11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள் 2| TNPSC GROUP EXAMS

 


  1. அரசின் இறையாண்மையால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்ற விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சட்டம்

  1. யாருடைய கூற்றின்படி இறையாண்மையின் கட்டளையே சட்டம் ஆகிறது?

போடின்

  1. “சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள்” என கூறியவர் யார்?

அரிஸ்டாட்டில்

  1. அரசால் அமலாக்கம் செய்யப்படுகின்ற விதிமுறைகளின் தொகுப்பிற்கு என்ன பெயர்?

சட்டம்

  1. சட்டத்தின் குறிக்கோள் என்ன ?

 சமூகத்தில் நீதியை அடைவது

  1. சட்டம் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது ?

டியூட்டோனிக் மொழியிலுள்ள லாக் என்ற வேர்ச்சொல்

  1. டியூட்டோனிக் மொழியிலுள்ள லாக் என்ற வேர்ச்சொல்லின்ஸ பொருள் என்ன?

 நிலைத்தன்மை அல்லது ஒரே சீரான

  1. சட்டம் என்ற சொல் எதனை குறிக்கிறது?

சீரானது

  1. சட்டத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

இரண்டு: இயற்கை சட்டம் மற்றும் மனித சட்டம்

  1. மனித நடவடிக்கைகளை வழி நடத்துகிற விதிகளை கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சட்டம்

  1. “சட்டம் என்பது இறையாண்மையின் கட்டளை” எனக் கூறியவர் யார்?

 ஜான் ஆஸ்டின்

  1. “நீதி நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக அரசு அங்கீகரித்த விதிமுறைகளின் தொகுப்பே சட்டம் ஆகின்றது” எனக் கூறியவர் யார்?

சல்மாண்டு

  1. “சட்டம் என்பது விழுமியங்களை சார்ந்த தீர்ப்புகளின் வெளிப்பாடு ஆகிறது. மனித வர்க்கம் விரும்புகின்ற ஒழுங்கமைவு மற்றும் இயற்கை சார்ந்த நீதிநெறியாகவும் சித்தரிக்கப்படுகிறது” எனக் கூறியவர் யார்?

கிராப்

  1. “அரசாங்கத்தின் சக்தியாலும் அதிகாரத்தாலும் நிலைப்படுத்தப்பட்ட ஒரே சீரான விதிமுறைகளின் அமைப்பிற்கு சட்டம் என்று பொருள். மேலும் இது நிலைப்படுத்தப்பட்ட எண்ணங்களாகவும், பழக்க வழக்கங்களாகவும் கருதப்படுகிறது₹ எனக் கூறியவர் யார் ?

 உட்ரோ வில்சன்

  1. “மனிதர்களின் புற நடவடிக்கைகளுக்காக இறையாண்மை மிக்க அரசியல் அதிகாரம் மூலம் அமலாக்கம் செய்யப்படும் பொது விதிகளின் தொகுப்பே சட்டமாகும்” என கூறியவர் யார்?

ஹாலந்து

  1. “அரசின் ஆதரவு இல்லையெனில் ஒரு சட்டம் சட்டமாகவே இருக்கமுடியாது .சட்டத்தின் நோக்கமானது உறுதியான அடித்தளங்களை நிறுவவும், மனிதர்களின் மெய்யுறுதியை வலிமையாக்கி அதன் மூலம் சமூகத்தின் கட்டமைப்பை மேம்படுத்த செய்வதுமாகும்” எனக் கூறியவர் யார்?

 மேக்ஐவர்

  1. “சட்டம் அரசை உருவாக்குவது அல்ல மாறாக அரசின் அழுத்தமே சட்டத்தை உருவாக்குகிறது” என கூறியவர் யார்?

ஹாக்கிங்

  1. குடிமக்கள் இடையேயான உறவுகளும் ,அவ்வுறவுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் எந்த சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது?

தனியார் சட்டம்

  1. “தனியார் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனி நபர்களாகவும் அவர்களுக்கு மேலாகவும் இடையேயும் ஓர் பாரபட்சம் இல்லாத நடுவராக அரசு இருக்கிறது ” என கூறியவர் யார்?

ஹாலந்து

  1. குடி மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது எது?

பொது சட்டம்

  1. அரசை வழிநடத்தக் கூடிய அடிப்படை சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 அரசமைப்பு சட்டங்கள்

  1. அரசாங்கத்தின் செயல்பாடுகள் வரையறுத்து தெளிவுபடுத்தக் கூடிய சட்டங்கள் எது?

அரசமைப்பு சட்டங்கள்

  1. அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அதிகாரங்களையும் பற்றியதாக இல்லாமல் குடி மக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சாதாரண சட்டங்கள்

  1. மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும் ,நாடாளுமன்றத்தின் மூலமாக இயற்றப்படும் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 நிரந்தர சட்டங்கள்

  1. நாடாளுமன்றம் இயங்காத காலங்களிலும் அவசர காலங்களிலும் குடியரசுத் தலைவர் மூலம் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 அவசர சட்டம்

  1. பொது சட்டங்கள் எந்த நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டங்களாகும்?

இங்கிலாந்து

  1. அரசாங்க பணியாளர்களின் அலுவல் மற்றும் பொறுப்புகளை பற்றி விளக்கம் அளிப்பதுடன் ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 நிர்வாக சட்டம்

  1. நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவு முறைகளையும் நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பன்னாட்டு சட்டம்

  1. ஜல்லிக்கட்டு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

2017

  1. இந்திய அரசமைப்பின் எந்த சட்ட உறுப்பின் மூலம் கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது?

 சட்டப்பிரிவு 29(1)

  1. “விலங்குகளும் புலன் உணர்வு கொண்டவை ஆதலால் அடிப்படை உரிமை உறுப்பு 29(1)ன்படி வாழும் உரிமையை பெறுகின்றன என்றும் ஆதலால் அவற்றை துன்புறுத்துவதை அனுமதிக்க இயலாது” என்றும் எப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?
SEE ALSO  12TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

2014

  1. “சமச்சீராக்கம் என்பது அசல் குடிமை சட்டத்தோடு இருக்கக்கூடிய விதிமுறை தொகுப்பாகும். நீதியின் அடிப்படையிலும் மரபுகளின் அடிப்படையில் உருவானதால் இவ்வுறுப்புகள் குடிமைச் சட்டத்தின் பயன்பாடுகளை மீறுமளவிற்கு தலையாய புனிதத்தன்மையை பெற்று விளங்குகின்றன” எனக் கூறியவர் யார்?

சர் ஹென்றி மெய்ன்

  1. “அரசியல் புது சட்டத்தை உருவாக்க மட்டுமல்லாது அதனை தெளிவுபடுத்துவதற்காகவும் வழக்காறுகளை செயல்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது” என கூறியவர் யார்?

 கெட்டல்

  1. ஆங்கிலேய பொதுச் சட்ட மரபைப்பின்பற்றும் நாடுகளில் உள்ள சட்ட விதிகளின் தொகுப்பிற்கு என்ன பெயர்?

சமச்சீராக்கம்

  1. சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது உதாரணத்திற்கு இந்தியாவின் விஜ்நானேஸ்வரா மற்றும் அபரார்கா ஆகியோரின் விளக்கவுரைகளைக் கூறலாம் என கூறியவர் யார்?

அ. அப்பாதுரை

  1. “குடிமக்களின் மனங்களிலிருந்து உருவாவது அரசாகும். அவர்கள் நீதிநெறி முகவர்களாவர் .அதேசமயம் நல்லியல்பு இல்லாத கெட்டகுடி மக்களிடம் இருந்து உருவாவது மோசமான அரசும் மோசமான சட்டங்களுமே ஆகும் ” எனக் கூறியவர் யார்?

கில்கிறிஸ்ட்

  1. இந்திய அரசமைப்பின் சட்ட உருவாக்க முறைகள், நாடாளுமன்ற அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி, ஒற்றை குடியுரிமை, ஈரவை அரசாங்கம் போன்றவை எந்த அரசமைப்பில் இருந்து பெறப்பட்டது?

பிரிட்டன் அரசமைப்பு

  1. அடிப்படை உரிமைகள் ,சுதந்திரமான நீதித்துறை ,நீதிப்புனராய்வு, குடியரசுத் தலைவர் பதவி நீக்க நடைமுறை ,உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற விசாரணை ,துணை குடியரசுத் தலைவரின் பங்கு முதலியவை எங்கிருந்து பெறப்பட்டது ?

அமெரிக்க அரசமைப்பு

  1. “தனிமனிதனின் நல்லொழுக்கத்திற்கு சரிசமமாக இயங்கக்கூடியது நல்லரசாகும் .அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்ற போது ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்” என கூறியவர் யார்?

பிளாட்டோ

  1. “நீதி நெறிகள் என்பவை அரசிற்கு அத்தியாவசியமான நிபந்தனையாக விளங்குகிறது. சட்டமும் அரசும் பொதுமக்கள் கருத்தை உருவாக்கவும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன சட்டமானது பொதுக்கருத்தை பிரதிபலிப்பதோடு நல்லியல்புகளின் மேம்பாட்டிற்கான குறியீடாகவும் விளங்குகிறது” என கூறியவர் யார்?

மேக்ஐவர்

  1. “அரசின் சட்டங்கள் என்பவை நீதி நெறியிலான சமூகத்தை உருவாக்குவதாகும்” என கூறியவர் யார்?

 வில்சன்

  1. சமூகக் எதிர்மறையான மது, சூது ,திருட்டு ,வழிப்பறி ,கொலை ,கொள்ளை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சமூக உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 நீதிநெறி

  1. “தற்கால அரசானது நீதிநெறி ,மதம் மற்றும் இயற்கை சட்டத்தின் இலட்சியவாத அடிப்படையில் நீடிக்கிறது எனலாம் .அதேசமயத்தில் அரசு தனது சுய பாதுகாப்பிற்காக மேற்குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீறுகிறது” எனக் கூறியவர் யார்?

J.M கோட்ஸீ

  1. “நீதிநெறி கடமைகளை மறுதலிப்பதும் சட்டக் கடமைகளை மறுதலிப்பதும் நீதி நெறிகளை முற்றிலும் நாசமாகிறது. சட்ட மனசாட்சி மற்றும் நீதிநெறி மனசாட்சி என்ற இருவேறு மனசாட்சிகள் ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒத்துவராதவைகளாகும்” எனக் கூறியவர் யார்?

மேக்ஐவர்

  1. “சட்டமும் ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்யத் தவறும் பட்சத்தில் சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பணைகளாக இவை மாறுகின்றன” எனக் கூறியவர் யார்?

 மார்ட்டின் லூதர் கிங்

  1. “குடியுரிமை என்பது பிறப்பிடம் ,குடும்பம் ,பரம்பரை மற்றும் பண்பாட்டை சார்ந்து அமைவதாகும்” என கூறியவர் யார்?

அரிஸ்டாட்டில்

  1. லட்சிய அரசு என்பது சட்டத்தின் அடிப்படையிலான, சட்டத்தை மதிக்கும் குடிமக்களாலேயே சாத்தியப்படும்” என கருதியவர் யார் ?

அரிஸ்டாட்டில்

  1. “ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு என்றும் நகர அரசில் மட்டுமே அவன் முழுமை அடைவான்” எனக் கூறியவர் யார் ?

அரிஸ்டாட்டில்

  1. மார்ஷலின் கருத்துப்படி குடியுரிமை எத்தனை வகைப்படுகிறது ?

மூன்று : குடிமை ,அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த குடியுரிமைகள்

  1. “எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரை குடிமகன் ஆவார்” எனக் கூறியவர் யார் ?

அரிஸ்டாட்டில்

  1. அரசமைப்பிடம் விசுவாசம், கடமைகளில் அதிகபட்ச திறனுன் இருத்தல் ,நல்லியல்பு மற்றும் நீதி வழுவாமல் ஆகிய மூன்று பண்புகளும் அனைத்து வகை மனிதர்களுக்கும் மிகவும் முக்கியம் எனக் கூறியவர் யார்?
SEE ALSO  12TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு | TNPSC GROUP EXAMS

அரிஸ்டாட்டில்

  1. “கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும் நிலை தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது” என கூறியவர் யார் ?

பிளாட்டோ

  1. வயதான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நலன்சார்ந்த சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?

2007

  1. வயதான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்பு செலவாக மாதம் எவ்வளவு அளிக்க கட்டாயமாக்கப்பட்டது ?

 ரூபாய் 10,000

  1. முதியோர் நலனை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனும் நன்கு அறிந்தே அவர்களை கைவிடும் பட்சத்தில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும்

  1. இந்தியாவில் குடியுரிமையானது எதன் மூலம் பெறப்படுகிறது ?

பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயல்புரிமை மற்றும் பிரதேச உள்ளடக்கத்தின் மூலம்

  1. NRIன் விரிவாக்கம் என்ன?

Non resident indian

  1. OCIன் விரிவாக்கம் என்ன?

Overseas citizen of India

  1. PIOன் விரிவாக்கம் என்ன?

 Person of Indian origin

  1. பொதுமக்களின் விருப்பக்கோரிக்கைகள் என்பது என்ன?

உரிமை

  1. “நீதிநெறியிலானவனாக மனிதனின் பணியை நிறைவேற்றுவதற்குத் தகுந்த அதிகாரங்களே உரிமையாகும் “என கூறியவர் யார்?

டி.எச்.கீரின்

  1. சட்ட உரிமைகள் எத்தனை வகைப்படும்?

மூன்று: குடிமை உரிமைகள் ,அரசியல் உரிமைகள் ,பொருளாதார உரிமைகள்

  1. உரிமைகளில் மிகவும் உயர்வானது எது?

மனித உரிமைகள்

  1. உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

டிசம்பர் 15, 1791

  1. உரிமைகள் மசோதாவை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

ஜேம்ஸ் மாடிசன்

  1. அமெரிக்காவின் உரிமைகள் மசோதா எதன் அடிப்படையில் அமைந்தது?

புகழ்பெற்ற வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனம்

  1. வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?

 1776

  1. இங்கிலாந்தின் மகாசாசனம் எப்போது வெளியிடப்பட்டது?

 1215

  1. எப்போது அரசியலமைப்பு நிர்ணய சபையானது வரைவு குழுவை உருவாக்கியது?

ஆகஸ்ட் 29 1947

  1. அரசமைப்பு நிர்ணய சபையானது வரைவுக் குழுவின் தலைவராக யாரை நியமனம் செய்தது?

டாக்டர் அம்பேத்கர்

  1. அரசியலமைப்பு நிர்ணய சபை வரைவு குழுவின் மூலம் எத்தனை சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்யப்பட்டது?

 7635

  1. தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் எத்தனை மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன?

2437

  1. எப்போது 12 ஆவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத் தொடர் நடைபெற்றது?

ஜனவரி 24 1950

  1. 1950 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் முதலாவது இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?

 ராஜேந்திர பிரசாத்

  1. அரசமைப்பு நிர்ணய சபையானது இந்திய அரசமைப்பு சட்டத்தினை வரையறை செய்ய எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது?

 2 ஆண்டுகள் ,11 மாதங்கள், 20 நாட்கள்

  1. இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் அடிப்படை உரிமைகள் உள்ளன?

 பகுதி 3

  1. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உத்தரவாதத்தை அளிக்கும் உரிமை எது?

சமத்துவ உரிமை

  1. மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் என்னென்ன?

சுதந்திரம் மற்றும் சமத்துவம்

  1. “கடமைகள் மற்றும் உரிமைகள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவை. பின் உள்ள உரிமைகள் வழங்கும் சலுகைகள் தான் தனது கடமைகளை ஒருவர் செய்வதற்கு காரணமாகிறது” என கூறியவர் யார் ?

மகாத்மா காந்தி

  1. ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும் தேசப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எது?

 தடுப்புக்காவல்

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் படி ஒவ்வொருவரும் மதவிவகாரங்களின் அடிப்படையில் சேவை புரிவதற்காக நிறுவனங்களை உருவாக்கி அதற்கான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உரிமையாக்கி சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கலாம் என கூறுகின்றது?

 அரசமைப்பு உறுப்பு 26

  1. ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் பரிகாரம் செய்ய எந்த அரசமைப்பின் உறுப்பு உதவுகிறது?

உறுப்பு 32

  1. ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் பரிகாரம் செய்ய எந்த அரசமைப்பின் உறுப்பு உதவுகிறது?

 உறுப்பு 226

  1. உச்சநீதிமன்றம் எத்தனை நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கிறது?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS

 5

  1. ஐந்து வகை நீதிப் பேராணைகள் என்னென்ன?

ஆட்கொணர்வு நீதிப்பேராணை, கட்டளை நீதிப் பேராணை, சான்றாய்வு நீதிப்பேராணை, தகுதி வினவும் நீதிப்பேராணை, தடை நீதிப்பேராணை அல்லது தடை உத்தரவு

  1. தகவல் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

2005

  1. அரசின் நேரடி வழிகாட்டு நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது ?

பகுதி-4

  1. எத்தனை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி தற்போது அடிப்படை உரிமைகளில் உள்ளது?

 6 வயது முதல் 14 வயது வரை

  1. “அரசியல் கடப்பாடு என்பது ஓர் ஆளுகைக்கு உட்பட்டோருக்கு இறையாண்மை மிக்க ஆள்வோரிடம் உள்ள கடப்பாடு , குடிமகனுக்கு அரசிடம்  உள்ள கடப்பாடு சக மனிதருக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடு போன்றவைகள் ஆகும். இதனை அரசியல் உயர் பதவியில் இருப்பவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள்” என கூறியவர் யார்?

 டி.எச்.கிரீன்

  1. அரசியல் கடப்பாடுகள் எத்தனை வகைப்படும்?

 4: நீதிநெறி கடப்பாடு, சட்டப்படியான கடப்பாடு, நேர்மறை கடப்பாடு ,எதிர்மறை கடப்பாடு

  1. குற்றம் செய்தல் என்பது எந்த வகை கடப்பாடு?

 எதிர்மறை கடப்பாடு

  1. மார்க்சின் கோட்பாடு எத்தனை நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது ?

மூன்று:புரட்சிக்கு முந்தைய நிலை, புரட்சிகால நிலை& புரட்சிக்குப் பிந்தைய நிலை

  1. எந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் பெண்களுக்கும் ஆண்களைப் போன்ற பிரிக்கப்படாத குடும்ப பாரம்பரியத்தில் சமமான பங்கு உண்டு என்ற உரிமையை வழங்கியுள்ளது?

 1956

  1. எத்தனையாவது சட்ட திருத்தத்தின் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?

 44வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

  1. 44வது அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் வருடம் என்ன ?

 1977

  1. தற்போது சொத்து உரிமை எந்த விதியின் கீழ் சாதாரண உரிமையாக வழங்கப்பட்டுள்ளது ?

 விதி 300 (A)


11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின்  அடிப்படை கருத்தாக்கங்கள் 2| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

 

Leave a Comment

error: