11TH HISTORY STUDY NOTES | பாமினி & விஜயநகர பேரரசு | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. தேவகிரி முகமது பின் துக்ளக் காலத்தில் என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

தௌலதாபாத்

  1. சுதந்திரமான மதுரை சுல்தானியம் எப்போது உருவானது?

 1333

  1. வடக்கு கர்நாடகாவில் ஜாபர்கான் எப்போது தன்னை சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார் ?

1345

  1. ஜாபர் கான் தனது தலைநகரை தேவகிரியிலிருந்து எங்கு மாற்றினார்?

குல்பர்கா

  1. ஜாபர் கான் என்ன பட்டத்தைச் சூடிக் கொண்டார்?

 பாமன் ஷா

  1. பாமினி அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?

ஜாபர்கான் அல்லது பாமன்ஷா

  1. எந்த ஆண்டு விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது ?

 1336

  1. யாரால் விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது?

சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர்

  1. விஜயநகர பேரரசு எதனை தலைநகராகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டது?

 விஜயநகர்

  1. விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

துங்கபத்திரா நதிக்கரை

  1. எந்த இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவழி ,அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன?

மனுசரிதம், சாளுவவையுதயம்

  1. எந்த நூல் கிருஷ்ணதேவராயரின் கீழிருந்த நாயக்க முறை பற்றிய தகவல்களைத் தருகின்றது?

ராயவாசகமு

  1. ராயவாசகமு எந்த மொழியில் எழுதப்பட்டது ?

தெலுங்கு

  1. இபன் பதூதா எந்த நாட்டு பயணி?

மொரோக்கோ

  1. அப்துர் ரசாக் எந்த நாட்டு பயணி ?

பாரசீகம்

  1. நிகிடின் எந்த நாடு பயணி ?

ரஷ்யா

  1. டோமிங்கோ பயஸ் எந்த நாட்டு பயணி?

போர்த்துக்கல் நாடு

  1. நூனிஸ் எந்த நாட்டுப் பயணி ?

இத்தாலி

  1. விஜயநகர அரசர்கள் என்ன பெயரில்  தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்?

வராகன்

  1. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

பொன்

  1. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

ஹொன்னு

  1. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட வராகன் என்ற தங்க நாணயத்தில் என்ன விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன?

 காளை, யானை, கண்டபெருண்டா

  1. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தில் அரசருடைய பெயர் என்ன எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது ?

நகரி அல்லது கன்னட எழுத்து வடிவம்

  1. அலாவுதீன் ஹசன் பாமன்ஷா சுமுகமான நிர்வாகத்திற்காக டெல்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றி தன் ஆட்சிப் பகுதியை எத்தனை பிரிவுகளாகப் பிரித்தார்?

 நான்கு

  1. அலாவுதீன் ஹசன் பாமன் ஷா பிரித்த ஆட்சிப்பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 தராப்ஸ்

  1. அலாவுதீன் ஹசன் பாமன் ஷா பிரித்த பகுதிகள் என்னென்ன ?

 குல்பர்கா, தௌலதாபாத்,பீடார்,பெரார்

  1. அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை என்னவாக பொறித்துக் கொண்டார்?

இரண்டாம் அலெக்சாண்டர்

  1. அலாவுதீன் ஹசன் பாமன் ஷாவின் காலம் என்ன?

1347-1358

  1. முதலாம் முகமதுவின் காலம் என்ன?

 1358-1375

  1. எந்த ஆண்டு முதலாம் முகமது வாராங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்?

1363

  1. ஆகாய நீல வண்ணத்திலுள்ள ரத்தின கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என எந்த நூல் குறிப்பிடுகிறது?

ஷாநாமா

  1. ஷாநாமா நூலை எழுதியவர் யார்?

 பிர்தௌசி

  1. எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தியவர் யார் ?

 முதலாம் முகமது

  1. படைத் தலைவர் மற்றும் அரசருக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

வகில்-உஸ்- சுல்தானா

  1. மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர் யார்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | ஹர்ஷர் மற்றும் பிரதேச மக்களின் எழுச்சி| TNPSC GROUP EXAMS

வசீர்-குல்

  1. நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

அமீர்-இ-ஜூம்லா

  1. வெளியுறவு அமைச்சர் ,அரசு விவகாரத்துறை அமைச்சர் ,அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்பு உடையவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

வசீர்-இ-அஷ்ரப்

  1. நிதித்துறை இணையமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

நசீர்

  1. அரச படைகளின் பொறுப்பாளர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

பேஷ்வா

  1. காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி எவ்வாறு அழைக்கப்படுவார்?

கொத்வால்

  1. தலைமை நீதிபதி, சமய அறநிலையத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

சதர்-இ-ஜஹான்

  1. முதலாம் முகமது காலத்தில் எப்போது தலைநகரம் குல்பர்கா விலிருந்து பீடாருக்கு மாற்றப்பட்டது?

 1429

  1. சிறந்த அமைச்சராக விளங்கிய முகமது கவான் யாருடைய ஆட்சிக் காலத்தில் அமைச்சராக விளங்கினார் ?

மூன்றாம் முகமது

  1. முகமது கவான் எங்கு பிறந்தார் ?

பாரசீகம்

  1. முகமது கவான் எங்கு ஒரு மதரஸாவை நிறுவிய அவர் அதில் ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்தார்?

 பீடார்

  1. கோல்கொண்டா கோட்டையை கட்டியவர் யார்?

ராஜா கிருஷ்ணதேவ்

  1. ராஜா கிருஷ்ணதேவ் எந்த அரச வம்சத்தைச் சார்ந்தவர்?

காகத்திய அரச வம்சம்

  1. 1495-1496 கோல்கொண்டா கோட்டை யாருக்கு ஜாகீராக தரப்பட்டது?

சுல்தான் குலிகுதப்ஷா

  1. எந்த நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைர சந்தையாக திகழ்ந்தது ?

 17ஆம் நூற்றாண்டு

  1. கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பாலா ஹிசார்

  1. கோல்கொண்டா கோட்டையில் யாருடைய கல்லறை உள்ளது?

குதுப்ஷாகி

  1. கோல்கொண்டா கோட்டையின் நுழைவு வாயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பதேதர்வாசா அல்லது வெற்றி நுழைவாயில்

  1. ஔரங்கசீப் எத்தனை மாதங்கள் முற்றுகையிட்டு கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றினார் ?

எட்டு மாதங்கள்

  1. ஔரங்கசீப் எந்த ஆண்டு கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றினார் ?

1687

  1. பாமினி அரசை நிர்வாக வசதிக்காக நாட்டை எட்டு மாகாணங்களாகப் பிரித்தவர் யார் ?

முகமது கவான்

  1. மூன்றாம் முகமது இறந்தபின் பாமினி பேரரசு எத்தனை அரசுகளாக பிரிந்தது?

ஐந்து பீஜப்பூர், அகமதுநகர் ,கோல்கொண்டா, பீடார்,பெரார்

  1. ராட்சஷி தங்கடிப் போர் என அழைக்கப்படும் போர் எது ?

தலைக்கோட்டை போர்

  1. தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

 1565

  1. ஹரிஹரர் மற்றும் புக்கர் யாரிடம் சில காலம் பணி செய்தனர்?

 ஹொய்சாள அரசர்

  1. மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட ஹொய்சாள அரசர் யார் ?

மூன்றாம் பல்லாலர்

  1. விஜயநகர அரசின் தொடக்க காலத்தில் துங்கபத்ரா நதியின் வடகரையில் எந்த இடத்தின் அருகே தலைநகர் அமைந்திருந்தது?

அனகொண்டி

  1. அனகொண்டி இடத்திலிருந்து தலைநகரம் எந்த இடத்திற்கு மாற்றப்பட்டது?

ஹொசபட்டனா

  1. விஜயநகரம் என்பதன் பொருள் என்ன?

 வெற்றியின் நகரம்

  1. விஜயநகர பேரரசு நிறுவியதில் எந்த சமஸ்கிருத அறிஞர் முக்கிய பங்காற்றினார்?

வித்யாரண்யர்

  1. வித்யாரண்யர் கல்வெட்டு சான்றுகளின்படி எந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்?

 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி

  1. விஜயநகர அரசு எத்தனை அரச வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டது?

 நான்கு: சங்கம  வம்சம் ,சாளுவ வம்சம், துளுவ வம்சம் ,ஆரவீடு வம்சம்

  1. விஜயநகர அரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது?

 300 ஆண்டுகள்

  1. முதலாம் புக்கரின் ஆட்சியின் போது தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டல பகுதியை ஆண்டு வந்தவர் யார் ?

 சம்புவராயர்

  1. மதுரை சுல்தானை 1370 இல் கொன்றதன் மூலம் மதுரை சுல்தான் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார் ?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | பிரதேச முடி அரசுகளின் தோற்றமும் புதிய மதப் பிரிவுகள் உருவாக்கமும்| TNPSC GROUP EXAMS

குமார கம்பண்ணா

  1. மதுரா விஜயம் என்ன மொழியில் எழுதப்பட்ட நூல்?

சமஸ்கிருத மொழி

  1. மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார் ?

கங்காதேவி

  1. கங்காதேவி யாருடைய மனைவி?

குமார கம்பண்ணா

  1. ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி விஜயநகருக்கும் ஒரிசாவை சேர்ந்த எந்த அரசுக்கும் இடையே நடைபெற்றது?

கஜபதி அரசு

  1. சங்கம வம்ச அரசர்கள் மிகச் சிறந்த அரசர் யார் ?

இரண்டாம் தேவராயர்

  1. இரண்டாம் தேவராயரின் காலத்தில் வந்த பாரசீக நாட்டின் தூதுவர் யார்?

அப்துர் ரசாக்

  1. எந்த ஆண்டு சாளுவ வம்சத்தின் ஆட்சி தொடங்கியது?

1485

  1. சாளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?

தளபதி சாளுவ நரசிம்மர்

  1. சாளுவ நரசிம்மர் எப்போது மரணம் அடைந்தார்?

1491

  1. துளுவ வம்சத்தின் ஆட்சி எப்போது தொடங்கியது?

1505

  1. துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார் ?

 வீரநரசிம்மர்

  1. கிருஷ்ணதேவராயரின் காலம் என்ன?

 1509 -1529

  1. கிருஷ்ணதேவராயர் தனது வெற்றி துணை எங்கு நிறுவினார்?

சிம்மாச்சலம்

  1. விஜயநகருக்கு ராணுவ உதவிகளை செய்து வந்த வெளிநாட்டவர் யார் ?

போர்ச்சுக்கீசியர்கள்

  1. போர்ச்சுகீசியர்கள் விஜயநகர அரசு காலத்தில் எந்த இடத்தில் கோட்டை கட்டிக் கொள்ளும் உரிமையைப் பெற்றனர்?

பத்கல்

  1. கிருஷ்ணதேவராயரின் சம காலத்து வெளிநாட்டு பயணிகள் யார்?

 நூனிஸ், டோமிங்கோ பயஸ்

  1. ஆமுக்தமால்யதா எனும் நூலை எழுதியவர் யார்?

கிருஷ்ணதேவராயர்

  1. ஆமுக்தமால்யதா என்பதன் பொருள் என்ன?

ஆண்டாளின் கதை

  1. நாயக் அல்லது நாயக்ங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தை கொடுத்தவர் யார்?

கிருஷ்ணதேவராயர்

  1. கிருஷ்ணதேவராயர் இறந்தபோது அவருடைய மகன் குழந்தையாக இருந்ததால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார் ?

 சகோதரர் அச்சுத தேவராயர்

  1. சாளுவநாயக் என்றும் அறியப்படுபவர் யார்?

செல்லப்பா

  1. அச்சுத தேவராயர் எப்போது மரணம் அடைந்தார் ?

 1542

  1. அச்சுத தேவராயர் இறப்பிற்குப்பிறகு உண்மையான அரசு அதிகாரம் யாரிடம் இருந்தது ?

ராமராஜா

  1. போர்ச்சுக்கீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசுக்கு குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தியவர் யார் ?

ராமராஜா

  1. ஆரவீடு வம்ச ஆட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

 1570

  1. ஆரவீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார் ?

ராமராஜாவின் சகோதரர்

  1. விஜயநகர அரசுக் காலத்தில் முதலமைச்சர் இவ்வாறு அழைக்கப்பட்டார்?

மகா பிரதானி

  1. விஜயநகர அரசுக் காலத்தில் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 தளவாய்

  1. விஜயநகர அரசுக் காலத்தில் அரண்மனை பாதுகாவலர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

 வாசல்

  1. விஜயநகர அரசுக் காலத்தில் செயலர்/ கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 ராயசம்

  1. விஜயநகர அரசுக் காலத்தில் தனி உதவியாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

அடைப்பம்

  1. விஜயநகர அரசுக் காலத்தில் செயல் முகவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 காரிய கர்த்தா

  1. விஜயநகர அரசுக் காலத்தில் நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டது ?

ராஜ்ய எனும்  மண்டலங்களாக

  1. 1400ல் தமிழகப் பகுதிகளில் இருந்த ஐந்து ராஜ்யாக்கள் என்னென்ன?

சந்திரகிரி ,படைவீடு ,வழுதலம்பட்டு ,திருச்சிராப்பள்ளி, திருவாரூர்

  1. ஒவ்வொரு ராஜ்யாவும் என்னவாகப் பிரிக்கப்பட்டிருந்தது ?

சீமை ,ஸ்தலம், கம்பனா

  1. நாயக் முறை யாரால் அறிமுகமானது?

 துளுவ வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர்

  1. நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகு எது?

கிராமம்

  1. நாயக்க எனும் சொல் தெலுங்கு கன்னட பகுதிகளில் பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS

ராணுவ தலைவர் அல்லது ராணுவ வீரர்

  1. இக்தா முறை எந்த அரசர் வம்சத்தில் பின்பற்றப்பட்டது?

டெல்லி சுல்தானியம்

  1. ராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை விஜயநகர காலத்தில் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 நாயக்கட்டணம்

  1. ராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை விஜயநகர காலத்தில் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 நாயக்தானம்

  1. ராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை விஜயநகர காலத்தில் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

நாயன்கரமு

  1. விஜயநகர அரசு எத்தனை க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது?

 200

  1. நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரை காலாட்படை வீரர்கள் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசுக்கு இராணுவ சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என குறிப்பிடுபவர் யார்?

நூனிஸ்

  1. வேளாண்மை அல்லாத பிரிவுகளை சார்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

 பட்டடை அல்லது காஸயவர்க்கம்

  1. ராமநாதபுரம் சிற்றரசு யாரால் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துவங்கி வைக்கப்பட்டது?

முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்


11TH HISTORY STUDY NOTES | பாமினி & விஜயநகர பேரரசு | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: