11TH ETHICS STUDY NOTES |தமிழர் கலைகள்| TNPSC GROUP EXAMS

 


  1. எந்த காப்பியம் கலைகளை அறுபத்து நான்கு என குறிப்பிட்டுள்ளது?

மணிமேகலை

  1. “ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” எனக் கூறியவர் யார்?

 கம்பர்

  1. மனிதனின் வாழ்விற்கு பயன்படும் கலைகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

 

இரண்டு: பொதுக் கலைகள் ,அழகுக்கலைகள்

  1. காட்சி இன்பம் ,கேள்வி இன்பம் தருவன எது?

அழகு கலைகள்

  1. அழகுக் கலைகள் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

கட்டடக்கலை, சிற்பக்கலை ,ஓவியக்கலை ,இசைக்கலை ,காவியக்கலை

  1. அழகுக் கலைகளை ஐந்தாக வகைப்படுத்திய தமிழ் அறிஞர் யார்?

 மயிலை சீனி வேங்கடசாமி

  1. “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் ” என கூறியவர் யார் ?

இளங்கோவடிகள்

  1. எந்த நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டங்களாக இருந்தன?

 கிபி ஆறாம் நூற்றாண்டு

  1. பெரிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டவை எவ்வாறு அழைக்கப்படும்?

குடைவரை கோவில்கள்

  1. குடவரைக் கோவில்கள் என்ன அமைப்பை கொண்டிருந்தன?

கருவறை,முன் மண்டபம் ,தூண்கள்

  1. எங்கு எப்போது மகேந்திரவர்ம பல்லவன் முதல் குடைவரை கோவிலை அமைத்தான்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு,  கிபி ஏழாம் நூற்றாண்டு

  1. முற்கால பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரை கோவில் எது?

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்

  1. குடவரைக் கோவில்கள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டன ?

மண்டபக் கோவில்கள் மற்றும் பாறைக் கோயில்கள்

  1. கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு என்ன பெயர் ?

கற்றளி

  1. கற்றளி அமைக்கும் முறை யாருடைய காலத்தில் ஏற்பட்டது ?

கிபி ஏழாம் நூற்றாண்டு,நரசிம்மவர்மன் காலம்

  1. எந்த ஊர்களில் காணப்படும் கற்றளிகள் காலத்தால் முந்தியவை ?

மாமல்லபுரம் ,காஞ்சிபுரம் ,பனமலை

  1. செங்கற்களால் ஆன பழைய கோயில்களை கற்றளிகளாக மாற்றியவர் யார்?

 பிற்கால சோழர்கள்

  1. இந்தியக் கோயில் கட்டடக்கலை எத்தனை வகைப்படும்?

மூன்று : நாகரம் ,வேசரம், திராவிடம்

  1. சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும்?

நாகரம்

  1. வட இந்தியக் கட்டடக் கலையின் பெயர் என்ன ?

 நாகரம்

  1. சிகரம் வட்டவடிவமாக இருப்பின் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும்?

வேசரம்

  1. இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பௌத்த சமய கட்டடக்கலை எது? 

வேசரம்

  1. சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும் ?

திராவிடம்

  1. தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலையின் பெயர் என்ன ?

 திராவிடம்

  1. எங்கு திராவிடக் கலை பரவியுள்ளது? 

வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை

  1. கோயில்களில் கற்பகிரகம் எனும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலை எவ்வாறு அழைக்கப்படும் ?

விமானம்

  1. விமானத்தை பொதுவாக எவ்வாறு அழைப்பர் ?

ஷடங்க விமானம்

  1. ஷடங்க விமானம் என்பது எதனைக் குறிக்கும்?

ஆறு உறுப்புகள்

  1. ஷடங்க விமானம் குறிக்கும் ஆறு உறுப்புக்கள் என்னென்ன?

 அதிட்டானம்-பாதம்,பித்தி-கால்,பிரஸ்தரம்-தோள்,கண்டம்-கழுத்து,சிகரம்-தலை,ஸ்தூபி-மகுடம்

  1. கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது எது?

கோபுரம்

  1. கோயில்களில் கோபுரம் அமைத்தல் யாருடைய காலத்தில் தொடங்கியது?

பல்லவர் காலத்தில் தொடங்கி விஜயநகர மன்னர்கள் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது

  1. யாருடைய காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் முதல் முதலாக சிறு கோபுரம் அமைக்கப்பட்டது?

 ராஜசிம்மன் காலம்

  1. யாருடைய காலத்தில் விமானங்களை சிறியனவாகவும் கோபுரங்களை பெரியனவாகவும் அமைத்தனர் ?

விஜயநகர மற்றும் நாயக்கர் காலம்

  1. யாருடைய ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்களை அமைக்கத் தொடங்கினர்?

 கிருஷ்ணதேவராயர்

  1. பல்லவர்கள் எதனைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்?

காஞ்சிபுரம்

  1. பழமையான பல்லவர் காலத்து கோயில்கள் எங்கு காணப்படுகின்றன?

மண்டகப்பட்டு, பல்லாவரம் ,மாமண்டூர் ,வல்லம்,மகேந்திரவாடி ,சீயமங்கலம் ,தளவானூர், திருச்சி

  1. பல்லவர் காலத்து கோயில்களில் யாருடைய காலத்தைச் சேர்ந்த கோயில்கள் மிகவும் தொன்மையானவை ?

மகேந்திரவர்மன்

  1. எங்கு உள்ள குகைக்கோயிலில் வெளி முகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது ?

சாளுவன்குப்பம்

  1. காஞ்சி கைலாசநாதர் கோவில் யாரால் கட்டப்பட்டது?

 ராஜசிம்மன்

  1. எந்த இடங்களில் பாண்டியர்கால குடைவரைக் கோவில்களை காணலாம்?

பிள்ளையார்பட்டி ,மலையடிக்குறிச்சி ,ஆனைமலை ,திருப்பரங்குன்றம், குன்றக்குடி ,திருமயம், குடுமியான்மலை ,சித்தன்னவாசல், மகிபாலன்பட்டி ,பிரான்மலை ,அழகியபாண்டியபுரம், மூவரை வென்றான்

  1. எங்கு உள்ள வெட்டுவான் கோவில் பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்கு சான்றாகும்?

கழுகுமலை

  1. கழுகுமலையின் வெட்டுவான் கோவில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தென்னகத்து எல்லோரா

  1. தமிழக கட்டடக் கலை வரலாற்றில் யாருடைய காலம் பொற்காலமாகும்?

பிற்கால சோழர்கள்

  1. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது?

விஜயாலய சோழன்

  1. காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயிலை கட்டியவர் யார்?

ஆதித்தசோழன்

  1. பிரம்மபுரீஸ்வரர் கோவில் யாரால் எழுப்பப்பட்டது?

பராந்தக சோழன்

  1. “தென்னகத்தின் மேரு” என அழைக்கப்படும் கோவில் எது?

தஞ்சை பெரிய கோவில்

  1. தஞ்சை பெரிய கோயிலை எழுப்பியவர் யார்?

ராஜராஜ சோழன்

  1. தஞ்சை பெரிய கோவிலின் உயரம் எவ்வளவு ?

216 அடி உயரம் 13 அடுக்குகள்

  1. தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்து அந்த இடத்தை இராஜராஜேஸ்வரம் என்று பெயரிட்டவர் யார்?

ராஜராஜன்

  1. பெரிய கோயிலின் முதல் வாசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கேரளாந்தகன் திருவாயில்

  1. தஞ்சை பெரிய கோயிலின் இரண்டாம் வாசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ராஜராஜன் திருவாசல்

  1. தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் உள்ள எண்கோண வடிவிலான சீக்கிரம் எவ்வளவு எடை கொண்டது?

80 டன்

  1. எந்த ஆண்டு தஞ்சை பெரிய கோவில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது?

 1987

  1. UNESCO என்பதன் விரிவாக்கம் என்ன?

 The United Nations Educational Scientific And Cultural Organisation

  1. கங்கைகொண்ட சோழபுரத்தின் உயரம் எவ்வளவு?

170 அடி உயரம்

  1. கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியவர் யார்?

முதலாம் ராஜேந்திர சோழன்

  1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலை கட்டியவர் யார் ?

மூன்றாம் குலோத்துங்க சோழன்

  1. திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலின் உயரம் என்ன ?

 126 அடி

  1. ராஜேந்திர சோழன் தனது எந்த படையெடுப்பு வெற்றியின் சின்னமாக கங்கைகொண்டசோழபுரம் கோவிலை கட்டினார்?

 கங்கை படையெடுப்பு

  1. நாயக்கர் கால கட்டடக் கலைகளா எங்கு காணப்படுகின்றன ?

 திருமலை நாயக்கர் மஹால் ,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம் ,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் ,திருச்சி மலை மீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் போன்றவை

  1. தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில்கள் என்னென்ன?

 மதுரை மீனாட்சியம்மன் கோவில் ,திருவரங்கம் அரங்கநாதர் கோயில் ,சிதம்பரம் நடராஜர் கோயில் ,திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

  1. போரில் வீர மரணம் அடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டு வைத்து வழிபடும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

நடுகல்

  1. நடுகல் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

 வீரக்கல் அல்லது நினைவுக்கல்

  1. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சுதைச் சிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தியை குறிப்பிடும் காப்பியம் எது ?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -43|கைந்நிலை இன்னிலை

 மணிமேகலை

  1. சிற்பக் கலைஞர்களை மண்ணீட்டாளர் என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்?

மணிமேகலை

  1. எந்த காலகட்டம் வரை தமிழகத்தில் பவுத்த சமண சமயங்கள் பரவியிருந்தன?

கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி பத்தாம் நூற்றாண்டு வரை

  1. “சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து கரும்புச்சாறு, வெல்லச் சாறு, நெல்லிக்காய் சாறு முதலியவற்றைக் கலந்து அரைத்து பசை போல் செய்து அதைக்கொண்டு உருவங்கள் செய்வது என குறிப்பிடுபவர் யார் ?

அ.தட்சிணாமூர்த்தி

  1. இயற்கை உருவங்களையும் கற்பனை உருவங்களையும் வடிப்பது எவ்வாறு அழைக்கப்படும் ?

சிற்பக்கலை

  1. எவற்றால் சிற்பங்கள் வடிக்கப் படுகின்றன?

சுதை ,மரம், மெழுகு ,அரக்கு, தந்தம், உலோகம்

  1. சிற்பங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?

புடைப்புச் சிற்பங்கள்,தனிச்சிற்பங்கள்

  1. மரப்பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தின் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் எவ்வாறு அழைக்கப்படும்?

புடைப்புச் சிற்பம்

  1. ஒரு உருவத்தின் முன்புறமும் பின்புறமும் முழு வடிவமாக வடித்தல் எவ்வாறு அழைக்கப்படும்?

தனிச்சிற்பம்

  1. தமிழகத்தில் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலையை பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு அமைந்துள்ளது ?

மாமல்லபுரம்

  1. சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள கடவுள் உருவங்கள் எதனால் செய்யப்பட்டவை?

 மரம்

  1. பார்த்தசாரதி பெருமாள், காஞ்சி பாண்டவதூதப் பெருமாள் முதலிய உருவங்கள் எதனால் செய்யப்பட்டவை?

சுதை

  1. கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டன?

பல்லவர்காலம்

  1. உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டன ?

பிற்கால சோழர்

  1. தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறே அமைப்பது எவ்வாறு அழைக்கப்படும்?

 பிரதிமைகள்

  1. பிரதிமை உருவங்களில் பழமையானது எது?

 பல்லவ அரசர் உருவங்கள்

  1. உலோகங்களினால் பிரதமைகள் அமைக்கும் வழக்கம் யாருடைய காலத்தில் தோன்றியது?

சோழர் காலம்

  1. கோயில் சிற்பக் கலையின் தொடக்க காலம் என அழைக்கப்படுவது எது ?

பல்லவர்காலம்

  1. யாருடைய காலத்து கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காவலர்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன ?

 பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்

  1. தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பங்கள் எவை?

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கோயில்களில் உள்ள துவார பாலகர்கள்

  1. யாருடைய காலத்தில் கடவுள் போலவே அரசன் அரசி உருவங்களையும் உயரமாக செதுக்கும் வழக்கம் இருந்தது?

பல்லவர்காலம்

  1. நாமக்கலில் உள்ள மலைக் கோட்டையின் இருபுறமும் யாருடைய காலத்து குடைவரைக் கோவில்கள் காணப்படுகின்றன?

மகேந்திரவர்மன்

  1. உலகின் மிகப்பெரிய நந்தி எது ?

ஆந்திராவிலுள்ள அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லெபாஷி என்ற ஊரில் உள்ள நந்தி

  1. எந்த காலத்து சோழர்களின் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் மிகுந்து காணப்பட்டன?

பிற்கால சோழர்கள்

  1. இந்தியாவில் உள்ள நந்தி சிற்பங்களில் இரண்டாவது பெரிய சிற்பம் எங்கு உள்ளது?

தஞ்சை பெரிய கோவில்

  1. யார் கட்டிய தாராசுரம் கோயிலில் நாயன்மார்களின் வாழ்க்கையை குறிக்கும் 90 சிற்பங்கள் உள்ளன ?

இரண்டாம் இராஜராஜன்

  1. சங்க காலத்திலும் உலோக சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை எந்த நூல் மூலம் அறியலாம் ?

மதுரைக்காஞ்சி, குறுந்தொகை ,பட்டினப்பாலை

  1. யாருடைய காலத்தில் செப்புத்திருமேனிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?

 விஜயாலயன், பராந்தகன், செம்பியன்மாதேவி, முதலாம் ராஜராஜன்

  1. சோழர்கால செப்புத் திருமேனிகளில் எந்த சிலை உலகப்புகழ் வாய்ந்தது?

 நடராஜர் சிலை

  1. எந்த வினை துளியிலிருந்து “ஓவியம்” தோன்றியது?

ஒவ்வு

  1. ஒவ்வு என்பதற்கு என்ன பொருள் ?

ஒன்றை பற்று அல்லது ஒன்றைப் போலவே இருத்தல்

  1. தான் கண்ட காட்சியை அப்படியே வரைவது எது?

காட்சி ஓவியம்

  1. மனதில் கற்பனை செய்ததை வரைதல் எது ?

 கற்பனை ஓவியம்

  1. ஓவியத்தை இலக்கியங்கள் எவ்வாறு பதிவுசெய்துள்ளன?

வட்டிகைச் செய்தி, சித்திரச் செய்தி

  1. எவற்றைக்கொண்டு ஓவியங்கள் எழுதப்பட்டன?

வளைந்த கோடு ,கோணக்கோடு, நேர்கோடு

  1. கோட்டோவியங்களுக்கு என்ன பெயர்?

 புனையா ஓவியம்

  1. புனையா ஓவியம் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?

வரிவடிவ ஓவியம்

  1. மடலேறுதலின்போது பனை ஓலையில் வரைந்த கோடுகளால் ஆன ஓவியம் எவ்வாறு அழைக்கப்படும் ?

வரிவடிவ ஓவியம்

  1. எந்த நூலில் முதன்முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றது?

நெடுநல்வாடை

  1. புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களை புனைந்து அமைக்கும் ஓவியம் எவ்வாறு அழைக்கப்படும் ?

முழு ஓவியம்

  1. ஓவியம் வரைவோர் எவ்வாறு அழைக்கப்படுபவர்?

ஓவியம் ,கண்ணுள் வினைஞர், கைவினைஞர், ஓவியவல்லோன், ஓவியப்புலவன்

  1. மக்கள் கூட்டத்தை காட்டும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 பிரதிமை

  1. தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

படிமை

  1. எழுத்து என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

ஓவியம்

  1. பண்டைய தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்காக தங்கள் அரண்மனைகளிலும் கோயில்களிலும் என்ன தனிப்பகுதியை அமைத்தனர் ?

ஓவியமாடம்

  1. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்தது குறிப்பிடும் நூல் எது?

நெடுநல்வாடை நக்கீரர்

  1. சித்திரகாரப்புலி என அழைக்கப்பட்டவர் யார் ?

மகேந்திரவர்மன்

  1. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை?

கிபி 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள்

  1. எந்த மன்னன் தனது சித்திர மாடத்திலிருந்தபொழுது உயிர்துறந்தமையால் அவர் “பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டார்?

பாண்டியன் நன்மாறன்

  1. திருப்பரங்குன்றம் கோயில் மண்டபத்தில் எழுதொழில் அம்பலம் என்ற பெயரில் ஓவியச் சாலை இருந்த செய்தி எந்த நூல் மூலம் அறியப்படுகிறது?

 பரிபாடல்

  1. உதயணனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சி எந்த நூலில் காணப்படுகிறது?

 பெருங்கதை

  1. புத்தக தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியை எந்த நூல் கூறுகின்றது?

மணிமேகலை

  1. படம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து தோன்றியது?

 பாடம்

  1. பாடம் என்பதற்கு என்ன பொருள்?

துணி

  1. பழங்காலத்தில் துணிகளில் ஓவியங்களை வரைந்தார்கள் அதற்கு என்ன பெயர் ?

சித்திரப்படாம் ,சித்திரத்திரை

  1. சித்திரம் எழுதும் கோலுக்கு என்ன பெயர் ?

துகிலிகை

  1. எந்த நூலில் சீத்தலைச்சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்தில் உவவனம் எனும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டதாக கூறுகிறார்?

மணிமேகலை

  1. இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை எவ்வாறு அழைக்கின்றார்?

ஓவிய எழினி

  1. பலகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வட்டிகைப்பலகை

  1. இசைக்கு அடிப்படையானது எது?

ஓசை

  1. “ஏழிசையேழ் நரம்பின் ஓசையை” எனக் குறிப்பிடும் நூல் எது?

 திருப்பதிகம்

  1. ஏழு இசைகள் என்னென்ன ?

குரல், துத்தம், கைக்கிளை, உழை ,இளி ,விளரி ,தாரம்

  1. குரல் இசை எதனால் தோன்றுகிறது?

மிடற்று

  1. துத்தம் இசை எதனால் தோன்றுகிறது?

நாக்கு

  1. கைக்கிளை இசை எதனால் தோன்றுகிறது?

அண்ணம்

  1. உழை இசை எதனால் தோன்றுகிறது?

சிரம்

  1. இளி இசை எதனால் தோன்றுகிறது?

நெற்றி

  1. விளரி இசை எதனால் தோன்றுகிறது?

நெஞ்சு

  1. தாரம் இசை எதனால் தோன்றுகிறது?

மூக்கு

  1. படிப்படியாக மேலே உயர்ந்து செல்லும் இசைநிரலை ,ஆரோசை எனவும் தாழ்ந்து செல்லும் இசைநிரலை அமரோசை என்றும் கூறுபவர் யார்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -38|ஆசாரக்கோவை

சேக்கிழார்

  1. ஆரோசை,அமரோசை ஆகியவற்றை இக்காலத்தில் எவ்வாறு அழைப்பர்?

ஆரோகணம்,அவரோகணம்

  1. இசைக்கலைஞர்கள் துளைக்கருவிகளில் தொன்மையானது எது?

குழல்

  1. புல் வகையாகிய மூங்கிலில் செய்யப்பட்டதால் குழல் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?

வேய்ங்குழல் மற்றும் புல்லாங்குழல்

  1. வேய்ங்குழல் எந்த நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாக விளங்கியது?

 முல்லை

  1. வில் பலவற்றை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட நரம்புக்கருவியின் பெயர் என்ன?

வில்யாழ்

  1. ஆநிரைகளை மேய்க்கும் ஒருவன் குமிழமரக் கொம்புகளூ வில்லாக வளைத்து அதில் மரல்நாரினால் கட்டி வில்யாழ் அமைத்து குறிஞ்சி பண்ணை வாசித்தான் என்ற செய்தி எந்த நூலில் குறிப்பிடப்படுகிறது ?

பெரும்பாணாற்றுப்படை

  1. வில்யாழை அடிப்படையாகக் கொண்டு என்ன அமைக்கப்பெற்றன?

பேரியாழ் ,மகரயாழ், சகோடயாழ் ,செங்கோட்டியாழ் ஆகியவையும் பெருங்கலம் என்னும் ஆதியாழும்

  1. தொல்காப்பியர் கூறும் தோல் இசைககருவிகளின் ஒன்று எது?

பறை

  1. தோல் கருவிகள் எத்தனை உள்ளதாக அடியார்க்குநல்லார் உரை கூறுகிறது?

30

  1. 30 தோல் கருவிகளுள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட தோல் கருவி எது?

மத்தளம்

  1. மத்தளத்தை வாசிக்கும்போது இடையிடையே வாசிக்க பயன்படுத்தப்படும் இடை கருவி எது?

சலிகை

  1. எதன் மூலம் முதுநாரை ,முதுகுருகு ஆகிய நூல்கள் இருந்தன என்பதை அறியமுடிகிறது?

 இறையனார் களவியல் உரை

  1. பெருநாரை,பெருங்குருகு,பஞ்சபாரதீயம்,இந்திரகாளியம் முதலான நூல்களைப் பற்றி குறிப்பிடுபவர் யார்?

அடியார்க்கு நல்லார்

  1. இசை நுணுக்கம் எனும் நூல் எந்த பாண்டிய இளவரசனால் ஏற்றப்பட்டது?

 சயந்தன்

  1. பஞ்சமரபு எனும் இசை தொடர்பான நூலை இயற்றியவர் யார் ?

 அறிவனார்

  1. தமிழகத்தில் எங்கு இசை தூண்கள் காணப்படுகின்றன ?

 திருநெல்வேலி ,ஆழ்வார்திருநகரி ,செண்பகநல்லூர் ,மதுரை ,தாடிக்கொம்பு, அழகர்கோயில் ,கிருஷ்ணாபுரம், தென்காசி ,குற்றாலம், சுசீந்தரம், களக்காடு

  1. ஆண் இசைக்கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

 பாணர்

  1. பெண் இசைக் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

 பாடினி

  1. யாழ்ப்பாணர் பற்றிய செய்திகள் மிகுதியாக எந்த இலக்கியங்களில் உள்ளன ?

சிறுபாணாற்றுப்படை ,பெரும்பாணாற்றுப்படை

  1. மண்டை எனப்படும் ஓட்டினை கையில் ஏந்தி பாடியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

 மண்டைப்பாணர்

  1. குறிஞ்சி நிலத்திற்கு உரிய பண் எது?

குறிஞ்சிப்பண்

  1. முல்லை நிலத்திற்குரிய பண் எது ?

சாதாரி

  1. பாலை நிலத்துக்குரிய பண் எது?

பஞ்சுரப்பண்

  1. நெய்தலுக்கு உரிய பண் எது?

 செவ்வழிப்பண்

  1. மருதத்திற்குரிய பண் எது?

 மருதப்பண்

  1. மலைச்சாரல் பகுதியில் விளைந்திருந்த திணை பயிரை உண்ண வந்த காட்டு யானை அப்பயிரை காவல் காத்த பெண் இசைத்த குறிஞ்சி பண்ணை கேட்டு பயிரை உண்ணாமல் இசையில் மெய்மறந்து நின்றதை கூறும் நூல் எது?

அகநானூறு

  1. போரில் புண்பட்ட வீரரை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாக எந்த நூல் கூறுகிறது?

புறநானூறு

  1. யாழ் என்னும் இசைக்கருவி கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிப் பொழுது விடிந்ததாக எந்த நூல் குறிப்பிடுகிறது ?

 மதுரைகாஞ்சி

  1. வண்டின் ஓசை போல் இருப்பது என்ன பண்?

காமரம்

  1. வெறியாட்டப்பாடல் ,வள்ளைப்பாடல் முதலிய இசை பாடல்கள் எந்த நூலில் உள்ளன ?

பரிபாடல்

  1. இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இசை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

முதல் நடை, வாரம்,கூடை,திரள்

  1. மந்த நடையாகத் தாழ்ந்து செல்லும் முறையில் இசைக்கப்படுவது எது ?

முதல் நடை

  1. முடுகிச் செல்லும் விரைந்த நடை உடையது எது?

 திரள்

  1. முதல்நடைக்கும் திரளுக்கும் இடைப்பட்ட இசை நடையை உடையது எது?

வாரம்

  1. சொற்செறிவும் இசைச் செறிவும் உடையது எது?

கூடை

  1. “தம்ம்னையறியாத” என்னும் பதிகத்தைப் பாடியவர் யார்?

சுந்தரர்

  1. சுந்தரர் “தம்ம்னையறியாத” என்னும் பதிகத்தை எந்த பண்ணில் பாடினார்?

கொல்லிக் கௌவாணம்

  1. கொல்லிக் கௌவாணம்,கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாக கூறுபவர் யார்?

சேக்கிழார்

  1. குடுமியான்மலை கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது?

 முதலாம் மகேந்திரவர்மன்

  1. எந்த கல்வெட்டின் முடிவில் “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய ” என்ற தொடர் உள்ளது ?

குடுமியான்மலை கல்வெட்டு

  1. எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய ” என்ற தொடர் எதைக் குறிக்கிறது?

சங்கீரணம்

  1. தேவாரங்களில் காணப்படாத சாளரப்பாணி என்ற பண் எதில் உள்ளது?

திருவிசைப்பா

  1. நடனக்கலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆடல் கலை ,கூத்துக்கலை

  1. வேலன் ஆடும் வெறிக் கூத்து ,வீரர்கள் ஆடும் கருங்கூத்து ,பெண்கள் ஆடும் வள்ளிக்கூத்து ,இளைய வீரனின் வெற்றியை பாராட்டி இருபாலரும் ஆடும் கழனிலை கூத்து போன்றவை கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. சங்ககாலத்தில் கூத்துக் கலையை வளர்ப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

கூத்தர்கள்

  1. கூத்தர் இன பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

விறலி, ஆடுமகள், ஆடுகளமகள்

  1. கூத்தர் இன ஆண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

கூத்தன்,ஆடுமகன்,ஆடுகளமகன்

  1. நடனம் கற்கும் பெண் தனது எத்தனை வயது வரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடனக்கலை பயிற்சி பெற்றிருக்க வேண்டும் ?

தனது 7 வயது முதல் 12 வயது வரை

  1. நடனக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

தலைக்கோல் ஆசான்

  1. தலைக்கோல் ஆசான் எந்தக் கூத்துக்களில் சிறந்தவராக இருக்க வேண்டும் ?

வேத்தியல் ,பொதுவியல் என இருவகை கூத்துக்களிலும்

  1. அடியார்க்குநல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?

 4 :சொக்கம் ,மெய்க் கூத்து ,அபிநயம், நாடகம்

  1. இசையுடன் கூடிய தூய நடனம் எது?

சொக்கம்

  1. இசையுடன் கூடிய அகம் சார்ந்த நடனம் எது ?

மெய்க்கூத்து

  1. இசையுடன் கலந்த பாடலுக்கு ஏற்ற நடனம் எது?

அபிநயம்

  1. இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம் எது ?

நாடகம்

  1. எல்லா வகை கூத்துக்களையும் குறிப்பது என அடியார்க்கு நல்லார் கூறுவது எது?

ஆடல்

  1. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகை ஆடல்கள் என்னென்ன ?

அல்லியம் ,கொடுகொட்டி, குடைக்கூத்து ,குடக்கூத்து, பாண்டரங்கம்,மல்லியம்,துடி,கடையம்,பேடு,மரக்கால்,பாவை

  1. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் 11 ஆடல்களையும் தெய்வங்களால் ஆடப்பெறுவதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

தெய்வவிருத்தி

  1. கூத்து எத்தனை வகைப்படும் இரண்டு?

அகக்கூத்து புறக்கூத்து

  1. இருவகை கூத்துக்களும் ஆடல் என கூறுபவர் யார் ?

அடியார்க்குநல்லார்

  1. புறக்கூத்தில் காட்டப்படும் முத்திரைகள் என்னென்ன?

பிண்டி,பிணையல்

  1. அகக்கூடத்தில் காட்டப்படும் முத்திரைகள் என்னென்ன?

எழிற்கை,தொழிற்கை

  1. ஒரு கையால் காட்டப்படும் முத்திரை எது?

 பிண்டி

  1. பிண்டி எத்தனை வகையாக அமையும்?

 24

  1. இரண்டு கைகளாலும் காட்டப்படும் முத்திரை எது?

 பிணையல்

  1. பிணையல் முத்திரை எத்தனை வகையாக உள்ளது ?

 13

  1. “நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து”, “வந்த முறையின் வழிமுறை வழாமல்” என கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்

  1. கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததை காட்டும் ஆடல் எது?

அல்லியம்

  1. சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல் எது?

கொடுகொட்டி

  1. முருகன் அவுணரை வென்றபோது ஆடிய ஆடல் எது?

குடைக்கூத்து

  1. கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரனிடம் இருந்து மீட்பதற்காக குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் எது?

குடக்கூத்து

  1. சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் எது?

 பாண்டரங்கம்

  1. கண்ணன் வாணன் என்னும் அசுரனுடன் போர் செய்ததை காட்டும் கூத்து எது? மல்லியம்
  2. சூரபத்மனை வென்ற பிறகு கடலினை மேடையாக கொண்டு முருகன் ஆடியதை கூறும் கூத்து எது?
SEE ALSO  10TH PHYSICS STUDY NOTES |அணுக்களும் மூலக்கூறுகளும்| TNPSC GROUP EXAMS

துடி

  1. இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது எது?

கடையம்

  1. கடையம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 உழத்திக்கூத்து

  1. காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ எனும் நகரத்தில் பேடி உருவம் கொண்டு ஆடியது எது?

 பேடு

  1. கொற்றவை தன்னை அழித்து பாம்பு,தேளாக வந்த அசுரனை கொல்வதற்காக ஆடிய ஆடல் எது ?

மரக்கால்

  1. அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் எது?

 பாவை

  1. வேத்தியல் கூத்து வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 வசைக்கூத்து ,வரிக்கூத்து ,சாந்திக்கூத்து, இயல்புக்கூத்து ,ஆரியம்

  1. பொதுவியல் கூத்து வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

புகழ்க்கூத்து, வரிச்சாந்திக் கூத்து ,விநோதக்கூத்து ,தேசியக்கூத்து ,தமிழ்க்கூத்து

  1. பதினோரு வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் எந்த நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன?

யாப்பருங்கலம்

  1. கூத்து பற்றிய நூல்கள் என்னென்ன?

பரதம், அகத்தியம் ,முறுவல் ,சயந்தம், குணநூல் ,செயிற்றியம் ,இசை நுணுக்கம் ,இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், கூத்தநூல்

  1. குரவைக் கூத்து யாரால் ஆடப்படுகிறது?

மகளிர்

  1. குரவைக் கூத்தில் எத்தனை பேர் வட்டமாக நின்று கை கோர்த்து ஆடுவர்?

 7 முதல் 9 பேர்

  1. குரவைக் கூத்து எத்தனை வகைப்படும்?

இரண்டு;குன்றக்குரவை ,ஆய்ச்சியர் குரவை

  1. குறிஞ்சி நிலத்தில் வாழும் மகளிர் முருகனுக்கு ஆடும் ஆடல் எது?

 குன்றக்குரவை

  1. முல்லை நிலத்தில் வாழும் மகளிர் ஆடும் ஆடல் எது?

ஆய்ச்சியர் குரவை

  1. எந்த நூலில் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி முதலாம் மகேந்திரவர்மன் குறிப்பிட்டுள்ளார் ?

 மத்தவிலாசப் பிரகசனம்

  1. தில்லையில் உள்ள சிவபெருமான் கூத்தப்பெருமான் என யாரால் பாடப்பட்டார் ?

நாயன்மார்கள்

  1. பல்லவர் காலத்தில் நடன மாதர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

மாணிக்கத்தார்,கணிகையர்

  1. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில் ஆடல் நிகழ்த்துவதற்காக எந்த நடனத்தில் சிறந்த பெண்களை நாடுகளிலிருந்து தேர்ந்தெடுத்து வர செய்தான்?

 பதியிலார்

  1. பரதத்தில் ஒரு கை முத்திரை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 இணையா வினைக்கை, பிண்டிக்கை

  1. பரதத்தில் இரு கை முத்திரை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

இணைக்கை, இரட்டைக்கை,பிணைக்கை

  1. விளையாட்டு என்பதன் பொருள் என்ன?

விரும்பி ஆடும் ஆட்டம்

  1. கெடவரல்,பண்ணை என இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி குறிப்பிடும் நூல் ?

தொல்காப்பியம்

  1. சிறுமிகளை விலங்குகளிடமிருந்து காப்பது போல நடித்து விளையாடுவது எது?

கெடவரல்

  1. உழவர்கள் பயிர் செய்வது போல நடித்து விளையாடுவது எது?

 விளையாட்டு

  1. எண்வகை, மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை நான்கு வழிகளிலும் தோன்றும் எனக் கூறுபவர் யார் ?

 தொல்காப்பியர்

  1. குழந்தைகளுக்கான பத்து பருவங்களைக் கூறும் நூல் எது ?

பிள்ளைத்தமிழ்

  1. பிள்ளைத்தமிழ் எத்தனையாக வகைப்படுத்தப்படுகிறது?

 2 ஆண்பாற் பிள்ளைத்தமிழ் & பெண்பாற் பிள்ளைத்தமிழ்

  1. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?

 ஏழு

  1. சிற்றில், ஊசல் என்பன யார் விளையாடும் விளையாட்டுக்கள் ?

பெண்கள்

  1. சிறுமிகள் வட்டமாக அமர்ந்து பாடல் பாடி விளையாடுவது எது ?

அம்மானை

  1. சிறுமிகள் கல் வைத்து விளையாடும் விளையாட்டு எது ?

 கழங்கு

  1. சிறுமிகள் பாடல் பாடிக்கொண்டு ஊஞ்சல் ஆடுவது எது ?

ஊசல்

  1. ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் எதில் காணப்படுகின்றன?

 முல்லைக்கலி

  1. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளப்படும் காளையை எவ்வாறு அழைப்பர்?

சல்லி மாடு

  1. கம்புகளை அடித்து ஒலி எழுப்பும் விளையாட்டுக் என்ன பெயர்?

சிலம்பு

  1. எந்த ஓலை பட்டய செய்தியில் சிலம்பாட்டத்தின் தோற்றம் பற்றிய கதையாக கூறப்பட்டுள்ளது ?

நடசாரி

  1. உடலில் உள்ள வர்ம நாடிகளை நோக்கி அடிக்கும் சுவடு முறைக்கு என்ன பெயர் ?

தட்டுவர்மச் சுவடு

  1. ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும் அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் என்ன விளையாட்டு முறை ?

 அடிச்சுப் பிரிவு

  1. ஒருவர் கைகொண்டு அடுத்தவரை பூட்டிப் பிடிப்பதும் அப்பூட்டிலிருந்து பிடிபட்டவர் தம்மை விடுவித்துக் கொள்வதும் என்ன வகை விளையாட்டு முறை ?

 பூட்டுப்பிரிவு

  1. சடுகுடு பாண்டிய நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 குட்டி

  1. சடுகுடு சோழ நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 பளிச்சப்பிளான்,பலீன் சடுகுடு

  1. சடுகுடுவில் மூச்சு பிடிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

பாட்டம

  1. பாடிச் செல்பவர் எவ்வாறு அழைக்கப்படுவர்?

 கொம்பு சுற்றிப் பாடுபவன்

  1. சடுகுடுவில் பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சஞ்சீவி ஆட்டம்

  1. சடுகுடுவில்‌ பிடிபட்டவரை கடைசிவரை சேர்க்காமல் ஆட்டத்தை முடித்துக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆடாது  ஒழியும் ஆட்டம்

  1. பட்டை உரிக்கப்பட்ட மரம் எவ்வாறு அழைக்கப்படும் ?

உரிமரம்

  1. உரி ஏறுதல் விளையாட்டில் எந்த மரத்தை பயன்படுத்துவர் ?

கைப்பிடிக்கு அடங்காது படுத்திருக்கும் உதிய மரம்

  1. கில்லி விளையாட்டின் வேறு பெயர் என்ன?

 புல்லுக்குச்சி ,கில்லி தாண்டு ,சில்லாங்குச்சி ,சிறிய குச்சி கில்லி ,பெரிய குச்சி தாண்டல்


11TH ETHICS STUDY NOTES |தமிழர் கலைகள்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: