11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின்  அடிப்படை கருத்தாக்கங்கள் 1| TNPSC GROUP EXAMS

 


  1. இறையாண்மை என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

சூப்பரானஸ் (Superanus) இலத்தீன் மொழி சொல்

  1. சூப்பரானஸ் (Superanus) என்ற இலத்தீன் மொழி சொல்லின் பொருள் என்ன?

மிக உயர்ந்த அல்லது மேலான

  1. ரோமானிய நீதிபதிகளும் மக்களும் இடைக்காலத்தில் இறையாண்மையை என்ன வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்தனர்?

சம்மா பொடெஸ்டாஸ் (Summa potestas), ப்ளெனிடீயூட்பொடெஸ்டாஸ்(plenitude potestas)

  1. இறையாண்மை என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?

போடின்

  1. போடின் தனது எந்த நூலில் இறையாண்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?

 குடியரசு

  1. போடின் எழுதிய குடியரசு எனும் நூல் எந்த ஆண்டு வெளியானது ?

1576

  1. “இறையாண்மை என்பது ஒட்டுமொத்த மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதிக கட்டளை தன்மையுடையதாகும் காணப்படுகிறது” எனக் கூறியவர் யார்?

ஜீன் போடின்

  1. இறையாண்மையின் முக்கிய பண்பாக திகழ்வது எது?

நிரந்தரத் தன்மை

  1. இறையாண்மையின் இரண்டு அம்சங்கள் என்னென்ன?

உட்புற இறையாண்மை ,வெளிப்புற இறையாண்மை

  1. “ஓர் மரமானது தான் முளை விடுவதை மாற்ற முடியாததை போன்று இறையாண்மையையும் மாற்றித் தர இயலாது. இது ஒரு மனிதன் தன்னை அழித்துக் கொள்ளாமல் தனது உயிர் அல்லது ஆளுமையை மாற்றித் தர இயலாததை போன்றதாகும் “எனக் கூறியவர் யார் ?

லைபர்

  1. “மக்கள் இறையாண்மை எனப்படுவது பெரும்பான்மை வாக்காளர்களின் அதிகாரமாகும் .மேலும் இவ்வகை அதிகாரமானது தோராயமாக உலகளாவிய வாக்குரிமை செயல்படக்கூடிய நாட்டில் வாக்காளர்கள் பல்வேறு நிறுவப்பட்ட வழிமுறைகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விருப்பமாகும்” என கூறியவர் யார்?

முனைவர் கார்னர்

  1. எந்த வகை இறையாண்மை சட்டபூர்வமாக இல்லாது உண்மையான அதிகாரத்தை பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மை என அழைக்கப்படும்?

நடைமுறை இறையான்மை

  1. எந்த வகை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்?

 சட்டப்படியான இறையாண்மை

  1. இறையாண்மையின் வகைகள் என்னென்ன?

பெயரளவு மற்றும் உண்மையான இறையாண்மை ,சட்ட இறையாண்மை, அரசியல் இறையாண்மை, மக்கள் இறையாண்மை

  1. நெப்போலியன் எந்த வகை இறையாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்?

உண்மையான நடைமுறை இறையான்மை

  1. எப்போது கருப்பு சட்டை புரட்சி நடைபெற்றது ?

  1922

  1. ஹிட்லர் ஜெர்மனியில் என்ன இறையாண்மையை பெற்று ஆட்சி செய்தார்?

 நடைமுறை இறையாண்மை

  1. போல்ஷிவிக் புரட்சி எந்த ஆண்டு ஏற்பட்டது ?

 1917

  1. ஒருமைவாத இறையாண்மை கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கம் எது?

பன்மைவாதம்

  1. யார் மூலமாக பன்மை வாதக் கோட்பாடு பிரபலமடைந்தது?

ஓட்டோ வ்.கீர்க் அவர்களின் படைப்புகள் மூலமாக

  1. உச்சநீதிமன்றத்தின் எந்த வழக்குகளின் தீர்ப்புகளில் இறையாண்மை பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது ?

 கோபாலன் vs மதராஸ் அரசு (1950) மற்றும் இந்தியன் யூனியன் vs மதனகோபால் (1954) வழக்குகள்

  1. “அரசுக்கு எந்த பட்டியலில் வேண்டுமென்றாலும் சட்டமியற்ற கூடிய அதிகாரம் இருப்பதாகவும் ஆனால் அது அரசமைப்பின் வரையறைக்கு உட்பட்டே அமையும்₹ என இறையாண்மையின் பொருள் குறித்து எந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது?

உத்தரபிரதேச அரசு (1990)

  1. “இந்தியா என்பது இறையாண்மை பொருந்திய மக்களாட்சிக் குடியரசு என்றும் அதுவே அடிப்படைக் கூறாக அரசமைப்பின் வழி காணப்படுகிறது” என்று எந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது ?

இந்திராகாந்தி vs ராஜ்நாராயணன் (1975)

  1. “பன்மை வாதத்தின் அருமைகளை நீதிபதியான வான் கிரிய்க்கின் காலத்திற்கு உட்பட்ட படைப்புகளில் காணலாம் ” என கூறியவர் யார்?

 ஆர்.என்.கில்கிரிஸ்ட்

  1. ஒரு நாட்டின் மக்களுக்கு உரிமைகள் சரிசமமாக வழங்கப்பட்டாலும் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதனை நிர்ணயிக்கும் காரணியாக செயல்படுவது எது?

சமத்துவம்

  1. சமத்துவம் என்பது எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?

இக்குவாலிஸ்

  1. இக்குவாலிஸ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

நியாயமான

  1. பதினெட்டாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும் முடியரசையும் எதிர்த்து “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்தை முழங்கியவர்கள் யார்?

பிரெஞ்சு புரட்சியாளர்கள்

  1. “பூமி என்பது அனைவருக்கும் தாய். இதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதனிடம் சம உரிமைகள் பெறுவதற்கு உரிமை உண்டு” எனக் கூறியவர் யார்?

சீஃப் ஜோசப்

  1. “கடந்த காலத்தின் வரலாறு என்பது சமத்துவத்தை மேல்நோக்கிய ஒரு நெடிய போராட்டம் ஆகும்” எனக் கூறியவர் யார்?
SEE ALSO  7TH PHYSICS STUDY NOTES |வெப்பம் மற்றும் வெப்பநிலை| TNPSC GROUP EXAMS

எலிசபெத் கார்டி ஷார்டோன்

  1. “பெருமளவில் இருக்கக்கூடிய ஏழைவர்க்கமும் சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும் ” எனக் கூறியவர் யார்?

 ஹெரால்டு லாஸ்கி

  1. சமத்துவத்தின் வகைகள் என்னென்ன?

குடிமை சமத்துவம் ,அரசியல் சமத்துவம், சமூக சமத்துவம், இயற்கை சமத்துவம் ,பொருளாதார சமத்துவம்

 

  1. மல்லிகை புரட்சி எங்கு நடைபெற்றது?

துனீசியா

  1. துனீசியாவின் தேசிய மலர் எது ?

மல்லிகை

  1. மல்லிகை புரட்சியில் யாருடைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது?

பென் அலி

  1. அமெரிக்காவில் குடிமை உரிமைகள் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

மார்ட்டின் லூதர் கிங்

  1. “அனைத்து மக்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறுவது எது?

அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்

  1. “மனிதன் சுதந்திரமாக பிறந்தவுடன் எப்பொழுதும் சுதந்திரமான மற்றும் சமமான உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்” என குறிப்பிடுவது எது ?

பிரான்ஸ் நாட்டின் “மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமை பிரகடனம்”

  1. எப்போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது?

 டிசம்பர் 10, 1948

  1. சிவில் என்கிற வார்த்தை எதிலிருந்து உருவாக்கப்பட்டது ?

Civils or civis என்ற லத்தீன் மொழிச் சொல்

  1. Civils or civis என்ற லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் என்ன?

குடிமக்கள்

  1. விலங்குகள் பண்ணை என்ற நூலை எழுதியவர் யார்?

 ஜார்ஜ் ஆர்வெல்

  1. அரசின் நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அரசியல் சமத்துவம்

  1. “செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டின் வளமைகளில் சமமான பங்கு அளிப்பது பொருளாதார சமத்துவமாகும்” எனக் கூறியவர் யார்?

ப்ரைஸ் பிரபு

  1. “அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரம் இன்றி மெய்மையாவதில்லை என்றும் அப்படி இல்லாத நிலையில் வழங்கப்படும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார அதிகாரத்தின் கைப்பாவையாகும் ” எனக் கூறியவர் யார்?

 பேராசிரியர் லாஸ்கி

  1. “பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு சுதந்திரம் என்ன நன்மையை அளிக்க முடியும்? அவனால் அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது” எனக் கூறியவர் யார் ?

தாமஸ் ஹாப்ஸ்

  1. “சமத்துவத்தை நோக்கிய உணர்வுபூர்வமான பயணமானது சுதந்திரத்திற்கான நம்பிக்கையை வீணாகிறது” எனக் கூறியவர் யார்?

ஆக்டன் பிரபு

  1. “சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு” எனக் கூறியவர் யார் ?

ஹெரால்ட் லாஸ்கி

  1. “எங்கு பணக்காரவர்க்கம்- ஏழை வர்க்கம், படித்தவர்கள் -படிக்காதவர்கள் என்ற பிரிவினை இருக்கிறதோ அங்கு கண்டிப்பாக முதலாளி பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும்” என கூறியவர் யார்?

ஹெரால்ட் லாஸ்கி

  1. தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்களை அரசாங்க தலையீடுகளான கட்டுப்பாடு ,சலுகைகள், வரி, மானியம் போன்றவை இல்லாமல் சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார

 

 முறைமைக்கு பெயர் என்ன?

 தாராளமயக் கொள்கை

  1. “முதலாளிகளுக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்” எனக் கூறியவர் யார் ?

ஆடம்ஸ்மித்

  1. “அரசியல் லட்சியங்கள்: ஓர் அறிமுகம்” என்ற நூலை எழுதியவர் யார்?

ஹேவுட்,அன்ட்ரு

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லது அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது?

இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14

  1. சட்டத்தின் முன் சமம் மற்றும் சமமான சட்ட பாதுகாப்பு ஆகியவை எந்த இந்திய அரசமைப்பின் உறுப்பின் மூலம் வலிமைபடுத்தப்பட்டுள்ளது ?

உறுப்பு 21

  1. இந்திய அரசாங்கத்தின்  உறுப்பு 21 எதை குறிக்கிறது?

எந்த ஒரு தனிநபரும் சட்ட நடைமுறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது

  1. மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தடைவிதிக்கும் உறுப்பு எது ?

உறுப்பு 15

  1. பொது வேலை வாய்ப்பில் சம வாய்புரிமை வழங்கும் இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 16

  1. தீண்டாமை ஒழிப்பு பற்றிய இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 17

  1. பட்டங்கள் ஒழிப்பு பற்றிய இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 18

  1. “எனக்கான உரிமைகளும் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் மற்றவர்களுக்கும் கிடைப்பதையும் ,இவை எவ்வாறு என்னிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு உரிமையோ அவ்வாறு மற்றவர்களுக்கும் அது போன்ற உரிமையாகும் என்பதே சமத்துவமாகும்” எனக் கூறியவர் யார் ?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசாங்கத்தின் வகைப்பாடுகள்| TNPSC GROUP EXAMS

வால்ட் விட்மன்

  1. சட்டத்தின் முக்கிய கடமை எது?

தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது

  1. இங்கிலாந்தில் எப்போது முடியாட்சியை எதிர்த்து “மகத்தான புரட்சி” அரங்கேறியது?

 

 1688

  1. பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு ஏற்பட்டது?

 1789

  1. சுதந்திரம் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?

லிபர் என்கிற லத்தீன் வார்த்தை

  1. லிபர் என்கிற லத்தீன் வார்த்தையின் பொருள் என்ன?

கட்டுப்பாடில்லாத / தடையில்லாத

  1. “ஒழுங்குமுறை அரசில் சுதந்திரம் சாத்தியமாகிறது. இவ்வகை அரசில் இறையாண்மையினுடைய சட்ட மற்றும் அரசியல் அம்சங்கள் ஒன்றியோ, ஏறக்குறையவோ அல்லது முழுவதுமாகவோ காணப்படுகிறது” என கூறியவர் யார் ?

பேராசிரியர் பார்க்கர்

  1. “வரலாற்று அனுபவங்கள் மக்கள் வசதியாக வாழ்வதற்கும், தகுந்த முன்னேற்றத்திலான வாழ்விற்கான விதிமுறைகளையும் அளித்துள்ளது. கீழ்பணிதலை கட்டாயப்படுத்தும் போது சுதந்திரத்திற்கு உரிய நியாயமான வரையறையாக அது விளங்குகிறது” என கூறியவர் யார்?

லாஸ்கி

  1. “மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பது சுதந்திரமாகும்” எனக் கூறியவர் யார்?

ஹெரால்ட்

  1. “சுதந்திரம் என்பது தகுதியான மகிழ்ச்சியையும் மற்றும் வேலையையும் அனுபவிப்பதற்கு உண்டான நேர்மறையான சக்தியாகும்” எனக் கூறியவர் யார்?

 கெட்டல்

  1. “சுதந்திரம் என்பது தனி மனிதர்கள் தங்கள் ஆளுமை தன்மையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களை வெளிப்படுத்துவதாககும்” எனக் கூறியவர் யார்?

ஜி.டி.எச்.கோல்

  1. “சுதந்திரம் என்பதன் பொருள் தடைகள் இல்லாத நிலை என்பதல்ல மாறாக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் உள்ளது” எனக் கூறியவர் யார்?

மகாத்மா காந்தி

  1. “உரிமைகள் இல்லாமல் சுதந்திரம் கிடையாது. ஏனெனில் உரிமைகள் இல்லாத சூழ்நிலையில் குடிமக்கள் அனைவரும் ஆளுமை தன்மையின் தேவைகளுக்கு அவசியமற்ற வெறும் சட்டத்திற்கு உட்பட்ட மக்களாவர்” எனக் கூறியவர் யார்?

ஹெரால்டு ஜே.லாஸ்கி

 

  1. சுதந்திரத்தின் இரண்டு கட்டங்கள் என்னென்ன?

நேர்மறை சுதந்திரம் மற்றும் எதிர்மறை சுதந்திரம்

  1. சிலவற்றை செய்வதற்கான சுதந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நேர்மறை சுதந்திரம்

  1. சுதந்திரத்தின் வகைகள் என்னென்ன?

 இயற்கை சுதந்திரம் சமூக அல்லது குடிமை சுதந்திரம் நீதிநெறி சுதந்திரம், தனிப்பட்ட சுதந்திரம் ,அரசியல் சுதந்திரம் ,பொருளாதார சுதந்திரம் ,உள்நாட்டு சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ,பன்னாட்டு சுதந்திரம்

  1. ஒருவர் நினைப்பதை தங்குதடையில்லாமல் நடத்தி முடிப்பதற்கான சுதந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 இயற்கை சுதந்திரம்

  1. “இயற்கை நிலையில் மனிதர்கள் வாழ்வுரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றை அனுபவித்தார்கள்” எனக் கூறியவர் யார்?

ஜான் லாக்

  1. மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் எங்கெங்கு காணினும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறான்” எனக் கூறியவர் யார் ?

 ரூசோ

  1. அரசியல் சுதந்திரத்தை அரசமைப்பு சுதந்திரம் எனக் கூறுபவர் யார்?

லீலாக்

  1. எந்த ஒரு அடக்குமுறையோ அல்லது சட்டவிரோதமான கட்டுப்பாடுகளோ இல்லாமல் தனி மனிதர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்களை செயல்படுத்தும் நிலைக்குப் பெயர் என்ன?

தனிப்பட்ட சுதந்திரம்

  1. “சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாலும் மேலும் சுதந்திரத்தின் மூலம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதாலும் சுதந்திரத்திற்கு ஆபத்தான நிலை உருவாக்கப்படலாம்” எனக் கூறுபவர் யார் ?

 ஜேம்ஸ் மாடிசன்

  1. ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான உணவைத் தேடிக் கொள்ளும் தனிநபர் சுதந்திரம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பொருளாதார சுதந்திரம்

  1. “ஓநாய்க்கும் கறுப்பு செம்மறியாட்டிற்க்கும் சுதந்திரம் தொடர்பான ஒத்த கருத்துக்கள் அமைவதில்லை. இதைப்போலவே தான் மனித இனத்திற்கு இடையேயும்

தற்பொழுது சுதந்திரத்தை பற்றிய வேறுபாடுகள் உள்ளன ” என கூறியவர் யார்?

 ஆபிரகாம் லிங்கன்

  1. “அடிப்படை சுதந்திரத்தை சிறிய அளவிலான தற்காலிக பாதுகாப்பிற்காக யாரேனும் துறந்தால் அவர்கள் சுதந்திரமோ அல்லது பாதுகாப்போ கிடைப்பதற்கு தகுதியற்றவர்களாவர்” என கூறியவர் யார் ?

பெஞ்சமின் பிராங்கிளின்

  1. நாடு அல்லது தேசத்தின் நிலவக்கூடிய சுதந்திர சூழ்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தேசிய சுதந்திரம்

  1. இந்தியாவின் மீது சீனா எப்போது தாக்குதல் தொடுத்தது?

 1962

  1. பாகிஸ்தான் இந்தியா மீது எப்போது தாக்குதல் தொடுத்தது ?

1965,1971

  1. சுதந்திர தேவி சிலையின் குறிக்கோள் என்ன ?

விடுதலை பற்றிய உலகளாவிய நினைவூட்டலாகவும் ,அமெரிக்க குடிமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது

  1. “சட்டங்கள் இல்லை என்றால் அங்கே சுதந்திரம் இல்லை” எனக் கூறியவர்?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | உள்ளாட்சி அரசாங்கங்கள் | TNPSC GROUP EXAMS

 ஜான் லாக்

  1. “பூமியில் இறைவனின் ஆட்சியே அரசு எனப்படுகிறது மேலும் சமூக நீதிநெறியின் உறுப்பாகவும் நன்னெறி மேலான வெளிப்பாடாகவும் அரசு விளங்குகிறது” என கூறியவர் யார்?

ஹெகல்

  1. “ஒரு நிலையான ராணுவத்தை விட கல்வி என்பது சுதந்திரத்தின் சிறந்த பாதுகாப்பாகும்” எனக் கூறியவர் யார்?

எட்வர்ட் எவ்ரட்

  1. சமத்துவ உரிமைகள் பற்றிய இந்திய அரசமைப்பின் உறுப்புகள் எது?

உறுப்பு 14 முதல் 18 வரை

  1. இந்திய அரசமைப்பின் உறுப்பு 19 முதல் 22 வரை குறிப்பிடுவது எது ?

சுதந்திரத்திற்கான உரிமை

  1. சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றி இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு குறிப்பிடுகிறது ?

உறுப்பு 23 மற்றும் 24

  1. சுதந்திரத்திற்கான உரிமை பற்றி குறிப்பிடும் இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?

 25 முதல் 28

  1. பண்பாடு மற்றும் கல்வி உரிமை தொடர்பான உறுப்புகளைக் கொண்ட இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 29 மற்றும் 30

 

  1. அரசமைப்பு பரிகார உரிமைகள் பற்றிய உறுப்பு எது?

உறுப்பு 32 முதல் 35

  1. சட்டத்தின் ஆட்சி எந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளது?

இங்கிலாந்து ,அமெரிக்கா ,இந்தியா

  1. “வறுமை என்பது விபத்தல்ல ,அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகும் இவை மனிதர்களின் நடவடிக்கைகள் மூலம் களையப்பட வேண்டியவையாகும் “எனக் கூறியவர் யார்?

 நெல்சன் மண்டேலா

  1. சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்தை பிரபலப் படுத்தியவர் யார்?

 இங்கிலாந்து சட்ட நிபுணர் ஏ.வி. டைசி

  1. “சட்டமே ஆளுகை புரிய வேண்டும்” என கூறியவர் யார் ?

 அரிஸ்டாட்டில்

  1. “குடிமக்களின் தூய உணர்விலான உத்வேகமானது ,சட்டத்தின் வார்த்தைகளை விட குறைவுபடினும் அதுவே அவர்களுக்கு மிகவும் உண்மையான பாதுகாவல் ஆகும் “எனக் கூறியவர் யார்?

ஹெரால்டு ஜெ.லாஸ்கி


11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின்  அடிப்படை கருத்தாக்கங்கள் 1| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: