11TH ETHICS STUDY NOTES |தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது எது?

பண்பாடு

  1. பண்பாடு எந்த வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது?

 பண்படு 

  1. பண்படு என்பதற்கு என்ன பொருள்?

 சீர்படுத்துதல் ,செம்மைப்படுத்துதல்

  1. பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

டி.கே சிதம்பரநாதனார்

  1. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” எனக் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” எனக் கூறும் நூல் எது ?

கலித்தொகை

  1. “பண்புடையார் பட்டுண்டு உலகம் ” எனக் கூறுபவர் யார் ?

திருவள்ளுவர்

  1. பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளாக திகழ்வது எது ?

மனிதன் பேசும் மொழி, உணவு ,உடை, வாழ்க்கை முறை, செய்யும் தொழில், எண்ணங்கள்

  1. மாந்தனது அக உணர்வு வளர்ச்சியையும் சீர்மையும் குறிப்பது எது?

 பண்பாடு

  1. மாந்தனது புறத்தோற்ற உணர்வு வளர்ச்சியின் செம்மையைக் குறிப்பது எது?

நாகரிகம்

  1. “யாதும் ஊரே யாவரும் கேளீர் “என கூறியவர் யார்?

கணியன் பூங்குன்றனார்

  1. சேர மன்னர்களின் வணிகமுறை ,ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம் ,கொடைத்திறம் முதலானவற்றை பற்றி விரிவாக விளக்கும் நூல் எது?

 பதிற்றுப்பத்து

  1. பாண்டியர்களின் தலைநகரமாகிய மதுரையின் சிறப்பையும் ,வையை ஆற்றின் சிறப்பையும் திருமால் முருகன் போன்ற தெய்வங்களை வழிபடும் முறைகளையும் பற்றி பாடும் நூல் எது ?

 பரிபாடல்

  1. பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை நூல்கள்?

 ஐந்து நூல்கள்

  1. குறிஞ்சிப்பாட்டும் முல்லைப்பாட்டும் எதனை பற்றி பேசுகின்றது?

நிலவளம் ,காதலின் சிறப்பு

  1. பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பை பற்றி கூறும் நூல் எது?

மதுரைக்காஞ்சி

  1. சோழநாட்டு தரைவழி வணிகத்தாலும் கடல்வழி ழடிகத்தாலும் வளம் பெற்றிருந்ததனை “முட்டாச் சிறப்பின் பட்டினம்” என குறிப்பிடும் நூல் எது ?

பட்டினப்பாலை

  1. பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்ற செயல்களை தடுத்து நிறுத்த முடியும் எனக்கும் கூறுவது எந்த நூலின் மையக் கருத்து?

மணிமேகலை

  1. ரோமாபுரி அரசன் அகஸ்டஸின் சமகாலத்தவரான ஸ்டிராபோ என்ற நூலை எழுதியுள்ளார்?

பூகோள நூல்

  1. அரிசி எனும் தமிழ்ச் சொல் கிரேக்கத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 அரிஸா

  1. கருவா (இலவங்கம்) எனும் தமிழ்ச் சொல் கிரேக்கத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கார்ப்பியன்

  1. இஞ்சிவேர் எனும் தமிழ்ச் சொல் கிரேக்கத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சின்ஞிபேராஸ்

  1. ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர் வாழ்ந்த காலகட்டம் என்ன?

கிமு ஐந்தாம் நூற்றாண்டு

  1. ஹிப்பாகிரேட்டஸ் மிளகை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ?

இந்திய மருந்து

  1. சோழர் கால கிராம ஆட்சி முறையை தெளிவாக எடுத்துக்காட்டும் கல்வெட்டு?
SEE ALSO  9TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

உத்திரமேரூர் கல்வெட்டு

  1. உத்திரமேரூர் கல்வெட்டு யாருடையது?

 பராந்தக சோழன்

  1. பொன், செம்பு ஆகிய உலோகத் தகடுகளின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.அவற்றுக்கு என்ன பெயர் ?

பட்டயங்கள்

  1. வேள்விக்குடி பட்டயம், தளவாய்புரச்செப்பேடு ,சின்னமனூர்ச் சாசனம், சிவகாசிச் செப்பேடுகள் முதலியவை யாருடைய காலத்தவை?

 பாண்டியர்கள்

  1. திருவாலங்காட்டுப் பட்டயங்கள் ,கரந்தை செப்பேடுகள் ,அன்பில் பட்டயங்கள் ,லெய்டன் பட்டயங்கள் போன்றவை யாருடைய காலத்தவை?

 சோழர் காலம்

  1. பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் என்ன சின்னங்கள் காணப்படுகின்றன?

இரட்டை மீன் ,கப்பல் ,நந்தி

  1. முதலாம் ராஜராஜன் காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் என்ன வடிவங்கள் காணப்படுகின்றன?

புலியும் இரட்டை மீன் வடிவங்களும்

  1. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” எனக் குறிப்பிடும் நூல் எது?

தொல்காப்பியம்

  1. “வினையே ஆடவர்க்கு உயிரே ” என குறிப்பிடும் நூல் எது ?

குறுந்தொகை

  1. அகத்திணை புறத்திணை சார்ந்த செய்திகளை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?

தொல்காப்பியப் பொருளதிகாரம்

  1. குறிஞ்சி என்பது எதைச் சார்ந்த நிலம்?

மலையும் மலை சார்ந்த இடமும்

  1. குறிஞ்சியின் சிறுபொழுது என்ன?

யாமம்

  1. குறிஞ்சியின் பெரும்பொழுது என்ன ?

கூதிர் ,முன்பனி

  1. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?

 புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

  1. முல்லை என்பது எதைச் சார்ந்த நிலம்?

 காடும் காடு சார்ந்த இடமும்

  1. முல்லைத் திணையின் சிறுபொழுது என்ன?

மாலை

  1. முல்லைத் திணையின் பெரும்பொழுது என்ன?

 கார்

  1. முல்லைத் திணையின் உரிப்பொருள் என்ன?

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

  1. மருதம் என்பது எதை சார்ந்த நிலம் ?

வயலும் வயல் சார்ந்த இடமும்

  1. மருதத் திணையின் சிறுபொழுது என்ன?

 வைகறை

  1. மருதத் திணையின் பெரும்பொழுது என்ன?

கார் ,கூதிர் ,முன்பனி, பின்பனி ,இளவேனில் ,முதுவேனில்

  1. மருதத் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?

ஊடலும் ஊடல் நிமித்தமும்

  1. நெய்தல் திணை எந்த நிலத்தைச் சார்ந்தது?

கடலும் கடல் சார்ந்த இடமும்

  1. நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது என்ன?

எற்பாடு

  1. நெய்தல் திணைக்குரிய பெரும்பொழுது என்ன? 

கார் ,கூதிர் ,முன்பனி, பின்பனி ,இளவேனில் ,முதுவேனில்

  1. நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

  1. பாலை திணைக்குரிய சிறுபொழுது என்ன?

மணலும் மணல் சார்ந்த இடமும்

  1. பாலை திணைக்குரிய சிறுபொழுது என்ன ?

நண்பகல்

  1. பாலை திணைக்குரிய பெரும்பொழுது என்ன?

இளவேனில், முதுவேனில் ,பின்பனி

  1. பாலை திணைக்குரிய உரிப்பொருள் என்ன?

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

  1. புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவது ?

புறத்திணை

  1. தொல்காப்பியம் புறத்திணையை எத்தனையாக பகுத்துள்ளது?

ஏழு

  1. புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணையை எத்தனையாக வகுத்துள்ளது?
SEE ALSO  11TH ETHICS STUDY NOTES |திருவிழாக்கள்| TNPSC GROUP EXAMS

 12

  1. போருக்கான காரணங்களையும் போர் நடைபெறும் முறைகளையும் பற்றி கூறும் புறத்திணைகள் என்னென்ன?

8 : வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி ,உழிஞை, நொச்சி, தும்பை ,வாகை

  1. மன்னனின் வீரம் ,கொடை, புகழ் முதலானவற்றை சிறப்பித்து பாடுவது என்ன திணை?

 பாடாண் திணை

  1. “விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

 தொல்காப்பியம்

  1. “தொல்லோர் சிறப்பின்” என்று விருந்துக்கு அடை கொடுத்து கூறியவர் யார்?

இளங்கோவடிகள்

  1. “இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா என பார்ப்பர் அவ்வாறு இருப்பின் வரவேற்று உணவு அளிப்பர்” என்ற செய்தி எந்த பாடலின் மூலம் அறியப்படுகிறது?

 நற்றிணை

  1. பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை எது குறிப்பிடுகிறது?

மடைநூல்

  1. பேகன் ஆட்சி செய்த பகுதி எது?

பழனிமலை

  1. பேகன் எதற்காக புகழப்படுகிறார் ?

மயிலுக்கு போர்வை தந்தவர்

  1. பாரி ஆட்சி செய்த பகுதி எது ?

பறம்புமலை

  1. பாரி எதனால் போற்றப்படுகிறார் ?

முல்லைக் கொடி படர்வதற்கு தன் தேரையே தந்ததால்

  1. திருமுடிக்காரி ஆட்சி செய்த பகுதி எது?

மலையமா நாடு

  1. திருமுடிக்காரி எதனால் போற்றப்படுகிறார்?

குதிரைகளை பரிசாக வழங்கியதால்

  1. ஆய் அண்டிரன் ஆட்சி செய்த பகுதி எது ?

பொதியமலை

  1. ஆய் அண்டிரன் எதனால் போற்றப்படுகிறார்?

நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தியதால்

  1. அதியமான் ஆட்சி செய்த பகுதி எது?

தகடூர்

  1. அதியமான் எதனால் போற்றப்படுகிறார்?

அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர்

  1. நள்ளி ஆட்சி செய்த பகுதி எது?

கண்டீர மலை

  1. நள்ளி எதனால் போற்றப்படுகிறார்?

மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருட்களையும் வழங்கியதால்

  1. வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி எது?

கொல்லிமலை

  1. வல்வில் ஓரி எதனால் போற்றப்படுகிறார்?

யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியதால்

  1. ஆன்மா தான் எதிலிருந்து வந்ததோ அதிலே சேர முயன்று வருதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

லயமாகுதல்

  1. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று கூறியவர் யார்?

அவ்வையார்

  1. ஆடவல்ல நடன மகளிர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 விறலி

  1. குன்றக்குரவை யாரை வழிபடுவது?

முருகன்

  1. ஆய்ச்சியர் குரவை யாரை வழிபடுவது?

திருமால்

  1. சிவன் ஆடுகின்ற கூத்து எவ்வாறு அழைக்கப்படும்?

தாண்டவம்

  1. தமிழர் பொங்கல் விழா வட இந்தியாவில் என்னவாக கொண்டாடப்படுகிறது ?

மகரசங்கராந்தி

  1. வேளாண்மை செழிக்க உதவிய எந்த ஆற்றுக்காக ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடுகின்றனர்?

 காவிரி ஆறு

  1. இந்திர விழா சங்க காலத்தில் சிறந்திருந்தது என்பதை எந்த நூல் வாயிலாக அறியலாம்?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| ஆசாரக்கோவை

சிலப்பதிகாரம்

  1. பரதநாட்டியத்தில் ஒரு முக்கிய கூறான கை அசைவுகள் சமஸ்கிருதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 ஹஸ்தம்

  1. பரத நாட்டியத்தில் அடவு அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது எது?

முத்திரைகள்


11TH ETHICS STUDY NOTES |தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: