11TH POLITY STUDY NOTES | உள்ளாட்சி அரசாங்கங்கள் | TNPSC GROUP EXAMS

 


  1. கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கும், உள்ளூர் பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு எது?

 உள்ளாட்சி அரசாங்கம்

  1. கிராமப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அரசாங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள்

  1. நகரப்பகுதிகளில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள்

  1. இந்தியாவில் கிராம உள்ளாட்சி அரசாங்கங்கள் எந்த பொதுப் பெயரில் அழைக்கப்படுகிறது?

  பஞ்சாயத்து ராஜ்

 

  1. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வகைகள் என்னென்ன?

மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரங்கள் ,பேரூராட்சிகள், பாளைய வாரியங்கள்

  1. மாநகராட்சிகள் என்பவை எவ்வளவு மக்கள் தொகையை  பெருநகரங்களில் ஏற்படுத்தப்படுகிறது?

 10 லட்சத்திற்கும் அதிகமாக

  1. நகராட்சிகள் என்பவை எவ்வளவு மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிறது?

 10 லட்சத்திற்கும் குறைவாக

  1. நகராட்சிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

வகை 1 & வகை 2

  1. எந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடிசைப்பகுதிகளுக்கும் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது?

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்

  1. எந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படுகிறது ?

 ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம்

  1. எந்த இலக்கியங்களில் கிராமங்கள் அளவு மற்றும் வாழும் முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன?

 புத்த மற்றும் ஜைன இலக்கியங்கள்

  1. கௌடில்யரின் எந்த நூலில் அப்போதைய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது ?

அர்த்தசாஸ்திரம்

  1. மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் நிர்வாக அலகுகளாக இருந்தவை?

 கிராமம் ,மாவட்டம்

  1. எந்த அரசர்கள் காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்துள்ளன?

 சோழர்கள் காலம்

  1. காஞ்சிபுரம் மாவட்டம் ,உத்தரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட யாருடைய கல்வெட்டு உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகிறது?

 முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு

  1. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சபை இருந்ததாகவும், அதில்  அனைத்து ஆண்களும் உறுப்பினராக இருந்ததாகவும் கூறும் கல்வெட்டு?

முதலாம் பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு

  1. உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடும் சபைகள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?

 ஊர் மற்றும் மகாசபை

  1. சபைகளில் மூன்றாவது வகையாக இருந்த வியாபார மையங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 நகரம்

  1. சபைகளில் நான்காவது வகையாக இருந்த கிராமங்கள் மற்றும் மற்ற பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பு என்ன ?

நாடு

  1. எந்த  அமைப்புகள் நிலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் ,கோவில்கள் மற்றும் நீர்ப்பாசனங்களை நிர்வகித்தல் ,வரி வசூலித்தல், பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற பணிகளுக்கு கடன் வழங்குதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை செய்தன?

நாடு மற்றும் நகரம்

  1. எந்த அமைப்புகள் அரசனின் கட்டளைகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு துணை புரிந்தன?

 ஊர் மற்றும் மகாசபை

  1. எந்த அரசன் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்ற ஊரின் மகா சபைக்கு நாட்டுக்கு துரோகம் இழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை அறியமுடிகிறது ?

 முதலாம் ராஜராஜ சோழன்

  1. எந்தெந்த வரலாற்றாசிரியர்கள் பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிடுகின்றனர்?

 சர் சர்லஸ்  மெட்கேப், சர் ஜார்ஜ் பேர்டு வுட் மற்றும் எல்பின்ஸ்டன்

  1. முகலாயப் பேரரசில் அதன் பகுதிகள் எவ்வாறாக பிரிக்கப்பட்டிருந்தது?

பர்கானாக்கள் ( மாகாணங்கள்)

  1. முகலாயப் பேரரசின் மாகாணங்களின் உட்பிரிவுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

சர்க்கார்

  1. முகலாயப் பேரரசின் பகுதிக்குட்பட்ட சர்க்கார் பல கிராமங்களை கொண்ட தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன அதற்கு என்ன பெயர்?

பராக்காஸ்

  1. எந்த போருக்கு பின் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி வங்காள நவாபிடமிருந்து நிலவரி வசூல் உரிமைகளை பெற்றது?

  பிளாசிப் போர்

  1. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

கிபி 1757

  1. எந்த ஆண்டு ரிப்பன் பிரபு ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும் அதை மேற்பார்வையிட மாவட்ட அளவில் வாரியங்களின் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்?

1882

  1. மாவட்ட வாரியங்களின் பணிகள் எந்த ஆண்டு வரை காவல், கல்வி மற்றும் கிராம துப்புரவு முதலியவையாக மட்டுமே இருந்தன ?

 1909

  1. எந்த ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் மத்திய அரசிற்கும் மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்கும் இடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளை பற்றி விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது?

1907

  1. தமிழ்நாட்டின் கிராம உள்ளாட்சி அமைப்புகள் எத்தனை அடுக்கு உடையது?

 மூன்று அடுக்கு : மாவட்ட ,வட்டார மற்றும் கிராம அளவில் உள்ளது

  1. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு மாகாணங்களில் இருந்த அலுவலரல்லாத தலைவர்கள் மாற்றப்பட்டு அலுவலர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்?

1923

  1. இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாகத்துறைகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டது?

 இரண்டு: மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், மாகாண அரசுகளுக்கு மாற்றி தரப்பட்ட துறைகள்

  1. ஒதுக்கப்பட்ட துறைகள் என அழைக்கப்படுபவை ?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 14

காவல் ,சட்டம் ஒழுங்கு, நிதி போன்றவை

  1. ஒதுக்கப்பட்ட துறைகள் யாரின் வசம் இருக்கும்?

 ஆளுநர்

  1. மாற்றி தரப்பட்ட துறைகள் என அழைக்கப்படுபவை?

கல்வி மற்றும் பிற துறைகள்

  1. கிராமப்புற பஞ்சாயத்துக்கு ஆளுகையில் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் என கூறியவர்?

 மகாத்மா காந்தியடிகள்

  1. சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தவர் யார் ?

ஷர்மா நாராயணன்

  1. “அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகள் சுய ஆட்சியின் அலகுகளாக பணிபுரியத் தேவையான அதிகாரங்களையும் திறனையும் வழங்கவேண்டும்” என கூறும் இந்திய அரசியலமைப்பின்  பிரிவு என்ன ?

பிரிவு 40

  1. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் உள்ளது?

 பகுதி-4

  1. இந்திய அரசியலமைப்பு  எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

நவம்பர் 26 ,1949

  1. சமூக மேம்பாட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1952

  1. சமூக மேம்பாட்டு திட்டத்தின் நோக்கம் என்ன?

மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் ,கிராமங்களின் சமூக பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வது

  1. எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கிராம பஞ்சாயத்துகள் அமைப்பு ரீதியாக உயர் நிலைகளில் உள்ள மக்கள் நிர்வாக அமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது?

 இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்

  1. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

 1956-61

  1. எந்த ஆண்டு பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது ?

1957

  1. எத்தனை சதவீத இந்திய மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்துராஜ் அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்?

 90%

  1. பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும் அதனை செம்மைப் படுத்தவும் இந்திய அரசாங்கம் 1977 ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் குழு அமைத்தது ?

அசோக் மேத்தா

  1. பஞ்சாயத்துராஜ் அமைப்பு மக்களாட்சி பண்புகளை கொண்ட ஒரு உள்ளாட்சி அரசாங்க அமைப்பாக மாற வேண்டும் என  பரிந்துரைத்த குழு எது?

 அசோக் மேத்தா குழு

  1. அசோக் மேத்தா குழு எந்த ஆண்டு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது?

1978

  1. உள்ளாட்சி அரசாங்கங்களை வலுப்படுத்த 1978 முதல் 1986 வரை என்னென்ன குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன?

சி.எச் ஹனுமந்த்ராவ், ஜி.வி.கே ராவ் மற்றும் எல். எம் .சிங்வி குழு போன்ற பல குழுக்கள்

  1. ராஜீவ்காந்தி அரசாங்கத்தால் எந்த ஆண்டு 64வது மற்றும் 65 வது சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்படாமல் போனது?

 1989

  1. எந்த ஆண்டு 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

1992

  1. 73-வது மற்றும் 74 ஆவது சட்டத் திருத்த மசோதா எந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேற்றியது?

 1993

  1. 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பின் எந்த இரு பகுதிகளை இணைத்தது?

பகுதி IX மற்றும் IX(A)

  1. பகுதி IX மற்றும் IX(A) உள்ள சட்டப்பிரிவுகள் எதுவரை உள்ளது?

 243 முதல் 243(ZG)

  1. மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தை கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு என்ன?

பிரிவு 243(B)

  1. ஒரு கிராம பஞ்சாயத்து நிலையை யார் ஒரு அறிக்கை மூலமாக தீர்மானிக்கலாம்?

 மாநில ஆளுநர்

  1. அரசமைப்பின் எந்த அட்டவணை கட்டாய பணிகள் மற்றும் விருப்ப பணிகளை பஞ்சாயத்தின் மூன்று அடுக்குகளுக்கும் தருகிறது ?

11வது அட்டவணை

  1. எவ்வளவு மக்கள் தொகையை கொண்ட மாநிலங்களில் கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இடைப்பட்ட அளவில் இடைநிலை பஞ்சாயத்துகள் உள்ளன?

 20 லட்சத்துக்கும் மேல்

  1. ஒரு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து இடங்களும் என்ன தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் ?

தொகுதி மக்களின் நேரடியான தேர்தல்

  1. ஒரு கிராமப் பஞ்சாயத்தில் வாக்காளர்களைக் கொண்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கிராமசபை

  1. பஞ்சாயத்து ராஜ் கான அடிக்கல்லை ஜவஹர்லால் நேரு எங்கு எப்போது நாட்டினார் ?

ராஜஸ்தான் மாநிலம், நகவூர் அக்டோபர் 2 ,1959

  1. பஞ்சாயத்துராஜ்க்கான பொன்விழா ஆண்டு எப்போது கொண்டாடப்பட்டது?

2009

  1. பஞ்சாயத்ராஜ்களில் பெண்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?

 மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல்

  1. பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் எவ்வளவு ?

 5 ஆண்டுகள்

  1. இந்தியாவின் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ எவ்வளவு கிராம பஞ்சாயத்துகள் உள்ளன?

 2 லட்சத்து 50 ஆயிரம்

  1. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தேவைப்படும் தகுதிகள் என்னென்ன?

மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தகுதிகள்

  1. பஞ்சாயத்து ராஜ் இன் பொறுப்புகள் எந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது ?

 அரசியலமைப்பின் 11வது அட்டவணை

  1. பொதுவான நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க வகைகளாக உள்ளவை எவை?
SEE ALSO  11TH BOTANY STUDY NOTES |சுவாசித்தல்| TNPSC GROUP EXAMS

 மாநகராட்சிகள் ,நகராட்சிகள், பேரூராட்சிகள் ,நகரியங்கள் மற்றும் பாளைய வாரியங்கள்

  1. மாநகராட்சிகள் ,நகராட்சிகள், பேரூராட்சிகள் ,நகரியங்கள் முதலியவை எந்த சட்டங்களின் அடிப்படையில் செயல்படுகிறது ?

மாநில நகராட்சி சட்டங்கள்

  1. பாளைய வாரியங்கள் எந்த சட்டத்தின்படி செயல்படுகின்றன?

பாளையவாரியங்கள் சட்டம் ,1924

  1. கிராமசபை கூட்டங்கள் ஆண்டிற்கு எத்தனை முறை நடத்தப்படுகிறது?

 நான்கு:ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர்  தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி

  1. ஒரு பகுதி ஊரகப் பகுதியில் இருந்து நகரப்பகுதியாக உயரக்கூடிய நிலையிலிருந்தால் அப்பகுதி எவ்வாறு் அழைக்கப்படும்?

பேரூராட்சி

  1. பேரூராட்சிகளில் மக்கள்தொகை எவ்வளவு?

5000 முதல் 15 ஆயிரத்துக்கு மிகாமல்

  1. ஒரு பேரூராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

3-க்கு குறையாமலும் 15 விட மிகாமலும்

  1. எத்தனை உறுப்பினர்கள் பேரூராட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருப்பர்?

இரண்டு உறுப்பினர்கள்

  1. ஒரு பேரூராட்சியின் பதவிக் காலம் எவ்வளவு?

 5 ஆண்டுகள்

  1. பேரூராட்சியின் பகுதிகள் பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 வார்டுகள்

  1. ஒட்டுமொத்த வார்டுகள் எண்ணிக்கையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு?

 மூன்றில் ஒரு பங்கு

  1. பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தினை கூட்டுபவர் யார்?

துணை ஆணையர்

  1. நகராட்சிகள் எவ்வளவு மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிறது ?

 15 ஆயிரத்துக்கும் மேலும் மூன்று லட்சத்திற்கு கீழ் உள்ள சிறு நகரப்பகுதிகளில்

  1. நகராட்சியின் வகையினம் அ வின் மக்கள் தொகை  எவ்வளவு?

 1 லட்சமும் அதற்கு மேலும்

  1. நகராட்சியின் வகையினம் ஆ வின் மக்கள் தொகை  எவ்வளவு?

50,000 முதல் 1 லட்சம் வரை

  1. நகராட்சியின் வகையினம் இ வின் மக்கள் தொகை எவ்வளவு?

50,000 க்கு கீழ்

  1. நகராட்சியின் வகையினம் அ வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வளவு?

  20க்கு குறையாமலும் 50 எண்ணிக்கைக்கு மிகாமலும்

  1. நகராட்சியின் வகையினம் ஆ வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வளவு?

 15 முதல் 30 வரை

  1. நகராட்சியின் வகையினம் இ வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வளவு?

 10 முதல் 15 வரை

  1. எத்தனை உறுப்பினர்கள் வரை அரசாங்கம் நகர சபைக்கு நியமிக்கலாம்?

மூன்று உறுப்பினர்கள்

  1. நகராட்சி உறுப்பினர்கள் என்ன முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

 மக்களால் ரகசிய வாக்கெடுப்பு முறை 

  1. தேர்தல் முடிவுகள் வெளியான எத்தனை நாட்களுக்குள் துணை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்யவேண்டும்?

 14 நாட்கள்

  1. எத்தனை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளை இணைத்து வார்டுகுழுக்கள் ஏற்படுத்தப்படும்?

 மூன்று லட்சத்திற்கும் குறைவாக

  1. நகராட்சி நிலை குழுக்களின் பதவி காலம் எவ்வளவு?

இரண்டரை ஆண்டுகள்

  1. நகராட்சியின் பதவிக்காலம் எவ்வளவு?

 5 ஆண்டுகள்

  1. நகர சபை ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட வேண்டும் ?

ஒருமுறையாவது

  1. நகர சபைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?

தலைவர் அல்லது துணைத் தலைவர்

  1. நகரசபை உருவாக்கும் குழுக்கள் எத்தனை வகைப்படும்?

இரண்டு: சட்டப்பூர்வ குழுக்கள் ,சட்டபூர்வமற்ற குழுக்கள்

  1. நகர்மன்றத் தலைவரின் பதவிக்காலம் எவ்வளவு ?

 5 ஆண்டுகள்

  1. நகர்மன்ற கூட்டங்களை கூட்டுவது,தலைமை வகிப்பது யார்?

நகர்மன்றத் தலைவர்

  1. நகர் மன்றத்தின் முதன்மை பேச்சாளர் யார்?

 நகர்மன்றத் தலைவர்

  1. நகர்மன்றத்தை ஆளுகின்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 நகர்மன்ற குழு

  1. சட்டம் இயற்றுவது, நகரமன்ற கூட்டங்களின் நேரம், கூட்டத்தை நடத்துவது போன்ற முடிவுகளை யார் மேற்கொள்வார்?

 நிர்வாக அலுவலர்

  1. நகர மன்றத்தின் பணிகள் பொறுப்புகள் இந்திய அரசமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது?

12வது அட்டவணை

  1. எந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு மாவட்டம் முழுமைக்கும் ஒரு வளர்ச்சி திட்ட வரைவு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட திட்டக்குழுவை ஏற்படுத்தியது?

74வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்

  1. இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு எது?

மாநகராட்சி

  1. எதன்மூலம் பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் நிறுவப்படுகின்றன ?

 பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவும், மாநில சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டம் மூலமாகவும்

  1. ஆரம்பகாலத்தில் மாநகராட்சி அமைப்புகள் எங்கு உருவாக்கப்பட்டது ?

மும்பை ,சென்னை மற்றும் கொல்கத்தா

  1. மாநகராட்சியின் தலைமை நிர்வாகி யார்?

 ஆணையர்

  1. மாநகராட்சி அமைப்பின் பதவிக்காலம்?

5 ஆண்டுகள் 

  1. மாநகராட்சியில் வார்டு குழுக்களை ஏற்படுத்திய சட்டத்திருத்தம்?

74வது சட்டத்திருத்தம்

  1. 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பில் முதல் இடத்தை பெற்ற நகரம் எது?

 புனே

  1. 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பில் கடைசி இடத்தை பெற்ற நகரம் எது?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | பொதுக் கருத்து மற்றும் கட்சிமுறை| TNPSC GROUP EXAMS

பெங்களூர்

  1. 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பில் சென்னை பெற்ற தரம்?

3.3

  1. மாநகராட்சியில் நிலைக் குழுவின் தலைவர் யார்?

மேயர்

  1. மாநகராட்சியின் நிலைக் குழுவின் பதவிக்காலம் எவ்வளவு ?

ஓர் ஆண்டுகள்

  1. இந்திய அரசியலமைப்பின் 12வது அட்டவணை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய எத்தனை பணிகளை பட்டியலிட்டுள்ளது ?

18 பணிகள்

  1. மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார் ?

மேயர்

  1. மாநகராட்சியின் தலைமை நிர்வாகி யார்?

ஆணையர்

  1. மாநகராட்சி ஆணையர் எதனை சேர்ந்தவராவார்?

 இந்திய நிர்வாக பணி (IAS)

  1. மாநகராட்சி ஆணையரின் பதவி காலம் எவ்வளவு?

மூன்று ஆண்டுகள்

  1. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது?

 73-வது மற்றும் 74வது சட்ட திருத்தம்

  1. தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து எண்ணிக்கை எவ்வளவு?

 12,564 கிராம பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட பஞ்சாயத்து

  1. தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் ,1958 மாற்றப்பட்டு என்ன சட்டம் புதிதாக இயற்றப்பட்டது?

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ,1994

  1. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ,1994 எப்போது திருப்பப்பட்டது ?

 1996

  1. எந்த திருத்தத்தின் மூலம் வளர்ச்சிக்கான திட்டங்களை ஏற்படுத்த மாவட்ட திட்டக்குழு ,மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில நிதி ஆணையம் போன்றவை உருவாக்கப்பட்டன ?

 தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்திருத்தம், 1996

 

  1. தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புக்காண தேர்தல் எந்த ஆண்டுகளில் நடைபெற்றது?

 1996 ,2001 மற்றும் 2011

  1. இதுவரை எத்தனை மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளன?

 18 மாநிலங்கள்

  1. தமிழ்நாடு நகர்ப்புற சட்டங்கள் மசோதா 2018 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் மசோதா 2018 இரண்டும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரங்களின் பதவிக்காலத்தை எவ்வளவு காலத்திற்கு நீட்டித்தது?

 ஆறுமாதங்கள்

  1. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

12 (தேர்வு காலத்திற்குமுன் தமிழக அரசின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்க)

  1. தமிழகத்தில் உள்ள நகராட்சிகள் எண்ணிக்கை எவ்வளவு ?

148 (தேர்வு காலத்திற்குமுன் தமிழக அரசின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்க)

  1. தமிழகத்திலுள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 561 (தேர்வு காலத்திற்குமுன் தமிழக அரசின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்க)


11TH POLITY STUDY NOTES | உள்ளாட்சி அரசாங்கங்கள் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: