11TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. எப்போது விஜயநகரப் பேரரசு வீழ்ந்தது?

 1565

  1. ராஜா உடையார் எப்போது அரியணை ஏறினார் ?

1578

  1. எப்போது தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது?

 1610

  1. ஹைதர் அலி எப்போது தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார்?

 1710

  1. ஹைதர் அலியின் தந்தை யார்?

ஃபதே முகமது

  1. ஃபதே முகமது என்ன பதவியை வகித்தார்?

கோலார் பகுதியின் கோட்டை காவல் படை தளபதி (பௌஜ்தார்)

  1. மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்ததால் ஹைதர் என்ன பட்டம் பெற்றார்?

ஃபதே ஹைதர் பகதூர்

  1. ஃபதே ஹைதர் பகதூர் என்பதன் பொருள் என்ன?

வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்

  1. எந்த ஆண்டு ஹைதர்அலி ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் உடன் கூட்டு சேர்ந்தார்?

 1760

  1. எந்த ஆண்டு மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டி கொல்லப்பட்டார்?

 1770

  1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களை தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை வாரன் ஹாஸ்டிங்ஸ் என்ன கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தார்?

சுற்று வேலி கொள்கை

  1. முதலாம் மைசூர் போரின் காலம் என்ன?

 1767-69

  1. மூன்றாம் கர்நாடகப் போரின்போது வங்காளத்தில் இருந்து படைகளை வழிநடத்திய யார் 1759ல் மசூலிப்பட்டினம் கைப்பற்றினார்?

 கர்னல் ஃபோர்டே

  1. கஞ்சம், விசாகப்பட்டினம் ,கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

வட சர்க்கார்

  1. வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசமானதை முகலாய பேரரசர் எந்த உடன்படிக்கையின் மூலம் அங்கீகரித்தார்?

அலகாபாத் உடன்படிக்கை

  1. அலகாபாத் உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?

1765

  1. எந்த ஆண்டு ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து கரூரையும்,ஈரோட்டையும் கைப்பற்றினார்?

 1768

  1. ஹைதர் அலி யாரை தோற்கடித்து கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார்?

கேப்டன் நிக்சன்

  1. ஹைதர் அலியின் எந்த தளபதி மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை நடத்திச் சென்றார்?

ஃபசலுல்லாகான்

  1. இரண்டாவது மைசூர் போரின் காலகட்டம் என்ன?

 1780

  1. அமெரிக்க சுதந்திரப் போருக்கு பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் எந்த ஆண்டு நட்பு உடன்படிக்கை செய்து கொண்டது?

1778

  1. ஹைதர் எந்த ஆண்டு ஆற்காட்டை கைப்பற்றினார்?

 1780

  1. மதராஸை முற்றுகையிட வங்காளத்தில் இருந்து அனுப்பப்பட்டவர் யார்?

 அயர்கூட்

  1. கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்து சிறைப்பிடித்தவர் யார்?

 ஹைதரின் மகன் திப்பு சுல்தான்

  1. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எப்போது ஹைதர் மரணமடைந்தார்?

 1782

  1. பாரிஸ் உடன்படிக்கை எப்போது கையெழுத்தானது?

 1783

  1. கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றியவர் யார்?

கர்னல் லேங்

  1. கர்னல் ஃபுல்லர்டன் எந்த இடங்களை கைப்பற்றினார்?

பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர்

  1. மங்களூர் உடன்படிக்கை எப்போது கையெழுத்தானது?

 1784 மார்ச்

  1. மூன்றாம் மைசூர் போரின் காலம் என்ன?

 1790-92

  1. சால்பை உடன்படிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டது?

1782

  1. திப்பு எப்போது கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் பாரீஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார்?

 1787

  1. திப்புவின் தூதுக்குழுவை நட்புடன் நடத்தியவர் யார் ?

பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி

  1. கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹூசைன் அலியை எங்கு தோற்கடித்தார்?

கள்ளிக்கோட்டை

  1. மூன்றாம் மைசூர் போரில் எதனருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார் ?

ஸ்ரீரங்கப்பட்டணம்

  1. எந்த உடன்படிக்கையின்படி திப்பு சுல்தான் அவருடைய ஆட்சி பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்கு கொடுக்க வேண்டும்?

 ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை

  1. ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி திப்பு சுல்தான் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் ?

மூன்று கோடி ரூபாய்

  1. மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் எப்போது இறந்தார் ?

 1796

  1. திப்பு சுல்தான் மீண்டும் பாரிசுக்கு தூதர்களை எப்போது அனுப்பினார்?

 1796

  1. பிரான்சில் இருப்பதைப்போல ஜேக்கோபியர் கழகம் மைசூரில் எங்கு தொடங்கப்பட்டது?

ஸ்ரீரங்கப்பட்டணம்

  1. துணைப்படை திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேய படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியவர் யார் ?

வெல்லஸ்லி

  1. நான்காம் மைசூர் போரின் காலகட்டம் என்ன?

1799

  1. ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்து கைப்பற்றியவர் யார்?

ஜெனரல் டேவிட் பெயர்டு

  1. திப்புவின் மகன்கள் வேலூர் கிளர்ச்சிக்கு பிறகு எங்கு அனுப்பப்பட்டார்கள்?

கல்கத்தா

  1. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசப் பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர்கள் யார்?

நாகம நாயக்கர், அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கர்

  1. யாருடைய வழிகாட்டுதலின் பெயரில் பாண்டிய பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் 72 பாளையங்களாக மாற்றப்பட்டது?

தளவாய் அரியநாத முதலியார்

  1. பாளையக்காரர் முறை எப்போது தோன்றியது?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| கணியனின் நண்பன்

 1530

  1. முதன்முதலில் பாளையக்காரர் முறை எந்த அரசில் பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது?

 வாரங்கல்லை ஆண்டு வந்த காகதீய அரசு

  • கான்சாகிப் என அழைக்கப்பட்டவர் யார்?

 யூசுப்கான்

  1. கிழக்கிந்திய கம்பெனியில் இந்திய வீரர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

யூசுப்கான்

  1. கர்னல் ஹெரான் உடன் திருநெல்வேலிக்கு படையெடுத்து சென்றவர் யார்?

 மாபூஸ்கான்

  1. நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான யார் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர்?

 மியானா ,முடிமய்யா,நபிகான்கட்டக்

  1. திருவிதாங்கூருக்கு எந்த பகுதி திரும்ப தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாக புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார் ?

களக்காடு

  1. யூசுப்கான் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார் ?

1764

  1. கேப்டன் கேம்பல் நெற்கட்டும் செவ்வல் கோட்டையை முற்றுகையிட்டு எந்த ஆண்டு கைப்பற்றினார்?

1767

  1. யூசுப்கானின் இயற்பெயர் என்ன ?

மருதநாயகம்

  1. யூசுப்கான் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

 இராமநாதபுரம்

  1. யூசுப்கான் எங்கு இருந்த பொழுது இஸ்லாம் சமயத்தை தழுவினார்?

 புதுச்சேரி

  1. யூசுப்கான் எப்போது கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்தார்?

 1752

  1. யூசுப்கான் எப்போது மதுரை ,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆளுநராக பொறுப்பு வகித்தார்?

1756 முதல் 1763 வரை

  1. யூசுப்கான் ஹைதர்அலியை தோற்கடித்து எந்த பகுதியை கைப்பற்றினார்?

சோழவந்தான்

  1. வேலுநாச்சியார் யாருடைய மகள் ?

செல்லமுத்து சேதுபதி

  1. செல்லமுத்து சேதுபதி எந்தப் பகுதியின் அரசர் ஆவார் ?

இராமநாதபுரம்

  1. வேலுநாச்சியார் யாரை மணந்தார்?

சிவகங்கை அரசர் முத்துவடுகர் பெரிய உடையார்

  1. வேலு நாச்சியாரின் மகள் பெயர் என்ன ?

வெள்ளச்சி நாச்சியார்

  1. வேலு நாச்சியார் தன் மகளுடன் தப்பித்து எங்கு அடைக்கலம் புகுந்தார்?

திண்டுக்கல் அருகே விருப்பாட்சி

  1. திண்டுக்கல் அருகே ஹைதர்அலியின் பாதுகாப்பில் வேலுநாச்சியார் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?

 8 ஆண்டுகள்

  1. வேலு நாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயருடன் போரிட்டு எப்போது வென்றார்?

 1780

  1. வேலு நாச்சியாரின் ஆலோசகராக இருந்தவர் யார் ?

சின்னமருது

  1. வேலுநாச்சியாரின் படை தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

 பெரியமருது

  1. சிவகங்கை தோல்விக்குப் பின்னர் மீண்டும் ஆங்கிலேயர் சிவகங்கை மீது எப்போது படையெடுத்து வந்தனர்?

 1783

  1. ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி பிற்காலத்தில் சிவகங்கையின் அரசரானவர் யார்?

வேங்கண் பெரிய உடைய தேவர்

  1. வெள்ளச்சி நாச்சியார் யாருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்?

வேங்கண் பெரிய உடைய தேவர்

  1. வெள்ளச்சி நாச்சியார் எப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார்?

1790

  1. வேலுநாச்சியார் நோயுற்று எந்த ஆண்டு இறந்தார்?

1796

  1. வீரபாண்டிய கட்டபொம்மன் எப்போது பிறந்தார்?

 1761

  1. கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் யாருடைய காலத்தில் குறுநில மன்னராக இருந்தார்?

கர்னல் ஹெரான்

  1. வீரபாண்டிய கட்டபொம்மன் தனது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு பொறுப்பேற்றார் ?

30 வயது

  1. பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்கு கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை எவ்வளவு?

 3310 பகோடாக்கள்

  1. எங்கு அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது?

விஜயநகரம்

  1. ‘பகோடா மரத்தை உலுக்குதல்’என்ற சொலவடை எந்த மக்களிடையே நிலவியது ?

இங்கிலாந்து

  1. பகோடா தமிழில் எவ்வாறு அழைக்கப்படும்?

வராகன்

  1. கலெக்டர் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர் யார்?

லூஷிங்டன்

  1. 1799, செப்டம்பர் 1 அன்று தன்னை கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தவர் யார்?

மேஜர் பானர்மேன்

  1. எங்கு நடைபெற்ற மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்து வைக்கப்பட்டார்?

கோலார்பட்டி

  1. வீரபாண்டிய கட்டபொம்மன் எங்கு மறைந்திருந்தார்?

களப்பூர் காடுகள்

  1. களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுத்தவர் யார்?

 புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான்

  1. எப்போது கட்டபொம்மன் கயத்தாறு எனும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

 1799 ,அக்டோபர் 16

  1. ஆற்காடு நவாப் எந்த ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்கு கொடுத்திருந்தார் ?

 1772

  1. சிவகங்கையின் தலைநகர் எது ?

 சிறுவயல்

  1. நவாப் முகம்மது அலி யாரை சிறையிலிருந்து விடுவித்து அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடி சூட்டினார் ?

முத்துராமலிங்கத் தேவர்

  1. ஊமத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள எந்த பகுதியை கைப்பற்றினார் ?

பழைய நாடு

  1. மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றவர் யார்?

கேப்டன் வில்லியம் பிளாக்பர்ன்

  1. தென்னிந்திய கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?

 1801

  1. ஆங்கிலேயர் மருதுபாண்டியரை எந்த இடத்தில் கைது செய்தனர் ?

சிங்கம்புணரி குன்றுகள்

  1. ஆங்கிலேயர் செவத்தையாவை எந்த பகுதியில் கைது செய்தனர் ?

வத்தலகுண்டு

  1. மருது சகோதரர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர் ?

அக்டோபர் 24,1801

  1. ஊமைத்துரையும் செவத்தையாவும் எப்போது தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | நவீனத்தை நோக்கி | TNPSC GROUP EXAMS

1801 நவம்பர் 16

  1. தென்னிந்திய கிளர்ச்சியின் போது பிடிபட்ட 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில் எந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள்?

மலேசியாவில் உள்ள பினாங்கு

  1. தீரன் சின்னமலை எந்த எந்த பகுதியை சேர்ந்த பாளையக்காரர் ?

கொங்குநாடு 

  1. தீரன் சின்னமலை யாரால் பயிற்சி அளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர் ?

பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

  1. தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்?

 ஜூலை 31, 1805

  1. தீரன் சின்னமலையின் காவிரிக்கரை போர் எப்போது நடைபெற்றது?

 1801

  1. தீரன் சின்னமலையின் ஓடாநிலைப் போர் எப்போது நடைபெற்றது?

 1802

  1. தீரன் சின்னமலையின் அரச்சலூர் போர் எப்போது நடைபெற்றது?

1804

  1. தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார்?

 சங்ககிரி கோட்டை

  1. வேலூர் புரட்சியின் கால கட்டம் என்ன ?

 1806

  1. யார் சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்தார் ?

 துணை ஜெனரல் அக்னியு

  1. வேலூர் கிளர்ச்சியின் முதல் எதிர்ப்பு எப்போது நிகழ்ந்தது?

மே மாதம் 1806

  1. வேலூரில் இருந்து எந்த படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர் ?

நான்காம் ரெஜிமெண்டின் இரண்டாம் படை பிரிவு வீரர்கள்

  1. புதிய தலைப்பாகை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக நம்பியவர் யார்?

 கவர்னர் வில்லியம் பெண்டிங்

  1. வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின் போது பார்வையிடும் வேலையை செய்த அதிகாரி யார்?

இந்திய அதிகாரி ஜமேதார் ஷேக் காசிம்

  1. வேலூர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் யார்?

ஜமாலுதீன்

  1. வேலூர் கோட்டைக்கு வெளியே பணியில் இருந்த அதிகாரியார்?

 மேஜர் கோட்ஸ்

  1. மேஜர் கோட்ஸ் ஆற்காட்டில் பொறுப்பு வகித்த கில்லஸ்பிக்கு கடிதம் எழுதி அதை யாரிடம் கொடுத்து அனுப்பினார்?

கேப்டன் ஸ்டீவன்சன்

  1. கர்னல் கில்லஸ்பி யார் தலைமையிலான படைகளுடன் வேலூருக்கு புறப்பட்டார்?

கேப்டன் யங் , லெப்டினன்ட் உட்ஹவுஸ் ,கர்னல் கென்னடி

  1. யார் தலைமையிலான குதிரைப் படையின் உதவியுடன் கோட்டையின் வெளிக்கதவு தகர்க்கப்பட்டது?

லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன்

  1. கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை எத்தனை நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது?

15 நிமிடங்கள்

  1. ஜூலை 11ல் வேலூர் படையின் தற்காலிக பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

கர்னல் ஹர்கோர்ட்

  1. கேரளப் பகுதிகளில் குடியேறி மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

மாப்பிள்ளைகள்

  1. ஆங்கிலேயர் மலபாரை எப்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்?

 1792

  1. ஜன்மம் என்ற உரிமை பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 ஜன்மி

  1. கனம் என்று உரிமை பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 கனம்தார்

  1. மலபாரில் மஞ்சேரியில் எப்போது கிளர்ச்சி ஏற்பட்டது?

 1849 ஆகஸ்ட் மாதம்

  1. குளத்தூரில் எப்போது கிளர்ச்சி ஏற்பட்டது?

 1851 ஆகஸ்ட்

  1. மலபாரில் வடக்கிலுள்ள மட்டனூரில் எப்போது கிளர்ச்சி ஏற்பட்டது?

 1852 ஜனவரி மாதம் 

  1. கோல்களின் கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?

 1831-32

  1. கோல் என்ற பழங்குடி இனத்தினர் எந்த பகுதிகளில் வாழ்ந்தனர்?

பீகார், ஒரிசா ,சோட்டா நாக்பூர், சிங்க்பும்

  1. சோன்பூர் ,தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் யாருக்கு எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்?

 திக்காடர்கள்

  1. திக்காடர்கள் என்பவர்கள் யார்?

 வரி வசூலிப்போர்

  1. கோல் கிளர்ச்சியின் தலைவர் யார்?

புத்தபகத்

  1. கோல் கிளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் யார்?

பிந்த்ராய் மன்கி

  1. பிந்த்ராய் மன்கி எப்போது சரண் அடைந்ததும் கோல்களின் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது ?

மார்ச் 19, 1832

  1. சந்தால்கள் எந்த பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்?

 வங்காளம், பீகார் ,ஒரிசா

  1. சந்தால்கள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

மஞ்சி

  1. சந்தால் கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?

1855-56

  1. சந்தால்கள் ராஜ்மகல் குண்றுகளை சுற்றியுள்ள பகுதியை திருத்தி அதை எவ்வாறு அழைத்தனர்?

 டாமின்-இ-கோ

  1. தொடக்கத்தில் சந்தால்களின் தலைவராக இருந்தவர் யார்?

 சித்தோ

  1. சித்தோ கைது செய்யப்பட்ட பின்னர் கிளர்ச்சியை நடத்தியவர் யார்?

கானு

  1. முண்டா கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?

 1899- 1900

  1. முண்டாக்கள் எந்தப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள்?

 பீகார்

  1. முண்டாக்களின் கிளர்ச்சி யாரால் வழிநடத்தப்பட்டது?

பிர்சா முண்டா

  1. பிர்சா முண்டா எப்போது பிறந்தார் ?

 1874

  1. ஆங்கிலேயரை விரட்டி விட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனித தூதர் என தன்னை அழைத்துக்கொண்டவர்?

 யார் பிர்சா முண்டா

  1. பிர்சா முண்டா எந்தப் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார்?

சோட்டா நாக்பூர்

  1. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா எப்போது இறந்தார்?
SEE ALSO  8TH GEOGRAPHY STUDY NOTES |வானிலையும் காலநிலையும்| TNPSC GROUP EXAMS

ஜூன் 9 1900

  1. “வங்காள படையின் உருவாக்கம் (the making of the Bengal army)” என்ற நூலை எழுதியவர் யார் ?

வங்காள படையின் ஆங்கிலத் தளபதி கர்னல் மல்லீசன்

  1. “ஒரு இராணுவ வீரர்களின் கலகம் விரைவாக தனது குணாதிசியத்தை மாற்றிக் கொண்டு தேசிய எழுச்சியாக மாறியது” என 1857இல் நடைபெற்ற பெரும் கிளர்ச்சியை பற்றி குறிப்பிடுபவர் யார்?

கர்னல் மல்லீசன்

  1. 1857ல் பெருங் கிளர்ச்சி யை பெருமளவில் உண்மையான விடுதலை போராட்டம் என கூறியவர் யார்?

எட்வர்டு ஜான்சன்

  1. “இந்திய விடுதலைப் போர் (the war of Indian independence)”என்ற நூலின் ஆசிரியர் யார்?

சவார்க்கர்

  1. “இந்திய விடுதலைப் போர் (the war of Indian independence) “என்ற நூல் எப்போது வெளியானது?

 1909

  1. எந்த ஆண்டு லெக்ஸ் லோசி என்ற சட்டம் இயற்றப்பட்டது?

1850

  1. 1857 பெரும் புரட்சி எங்கு தொடங்கியது?

கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பராக்பூர்

  1. எந்த மாதத்தில் பெருங் கிளர்ச்சி ரோகில்கண்ட் பகுதிகளுக்கு பரவியது?

ஜூன் மாதம்

  1. ரோகில்கண்ட்டின் எந்த ஆட்சியாளர் தன்னை பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக்கொண்டார்?

 கான் பகதூர் கான்

  1. ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் எந்த வயதில் அரியணை ஏற்றப்பட்டார்?

 22 வயது

  1. கான்பூரில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?

நானாசாகிப்

  1. கான்பூர் யாரால் கைப்பற்றப்பட்டது?

கேப்டன் கேம்பல்

  1. பேகம் ஹஜ்ரத் மஹால் யாரை அவத்தின் அரசராக அறிவித்தார்?

 தன் மகன் பிர்ஜிஸ் கத்ரா

  1. லக்னோ எப்போது ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது?

 மார்ச் 1858

  1. தாந்தியா தோபே கைதுசெய்யப்பட்டு எப்போது கொல்லப்பட்டார்?

ஏப்ரல் 1858

  1. இரண்டாம் பகதூர் ஷா கைது செய்யப்பட்டு எங்கு நாடு கடத்தப்பட்டார்?

ரங்கூன்

  1. இரண்டாம் பகதூர்ஷா எப்போது இறந்தார் ?

 நவம்பர் 1862

  1. இரண்டாம் பகதூர் ஷா தனது எத்தனையாவது வயதில் மரணமடைந்தார்?

 87

  1. அலகாபாத்தில் எப்போது அரசு தர்பார் கூட்டப்பட்டது ?

நவம்பர் 1 1858

  1. விக்டோரியா ராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் யாரால் வாசிக்கப்பட்டது ?

 கானிங் பிரபு

  1. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?

 கானிங் பிரபு

  1. இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்?

கானிங் பிரபு


11TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 


 

 

Leave a Comment

error: