11TH ETHICS STUDY NOTES |திருவிழாக்கள்| TNPSC GROUP EXAMS

 


  1. சங்க காலத்தில் தமிழகம் எத்தனை வகை நிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?

 5 :குறிஞ்சி, முல்லை ,மருதம், நெய்தல், பாலை

  1. “மாயோன் மேய காடுறை உலகமும் ,சேயோன் மேய மைவரை உலகமும்..” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

தொல்காப்பியம்

  1. தொல்காப்பியர் எந்த நிலத்தைத் தவிர மற்ற நால்வகை நிலத்திற்குரிய தெய்வங்களை குறிப்பிட்டுள்ளார்?

பாலை நிலம்

  1. பாலை நில மக்கள் எந்த தெய்வத்தை தெய்வமாக வழிபடுகின்றனர் ?

கொற்றவை

  • குறிஞ்சி நிலக் கடவுள் யார் ?

சேயோன்

  1. சேயோன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 முருகன் அல்லது வேலன்

  1. குறிஞ்சி நிலப் பகுதிகளில் வேலன் வெறியாட்டு விழா நடைபெற்ற செய்திகளை எந்த நூல்கள் குறிப்பிடுகின்றன?

திருமுருகாற்றுப்படை ,குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு ,பட்டினப்பாலை

  1. வேலன் வெறியாட்டு விழா நடைபெறும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?

வெறியாடுகளம்

  1. வேலன் வெறியாட்டு விழாவின் போது சேவல் கொடி நடப்பட்டிருக்கும் பல வகையான நறுமண புகைகள் எழுப்பப்படும் ,பலவகையான இசைக்கருவிகள் இசைக்கப்படும் என இவ்விழாவை பற்றி கூறும் நூல் எது?

பரிபாடல்

  1. வேலன் வெறியாட்டு விழாவின்போது குறிஞ்சி நில மக்கள் என்ன பறை இசைக்க நடனம் ஆடுபவர் ?

தொண்டகப்பறை

  1. தொண்டகப்பறை இசைக்க நடனமாடுவது பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

குன்றக் குரவைக் கூத்து

  1. மலையும் மலை சார்ந்த பகுதியும் என்ன வகை நிலம் ?

குறிஞ்சி நிலம்

  1. காடும் காடு சார்ந்த பகுதியும் என்ன வகை நிலம் ?

 முல்லை நிலம்

  1. முல்லை நிலக் கடவுள் யார்?

 மாயோன்

  1. முல்லை நில மக்களின் முக்கிய தொழில் எது?

கால்நடை வளர்ப்பு

  1. முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்ப மரத்தை தாய் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை எந்த நூல் கூறுகிறது?

அகநானூறு

  1. முல்லை நில மக்களின் கால்நடைகளை எயினர்களிடமிருந்தும் வேடர்களிடமிருந்தும் வழி தவறாமலும் காப்பவர் யார் ?

கருப்புசாமி

  1. கருப்பசாமி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

மாயோன்,திருமால்

  1. “மாயோன் மேய காடுறை உலகம் ” என கூறும் நூல் ?

தொல்காப்பியம்

  1. ஆயர் குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் துன்பம் நேராமல் காக்கும்படி திருமாலை குரவைக் கூத்தாடி வழிபட்டனர் இந்த வழிபாடு எது?

ஆய்ச்சியர் குரவை

  1. மருத நிலத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழா எது?

இந்திர விழா

  1. இந்திரவிழா வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?

சாந்தி பெருவிழா, தீவகச் சாந்தி

  1. இந்திரவிழா நடைபெற்றமை பற்றி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?

சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவூரெடுத்த காதை மற்றும் மணிமேகலையில் விழாவறை காதை, ஐங்குறுநூறு

  1. இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெற்றது ?

 28 நாட்கள்

  1. புகார் நகரில் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்திர விழா நடை பெற்றதாக எந்த செப்பேடு தெரிவிக்கின்றது?

சின்னமனூர் செப்பேடு

  1. தொடிதோட்செம்பியனால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திர விழா ,விருந்தாட்டு விழா ஆகிய பெயர்களில் குறிப்பிடும் நூல் எது?

 மணிமேகலை

  1. இந்திர விழாவில் என்ன போர்ப்பறை ஒலிக்க ஆடியும் பாடியும் குரவை நிகழ்த்துவர் ?

தண்ணும்மை

  1. வயலும் வயல் சார்ந்த பகுதியும் எந்த நிலம் ?

மருதம்

  1. கடலும் கடல் சார்ந்த பகுதியும் எந்த திணை ?

நெய்தல்

  1. நெய்தல் நிலத்திற்குரிய கடவுள் யார்?

 வருணன்

  1. நெய்தல் நில மக்களால் கொண்டாடப்படும் விழா எது?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|பெயர்ச்சொல்

முந்நீர் விழா ,நாவாய் விழா

  1. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன் நெய்தல் விழாவை கொண்டாடிய செய்திகளையும், கரிகாலனின் முன்னோர் நாய் திருவிழா கொண்டாடிய செய்தியினையும் கூறும் நூல் எது?

புறநானூற்று உரை

  1. குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

பாலைநிலம்

  1. கொற்றம் என்றால் பொருள் என்ன?

வெற்றி

  • பாலை நில மக்கள் எந்த தெய்வத்தை வழிபட்டனர் ?

கொற்றவை என்னும் பெண் தெய்வம்

  1. சிலப்பதிகாரத்தில் எந்த தெய்வம் ஏறப்பட்ட பெண்ணிற்கு கொற்றவையின் கோலம் புனையப்பட்டது?

சாலினி

  1. “மேலோர் விளையும் நூல்நெறிமாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்” எனக் குறிப்பிடும் நூல் எது?

நாடுகாண் காதை சிலப்பதிகாரம்

  1. மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்பது எவ்வாறு அழைக்கப்படும்?

மார்கழி நோன்பு

  1. திருப்பாவை நூலை இயற்றியவர் யார்?

ஆண்டாள்

  1. திருவெம்பாவை நூலை இயற்றியவர் யார் ?

மாணிக்கவாசகர்

  1. உழவர் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக என்ன விழாவை கொண்டாடுவர்?

பொங்கல் விழா

  1. போகிப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?

மார்கழி மாதத்தின் கடைசி நாள்

  1. “ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது ” எனக் கூறுபவர் யார்?

வள்ளுவர்

  1. ஆடி மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும் இது எவ்வாறு அழைக்கப்படும் ?

ஆடிப்பெருக்கு

  1. மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியில் இருக்கும்போது மக நட்சத்திரமும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாள் என்ன திருவிழாவாகக் கொண்டாடப்படும்?

மாசிமகம்

  1. எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசிமகம் மகாமகம் என அழைக்கப்படுகிறது?

12 ஆண்டுகள்

  1. தென்னகத்தின் கும்பமேளா என அழைக்கப்படுவது எது?

 மகாமகம்

  1. சிவனை முழுமுதற்கடவுளாக வழங்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?

 சைவர்கள்

  1. மகாசிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?

மாசி மாதம்

  1. ஆண்டுதோறும் எந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது?

 ஆவணி

  1. தீபத் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது?

கார்த்திகை மாதம் முழுநிலவு நாள்

  1. திருவாதிரை திருவிழா என்பது ஆண்டு தோறும் எப்போது கொண்டாடப்படும் விழாவாகும் ?

மார்கழி மாத முழுநிலவு நாள்

  1. திருவாதிரை திருவிழா பற்றி பாடியுள்ளவர்கள் யார்?

மாணிக்கவாசகர் திருவாசகத்திலும்,,சம்பந்தர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் பாடியுள்ளனர்.

  1. திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு என்ன படைப்பர்?

களி

  1. சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகள் என்னென்ன?

பொற்சபை, வெள்ளி சபை ,ரத்தின சபை ,தாமிர சபை, சித்திர சபை

  1. சிவபெருமானுக்குரிய பொற் சபை எங்கு உள்ளது?

நடராஜர் கோயில் சிதம்பரம்

  1. சிவபெருமானுக்குரிய வெள்ளி சபை எங்கு உள்ளது?

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் -மதுரை

  1. சிவபெருமானுக்குரிய இரத்தின சபை எங்கு உள்ளது ?

வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடு

  1. சிவபெருமானுக்குரிய தாமிரசபை உள்ளது ?

நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி

  1. சிவபெருமானுக்குரிய சித்திரசபை எங்குள்ளது ?

குற்றாலநாதர் கோயில் குற்றாலம்

  1. திருமாலை முழுமுதல் கடவுளாக வணங்குபவர்கள் யார் ?

வைணவர்கள்

  1. மார்கழி மாதம் வளர்பிறை பதினோராம் நாள் என்ன விழா கொண்டாடப்படுகிறது ?

வைகுண்ட ஏகாதசி

  1. திருமாலின் பிறந்தநாளான ஆவணி மாதம் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழா எது?

 திருவோணம்

  1. திருவோண விழாவைப் பற்றிய செய்திகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன?

மதுரைக் காஞ்சியிலும், தேவாரத்திலும் ,நாலாயிர திவ்விய பிரபந்தத்திலும் இடம்பெற்றுள்ளது

  1. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை நாளில் அமாவாசைக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை எது ?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 42

தீபாவளி

  1. தீபாவளி என்றால் என்ன பொருள் ?

 தீபங்களின் வரிசை

  1. நரகாசுரனை வதம் செய்தவர் யார்?

திருமால்

  1. வீரம் ,செல்வம், கல்வி ஆகியவற்றை தரும் முப்பெரும் கடவுளாக முறையே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோரை போற்றி வணங்கும் விழா எது?

நவராத்திரி திருவிழா

  1. நவராத்திரி திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது?

புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் ஒன்பது நாட்களும்

  1. நவராத்திரிக்கு உரிய பத்தாம் நாள் விழாவாகக் எது கொண்டாடப்படுகிறது?

விஜயதசமி

  1. விஜயதசமி என்றால் என்ன பொருள் ?

வெற்றியைத் தருகின்ற நாள்

  1. மாரியம்மனுக்கானஸதலவிருட்சம் எது?

வேப்பமரம்

  1. ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூர திருநாள் எந்த தெய்வத்திற்கு சிறப்புடையது?

அம்மன்

  1. தமிழ்க்கடவுளான முருகனை வணங்கும் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கந்த விரத விழா

  1. கந்த சஷ்டி விழா எப்போது கொண்டாடப்படுகிறது?

ஐப்பசி மாதம் வளர்பிறை ஆறாம் நாள்

  1. வைகாசி விசாகம் எப்போது கொண்டாடப்படுகிறது?

வைகாசி மாதம் முழுநிலவு நாள்

  1. பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழா எது?

பங்குனி உத்தரம்

  1. பங்குனி உத்திரம் என்பது யாருக்குரிய விழா ?

முருகனின் திருமண நாள்

  1. ஆடி கார்த்திகை திருவிழா எங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது ?

திருத்தணி

  1. முருகனுக்குரிய அறுபடை வீடுகள் என்ன?

 திருப்பரங்குன்றம் ,திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய், திருவாவினன்குடி(எ) பழனி ,திருவேரகம்(எ) சுவாமிமலை ,திருத்தணி அல்லது குன்றுதோறாடல்,பழமுதிர்ச்சோலை

  1. தேரில் பெரிய கயிறுகள் இணைக்கப்படும் அது எவ்வாறு அழைப்பர்?

வடம்

  1. வடத்தைப் பற்றி இழுத்து செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?

வடம் பிடித்தல்

  1. எங்குள்ள தேர் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் என்ற பெருமைக்குரியது?

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயில் தேர்

  1. திருவாரூர் தேரின் உயரம் எவ்வளவு?

தொண்ணூத்தி ஆறு அடி உயரம்

  1. திருவாரூர் தேர் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது ?

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்

  1. கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுவது எது?

வேளாங்கண்ணி

  1. இயேசு பெருமான் எங்கு பிறந்தார்?

 இஸ்ரேல் நாட்டில் பெத்தலேகம் என்னும் ஊரில்

  1. எப்போது கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது?

டிசம்பர் மாதம் 25ஆம் நாள்

  1. இயேசு பெருமான் அடைந்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தமையையும் நினைவு கூறும் நிகழ்வு எது?

 புனித வெள்ளி

  1. இயேசு உயிர்த்தெழுந்த நாள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது?

புனித ஞாயிறு

  1. இஸ்லாமிய நாட்காட்டியில் மாதங்களில் முதல் மாதம் ?

முஹர்ரம்

  1. இஸ்லாமிய நாட்காட்டி எதனை அடிப்படையாகக் கொண்டது ?

 சந்திரன்

  1. ரமலான் பண்டிகை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

ஈகைத் திருநாள், ஈத் பெருநாள்

  1. ஈத் என்ற அரபிச் சொல்லுக்கு என்ன பொருள்?

தடுத்து விடுவது

  1. இரமலான் நோன்பின் முதல் பத்து நாள்கள் எதற்காக நோன்பு கடைப்பிடிக்கின்றனர் ?

இறையருள் கிடைப்பதற்காக

  1. இரமலான் நோன்பின் இரண்டாவது பத்து நாள்கள் எதற்காக நோன்பு கடைப்பிடிக்கின்றனர் ?

 இறைவனிடத்தில் மன்னிப்பை பெறுவதற்காக

  1. இரமலான் நோன்பின் மூன்றாவது பத்து நாள்கள் எதற்காக நோன்பு கடைப்பிடிக்கின்றனர் ?

 நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக

  1. இஸ்லாமியர்களின் 12வது மாதமான துல்ஹஜ் மாதத்திலிருந்து வரும் பண்டிகை எது?
SEE ALSO  11TH ETHICS STUDY NOTES |தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்| TNPSC GROUP EXAMS

 பக்ரீத் பண்டிகை

  1. ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?

ஹாஜிக்கள்

  1. மகாவீரர் எப்போது எங்கு பிறந்தார்?

கி.மு 546 வைசாலி நாடு, குண்டாகிராமம்

  1. யாருடைய பிறந்தநாள் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது?

மகாவீரர்

  1. மகாவீரர் சமணத்தில் எத்தனையாவது தீர்த்தங்கரர் ?

24வது தீர்த்தங்கரர்

  1. சமண மதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு?

இரண்டு: திகம்பரர்,சுவேதாம்பரர்கள்

  1. திசைகளையே ஆடையாக அணிபவர்கள் யார்?

திகம்பரர்கள்

  1. வெண்ணிற ஆடை அணிபவர்கள் யார்?

சுவேதாம்பரர்கள்

  1. புத்த பூர்ணிமா எப்போது கொண்டாடப்படுகிறது?

வைகாசி மாதம் முழுநிலவு நாள்

  1. புத்தர் எங்கு பிறந்தார் ?

நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள லும்பினி என்னும் கிராமத்தில்

  1. புத்த பூர்ணிமா பற்றிய செய்தி எந்த சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது ?

மணிமேகலை

  1. குருநானக் எங்கு பிறந்தார் ?

லாகூர் அருகே உள்ள தால்வண்டி கிராமம்

  1. குருநானிஅ தனது எத்தனையாவது வயதில் ஞானம் பெற்றார் ?

 முப்பதாவது வயது

  1. குருநானக்கின் அருளுரைகள் அடங்கிய புனித நூல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ஆதிகிரந்தம்


11TH ETHICS STUDY NOTES |திருவிழாக்கள்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: