11TH HISTORY STUDY NOTES | பண்டைய இந்தியா செம்பு கால பெருங்கற்கால இரும்பு கால வேதகால பண்பாடுகள்| TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. தொடக்ககால வேதப் பண்பாடு இந்தியாவின் எந்த பண்பாட்டுடன் பொருந்துகிறது ?

செம்பு கால பண்பாடு

  1. பிற்கால வேத பண்பாடு இந்தியாவின் எந்த காலத்தை சேர்ந்த பண்பாட்டோடு  பொருந்துகிறது?

 இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப் பாண்டப் பண்பாடு

  1. வேதங்கள் எத்தனை வகைப்படும் ?

4: ரிக், யஜுர் ,சாம ,அதர்வணம்

  1. வேதங்களில் பழமையானது எது?

 ரிக் வேதம்

  1. எந்த நூற்றாண்டுகளில் வேதப் பாடல்கள் முதன்முதலாக எழுத பெற்றதாக அறியப்படுகிறது?

கிபி 10 11ஆம் நூற்றாண்டு

  1. வேதப் பாடல்களில் முக்கிய தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

சங்கீதைகள்

  1. சங்கீதைகளில் மிகப்பழமையானது எது ?

ரிக்வேத சங்கீதை

  1. ரிக்வேதசங்கீதையின் காலம்?

கிமு 1500- கிமு 1000 இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது

  1. ரிக்வேத மொத்தம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது ?

10

  1. ரிக் வேதத்தின் எந்த காண்டங்கள் முதலில் எழுதப்பட்டது என கருதப்படுகிறது?

2 முதல் 7 வரை

  1. ரிக் வேதத்தின் எந்த காண்டங்கள் பிற் காலத்தைச் சேர்ந்தவை என கருதப்படுகிறது ?

 1,8,9,10

  1. ஒவ்வொரு சங்கிதையும் என்ன இணைப்பு குறிப்புகளைக் கொண்டுள்ளன?

பிராமணங்கள்

  1. பிராமணங்கள் எவற்றை உள்ளடக்கியுள்ளது?

பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த விளக்க உரை

  1. பிராமணங்கள் எது இயற்றப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது?

சங்கீதைகள்

  1. ஒவ்வொரு பிராமணமும் எவற்றை கொண்டுள்ளது?

ஓர் ஆரண்யகம் ,ஓர் உபநிடதம்

  1. காடுகளில் வாழும் முனிவர்கள் ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய மந்திர சடங்குகள் குறித்த குறிப்புகளை எது கொண்டுள்ளது?

ஆரண்யகம்

  1. உபநிடதங்கள் எவற்றை உள்ளடக்கியுள்ளது?

தத்துவ கருத்துக்கள், வினாக்கள்

  1. பிற்காலத்தைச் சேர்ந்த வேதங்கள் எவை ?

யஜுர்,சாம அதர்வணம்

  1. பிராமணங்கள், ஆரண்யகங்கள் ,உபநிடதங்கள் எந்த காலத்தில் இயற்றப்பட்டவை?

வேத காலத்தின் இறுதி

  1. இந்திய இசை மரபின் அடித்தளமாக கருதப்படும் வேதும் எது?

 சாமவேதம்

  1. சடங்குகளையும் பாடல்களையும் கொண்டுள்ள வேதம் எது?

யஜுர் வேதம்

  1. மாய மந்திரங்கள் அடங்கிய வேதம்?

அதர்வண வேதம்

  1. ஜெண்ட் அவஸ்தா எனப்படும் நூல் எந்த மதத்தைச் சார்ந்தது ?

 ஜொராஸ்டிரியா

  1. ஜெண்ட் அவஸ்தா நூல் எந்த மக்களை குறித்த செய்திகளை கூறுகிறது?

இந்தோ-ஈரானிய மொழிகளை பேசி வந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு ,அவர்களின் கடவுள்கள் குறித்து

  1. Chalco என்பதன் பொருள் என்ன ?

செம்பு

  1. Lith என்பதன் பொருள் என்ன?

கல்

  1. பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்ட பண்பாட்டின் காலம் என்ன?

கிமு 2600 முதல் கிமு 1200 வரை

  1. பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்ட பண்பாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நலிந்த ஹரப்பா பண்பாடு/செம்பு பொருட்குவியல் பண்பாடு

  1. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாடு எந்த காலத்தோடு ஒத்துப்போகிறது?

இரும்பு காலம்

  1. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாட்டின் காலம் என்ன?

கிமு 1100 முதல் கிமு 800 வரை

  1. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாட்டை தொடர்ந்து வட இந்தியாவில் என்ன பண்பாடு தோன்றியது?

மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்ட பண்பாடு

  1. மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்ட பண்பாடு யாருடைய காலத்தோடு தொடர்புடையது?

மௌரியர் காலத்து மகாஜனபதங்கள்

  1. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாடு வட இந்தியாவின் எந்த கால பண்பாடாக கணக்கிடப்படுகிறது ?

இரும்பு காலப் பண்பாடு

  1. தென்னிந்தியாவில் இரும்பு காலம் என்ன பண்பாடாக உள்ளது ?

ஈமச்சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடு

  1. ஈமச் சடங்கின் போது பெரிய கற்பாறைகளை பயன்படுத்தி வட்ட வடிவம், குத்துக்கல் என பலவகையான கல்லறைகளை உருவாக்குதல் எந்த கால பண்பாட்டுக் கூறாக அறியப்படுகிறது?

பெருங்கற்காலப் பண்பாடு

  1. பெருங்கற்காலப் பண்பாட்டின் கூறான தாழியில் புதைக்கும் வழக்கத்திற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?

ஆதிச்சநல்லூர்

  1. தமிழகத்தில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட புதைமேடுகளில் மட்டும் என்ன நிற மட்பாண்டங்கள் அதிகம் கிடைக்கின்றன?

கருப்பு நிற மட்பாண்டங்கள்

  1. பெருங்கற்கால ஈம நடைமுறைகள் எந்த ஆண்டு வரை தொடர்வதாக மதிப்பிடப்படுகிறது ?

 கி.மு இரண்டு- மூன்றாம் நூற்றாண்டுகள் வரை

  1. எந்த ஆற்றுப்பகுதியில் தமிழகத்தின் பழையகாலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் காணப்படுகின்றன?

வைகை ஆற்றுப் படுகை

  1. வைகை ஆற்றுப்படுகையில் காணப்பட்ட நடுகற்கள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை?

கிமு இரண்டாம் நூற்றாண்டு அல்லது முதல் நூற்றாண்டு

  1. போரில் இறந்த வீரர்களின் நினைவாக நடப்படும் நடுகல் மரபு எந்த மரபின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது?
SEE ALSO  8TH ZOOLOGY STUDY NOTES |பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை| TNPSC GROUP EXAMS

ஈமக் குத்துக்கல்

  1. கருப்பு சிவப்பு வண்ண மட்கலன்கள் மனித எலும்பு சான்றுகள் மற்றும் இரும்பு பொருட்களுடன் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் உள்ள எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

வடமலைகுண்டா

  1. உப்பாறு நதிக்கரையில் பண்டைய கால மனிதர்கள் வாழிடங்கள் இருந்ததை சுட்டிக்காட்டும் பழமையான குத்துக்கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

திருப்பூர் மாவட்டம் சிங்காரிபாளையம் குந்தலம் அருகே

  1. ஆதிச்சநல்லூரில் ஆண்டிரு சாகர் எப்போது  அகழ்வாய்வு மேற்கொண்டார்?

1876

  1. ஆண்டிரு சாகர் எந்த நாட்டைச் சார்ந்தவர் ?

ஜெர்மனி

  1. யாருடைய மேற்பார்வையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு களை புகைப்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை தயார் செய்து இந்திய தொல்லியல் துறையின் 1902-03 ஆண்டறிக்கையில் வெளியிட்டவர் யார் ?

அலெக்சாண்டர் ரீ

  1. கால்டுவெல் எந்த இடத்திற்கு வந்திருந்தபோது செம்பிலான  வளையல் ஒன்றைக் கண்டெடுத்தார்?

ஆதிச்சநல்லூர்

  1. பையம்பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது?

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா

  1. இந்திய தொல்லியல் துறை பையன் பள்ளியில் எந்த ஆண்டு அகழ்வாய்வுப்‌பணியை நடத்தியது?

1960

  1. கொடுமணல் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

நொய்யல் ஆறு

  1. எந்த சங்க நூலில் சேர அரசனுக்கு சொந்தமான கொடுமணம் என்ற ஊர் அங்கு கிடைக்கும் விலைமதிப்புமிக்க கற்களுக்காக புகழப்படுகிறது?

பதிற்றுப்பத்து

  1. கொடுமணல் பகுதியில் யாருடைய நாணய குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது?

ரோமானிய நாணய குவியல்கள்

  1. ரிக் வேதம் என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது?

சமஸ்கிருதம்

  1. ரிக் வேதத்தில் எந்த மொழிகளைச் சேர்ந்த 300 சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன ?

முண்டா மற்றும் திராவிட மொழியைச் சேர்ந்தவைகள்

  1. ஆரியர்கள் பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் பூட்டிய தேரை பயன்படுத்தினார்கள் என்பது எந்த வேதத்தின் மூலம் உறுதியாகிறது ?

ரிக்வேதம்

  1. ஆரியர்கள் எங்கிருந்து குடிபெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனர் என அறிஞர்கள் கருதுகின்றனர்?

மத்திய ஆசியா

  1. பாக்டீரியா மார்ஜினா தொல்லியல் வளாகம் எந்த பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையது?

ஆரியப் பண்பாடு

  1. பாக்டீரியா மார்ஜினா தொல்லியல் வளாகத்தின் காலம் என்ன?

கிமு 1900 முதல் கிமு 1500 வரை

  1. இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பற்றிய குறிப்புகள் இன்றைய நவீன ஈராக் பகுதியில் கண்டறியப்பட்ட எந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் காணப்படுகிறது ?

 கிமு 2200

  1. வேதகால கடவுள்களின் பெயர்களை போலுள்ள பெயர்களைக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

 அனதோலியா கல்வெட்டு

  1. அனதோலியா கல்வெட்டு காலம் என்ன?

கி.மு.1900-1700

  1. காஸ்சைட் கல்வெட்டு எந்த இடத்தை சார்ந்தது?

ஈராக்

  1. காஸ்சைட் கல்வெட்டின் காலம் என்ன?

 கி.மு. 1600

  1. மிட்டானி & போகஜ் கல்வெட்டுகள் எந்த இடத்தை சார்ந்தவை?

 சிரியா

  1. இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோர்களிடம் காணப்படுவதாக கூறப்படும் மரபணு எது?

 எம்.17(M17)

  1. ரிக் வேதத்தில் அஸ்வா எனும் சொல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?

 215 முறை

  1. ரிக் வேதத்தில் ரிஷபா எனும் சொல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?

 170 முறை

  1. எந்த வெப்ப மண்டல விலங்குகள் ரிக்வேதத்தில் காணப்படவில்லை ?

புலி, காண்டாமிருகம்

  1. தொடக்க வேதகால பண்பாட்டின் காலம் என்ன?

கிமு 1500- கிமு 1000

  1. தாசர்,தசயு என்பதன் பொருள் என்ன?

கருமை நிறத் தோல் கொண்டவர்கள்

  1. ரிக்வேதத்தில் 90 கோட்டைகள் அல்லது குடியிருப்புகளின் தலைவர் எனக் குறிப்பிடப்படுபவர் யார் ?

குலிதாரா என்பவரின் மகனான சம்பரா

  1. சம்பரா எனும் தலைவன் பரத குலத்தைச் சேர்ந்த யாரால் தோற்கடிக்கப்பட்டதாக இருக்கு வேதம் குறிப்பிடுகிறது?

திவோதசா

  1. ரிக் வேதத்தில் மக்களின் வாழ்விடங்களும் நிலப்பகுதிகளும் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?

ஜனா,விஷ்,கணா,கிராம,குலா

  1. ரிக் வேதத்தில் இந்திரன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

புரந்தரா

  1. புரந்தரா என்பதன் பொருள் என்ன?

குடியிருப்புகளை அழிப்பவன்

  1. ஜனா என்ற சொல்லின் பொருள் என்ன?

பழங்குடி, இனக் குழு

  1. ரிக்வேதத்தில் முதன்முதலாக குறிப்பிடப்படும் பரத குலத்தின் பெயரை ஒட்டி இந்திய பகுதிகளுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?

பாரதவர்ஷா

  1. பத்து அரசர்களின் போர் எந்த ஆற்றங்கரையில் நடைபெற்றது ?

புருசினி ஆற்றங்கரை

  1. புருசினி ஆறு இன்றைய என்ன ஆறாக அடையாளம் காணப்பட்டுள்ளது?

 ராவி ஆறு

  1. எந்து இரண்டு குலத்தவர் ஒன்றிணைந்து குரு குலத்தை தோற்றுவித்தனர்?

புரு மற்றும் பரத குலம்

  1. நிறத்தையும் வகையையும் சுட்டிக் காட்டுவதற்காக ஆரியர்கள் என்ன சொல்லை பயன்படுத்தினர்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | குப்தர் | TNPSC GROUP EXAMS

வர்ண

  1. ஆரிய வர்ண ,தச வர்ண எனக் குறிப்பிடும் வேதம் எது?

 ரிக் வேதம்

  1. வர்ணங்கள் தோன்றியுள்ளதை பற்றி குறிப்பிடும் புருஷ சூக்தம் என்னும் பகுதி எந்த வேதத்தில் உள்ளது?

 ரிக்வேதம்

  1. ரிக் வேதத்தில் ஜனா எனும் சொல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?

21 முறை

  1. சாதாரண மக்களை குறிப்பிடக் கூடிய விஷ் என்ற சொல் ரிக் வேதத்தில் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?

 170 முறை

  1. கிருஹா என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?

குடும்பம்

  1. ஒரு இனக்குழுவின் முக்கியமான சமூக அலகு எது ?

குடும்பம்

  1. குடும்பத்திற்கு தலைமை ஏற்றவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

 கிருகபதி

  1. கிருகபதியின் மனைவி எவ்வாறு அழைக்கப்படுவார்?

ஸபத்தினி

  1. கலப்பையின் கொழு முனை எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ?

ரிக் வேதம்

  1. வேளாண் நிலம் ரிக் வேதத்தில் எவ்வாறு அறியப்பட்டிருந்தது ?

 க்ஷேத்ரா

  1. கிருஷி என்ற சொல் எதைக் குறிக்கிறது?

 உழவு

  1. லங்கலா,சுரா ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன?

கலப்பை

  1. சீத்தா என்ற சொல் எதைக் குறிக்கிறது?

கலப்பையின் கொழுமுனை

  1. ரிக் வேத கால மக்கள் எவற்றை பயிரிட்டனர் ?

பார்லி (யவம்),கோதுமை (கோதுமா)

  1. ரிக் வேதத்தில் போர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல் எது ?

காவிஸ்தி

  1. காவிஸ்தி என்ற சொல்லின் பொருள் என்ன ?

பசுக்களை தேடுவது

  1. ரிக் வேதத்தில் இடம் பெறும் அயஸ் எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

செம்பு மற்றும் வெண்கலம்

  1. ரிக் வேதத்தில் உலோக வேலை செய்வோரை குறிக்கும் சொல் எது?

கர்மரா

  1. ரிக் வேதத்தில் நூலைக் குறிக்கும் சொல் எது?

ஸ்ரி

  1. ரிக் வேதத்தில் மர வேலை செய்வோரை குறிக்கும் சொல் எது?

 தச்சன்

  1. பான் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

பண்டமாற்று

  1. பானி என்போர் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர்?

வணிகர்கள்

  1. நிஷ்கா என்பதன் பொருள்?

தங்க வெள்ளி அணிகலன்கள்

  1. தக்ஷிணா என்பதன் பொருள் என்ன?

குறிப்பிட்ட சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணம்

  1. இனக் குழுவின் தலைவர்களில் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்?

கோபா மற்றும் கோபதி

  1. ரிக் வேதத்தில் காணப்பட்ட அமைப்புகள் என்னென்ன?

சபா ,சமிதி ,விதாதா ,கணா

  1. வயதில் மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பின் பெயர் என்ன?

சபா

  1. ரிக் வேத காலத்தில் மக்கள் கூடும் இடத்தின் பெயர் என்ன?

சமிதி

  1. ரிக்வேத காலத்தில் இனக்குழுக்களின் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விததா

  1. ரிக்வேத காலத்தில் ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு அமைப்பு எது?

விததா

  1. ரிக்வேத காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 சேனானி

  1. ரிக்வேத காலத்தில் மக்கள் தாமாகவே அரசனுக்கு வரி செலுத்துவது எவ்வாறு அழைக்கப்பட்டது?

பலி

  1. ரிக்வேத காலத்தில் நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி யார் ?

விராஜபதி

  1. படைக் குழுவின் தலைவரான குலேபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு யார் உதவி செய்வார்?

விராஜபதி

  1. கிராமங்களின் தலைவர் யார் ?

கிராமணி

  1. ரிக்வேத காலத்தில் முக்கிய கடவுள் யார்?

இந்திரன்

  1. ரிக்வேத காலத்தில் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான தூதுவன் என கருதப்பட்டது எது?

அக்னி/ நெருப்பு

  1. விடியலின் கடவுள் யார்?

உஷா எனும் பெண் கடவுள்

  1. இயற்கையின் விதிகளை உயர்த்திப் பிடிப்பவர் யார்?

வருணா

  1. தாவரங்களின் கடவுள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

சோமா

  1. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் வலிமையின் கடவுள் யார்?

 மாருத்

  1. பிற்கால வேத பண்பாட்டின் காலம் என்ன?

கி.மு.1000 முதல் கிமு 700-600 வரை

  1. ரிக் வேதத்தில் ஆரியர்களின் தெற்கு எல்லை என குறிக்கப்படும் பகுதிகள் எந்த நூலில் ஆரியர்களின் மத்திய பகுதி என கூறப்பட்டுள்ளது?

ஆத்ரேய பிராமணம்

  1. பிற்கால வேத நூல்களில் எந்த நதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன?

 சரஸ்வதி ,திரிஸ்தவதி

  1. எந்த இடத்தில் வேதங்கள் முண்டா மொழி சொற்களை பெற்றன?

மேல் கங்கை சமவெளி

  1. எந்த வேகத்தில் அங்க, மகத (பீகார்) நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிரிகளாக பார்க்கப்பட்டனர்?

அதர்வண வேதம்

  1. இரும்பு பிற்கால வேத பண்பாட்டில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

சியாமா -அயஸ் அல்லது கிருஷ் அயஸ்

  1. சியாமா -அயஸ் அல்லது கிருஷ் அயஸ் என்பதன் பொருள் என்ன ?

கருப்பு உலோகம்

  1. இரும்பானது எந்த ஆண்டில் அறிமுகம் ஆனதாக கருதப்படுகிறது?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -28|நான்மணிக்கடிகை 

கிமு 700 அல்லது கி.மு 1200

  1. பிற்கால வேத நூல்களில் நகர எனும் சொல் எதனைக் குறிக்கிறது ?

வணிகர்கள் தங்கியிருந்த இடங்கள்

  1. பின் வேதகாலத்தில் செல்வ ஆதாரங்களை கட்டுப்படுத்துவதற்காக என்ன யாகங்கள் நடத்தப்பட்டது?

ஸ்ராதா

  1. வேதகாலத்தில் மாநிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் எது?

ராஷ்ட்ர

  1. வேதகாலத்தில் இறையாண்மை உடைய நாட்டினை குறிக்கும் சொல் எது?

 ராஜ்ய

  1. கிமு முதல் 1000 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட நாடுகளின் உருவாக்கமும் மரபுவழி அரசாட்சியையும் உடைய போக்கை “குல உரிமையிலிருந்து அரசுக்கு” எனக் கூறுபவர் யார் ?

ரோமிலா தாபர்

  1. வேத காலத்தில் நடைபெற்ற தேர்களின் போட்டியை உள்ளடக்கிய சடங்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வாஜபேய யாகம்

  1. எந்த நூல் ஷத்ரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என கூறுகிறது?

பஞ்சவம்ச பிராமணம

  1. எந்த நூல்  சத்திரியர்களை விட பிராமணர்களே உயர்ந்தவர்கள் என கூறுகிறது ?

சதபத பிராமணம்

  1. கோத்திரம் என்ற சொல்லுக்கு பொருளென்ன ?

கிடை

  1. எந்த நூல் அரசர்கள் மேற்கொண்ட கலப்பையோடு தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறுகிறது?

சதபத பிராமணம்

  1. வேத சடங்குகளில் கோதுமையைக் காட்டிலும் எந்த தானியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது?

அரிசி

  1. பின் வேதகாலத்தில் மட்பாண்டங்கள் செய்வோரைக் குறிக்கும் சொல் எது?

குலாலா

  1. கம்பளி நெய்வோரைக் குறிக்கும் சொல் ?

 உர்னா சூத்ரா

  1. சடங்குகளின் கடவுள் யார் ?

ருத்ரன்

  1. ருத்ரனுடைய வேறு பெயர்களான பசுமனம்பதி,சர்வா ,பவா,பகிகா முதலியவற்றை பட்டியலிடும் நூல் எது?

சதபத பிராமணம்

  1. வேத நூல்களின் இறுதிப் பகுதியாக உபநிடதங்கள் இணைக்கப்பட்டதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வேதாந்தங்கள்

  1. சத்யமேவ ஜெயதே வாய்மையே வெல்லும் என்ற சொற்றொடர் எந்த நூலில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது ?

முண்டக உபநிஷத்து

  1. உபநிடதங்களை பாரசீகமொழியில் மொழிப்பெயர்த்த முகலாய இளவரசர் யார்?

தாராசுகோ

  1. பின் வேதகாலத்தில் என்ன இசைக்கருவிகள் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன?

 புல்லாங்குழல் ,மேளம்,வீணை


11TH HISTORY STUDY NOTES | பண்டைய இந்தியா செம்பு கால பெருங்கற்கால இரும்பு கால வேதகால பண்பாடுகள்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

 

Leave a Comment

error: