11TH ECONOMICS STUDY NOTES |இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் | TNPSC GROUP EXAMS

 


  1. “சுதந்திரம் எந்த விலைக்கும் ஈடாகாது .சுதந்திரம் வாழ்வின் சுவாசம் .வாழ்வதற்காக மனிதன் எதைக் கொடுக்க மாட்டான்” எனக் கூறியவர் யார்?

டெய்லர் கோவன்

  1. இரண்டு நாடுகளுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிப்பது எது?

காலனித்துவம்

  1. வாஸ்கோடகாமா இந்தியாவில் உள்ள கோழிக்கோட்டிற்கு எப்போது வருகை தந்தார்?

மே 20 , 1498

  1. போர்த்துக்கீசியர்கள் எப்போதிலிருந்து கோவாவுடன் வணிகம் செய்து வந்தனர்?

 1510

  1. எப்போது கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது?

 1601

  1. எப்போது சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றார்?

 1614

  1. எந்த ஆண்டு ஆங்கில பாராளுமன்றம் இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கிலேயருக்கு மாற்றி ஒரு சட்டம் இயற்றியது?

1858

  1. காலனி ஆதிக்கச் சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்று பொருளியல் வல்லுநர்கள் எத்தனை கட்டங்களாக பிரித்தனர்?

 3 வணிக மூலதன காலம் ,தொழில் மூலதன காலம் ,நிதி மூலதன காலம்

  1. எந்த காலம் மனித மூலதன காலமாகும்?

 1757 முதல் 1813 வரை

  1. எந்தக் காலம் தொழில் மூலதன காலமாகும்?

 1813 முதல் 1858 வரை

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இருந்து சுதந்திரம்

 

அமைந்த வரையிலான காலம் என்ன ?

மூன்றாவது கட்டமான நிதி மூலதன காலம்

  1. எந்த ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது?

1858

  1. எந்த முறை நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியது?

நில உடமை முறை

  1. சுதந்திரத்திற்கு முன்னர் எத்தனை விதமான நிலவுடமை முறைகள் இருந்தன?

மூன்று: ஜமீன்தாரி முறை ,மகல்வாரி முறை மற்றும் இரயத்துவாரி முறை

  1. எப்போது நிரந்தர சொத்துரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ?

1793

  1. 1793 இல் நிரந்தர சொத்துரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

லார்டு காரன்வாலிஸ்

  1. நிரந்திர சொத்துரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு என்ன நிலவுடைமை முறையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியது?

ஜமீன்தாரி முறை

  1. ஜமீன்தாரி முறையில் வசூலிக்கப்பட்ட நில வருவாயில் எத்தனை பங்கு அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்?

 11ல் 10 பங்கு

  1. எந்த முறையில் கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர்?

மகல்வாரி முறை அல்லது இனவாரி முறை

  1. இரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை முதன் முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட்டது?

தமிழ்நாடு

  1. இரயத்துவாரி முறை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் எந்த இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது?

 மகாராஷ்டிரா ,குஜராத் ,அசாம் ,கூர்க், கிழக்கு பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம்

  1. எந்த முறையில் நிலத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை மற்றும் நிலத்திற்கான கட்டுப்பாடு நில உரிமையாளரிடம் இருந்தது?

 இரயத்துவாரி முறை

  1. எந்த ஆண்டில் முதல் உலகப்போர் தொடங்கியது?

 1914

  1. ஆசியாவின் எத்தனையாவது முக்கிய பொருளாதாரம் இந்தியாவினுடையது?

 மூன்றாவது

  1. எந்த ஆண்டு இந்தியா தனது முதல் தொழில் கொள்கையை அறிவித்தது?

ஏப்ரல் 6 1948

  1. இந்தியாவின் முதல் தொழில் கொள்கையின் முக்கிய நோக்கம் என்ன?

இந்தியாவில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதாககும்

  1. 1948 தொழில் கொள்கையின்படி இந்திய தொழில்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டன?

 4

  1. நான்கு வகையாக பிரிக்கப்பட்ட இந்திய தொழில்கள் என்னென்ன?

பொது துறை (மூலதொழில்கள்), பொது மற்றும் தனியார் துறை( முக்கிய தொழில்கள்), கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்

  1. எந்த ஆண்டின் தொழில்துறை தீர்மான கொள்கை பொது துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது?

 1956

  1. எந்த ஆண்டிற்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில்நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில்  செயல்படுத்தப்பட்டன?

 1960

  1. எந்த ஆண்டில் 7 மாவட்டங்களில் “வழிநடத்தும் திட்டம்” புதிய தொழில்நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது?

 1960-61

  1. வேளாண் யுத்தி என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது?

புதிய வேளாண் தொழில்நுட்பம், விதை -உரங்கள்- தண்ணீர் தொழில்நுட்பம், அல்லது  பசுமைப்புரட்சி

  1. இரண்டாவது பசுமைப் புரட்சியின் முக்கிய நோக்கம் எது?

 உணவு பயிர் உற்பத்தியை 2020இல் 400 மில்லியன் டன்களாக உயர்த்துவது ஆகும்.

  1. இந்தியாவில் முதல் எஃகு தொழிற்சாலை எங்கு நிறுவப்பட்டது ?

ஜாரியாவில் உள்ள குல்டி 

  1. மேற்கு வங்காளத்தில் உள்ள “வங்காள இரும்புத் தொழில்” கம்பெனி  எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

1870

  1. எந்த ஆண்டு பெரிய அளவிலான இரும்பு எஃகு தொழிற்சாலை ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்டது?

1907

  1. எந்த ஆண்டு TISCO தொழிற்சாலை பான்பூரில் தொடங்கப்பட்டது?

1919

  1. முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் எது?

பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரைய்யா இரும்பு எஃகு தொழில்

  1. எதன் உதவியோடு ரூர்கேலாவில் (ஒரிசா) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?

ஜெர்மனி

  1. எதன் உதவியோடு பிலாய்(மத்தியபிரதேசம்) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?

 ரஷ்யா

  1. எதன் உதவியோடு துர்காபூர் (மேற்குவங்காளம்)உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?

இங்கிலாந்து

  1. எதன் உதவியோடு பொகாரோ(ஜார்கண்ட்) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?

ரஷ்யா

  1. எதன் உதவியோடு விசாகப்பட்டினம் (ஆந்திரா) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?

 ரஷ்யா

  1. எதன் உதவியோடு சேலம்(தமிழ்நாடு) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?

இந்தியா

  1. எதன் உதவியோடு விஜயநகர்(கர்நாடகா) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
SEE ALSO  10TH POLITY STUDY NOTES |இந்திய அரசியலமைப்பு| TNPSC GROUP EXAMS

இந்தியா

  1. இந்தியாவில் உள்ள எஃகு தொழிற்சாலைகள் அனைத்தும் எதனால் நிர்வகிக்கப்படுகின்றன?

 SAIL

  1. இந்திய எஃகு நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 1974

  1. தற்போது இந்தியா எஃகு உற்பத்தியில் உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 எட்டாவது

  1. எந்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரேஷ்ரா எனும் ஊரில் நவீனமயப்படுத்தப்பட்ட சணல் தொழிற்சாலை முதன்முறையாக உருவாக்கப்பட்டது?

1855

  1. இந்தியா கச்சா சணல் உற்பத்தி மற்றும் சணல் பொருட்கள் தயாரிப்பில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 முதலிடம்

  1. இந்திய சணல் பொருட்கள் ஏற்றுமதியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

இரண்டாவது இடம்

  1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் நெசவுத்துறையின் மூலம் கிடைக்கிறது?

 4%

  1. இந்தியாவில் நெசவுத்துறையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியில் எத்தனை சதவீதம் கிடைக்கிறது?

 20 சதவீதம்

  1. ஏற்றுமதி வருவாயில் எத்தனை பங்கு நெசவு துறையின் மூலம் கிடைக்கிறது?

 மூன்றில் ஒரு பங்கு

  1. கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள குளோஸ்டர் துறைமுக நகரில் எப்போது முதல் நவீன துணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது?

 1818

  1. எந்த ஆண்டு மும்பையில் கேஜி என் டேப்பர் (Daber) என்பவரால் மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி உருவாக்கப்பட்டது?

1854

  1. இந்தியாவில் வேளாண் சார்ந்த தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் எது?

 சர்க்கரை தொழில்

  1. சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் எத்தனை பங்கு மகாராஷ்டிரா மாநிலம் கொண்டுள்ளது?

மூன்றில் ஒரு பங்கு

  1. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக சர்க்கரை உற்பத்தியில் உள்ள மாநிலம் எது ?

உத்தரபிரதேசம்

  1. இந்தியாவில் நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் உர தொழிலானது உலகின் எத்தனையாவது பெரிய தொழிலாகும்?

மூன்றாவது

  1. எந்த ஆண்டு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்ற ஊரில் இயந்திரத்தில் செயல்படும் காகித ஆலை உருவாக்கப்பட்டது?

1812

  1. உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

15

  1. இயற்கையான பட்டு தயாரிப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

இரண்டாம் இடம்

  1. இயற்கையான பட்டு தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

சீனா

  1. தற்போது உலக அளவில் இயற்கை பட்டு தயாரிப்பில் எத்தனை சதவீத உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது?

 16%

  1. இந்தியா வணிக அடிப்படையிலான எத்தனை வகையான பட்டு துணிகளை உற்பத்தி செய்கிறது?

 5 :மல்பெரி பட்டு,வெப்பமண்டல டஸ்சர் பட்டு,ஓக் டஸ்சர்,பட்டு எரி,முகா பட்டு

  1. அசாம் மாநிலத்தில் உள்ள டிக்பாய் எனும் ஊரில் எந்த ஆண்டு வெற்றிகரமாக முதல் முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது?

 1889

  1. எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை எடுப்பதற்காக எங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ONGC) உருவாக்கப்பட்டது?

 உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன்

  1. எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ONGC) எப்போது உருவாக்கப்பட்டது?

 1956

  1. குறு உற்பத்தி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு மிகாமல் இருக்க வேண்டும்?

 25 இலட்சம்

  1. சிறு உற்பத்தி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?

 25 இலட்சம் அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

  1. நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?

 5 கோடிக்கு அதிகமாகவும் 10 கோடிக்கும் மிகாமலும் இருக்க வேண்டும்

  1. குறு சேவை நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு மிகாமல் இருக்க வேண்டும்?

  10 இலட்சம்

  1. சிறு சேவை நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?

  10 இலட்சம் அதிகமாகவும் இரண்டு கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

  1. நடுத்தர சேவை நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு  இருக்க வேண்டும்?

 2 கோடியைவிட அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

  1. பாரத ஸ்டேட் வங்கியில் அரசு எத்தனை சதவீத பங்குகளை கொண்டுள்ளது?

58.60%

  1. பஞ்சாப் நேஷனல் வங்கியில் எத்தனை சதவீதம் அரசு பங்குகளை கொண்டுள்ளது?

 58.87%

  1. பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு எத்தனை சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்?

50%

  1. இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் எத்தனை சதவீத வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக இயங்குகின்றன?

 72.9%

  1. எண்ணிக்கை அடிப்படையில் எத்தனை பொதுத்துறை வங்கிகள் உள்ளன ?

 27

  1. எத்தனை தனியார் வங்கிகள் உள்ளன?

 22

  1. எந்த ஆண்டிலிருந்து ஐந்தாண்டு திட்டங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டது ?

 1951

  1. பொருளாதார திட்டமிடலின் முதன்மை நோக்கம் என்ன?

 சமூக நலம்

  1. எந்த ஆண்டு இந்திய அரசு 14 பெரிய வணிக வங்கிகளை தேசிய மயமாக்க முடிவு செய்தது?

ஜூலை 19,1969

  1. எந்த ஆண்டு இந்திய அரசு மேலும் ஆறு வணிக வங்கிகள் தேசிய மயமாக்கியது?

 1980

  1. இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்?

 70%

  1. 1969ல் எவ்வளவுக்கு மேல் வைப்பு தொகை கொண்ட 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?

 50 கோடி

  1. 1980ல் எவ்வளவுக்கு மேல் வைப்பு தொகை கொண்ட 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | சிந்து நாகரிகம் | TNPSC GROUP EXAMS

 200 கோடி

  1. ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டங்களை மேற்கொள்ளும் முறை யாரிடமிருந்து பெறப்பட்டது?

முன்னாள் சோவியத் ரஷ்யா

  1. இதுவரை இந்தியா எத்தனை ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது?

 12 ஐந்தாண்டு திட்டங்கள்

  1. 12வது ஐந்தாண்டு திட்டம் எந்த காலகட்டம்?

2012- 2017

  1. NITI Aayog ன் விரிவாக்கம் என்ன?

National institution for transforming India

  1. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டம் என்ன?

1951-1956

  1. முதல் ஐந்தாண்டு திட்டம் யாருடைய மாதிரியை அடிப்படையாகக் கொண்டது?

ஹார்ரேட் டமர்

  1. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

வேளாண்மை முன்னேற்றம்

  1. முதல் ஐந்தாண்டு திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சி விகிதத்துடன் வெற்றி பெற்றது?

 3.6%

  1. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன ?

 1956 -1961

  1. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் எந்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டது?

PC மஹலநோபிஸ் மாதிரி

  1. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவது

  1. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சியுடன் வெற்றிபெற்றது?

 4.1%

  1. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் என்ன ?

 1961 – 1966

  1. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?

காட்கில் திட்டம்

  1. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன ?

சுதந்திரமான பொருளாதார மற்றும் சுயமுன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல்

  1. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு எது ?

5.6%

  1. எதன் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி இலக்கை எட்ட இயலவில்லை?

சீன- இந்தியப் போர்

  1. திட்ட விடுமுறையின் காலம் என்ன ?

1966- 1969

  1. திட்ட விடுமுறைக்கான முதன்மை காரணம் எது?

இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி

  1. திட்ட விடுமுறை காலத்தில் என்ன திட்டங்கள் உருவாக்கப்பட்டன ?

ஓராண்டு திட்டங்கள்

  1. நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

1969 – 1974

  1. நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

5.7%

  1. நான்காம் ஐந்தாண்டு திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சியை எட்டியது ?

 3.3%

  1. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

1974 -1979

  1. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது?

 வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழில்

  1. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

4.4%

  1. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் எத்தனை சதவீதம் வளர்ச்சி பெற்று திட்டம் வெற்றி பெற்றது ?

 4.8 சதவீதம்

  1. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்திற்கான முன்வரைவு யாரால் தயாரிக்கப்பட்டது?

D.P. தார்

  1. சுழல் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

1978-79

  1. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் என்ன?

 1980 -1985

  1. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு

  1. வறுமை ஒழிப்பு (GARIBI HATAO) என்பது எதனுடைய லட்சியம்?

ஆறாம் ஐந்தாண்டு திட்டம்

  1. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் எதனை அடிப்படையாகக் கொண்டது ?

முதலீட்டுத் திட்டம்

  1. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

 5.2 சதவீதம்

  1. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது ?

 5.7%

  1. ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன ?

 1985- 1990

  1. ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?

தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல்

  1. எந்த ஐந்தாண்டு திட்டத்தில் முதல்முறையாக பொதுத்துறை க்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது ?

ஏழாம் ஐந்தாண்டு திட்டம்

  1. ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

 5.0 சதவீதம்

  1. ஏழாம் ஐந்தாண்டு திட்டம் எத்தனை சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது?

6%

  1. எப்போது இரு- ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டது?

 1990-91&1991-92

  1. எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

 1992 -1997

  1. எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது?

 வேலைவாய்ப்பு ,கல்வி, சமூக நலம் போன்ற மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு

  1. எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது?

 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்

  1. எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன ?

 5.6%

  1. எட்டாம் ஐந்தாண்டு திட்டம் எட்டிய வளர்ச்சி என்ன?

6.8 சதவீதம்

  1. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

1997 -2002

  1. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது?

சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி

  1. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

 7%

  1. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய பொருளாதாரம் எத்தனை சதவீத வளர்ச்சியை அடைந்தது?

 5.6 சதவீதம்

  1. பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

2002 -2007

  1. பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு என்ன?

10 ஆண்டுகளில் தலா வருவாயை இருமடங்காக உயர்த்துவது

  1. பத்தாம் ஐந்தாண்டு திட்டம் எந்த ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது?

2012

  1. பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

8%

  1. பத்தாம் ஐந்தாண்டு திட்டம் எட்டிய வளர்ச்சி எவ்வளவு?

 7.2 சதவீதம்

  1. பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?

2007 -2012

  1. பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசாங்கத்தின் வகைப்பாடுகள்| TNPSC GROUP EXAMS

விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி

  1. 11ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

8.7%

  1. பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டம் எட்டிய வளர்ச்சி என்ன?

 7.9 சதவீதம்

  1. பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?

விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி

  1. பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?

8%

  1. நிதி ஆயோக் என்னும் அமைப்பு எப்போது ஏற்படுத்தப்பட்டது?

ஜனவரி 1, 2015

  1. எந்த ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிடுகிறது?

 1990

  1. மனித வள மேம்பாட்டு குறியீடு எத்தனை குறியீடுகளை அடிப்படையாக கொண்டது?

 3 (வாழ்நாள், கல்வி, வாழ்க்கை தரம்)

  1. மனித வள மேம்பாட்டு குறியீடு என்பதை யார் 1990 இல் மேம்படுத்தினர்?

 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் மகபூப் உள் ஹக் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா குமார் சென்

  1. பரிமாண குறியீடின் சமன்பாடு என்ன?

 [ உண்மை மதிப்பு -குறைந்தபட்சம் மதிப்பு]/ [அதிகபட்ச மதிப்பு- குறைந்தபட்ச மதிப்பு]

  1. திட்டக்குழுவின் எந்த ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி மனித வளர்ச்சி குறியீடு 1980 முதல் 2011 வரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது?

 2011

  1. மனித மேம்பாட்டு குறியீட்டுக்காண கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்து உள்ளது என்று கூறியவர் யார்?

 பிஸ்வஜித்குஹா

  1. HDI1,HDI2,HDI3 & HDI4 என்ற நான்கு விதமான மனித மேம்பாட்டு குறியீடுகளை உருவாக்கி உள்ளவர் யார்?

பிஸ்வஜித்குஹா

  1. PQLIன் விரிவாக்கம் என்ன?

 Physical quality of life index

  1. செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை உருவாக்கியவர் யார் ?

மோரிஸ் டி.மோரிஸ்

  1. ஒரு நாட்டின் வாழ்க்கை தரத்தினை அளவிடப் பயன்படும் குறியீட்டு எண் எது?

செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்(PQLI)

  1. செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை அளவிடப் பயன்படும் குறியீடுகள் என்னென்ன?

எதிர்பார்ப்பு ஆயுட்காலம் ,குழந்தை இறப்பு வீதம் மற்றும் எழுத்தறிவு வீதம்

  1. ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டைக் குறிக்கும் செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை எது?

 1

  1. ஒரு நாட்டின் மிகச்சிப்பான செயல்பாட்டைக் குறிக்கும் செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை எது?

 100

  1. செய்திறன் குறியீட்டு எண்ணில் எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டில் மேல் எல்லையான 100 என்பதை 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டது .இக்குறியீடு 1973 ஆம் ஆண்டே அடைந்துவிட்ட நாடு எது?

 ஸ்வீடன்

  1. 1 என்ற கீழ் எல்லையானது 28 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை எந்த நாடு 1960 இல் பெற்றுள்ளது?

கயானா-பிசாவு

  1. PQLI மற்றும் HDI இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

HDIல் வருமானம் சேர்க்கப்படுகிறது PQLIலிருந்து வருமானம் நீக்கப்படுகிறது. உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை HDIல் குறிப்பிடுகிறது. உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே PQLI குறிக்கிறது


11TH ECONOMICS STUDY NOTES |இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: