இது வன்முறையற்ற வழியில் மட்டுமே சாத்தியப்பட வேண்டும்” எனக் கூறியவர் யார் ?

 மகாத்மா காந்தி

  1. உயர்குடி மக்களின் ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தவர் யார் ?

ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர்

  1. மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி எனப்படும் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினரும் இணைந்து பணியாற்றும் அரசியல் அமைப்பில் தான் சிறப்பாக வெளிப்படும்” என கூறியவர் யார்?

ராபர்ட் பால்

  1. நேபாள நாட்டில் ஏப்ரல் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது?

 2006

  1. எந்த பூட்டான் அரசர் பூட்டான் நாடு முடியாட்சியிலிருந்து நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்து தனது பதவியை துறந்தார்?

 பூட்டானின் நான்காவது அரசர் ஜிக்மே சிங்யோ

  1. பூட்டான் நாடு எப்போது மக்களாட்சி முறைக்கு மாறியது?

 2006

  1. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எங்கு தொழிற்புரட்சியின் விளைவாக நவீன மற்றும் சமகால மக்களாட்சியானது தோன்றியது?

மேற்கு ஐரோப்பா

  1. மக்களாட்சியின் அடிப்படை தேவை எது ?

பேச்சு சுதந்திரம்

  1. உலகம் முழுவதும் எவ்வளவு பூர்வகுடி இன மக்கள் வசித்து வருகின்றனர்?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | சமூக நீதி | TNPSC GROUP EXAMS

37 கோடிக்கும் அதிகமாக

  1. சர்வதேச பூர்வ குடிமக்கள் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?

ஆகஸ்ட் 9

  1. ஐநா சபையில் எப்போது பூர்வகுடிகளுக்கான உரிமை பிரகடனம் நிறைவேறியது ?

செப்டம்பர் 2007

  1. எந்த மக்களாட்சி சமத்துவம் என்ற நிலையிலிருந்து சமூக நீதியின் அடிப்படையிலான பங்கு என்ற நிலை நோக்கி செல்ல ஊக்குவிக்கிறது?

பங்கேற்பு மக்களாட்சி

  1. “அரசியலில் நமக்குள் சமத்துவம் இருக்கும் ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற தன்மையே நிலவும் ” என கூறியவர் யார்?

இந்திய அரசமைப்பின் வரைவுக் குழு தலைவர் முனைவர் பி ஆர் அம்பேத்கார்

  1. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது ?

 1951

  1. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தனர்?

54

  1. 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தது?

264

  1. சுதந்திர இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் எவ்வளவு மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்?

 17.30 கோடி

  1. 2014ஆம் ஆண்டு நடந்த 16வது பொதுத்தேர்தலில் இந்தியாவின் மொத்த பொது வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

81.40 கோடி

  1. எந்த ஆண்டு முதல் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்படுகின்றன?

2004

  1. நம் நாட்டில் எந்த ஆண்டில் இருந்து 18 வயது பூர்த்தியான அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது?

1989

  1. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது ?

இந்தியா

  1. இந்திய அரசமைப்பின் எந்த சட்டத்திருத்தம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளில் போட்டியிட இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது ?

73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்தம்

  1. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1951 ஆம் ஆண்டில் எவ்வளவு ஆக இருந்தது?

 36 வருடங்கள்

  1. 2014ஆம் ஆண்டு இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு ?

 66 வருடங்கள்

  1. 1951 இல் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு ?

18.3 சதவீதம்

  1. 2011இல் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு ?

73%

  1. “மக்களாட்சியில் சில சாதக பாதக அம்சங்கள் இருந்தாலும் நமக்கு இதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. ஆனால் மக்களாட்சியில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுவது மாபெரும் தவறு பிரச்சினைகள் புத்திக்கூர்மையினாலும் கடின உழைப்பாலும் மட்டுமே தீரும்” என கூறியவர் யார் ?

ஜவஹர்லால் நேரு

  1. “சமூக மக்களாட்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் கொண்டுவரப்படுகிற அரசியல் மக்களாட்சி வெகு காலம் நீடிக்காது. சமூக மக்களாட்சி என்றால் என்ன ?

 இது ஒரு வாழும் முறை, இது சுதந்திரம் ,சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படை விதிகளை கொண்ட ஒரு வாழ்வு முறையாகும்” என கூறியவர் யார் ? பி ஆர் அம்பேத்கர்

  1. எந்த ஆண்டு தாராளமயம் மற்றும் சந்தை சார்ந்த மாதிரியிலான உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது?
SEE ALSO  6TH GEOGRAPHY STUDY NOTES |புவி மாதிரி| TNPSC GROUP EXAMS

1991

  1. இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருவாய் ஆனது 1950- 51 ல் எவ்வளவு ஆக இருந்தது?

 2.92 லட்சம் கோடி

  1. இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருவாய் ஆனது 2014-15ல் எவ்வளவு ஆக இருந்தது?

 105.28லட்சம் கோடி

  1. தனிநபர் வருமானம் 1590-51ல் எவ்வளவு ஆக இருந்தது?

  ரூபாய் 274

  1. தனிநபர் வருமானம் 2014-2015ல் எவ்வளவு ஆக இருந்தது?

ரூபாய் 88,533

  1. இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1950-51ல் எவ்வளவாக இருந்தது?

 50.8 கோடி டன்கள்

  1. இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2014-15ல் எவ்வளவாக இருந்தது?

 264.77 கோடி டன்கள்


11TH POLITY STUDY NOTES | மக்களாட்சி | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: